வைகுண்டராஜனின் தில்லு முல்லு.

 வி.வி.மினரல் மற்றும் வி.வி. தொழில் குழுமம் என்பதன் விரிவாக்கம் வெற்றிவேல் மினரல்ஸ் மற்றும் வெற்றிவேல் தொழில் குழுமம் ஆகும். 

மேற்படி தொழில் குழுமம் வி.வி.மினரல் என்ற பெயரில் கூட்டாண்மை நிறுவனமாக தோற்றுவிக்கப்பட்டு அதன் பின்னர் பல்வேறு கூட்டாண்மை நிறுவனங்களை வி.வி.மினரல் மற்றும் வெற்றிவேல் மினரல் என்ற பொதுப்பெயரில் உருவாக்கப்பட்ட தொழில் நிறுவனமாகும். 

மேற்படி தொழில் நிறுவனத்தில் உயர்திரு. சு.ஜெகதீசன் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் 6 நபர்களும், அவர்களோடு இணைந்து வைகுண்டராஜன் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் 6 நபர்களும் சேர்ந்து 12 பங்குதாரர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கூட்டாண்மை நிறுவனமாகும். 

அதைப்போலவே தனியார் நிறுவனங்களும் (Private Limited Companies) இரண்டு குடும்ப உறுப்பினர்களை சரிசமமாக கொண்டு உருவாக்கப்பட்ட தொழில் நிறுவனங்களாகும்.

மேற்படி ஒவ்வொரு கூட்டாண்மை நிறுவனத்தில் லாபநஷ்டத்திலும், சொத்திலும், அதைப்போலவே ஒவ்வொரு தனியார் நிறுவனத்தின் லாபநஷ்ட சொத்திலும் இரண்டு குடும்பத்திற்கும் அதாவது உயர்திரு. சு.ஜெகதீசன் அவர்களின் குடும்பத்திற்கும், வைகுண்டராஜன் குடும்பத்திற்கும் சரிசமமாக பாத்தியப்பட்டதாகும்.

வைகுண்டராஜன் உடன்பிறந்த இளைய சகோதரர் என்று கூட கருதாமல் இரண்டு குடும்பத்திற்கும் பொதுவாக பாத்தியப்பட்ட கூட்டாண்மை நிறுவனங்களின் நிதியையும், தனியார் நிறுவனங்களின் நிதியையும் மோசடி ஆவணங்கள் மற்றும் போலி ரசீதுகள் தயார் செய்து கூட்டாண்மை மற்றும் தனியார் நிறுவனங்களின் நிதியை சுரண்டி அதன் மூலம் தனது மகளான சுபசரண்யா பெயரில் டெல்லி, குஜராத், சென்னை ஆகிய இடங்களில் பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துக்களை கிரையம் பெற்றுள்ளார். மேற்படி பொது நிதியை மோசடி செய்து திருட்டுத்தனமாக தனது மகள் சுபசரண்யாவின் பெயரில் சொத்துக்கள் வாங்கி குவித்தது தொடர்பான அதிர்ச்சி தகவல் கடந்த 2018 ஆம் ஆண்டு வருமானவரித் துறை சோதனையில் உயர்திரு. சு.ஜெகதீசன் அவர்களின் குடும்பத்திற்கு தெரிய வந்தது.

 இது குறித்து வைகுண்டராஜனிடம் உயர்திரு. சு.ஜெகதீசன் அவர்களின் குடும்பம் விளக்கம் கேட்டதற்கு உயர்திரு. சு.ஜெகதீசன் அவர்களின் குடும்பத்திற்கு பதில் சொல்வதிலிருந்து தப்பிப்பதற்காக, உயர்திரு. சு.ஜெகதீசன் குடும்பத்துடன் தொடர்பை துண்டித்து விட்டு உயர்திரு. சு.ஜெகதீசன் மற்றும் அவரது குடும்பத்தினர் கூட்டாண்மை நிறுவனத்தின் அலுவல், சுரங்க குத்தகை உரிமை மற்றும் வங்கி நடவடிக்கைகளுக்காக கையெழுத்து செய்து வைகுண்டராஜனிடம் கொடுத்து வைத்திருந்த நிரப்பப்படாத ஆவணங்கள் மற்றும் வெற்று வெள்ளைத்தாள்கள் ஆகியவற்றை மோசடியாக பயன்படுத்தி ஒட்டுமொத்த கூட்டாண்மை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் (Private Limited Companies) சொத்துக்களைப் பொறுத்து மேற்படி வைகுண்டராஜனும், உயர்திரு. சு.ஜெகதீசன் அவர்களும் பாகப்பிரிவினை செய்து கொண்டது போல பதிவு செய்யப்படாத மோசடி பொய் ஆணங்களை தயார் செய்து ஒட்டுமொத்த சொத்துக்களில் பெரும்பான்மை சொத்துக்களை அபகரிக்க முயற்சி செய்து வந்தார்.

இது சம்பந்தமாக உயர்திரு. சு.ஜெகதீசன் அவர்கள் திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் மனு அனுப்பி அதில் உரிய நீதிமன்ற உத்தரவு பெற்று அதனடிப்படையில் மேற்படி காவல்துறையினர் மேற்படி வைகுண்டராஜன் மீதும், அவரது மகன் சுப்பிரமணியன் மீதும் மற்றும் சிலர் மீதும் குற்ற எண்.7/2022ன் கீழ் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் U/s. 408, 420, 465, 467, 468, 471, 477A & 120B ன்படி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது ஒருபுறமிருக்க எப்படியாவது உயர்திரு. சு.ஜெகதீசன் தரப்பிற்கு தொந்தரவு அளித்து அவரது குடும்பத்தினரை நிம்மதியாக இருக்க விடக்கூடாது என்பதற்காக உயர்திரு. சு.ஜெகதீசன் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் நிறுவனங்களில் சுமார் 50 குண்டர்களை தன்னுடன் அழைத்துக் கொண்டு போய் அடிக்கடி அத்துமீறி உள்ளே நுழைந்து தகராறு செய்து வருகிறார்.

 இந்நிலையில் ஏரல் காவல் நிலைய சரகத்திற்குட்பட்டு வி.வி.மரைன் நிறுவனத்தில் அத்துமீறி உள்ளே நுழைந்து தகராறு செய்தது சம்பந்தமாகவும், நிறுவனத்தில் இருந்த நிதியை தூக்கிச் சென்றது சம்பந்தமாகவும் ஏரல் காவல் நிலையத்தில் மேற்படி வைகுண்டராஜனின் குண்டர்கள் மீது குற்ற எண். 343/2020 மற்றும் 389/2020 ஆகிய குற்ற எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல உயர்திரு. சு.ஜெகதீசன் அவர்களிடம் பணியாற்றி வந்த மாரிக்கண்ணன் என்ற Msc Geologist பட்டதாரியை வழக்கறிஞர் ஒருவரின் வீட்டிற்கு கடத்திச் சென்று அங்கு வைத்து அவரை அடித்து துன்புறுத்தியது தொடர்பாக மேற்படி வைண்டராஜன் மீதும், அவரது சகாக்கள் மீதும் திருநெல்வேலி மாநகர பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் குற்ற எண். 402/2021ன் கீழ் ஆள் கடத்தல் மற்றும் கொலை மிரட்டல் வழக்காக பதிவு செய்யப்பட்டது.

அதேபோல மேற்படி வைகுண்டராஜன் உயர்திரு. சு.ஜெகதீசன் அவர்களிடம் பணியாற்றி வரும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற நபரை அவரின் ஜாதியின் பெயரைச் சொல்லி அசிங்கமாக ஏசி, அடித்து கொலை செய்ய முயன்றது சம்பந்தமாக மேற்படி அதே பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் குற்ற எண். 256/2022 PCR தீண்டாமை வழக்காகவும், கொலை மிரட்டல் வழக்காகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மேற்படி வைகுண்டராஜன் மாண்பமை உயர்நீதிமன்றம் நியமித்த ஓய்வுபெற்ற மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதியின் உதவியாளர்களான இரு வழக்கறிஞர்கள் மேற்படி பிரச்சனைக்குரிய சொத்துக்களை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மதிப்பீடு செய்து கொண்டிருக்கும்போது திரு. சத்தியபிரதா சாஹூ IAS அவர்களால் சீல் வைக்கப்பட்ட குடோனிலிருந்து சீல்களை உடைத்து தாதுமணலை வைகுண்டராஜன் மற்றும் அவரது மகன்களால் இயக்கப்பட்டு வரும் வி.வி.டைட்டானியம்  பிக்மண்ட் நிறுவனத்திற்கு திருடியது சம்பந்தமாக மேற்படி மினரல்கள் திருடப்பட்டு குடோன்கள் காலியாக இருந்த இடத்தில் சீல்கள் உடைக்கப்பட்டிருந்ததை உயர்திரு. சு.ஜெகதீசன் அவர்களின் மகனான திரு.செந்தில்ராஜன் அவர்கள் உயர்நீதிமன்றம் நியமித்த Receiver அவர்களின் உதவியாளர்களிடம் சுட்டிக்காட்டி வீடியோ பதிவு செய்ய சொன்னபோது  மேற்படி வைகுண்டராஜனால் மேற்படி திரு. செந்தில்ராஜன், அவரது ஓட்டுநர், அவரது வீடியோகிராஃபர் ஆகியோர்களை அடித்து தாக்கி சுமார் 6,50,000 லட்சம் மதிப்புள்ள கேமராக்களை உடைத்து பறித்து சென்றது சம்பந்தமாக மேற்படி வைகுண்டராஜன் மீது உவரி காவல் நிலையத்தில் குற்ற எண். 08/2022 பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது மேற்படி வைகுண்டராஜன் மற்றும் அவரது மகன்களால் நடத்தப்பட்டு வரும் தூத்துக்குடி வி.வி.டைட்டானியம் பிக்மண்ட் நிறுவனத்திற்கு  சீல் வைக்கப்பட்ட குடோன்களிலிருந்து சீல்களை உடைத்து இலுமினைட் தாதுமணலை கடத்தி வரும்போது சிப்காட் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டு மேற்படி காவல் நிலையத்தில் குற்ற எண். 332/2021ன் கீழ் திருட்டு வழக்கும், தாதுமணல் கடத்தல் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

அதேபோல தூத்துக்குடி முள்ளக்காடு பகுதி-2 கிராமத்தில் தமிழக அரசால் பொருத்தப்பட்டிருந்த CCTV கேமராக்களின் இணைப்பை துண்டித்தது சம்பந்தமாக மேற்படி வைகுண்டராஜன் மீது தூத்துக்குடி, தெர்மல்நகர் காவல் நிலையத்தில் குற்ற எண்கள் 2/2022 மற்றும் 3/2022 ஆகிய குற்ற எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி வைகுண்டராஜன் உயர்திரு. சு.ஜெகதீசன் அவர்களின் குடும்பத்தினரை ஏமாற்றி ஒட்டுமொத்த நிறுவனங்களின் சொத்துக்களை பதிவு செய்யப்படாத மோசடி பொய் ஆவணம் தயாரித்து சொத்துக்களை அபகரிக்க முயற்சி செய்தது சம்பந்தமாக மேற்படி வைகுண்டராஜன், அவரது மூத்த மகன் உட்பட சிலர் மீது திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவில் குற்ற எண். 7/2022ன் கீழ் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 408, 420, 465, 467, 468, 471, 477 A, 120 B ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது.

அதுமட்டுமல்லாது மேற்படி வைகுண்டராஜன் தற்சமயம் Special judge (PC Act) CBI-03 Court, Rouse Avenue District Courts, New Delhi vide CC.No.199/2019 in RC.No.9(A)/2016 நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு தற்சமயம் உயர்நீதிமன்ற பிணையில் வெளியில் இருந்து வருகிறார்.

 மேற்படி பிணையை மீறி பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதால் CBI தரப்பில் வைகுண்டராஜனின் பிணையை ரத்து செய்ய வேண்டுமென மாண்பமை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மட்டுமல்லாது மேற்படி வைகுண்டராஜன் பழைய ரேஷன் அரிசி கடத்தல்காரர் ஆவார். அவர் மீது 1988 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்ட Civil Supplies CID Police பிரிவில் குற்ற எண்கள் 74/1988 மற்றும் 75/1988 ஆகிய குற்ற எண்களில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 120B, 420, 471 & 109 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் நேற்றைய முன்தினம் 19.08.2022ந் தேதி மேற்படி வைகுண்டராஜன் வல்லான்விளை என்ற ஊரில் இயங்கி வந்த சீல் வைக்கப்பட்ட குடோனிலிருந்து 3 கன்டெய்னர் லாரிகளில் மினரல்களை திருடி தூத்துக்குடி கொண்டு செல்லும் வழியில் நாங்குநேரி காவல் நிலைய சரகத்தில் மினரல்களும், லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டு மேற்படி காவல் நிலையத்தில் மேற்படி வைகுண்டராஜன் மீது குற்ற எண். 217/2022ன் கீழ் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

*மேற்படி வைகுண்டராஜன் மீது தற்போது நிலுவையில் உள்ள வழக்குகள்:*


1. Palayamkottai, Tiruelveli City Police, Tirunelveli Dist.

Crime No. 402/2021 Date of FIR: 20-06-2021

Offence: U/s. IPC 143, 341, 294(b), 323, 365, 342, 506(1)


2. Sipcot Police Station

Thoothukudi Dist

Crime No. 332/2021

Date of FIR: 20-08-2021

Offence: U/s. IPC 448, 379, 420, r/w 21(4) of MMDR Act 1957


3. Uvari Police Station,

Tirunelveli Dist

Crime No.08/2022

Date of FIR: 13-01-2022

Offence: U/s. IPC 147, 341, 294(b), 323, 427


4. Thermal Nagar Police Station, Thoothukudi Dist

Crime No: 02/2022

datE of FIR: 13-01-2022 U/s. IPC 204


5. Thermal Nagar Police Station, Thoothukudi Dist

crime No: 03/2022

date of FIR: 13-01-2022

Offence: U/s. IPC 204


6. Palayamkottai Police Station, Tirunelveli City

crime No: 256/2022 Date of FIR:13.04.2022

Offence: U/s. 147, 148, 447, 294(b), 506(2), 427, 3(1)(r), 3(1)(s), 3(2)(va) of SC/ST Act


7. District Crime Branch (DCB) Tirunelveli District

Crime No: 7/2022

Date of FIR: 15.07.2022

Offence: U/s. 408, 420, 465, 467, 468, 471, 477A & 120 of IPC


8. Nanguneri Police Station

Crime No: 217/2022

Date of FIR: 18.08.2022 U/s. 4(3)(1A) & 21(1)

MMDR Act


*மேற்படி வைகுண்டராஜனின் குண்டர்கள் மீது தற்போது நிலுவையில் உள்ள வழக்குகள்:*


1. Eral Police Station, Tuticorin

Crime No:343/2020

date of FIR: 11.07.2020

Offence: U/s. IPC 120B, 143, 341, 379, 506(1)


2. Eral Police Station, Tuticorin

Crime No: 389/2020

Date of FIR: 28.07.2020

Offence: U/s. IPC 143, 294B, 447, 502(2), 120B, 4(B), 5 of the Explosive Substances Act 1908.


தற்சமயம் மேற்படி வைகுண்டராஜன் மேற்படி உயர்திரு. சு.ஜெகதீசன் அவர்கள் அளித்த புகாரில் திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவில் குற்ற எண். 7/2022 பதிவு செய்யப்பட்டுள்ளதால் மிகுந்த ஆத்திரத்தில் இருந்து வருகிறார். 

உயர்திரு. சு.ஜெகதீசன் அவர்களின் குடும்பத்தில் யார் ஒருவரையாவது கொலை செய்ய வேண்டுமென்று திட்டம் தீட்டி வருவதாக பொதுவான தரப்பிலிருந்து செய்திகள் கசிந்து வருகிறது.

வைகுண்டராஜனின் " நியூஸ்7" ஏன் பா.ஜ.க,விற்கு அளவுக்கதிகமாக ஜால்ரா அடிக்கிறது என்று விளங்குகிறதா?

இதே போல் மற்றொரு ஜால்ராதான் "புதியதலைமுறை" பச்சமுத்து( பாரிவேந்தர்)M.P. என்ற திமுக போட்ட பிச்சையால் மக்களவை உறுப்பினரானவர்

பா.ஜக கையில் உள்ள அமுலாக்குதுறை,சிபிஐ தான் . பா.ஜ.க.வில்சேரவும்,தங்களைக் காப்பற்றிக்கொள்ள இது போன்ற குற்றவாளிகள்,சமூகவிரோதிகள் சேர காரணம்.



---------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?