உலக நாயகன்

 "கமல்ஹாசன்". 

அது வெறும் பெயர் அல்ல, சினிமா துறையில் சாதிக்க துடிக்கும் எண்ணிலடங்கா இளைஞர்களின் இன்ஸ்பிரேஷன். திரைத்துறையில் 4 அல்லது 5 ஆண்டுகள் முன்னணி நட்சத்திரமாக நிலைத்து நிற்பதே கடினம். அப்படி இருக்கையில் 60 ஆண்டிற்கு மேல் தனது அசாத்திய திறமையால் திரையுலகை கட்டி ஆளும் கலையுலக நாயகன் கமல்ஹாசன். 

6 வயதில் அரை கால்சட்டையுடன் தொடங்கிய இந்த அசாத்திய பயணம் 67 வயதை தாண்டியும் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. கமல்ஹாசன் எனும் மகா கலைஞனை  நடிப்பு எனும் சிறு வட்டத்திற்குள் மட்டும் சுருக்க முடியாது. நடிப்பை தாண்டி, இயக்கம், எழுத்து, தயாரிப்பு, பாடகர் என ஒவ்வொரு துறையிலும் தனக்கென தனி முத்திரை பதித்திருக்கிறார். 

கலைப்பசியை போலவே கமல்ஹாசன் கொண்டிருந்த இன்னொரு அடங்காப்பசி தொழில்நுட்பம் மீதானது. 

நாம் சமகாலத்தில்  கொண்டாடும், பயன்படுத்தும், புரிந்துகொள்ள திணறும் பல தொழில்நுட்பங்களை பல ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் சினிமாவிற்கு அறிமுகபடுத்திய தீர்க்கதரிசி. 

சிறந்த கலைஞன் கமல்ஹாசன் சினிமா துறைக்கு அறிமுகப்படுத்திய சில தொழில்நுட்பங்களை பற்றி..........

விக்ரம் - 

 கம்பியூட்டரில் பாடல் பதிவு (computer song recording)

கடந்த 1986 ஆம் ஆண்டு ராஜசேகர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் இந்திய சினிமாவில் முதல் முறையாக கம்யூட்டரில் பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.


குணா 

- ஸ்டெடி கேமரா (steady camera)

கடந்த 1990 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் குணா. இந்த படத்தில் வரும் காட்சிகள் பெரும்பாலும் காடுகள், மலைகளில் தான் படமாக்கப்பட்டிருக்கும். இப்படிப்பட்ட காட்சிகளை எடுக்கும்போது, எல்லா இடத்திலும் கேமரா யூனிட்களை பயன்படுத்த முடியாது. இந்த சிக்கலை தீர்க்கும் வகையில், வேறு எவரின்  உதவியும் இல்லாமல் ஒளிப்பதிவாளர் மட்டுமே பயன்படுத்தும் ஸ்டெடி கேம் தமிழ் திரையுலகிற்கு இந்த படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டது.

 

தேவர் மகன்

 - மேஜிக் சாப்ட்வேர் (movie magic software)

கடந்த 1992 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் - கமல் நடிப்பில் வெளியான தேவர் மகன் படத்தில் மூவி மேஜிக் என்ற புதிய  சாப்ட்வேரை அறிமுகப்படுத்தினார் கமல். இந்த சாப்ட்வேரை பயன்படுத்திதான் தேவர் மகன் படத்திற்கு முழு திரைக்கதையும் எழுதப்பட்டது. தமிழ் சினிமாவில் முதல் முறையாக சாஃப்ட்வேரை பயன்படுத்தி திரைக்கதை எழுதப்பட்ட முதல் படம் தேவர் மகன்.

 

குருதிப்புனல் 

- டால்பி அட்மோஸ் Dolby atmos (sound system audio)

கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான குருதிப்புனல் படத்தில் நடிகர் கமல்ஹாசன் டால்பி அட்மோஸ் (Dolby atmos) என்ற சவுண்ட் டெக்னாலஜியை அறிமுகப்படுத்தினர். இதன் மூலம் திரைப்படத்தின் ஆடியோவை தெளிவாக கேட்க முடியும். தமிழ் சினிமாவில் டால்பி அட்மோஸ் ஆடியோ சிஸ்டத்தை அறிமுகபடுத்தியதும் கமலே.

 மகாநதி

- ஆவிட் எடிட்டிங் சாப்ட்வேர் (avid editing software)

இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் ஆவிட் என்ற எடிட்டிங் சாஃப்ட்வேரை அறிமுகப்படுத்தியிருப்பார். இதற்கு முன்பு பிலிம் ரோலில் எடுக்கப்பட்ட காட்சிகளை வெட்டி ஒட்டி தான் படத்தை எடிட் செய்து வந்தனர். ஆனால் 'மகாநதி' படம் ஆவிட் என்ற சாஃப்ட்வேரை பயன்படுத்தி கம்ப்யூட்டரில் எடிட் செய்யப்பட்டது . அதன் பிறகு வந்த படங்கள் தொடங்கி தற்போது வரை இந்த சாப்ட்வேர் பயன்படுத்தி படம் அல்லது வீடியோக்களை எடிட் செய்து வருகின்றனர் நம்மவர்கள்.


மும்பை எக்ஸ்பிரஸ்

 - டிஜிட்டல்  கேமரா (digital camera )

2005 ஆம் ஆண்டு வெளியான 'மும்பை எக்ஸ்பிரஸ்' படத்தில் முதல் முறையாக டிஜிட்டல் கேமரா (Red camera) பயன்படுத்தப்பட்டது. முழுக்க முழுக்க இந்த புதிய ரக கேமராவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் இந்திய  சினிமாவிலேயே முதல் டிஜிட்டல் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது.

 

விஸ்வரூபம்


- ஆரோ 3டி (auro 3d)

கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான விஸ்வரூபம் படத்தில் ஆரோ 3டி (auro 3d) சவுண்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தினார். உலகிலேயே இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெளியான இரண்டாவது திரைப்படம் விஸ்வரூபம். இந்த சவுண்ட் சிஸ்டத்தின் மூலம் தெளிவான மற்றும் திரையரங்குகளில் படத்தை பார்க்கும் பொழுது ஒரு புதிய கேட்டல் அனுபவத்தை கொடுக்க முடியும். இந்த சவுண்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்ட முதல் திரைப்படம் ரெட் டைல்ஸ் (Red tails)  என்ற ஹாலிவுட் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதனைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்தில் கூட ஒரு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் கமல்ஹாசனை 35 வயது உள்ள நபராக காட்ட படக்குழு புதியவகையிலான டீ-ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளதாகவும், 

இந்த தொழில்நுட்பம்  இதற்கு முன்பு 'தி ஐரிஷ்மென்'  என்ற ஹாலிவுட் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


நீரழி,வும் வேர்கடலையும்.

வேர்க்கடலை சுவையோடு அற்புதமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. அதைவிட இதனை நீரிழிவு நோயாளிகளும், இரத்த கொதிப்பும் உள்ளவர்களும் சாப்பிடலாம் என்பது தான் இன்னும் சிறப்பு. ஆனால் அளவு முக்கியம்.

வேர்க்கடலையில் புரதச்சத்து, கார்போஹைட்ரேட், ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.

அவை நம் உடலுக்கு ஆற்றலை வழங்குவது மட்டுமல்லாமல், நாள்பட்ட நோய்களைத் தடுக்கவும் உதவுகின்றன.

 எப்படி என்று யோசிக்கிறீர்களா? 

வாருங்கள்! 

வேர்க்கடலை சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இப்போது தெரிந்துக் கொள்வோம்.

நீரிழிவு நோயாளிக்களுக்கு, வேர்க்கடலை ஆரோக்கியமான சிற்றுண்டி விருப்பம் என்று கூறப்படுகிறது. 

இது ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகளைக் கொண்டிருக்கவில்லை, எனவே இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். 

கூடுதலாக, வேர்க்கடலையில் மெக்னீசியம் உள்ளது, இது உடலில் இன்சுலின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இன்சுலின் இரத்த சர்க்கரையை உடலின் செல்களுக்குள் நுழைய உதவுகிறது, எனவே அதை ஆற்றலாக மாற்றுகிறது.

நிலக்கடலையை அளவோடு சாப்பிடுவது, ‘கெட்ட’ கொலஸ்ட்ராலைக் குறைப்பதாகவும், உடலில் ‘நல்ல’ கொழுப்பை அதிகரிக்கச் செய்வதாகவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

 மேலும், பல ஆய்வுகள் உடலில் இரத்த அழுத்த அளவைக் குறைக்கும் ஆற்றல் வேர்க்கடலைக்கு இருப்பதாகக் கூறுகின்றன. மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளதால், வேர்க்கடலை இதயத்திற்கு நல்லது என்று கூறப்படுகிறது. 

கூடுதலாக, இதில் ரெஸ்வெராட்ரோல் மற்றும் அமினோ அமிலங்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை தமனிகளின் உள் புறணியை பெருந்தமனி தடிப்பு எனப்படும் நிலையிலிருந்து பாதுகாக்கின்றன.

வேர்க்கடலை ஆரோக்கியமான கொழுப்புகளின் நல்ல மூலமாகும், அவை ஒலிக் அமிலங்களிலிருந்து வருகின்றன. வேர்க்கடலையில் உள்ள இந்த குறிப்பிட்ட பண்பு செல்களில் வீக்கம் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.

வேர்க்கடலை சாப்பிடுவது சில புற்றுநோய்களின் அபாயத்தைத் தடுக்கும் அல்லது குறைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

வேர்க்கடலை கணிசமான அளவு புரதம், வைட்டமின் ஈ மற்றும் ரெஸ்வெராட்ரோல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது மற்றொரு பாலிபினோலிக் ஆக்ஸிஜனேற்றியாகும், இது புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது.

வேர்க்கடலை அதிக புரதம் மற்றும் நார்ச்சத்து கொண்டதால் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு உகந்த தின்பண்டமாக உள்ளது.

 இந்த இரண்டு சத்துக்களும் எடை மேலாண்மைக்கு பயனுள்ளதாக இருக்கும். புரதம் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது, நார்ச்சத்து உடலில் திருப்தியின் அளவை அதிகரிக்கிறது.

வேர்க்கடலை அதிக சத்தானது, சுவையானது மற்றும் ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்றாலும், இதை அதிகமாக சாப்பிடுவது பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும். 

இரும்பு, துத்தநாகம், மாங்கனீசு மற்றும் கால்சியம் போன்ற பிற தாதுக்களை உறிஞ்சுவதைத் தடுப்பதில் இருந்து, உங்கள் எடை இழப்பு இலக்குகளை சிதைப்பது, செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துவது வரை, அதிகப்படியான வேர்க்கடலை உட்கொள்வது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். 

மேலும், வேர்க்கடலைக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் எக்காரணம் கொண்டும் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

நிபுணர்கள் ஒரு நாளைக்கு 42 கிராம் அதாவது சுமார் 16 வேர்க்கடலை சாப்பிட பரிந்துரைக்கின்றனர்.

 சிலர் ஒரு நாளில் ஒரு பிடி வேர்க்கடலை சாப்பிட பரிந்துரைக்கின்றனர்.

----------------------------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?