தனிமனிதம் தனித்துவம்

 தனி­ம­னித தனித்துவம்(சுதந்­தி­ரம்) குறித்த அழுத்­த­மான கருத்தை உச்­ச­நீ­தி­மன்றத் தலைமை நீதி­பதி சந்­தி­ர­சூட் தலை­மை­யி­லான அமர்வு தெரி­வித்­துள்­ளது.

உச்­ச­நீ­தி­மன்­றத் தலைமை நீதி­பதி டி.ஒய்.சந்­தி­ர­சூட், நீதி­பதி பி.எஸ்.நர­சிம்மா ஆகி­யோர் அமர்­வின் முன் வந்த ஒரு வழக்­கில் அளித்த தீர்ப்பில், ‘‘தனி­ந­ப­ரின் சுதந்­தி­ர­மா­னது மதிப்பு மிக்­க­தும், அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டம் வழங்­கி­யுள்ள தவிர்க்க இய­லாத உரி­மை­யும் ஆகும். 

அந்­தச் சுதந்­தி­ரம் பறிக்­கப்­ப­டும் போது அர­ச­மைப்­புச் சட்­டம் வழங்­கி­யுள்ள பொறுப்­பை­யும் கட­மை­யை­யும் உச்­ச­நீ­தி­மன்­றம் தவ­றா­மல் நிறை வேற்­றும். அவ்­வா­றான பிரச்­சி­னை­க­ளில் நீதி­மன்­றங்­கள் தலை­யிடவில்லை என்­றால் குரல் நசுக்­கப்­பட்டு சுதந்­தி­ரம் பறிக்கப்படும்.

தனிமனிதசுதந்­தி­ரத்­தைக் காக்க வேண்­டும் என்­பது அர­ச­மைப்­புச் சட்­டத்­தின் 136 ஆவது பிரி­வால் உச்­ச­நீதி மன்­றத்­துக்கு வழங்­கப்பட்­டுள்ள பொறுப்­பு­ணர்வு ஆகும். அவ்­வா­றான வழக்­கு­க­ளில் உச்­ச­நீதி­மன்­றம் தலை­யிட்டு தீர்வு வழங்­க­வில்லை என்­றால் நாங்­கள் இங்கு இருப்­ப­தற்கே பொருள் இல்லை. 

அது அர­சி­ய­ல­மைப்­புச் சட்டத்தை மீறிய செயல் ஆகும். இது­போன்ற வழக்­கு­களை விசா­ரிப்ப­தற்கு இந்த நீதி­மன்­றம் தொடர்ந்து முக்­கி­யத்­து­வம் அளிக்­கும்” என்று குறிப்­பிட்­டுள்­ளார்­கள்.

இந்த தீர்ப்­பி­னைக் குறிப்­பிட்டு மும்­பை­யில் நடந்த விழா­வி­லும் பேசி இருக்­கி­றார் உச்­ச­நீ­தி­மன்ற தலைமை நீதி­பதி சந்­தி­ர­சூட். ‘‘தனி­ம­னித சுதந்­தி­ரத்தை நீதி­மன்­றங்­களே காக்­கும்” என்று அப்­போ­தும் வலியுறுத்திப் பேசி இருக்­கி­றார். 

உச்­ச­நீ­தி­மன்­றத்­தின் ஐம்­ப­தா­வது தலைமை நீதி­ப­தி­யாக பொறுப்­பேற்றுக் கொண்­ட­வர் டி.ஒய்.சந்­தி­ர­சூட் அவர்­கள். தலைமை நீதி­ப­தி­யாக பொறுப்­பேற்­றுக் கொண்­ட­போது, ‘‘இந்­திய நீதித்­து­றைக்­குத் தலைமை தாங்­கு­வது மிகப்­பெ­ரிய வாய்ப்­பும் பொறுப்­பும் ஆகும். 

பொது­மக்­களுக்குச் சேவை­யாற்­று­வதே எனது முன்­னு­ரிமை. நாட்­டில் உள்ள அனை­வ­ருக்­கா­க­வும் நான் பணி­யாற்­று­வேன்” என்று சொன்­னார். இந்­தி­யா­வின் புனித நூல் அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டம் மட்­டுமே என்­ப­தைச் சொல்லி வந்­த­வர் அவர். ‘அர­சி­ய­ல­மைப்­பு’­தான் அனைத்­துக்­கும் முக்­கி­யத்­து­வம் என்று சொன்­ன­வர் அவர்.

‘அரசை விமர்­சிப்­பது தேசத்­து­ரோகம் ஆகாது, ஜன­நா­ய­கத் தன்­மை­தான்’ என்று குஜ­ராத் மாநி­லத்­தில் நடந்த நிகழ்ச்­சி­யில் பேசி­னார்’’ என் வார்த்­தை­கள் அல்ல, என் வேகம் பேசும்’’ என்று சொல்லி இருந்­தார். அந்த வகை­யில் தான் அவ­ரது இந்தக் கருத்­துக்­கள் அமைந்­துள்­ளன.

தனி மனி­த­னின் அடிப்­படை உரி­மை­களை இந்­திய அர­சி­ய­லமைப்புச் சட்­டம் விரி­வாக வரை­ய­றுத்து வழங்கி இருக்­கி­றது. 

குடி­மை­யி­யல் உரிமையை அனைத்து தனி மனி­தர்­க­ளுக்­கும் சட்­டம் வழங்கி உள்ளது. சம உரிமை, பேச்சு உரிமை, கருத்தை வெளிப்­ப­டுத்­தும் உரிமை, கூடி வாழும் உரிமை, வழி­பாட்டு உரிமை, மத சுதந்­தி­ரம், சமூக நீதி கோரும் உரிமை ஆகி­யவை இன்­றி­ய­மை­யாத உரி­மை­க­ளாக வழங்­கப்­பட்­டுள்­ளன. 

இந்த உரி­மை­களை வழங்க மறுப்­பதோ, தடுப்­பதோ சட்­டப்­படி குற்ற­மா­கும்.

இன்னும் சொன்­னால், ‘குடி­மக்­க­ளின் அடிப்­படை உரி­மை­க­ளைப் பறிப்­ப­தா­கவோ, அதற்கு முர­ணா­ன­தா­கவோ எந்­தச் சட்­டத்­தை­யும் இயற்­றக் கூடாது’ என்­றும் விதி­கள் உள்­ளன. 

அப்­படி ஒரு சட்­டம் இயற்­றப்­பட்­டால் அந்­தச் சட்­டம் ஏற்­கப்­ப­டாது என்­றும் விதி உள்­ளது. அனை­வர்க்­கும் சம­மான பாது­காப்­புச் சட்­டம் என்­பதை அமெ­ரிக்­கச் சட்­டத்­தில் இருந்து எடுத்­த­தா­கச் சொல்­வார்­கள். 

ஆனால் அமெ­ரிக்­கச் சட்­டத்தை விட இந்­தி­யச் சட்­டம் வலி­மை­யா­னது ஆகும்.

இந்த உரி­மை­கள் இன்­னா­ருக்கு மட்­டுமே உண்டு, இன்­னா­ருக்கு இல்லை என்ற பாகு­பாடு சட்­டத்­தில் இல்லை. 

சாதி, மதம், இனம், மொழி, பால், நிறம் ஆகிய அனைத்­துப் பாகு­பா­டும் இல்­லா­மல் அனைத்து உரி­மை­க­ளும் அனைத்து மனி­தர்­க­ளுக்­கும் பொது­வா­னது என்­கி­றது அர­சிய­ல­மைப்­புச் சட்­டம்.

‘‘பா.ஜ.க. ஆட்­சி­யில் மனித உரிமை மீறல்­கள் அதி­க­ரித்­துள்­ளன” என்ற என்.ஹெச்.ஆர்.ஓ.அறிக்­கையை இங்கு நினை­வு­கூர வேண்­டி­ய­தா­யுள்­ளது. ‘‘பா.ஜ.க. பொறுப்­பேற்று ஆட்­சி­யி­லுள்ள கடந்த எட்டு ஆண்டு­க­ளில் முற்­போக்கு சிந்­த­னா­வா­தி­கள், மதச்­சார்­பற்ற தலை­வர்­கள், அறி­வு­ஜீ­வி­கள் மற்­றும் சிறு­பான்­மை­யி­னர் தொடர்ந்து தாக்­கப்­ப­டு­வதை தேசிய மனித உரி­மை­கள் அமைப்­பு­க­ளின் கூட்­ட­மைப்பு கண்­டித்து இருக்­கி­றது.

‘‘அதி­கா­ரத்­தைப் பயன்­ப­டுத்தி பொய் வழக்­கு­கள் பதிவு செய்து கொடும் அடக்­கு­மு­றைச் சட்­டங்­க­ளில் சிறை­யில் அடைக்­கப்­ப­டு­வது தொடர்­கி­றது. 

உடல் ரீதி­யா­க­வும், மன ரீதி­யா­க­வும் சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­படு­வது போன்ற நிகழ்­வு­கள் தொடர்­கின்­றன. இதுபோன்ற நிகழ்­வு­களை வெளி­யு­ல­கத்­துக்­குக் கொண்டு வரு­வோர் மீது பா.ஜ.க. அரசு அடக்­கு­முறை­க­ளைக் கட்­ட­விழ்த்து விடு­கி­றது.

மனி­த­னின் அடிப்­படை உரி­மை­களை கோர முடி­யாத அள­வுக்கு தேசத்­து­ரோக வழக்­கு­கள் பதி­யப்­ப­டு­கின்­றன” என்­றும் அந்த அறிக்கை சொல்­கி­றது.பா.ஜ.க. 

ஆளும் மாநி­லங்­க­ளில் இதுபோன்ற சம்­ப­வங்­கள் அதி­க­மாக நடப்­ப­தா­க­வும் அந்த அறிக்கை சொல்­கி­றது. 

குடி­யு­ரி­மைச் சட்­டம், பண­மதிப்­பி­ழப்பு ஆகிய பா.ஜ.க.வின் தோல்வி அடைந்த திட்­டங்­களை எதிர்ப்­ப­வர்­கள் அடக்­கு­மு­றைக்கு உள்­ளாக்­கப்­ப­டு­வ­தா­க­வும் அந்த அறிக்கை சொல்­கி­றது. 

இத்­த­கைய சூழ­லில்­தான் உச்­ச­நீ­தி­மன்­றத் தலைமை நீதி­பதி­யின் கருத்து முக்­கி­யத்­து­வம் பெறு­கி­றது.


--------------------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?