உலக அளவில் பா. ஜ.க, தானோ?

 மல்யுத்த வீரர்களின் விண்ணப்பம் வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யாததற்காக ஏழு பேர் கொண்ட மல்யுத்த வீரர்கள் குழு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

 வழக்கை பட்டியலிட்ட நீதிமன்றம், விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு நிர்ணயித்தது.

அவர்களின் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல், அனைத்து 7 பெண் மனுதாரர்களின் பெயர்களையும் அவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்த முடியாதபடி நீதித்துறை பதிவேட்டில் இருந்து நீக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எங்களுடன் அரசியல் நடக்கிறது என்று மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா கூறினார். தர்ணா நடக்கும் இடத்திற்கு தண்ணீர் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை அல்லது ஆதரவாளர்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை.

 அனைத்து அரசியல் கட்சிகளும் மேடைக்கு வரவேற்கிறேன் என்றார். 

அவர் மேடையில் இருந்து அரசியல் செய்ய மாட்டார். நாங்கள் எந்த கட்சியையும் சார்ந்தவர்கள் அல்ல.

கடந்த ஜனவரி மாதம் எந்தக் கட்சித் தலைவர்களையும் மேடைக்கு வர மல்யுத்த வீரர்கள் அனுமதிக்கவில்லை. 

நாட்டின் அனைத்து வீரர்களிடமும் ஆதரவு கோருஉள்ளது.

குறித்து பூனியா ட்வீட் செய்துள்ளார்,

" இன்று மல்யுத்த வீரர்களுடன் நிற்க வேண்டிய அவசியம் உள்ளது" 

-என்று.

-----------------+--------------------------------------

பாலியல் ல்சா கட்சி தானோ?

பாஜகவின் வெளிநாடு வாழ் நண்பர்களின்  தலைவராக இருந்தவர் பலேஷ் தன்கர். 

43 வயதாகும் இவர் 5 கொரிய பெண்களுக்கு போதை மருந்தை கொடுத்ததாக தெரிகிறது. 

இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்தான் இவர் மீது ஏராளமான பாலியல் வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்களுடன்தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து தனது செல்போனில் வைத்திருந்தாராம். அதை போலீஸார் கைப்பற்றினர்.

அந்த வீடியோக்களில் பலேஷ் தன்னை நம்பி வரும் பெண்களுக்கு போதை மருந்தை கொடுக்கிறார். அதில் மயங்கும் பெண்களை பலாத்காரம் செய்கிறார். 

பின்னர் அலாரம் கடிகாரம் மற்றும் செல்போன் ஆகியவற்றின் பின்புறம் மறைத்து வைத்திருந்த தனது கேமராவில் வீடியோவும் எடுத்துக் கொள்கிறார். அவ்வாறு போலீஸார் ஏராளமான வீடியோக்களை கைப்பற்றியுள்ளனர்.

அந்த வீடியோக்களில் ஒரு வீடியோவானது 95 நிமிடங்களுக்கு ஓடக் கூடியது. 

அதில் மயங்கி கிடந்த பல பெண்களுடன் பலேஷ் உறவு வைத்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது 39 வழக்குகள் அவர் மீது தனித்தனியே பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் கண்கலங்கினார். 

மேலும் பல்வேறு பொய்களை கூறி 5 கொரிய பெண்களை அழைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் உறுதியாகியுள்ளது என தீர்ப்பளித்தனர். இவர் மே மாதம் மீது ஆஜர்படுத்தப்படுவார்.

இதன் பிறகு இந்த ஆண்டு அவருக்கு தண்டனை வழங்கப்படும் என தெரிகிறது. இதுகுறித்து பலேஷிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தியதில் அவர் அழுதபடியே நான் பெண்களிடம் நிறைய பொய்களை கூறியுள்ளேன். 

எனது திருமண வாழ்க்கை கசப்பாக இருந்ததால் நான் வேறு ஒருபெண்ணுடன் தொடர்பில் இருந்தேன்.

ஆனால் அந்த பெண்ணும் என்னை ஒரு சிறிய பிரச்சினைக்காக விட்டுவிட்டு சென்றுவிட்டார். இதனால் நான் தனிமையில் வாடியதால் பெண்களிடம் நான் பொய் கூறியதாக கண்ணீர் மல்க கூறினார். 

சில நேரங்களில் மயக்கமடையும் பெண்களை பலாத்காரம் செய்யும் பலேஷ் பல சமயங்களில் போதை மருந்து கொடுத்து மயங்காத பெண்களை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்த சம்பவங்களும் நடந்துள்ளன.

பலேஷ் கொரிய பெண்களை பலாத்காரம் செய்து எடுத்த வீடியோக்களை தனித்தனியே ஃபோல்டர் போட்டு வைத்த்துள்ளார். 

அதில் சம்பந்தப்பட்ட கொரிய பெண்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள்தான் என்று பலேஷ் குறிப்பிட்டுள்ளார். மேலும் மயக்கத்தில் இருப்போரையும் தள்ளாடியபடி இருப்போரையும் எதுவும் செய்ய முடியாது என்றும் பலேஷ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் பலேஷ் பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்தார் என்பது நிரூபணமாகியுள்ளதாக நீதிபதி தெரிவித்தார். 

இந்த சம்பவத்தை விவரித்த நாளேடுகள் ஆஸ்திரேலியாவில் மிகவும் மோசமான பாலியல் குற்றவாளிகளில் பலேஷும் ஒருவர் என விவரித்துள்ளன.

பா(லியல்)(ல்சா) கட்சித் தலைவராக இருந்தவர்னா சும்மாவா?

-------------------------------------------------------------------

தூத்துக்குடி  கி.நி.அலுவலர் படுகொலை.


தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக லூர்து பிரான்ஸிஸ் பணியாற்றி வந்தார்.


 இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் ரோந்து சென்றிருந்தபோது, ராமசுப்பு என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் ஆற்று மணலை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த விஏஓ லூர்து பிரான்சிஸ்,


 உடனடியாக முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


இந்த நிலையில், இன்று லூர்து பிரான்சிஸ் தனது அலுவலகத்தில் வழக்கமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென அலுவலகத்திற்குள் புகுந்த இருவர், அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். 


இதில் படுகாயம் அடைந்த அவர், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 


இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த முறப்பநாடு போலீசார், ஒருவரைப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொலை செய்யப்பட்ட கி.நி.அலுவலர் லூர்து பிரான்சிஸ் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணியும் ஒரு கோடி ரூபாய் நிதியுதவியும் அறிவித்தார்.

---------------------------+++++++-------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?