தலைகளை உருட்டாமல் ஓயாது

 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கு இப்போது சி.பி.ஐ வசம் இருக்கிறது. 

ஆனால் அந்த வழக்கில் அடிபட்டவர்கள், குண்டு பாய்ந்தவர்கள் என பாதிக்கப்பட்ட எல்லோரையும் குற்றவாளிகளாகவும், மக்களைச் சுட்ட, துப்பாக்கிச்சூட்டுக்குக் காரணமான காவல்துறையினரையெல்லாம் சாட்சிகளாகவும் போட்டிருக்கிறது சி.பி.ஐ..

 அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையோ, காவல்துறை,வருவாய்துறையின் முறை தவறிய செயல்களை துணிச்சலாக சுட்டிக் காட்டியுள்ளது.

தவறு செய்த அதிகாரிகளின் பெயர்களை சுட்டிக்காட்டி அரசை நடவடிக்கை எடுக்கக் கூறியுள்ளது.

அவர்கள் தலைகளை உருட்டாமல் ஓயாது என்கிறார்கள் காவல்துறையில்.


தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு

சம்பவத்தின்போது, தென்மண்டல ஐ.ஜி-யாக இருந்த சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி-யாக இருந்த கபில் குமார் சி சரத்கர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க உள்துறையிலிருந்து கிரீன் சிக்னல் கிடைத்திருக்கிறதாம். 

விரைவில் நடவடிக்கை என்பதால், கலக்கத்தில் இருக்கிறார்கள் அந்த ஐ.பி.எஸ் அதிகாரிகள்.

-------+------------+---------+-----------+-----------




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?