இதெல்லாம் ரொம்ப தப்பு

 ஏதோ மோடி தான் இந்திய பொதுத்துறை நிறுவனங்களை சல்லி சல்லியா வித்து தின்கிறார் என நினைக்கிறீங்க

வாஜ்பாய் மறுமுறை பிரதமர் ஆகியிருந்தால், அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் விற்றிருப்பார்

சொன்னது அனில் அகர்வால்.

ஆம்.

ஸ்டெர்லைட் ஓனரே தான்.

அண்ணா "வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது" என 60களில் முழங்கினார்

காரணம்,

பிரதமர் நேரு சுரங்க மாநிலங்களில் முன்னுரிமை கொடுத்து கனரக தொழிற்சாலை அமைத்தார்

முதல் பொதுத்துறை நிறுவனம் Bharat Aluminium Corporation 1965 ல் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.

90களில் நிதியமைச்சர் மன்மோகன் சிங் நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்பனை செய்யலாம் என புதிய பொருளாதாரக் கொள்கையை

மாறிவரும் உலகமயமாதலுக்கு ஏற்ப கொண்டு வந்தார்

இந்திய பொருளாதாரம் பாய்ச்சலுக்கு தயாரானது.

35 ஆண்டு லாபத்துடன் இயங்கிய BALCO வாஜ்பாய் காலத்தில் நட்டம் என்று கூறி வேதாந்த கம்பெனிக்கு விற்பனை செய்யப்பட்டது

5000 கோடி மதிப்புள்ள நிறுவனம்  550 கோடிக்கு

விற்பனை செய்யப் பட்டது

ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட்

749 கோடிக்கு விற்பனைஸ்டெர்லைட் நிறுவனம் பால்கோவை வாங்கப் போவது அறிந்ததும் அதன் ஊழியர்கள் போராடத் துவங்கினர்.

வாஜ்பாயின் சமகால ஆர்எஸ்எஸ் தலைவர்களே பால்கோ விற்பனையை எதிர்த்தனர்

வழக்கு விசாரணையின் போது

விற்பனை பற்றிய ஆவணங்கள் கா.ணாமல் போனதாக அறிவிவிதிக்கப்பட்டது.

2001ல், ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ், பிபிஎல், வீடியோகான் ஆகியவை ஹர்ஷத் மேத்தா மற்றும் 17 தரகர்களுடன் கூட்டுப் பங்குகள் மற்றும் பங்குகளின் விலையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டதால் 2 ஆண்டுகளுக்கு மூலதனச் சந்தைகளை அணுக தடை விதிக்கப்பட்டது.

பால்கோவை ஸ்டெர்லைட் வாங்கிய பின் அதன் கோர்பா அலகில் 2


009ம் ஆண்டு புகை போக்கி இடிந்து விழுந்ததில் 49 பேர் மரணம்

மின்னல் தாக்கியதாக நிர்வாகம் சார்பில் அறிவிப்பு

நிர்வாகத்தின் கவனக்குறைவு காரணம் என தொழிலாளர்கள் குற்றச்சாட்டினர்.


2002ல் முறையே BALCO வின் 51% பங்கை 550 கோடிக்கும்  HZL இன் 61% பங்கை 746 கோடிக்கும் கைப்பற்றிய வேதாந்தா 2016 இல் மீதம் உள்ள 49% மற்றும் 29% ஐ 25 ஆயிரம் கோடிக்கு வாங்க தயாரானது.

வேதாந்தாவின் ஒரு துணை நிறுவனம்தான் ஸ்டெர்லைட்.

1993 ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் இரத்தினகிரியில் அரசு அதற்கு வழங்கிய இடத்தில் வேதாந்தா தனது காப்பர் ஆலையை நிர்மாணிக்க முயன்ற போது, 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட அந்த ஊர் மக்கள் ஊர்வலமாக சென்று தொழிற்சாலையை இடித்துத் தள்ளினர்.

1997 ல் தூத்துக்குடியில் நிறுவப்படும் முன் கோவா, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்கள் தொழிற்சாலையை அமைக்க அனுமதி மறுத்தனர்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவருக்கு ஏராளமான பங்குகள்,பணம் கொடுத்து தமிழ்நாடு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டை  ஆரம்பித்தார் அகர்வால்.

ஜெயல்லிதாவே நாசகார ஸ்டெர்லைட்டை திறந்தும் வைத்தார்..

அதன் சுற்றுப்புற மாசுபாடுகளால்முறைகேடுகறால்

2018 ல் தூத்துக்குடி மக்கள் 14 பேரை ,பலி கொடுத்து அதனை மூடினர்.

மூடப்பட்ட தூத்துக்குடி ஆலையில் கொரோனா உச்சத்தில் இருந்த காலத்தில் ஆக்சிசன் உற்பத்தி செய்கிறேன் என்றது ஸ்டெர்லைட்

தமிழ்நாடு  மக்கள் மறுக்கவே,

நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்றத

ஆலை தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் ஆலைக்கு ஆதரவாக பலர் போராடியவர் மீது அவதூறு பரப்புகின்புரியுதா?

2017-18 ல் ₹24951 கோடியாக இருந்த வேதாந்தா வருமானம்

2018-19 ல் ₹10,739 கோடி எனக் குறைந்தத

ஸ்டெர்லைட் மூடப்பட்டதால் வேதாந்தாவின் வருமானம் 57% குறைந்தது

ரம்மி நிறுவனங்களுடன் தொடர்பில் ,ஆதரவாக உள்ள ஒருவர் ஸ்டெர்லைட்டை ஆதரிப்பது ஏன் என புரியுதா?

புதிதாக உருவாக்க வக்கில்லை

என்றாலும், இருப்பதை வித்து தின்பவரிடம்

நாங்க கேட்டது ஒன்னே ஒன்னு

மதுரை AIIMSஅதை முடிக்க நாலு வருஷமா துப்பு இல்லை.

ஆனால், நாங்கள் என்ன படிக்கணும், என்ன சாப்பிடனும்

என்று மட்டும் தூக்கிட்டு வந்திர்றதுஏன்.



இன்றைய வந்தே பாரத் ரெயில் துவக்க விழாவில் தமிழக முதல்வர் பேசி முடித்ததும் அடுத்ததாக நரேந்திர மோடி பேசப் போகிறார் என்று அறிவிப்பு வந்ததுமே மக்கள் கூட்டம் கூட்டமாக கலைந்து சென்ற காட்சி .
அப்போது இப்படி இருந்தா தாமரை எப்படி மலரும்? 
என்று கேட்டபடியே ஒருவர் சென்றார் 

கடலில் பேனா நினைவு சின்னம்?

கடலில் அல்லது கடல் சார்ந்த பகுதியில் அடையாள சின்னம், சிலை என்பது பொதுவாக அணைத்து தலைவர்களுக்கும் குடுக்கும் மரியாதை.

சீமான் அண்ணன் சொல்வது உண்மை இல்லை.

சீமான்: 

காமராஜர் அய்யாவை எந்த கடலில் சிலை வைத்தீர்கள்?

சிலை அல்ல காமராஜருக்கு வங்கக்கடல், இந்தியன் பெருங்கடல் மற்றும் அரபிக் கடல் முக்கடல் சங்கமிக்கும் இடத்தில். 

பெருந்தலைவர் காமராஜருக்கு மணிமண்டபம் 2000 இல் கட்டியது முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர். தி.மு.க ஆட்சியில்.

சீமான்:

2 ஏக்கர் நிலம் எதற்கு? 

பொதுவாகவே பெருந்தலைவர்களுக்கு இதை விட அதிகமா தான் திராவிட கட்சி இடம் ஒதுக்கும்.

அம்பேத்கர் மணிமண்டபம் சென்னையில் 5  ஏக்கர் இடத்தில அமைக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் மணிமண்டபம் அடையாறில் உள்ளது.

காமராஜர் மணிமண்டபம் பாண்டிச்சேரியில் 3.5 ஏக்கர் மணிமண்டபம் 23 கோடி செலவில்ஒ ன்றிய அரசு சென்ற ஆண்டு கட்டியது.

சீமான்:

தேச தந்தை காந்தி எந்த கடலில் இருக்கிறார்? இது எந்த நாட்டில் நடக்கும்?

கன்னியாகுமாரி  கடலில் 1956 ஆம் ஆண்டு கோபாலச்சரியா மண்டிமண்டபம் கட்டினார்.

 எதுக்கு மணிமண்டபம் கடன் இருக்கும் சூழலில் சூழலில்?

அப்துல் கலாம் ஐயாவிற்கு 2 ஏக்கர் நிலத்தில் நினைவு மண்டபம் 120 கோடி மதிப்பில் கட்டியது ஒன்றிய அரசு. ஒன்றிய அரசும் கடனில் தான் இயங்குது. இருப்பினும் மண்ணின் மக்களுக்கு குடுக்கும் மரபு இது.

இன்று 5 முறை தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் கலைஞருக்கு பேனா சிலை வைப்பதற்கு ஏன் எதிர்ப்பு.

---_--------_------------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?