கர்நாடகா....

 தாமரை 'மலர்ந்த’ வரலாறும் 

'வாடிப்போன' கதையும்!

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கத் தேவையான 113 இடங்களைக் கடந்து மாலை 6.30 மணி நிலவரப்படி 124 இடங்களில் வென்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

இதன் மூலம் தனிப்பெரும்பான்மையுடன் மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் கட்சியாக காங்கிரஸ் உருப்பெற்றுள்ளது. அத்துடன் மேலும் 12 இடங்களிலும் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது.

ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி 58 இடங்களில் வென்று, மேலும் 8 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்த தேர்தலில் வேறு கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைப்பதாக இருந்தாலும் அது சாத்தியம் இல்லை என்ற நிலையே பாஜகவுக்கு உள்ளது.
இப்படி, எல்லா தரப்பிலிருந்தும் கட்சிக்கு ஏமாற்றம் அளிக்கும் செய்திகளே வந்துகொண்டிருக்க, இந்த தோல்வியில் இருந்து பாரதிய ஜனதா கட்சி மீள்வது அவ்வளவு கடினமான விஷயமாக இருக்காது.
ஆனால் இங்கு காங்கிரஸ் தோல்வியடைந்தால், 2024 பொதுத் தேர்தலில் நரேந்திர மோதியின் புகழுக்கு எதிராக முழு வலுவுடன் போட்டிபோடுவது அக்கட்சிக்கு அவ்வளவு சுலபமாக இருக்காது.

கர்நாடகாவில் காங்கிரஸ் பெரும்பான்மையை நோக்கி நகர்வது,1985க்குப் பிறகு இங்கு எந்த அரசும் தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்படாத ஒரு போக்கின் தொடர்ச்சிதான்.
பாஜகவுக்கு மிகக்குறைவான இடங்கள் வித்தியாசத்தில் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக அது உருவெடுத்தது.
ஆனால் ரெட்டி சகோதரர்களின் உதவியுடன் ஆட்சி அமைந்த உடனேயே பாஜக பிரச்னையை சந்தித்தது. ஏனென்றால் அவர்கள் மீது சட்டவிரோத சுரங்கம் மூலம் பணம் சம்பாதித்ததாக கடுமையான குற்றச்சாட்டுகள் இருந்தன.
கர்நாடகாவில் பாஜகவின் எழுச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பாளராக எடியூரப்பா கருதப்படுகிறார்.
கர்நாடகாவில் இதுவரை மூன்று முதல்வர்களால் மட்டுமே தங்கள் ஐந்தாண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்ய முடிந்தது. இந்த மூன்று முதல்வர்களும் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள்.
இந்த மூன்று முதல்வர்கள் எஸ் நிஜலிங்கப்பா (1962-1968), டி. தேவராஜ அர்ஸ் (1972-1977) மற்றும் சித்தராமையா (2013-2018).
சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக லோகாயுக்தாவின் அறிக்கையில் எடியூரப்பாவின் பெயரும் இருந்தது. எடியூரப்பா ராஜிநாமா செய்ய விரும்பவில்லை. ஆனால் கட்சியின் மேலிடம் அவரது நிலைப்பாட்டை ஆதரிக்கவில்லை. எடியூரப்பா 2012இல் பாஜகவில் இருந்து பிரிந்தார்.
கடந்த 2008ஆம் ஆண்டு முதல் கர்நாடகாவில் நடைபெற்ற மூன்று சட்டப்பேரவைத்தேர்தல்களில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் 30% முதல் 36% வரையிலும், காங்கிரஸின் வாக்கு சதவிகிதம் 35% முதல் 38% வரையிலும் இருந்தது.
மறுபுறம் மதசார்பற்ற ஜனதா தளத்தின் வாக்கு சதவிகிதம் 18 முதல் 20 சதவிகிதம் வரை இருந்தது. இந்த மூன்று கட்சிகளின் வாக்கு சதவிகிதத்தைப் பார்த்தால் சாதி அணிதிரட்டல் முக்கியப் பங்காற்றியுள்ளது என்பது தெரிகிறது.
கர்நாடகாவில் பாஜக ஒரு பெரிய கட்சியாக 1990 களில் உருவாகத்தொடங்கியது. இதில் குறிப்பாக இரண்டு காரணிகள் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
முதல் காரணம், கர்நாடகாவில் ஆதிக்க சமூகமான லிங்காயத்-வீரசைவர்களின் ஆதரவு பாஜகவுக்கு கிடைத்தது. மாநிலத்தின் மூத்த பாஜக தலைவரான எடியூரப்பாவும் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்தான்.
இந்துத்துவ அரசியல்
பாஜக தேர்தலில் பெற்ற இடங்களின் எண்ணிக்கையை குறிப்பிடும் வரைபடம்
இரண்டாவது காரணம், கர்நாடகாவில் இந்துத்துவ அரசியலை பாஜக வலுப்படுத்த முடிந்துள்ளது.
இது தவிர, மற்றொரு ஆதிக்க சாதியினரான வொக்கலிகா சமூகத்தினரிடம் இருந்தும் பாஜகவுக்கு ஓரளவு ஆதரவு கிடைத்து வருகிறது.
கர்நாடகாவின் நடுத்தர வர்க்கத்தினர், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் மத்தியில் ஒரளவிற்கு ஊடுருவுவதில் பாஜக வெற்றி பெற்றது.
ஆனால் கர்நாடகாவில் கடந்த மூன்று சட்டப்பேரவைத் தேர்தல்களைப் பார்த்தால்,சாதி, மத சமன்பாட்டில் கூட பாஜக பெரும்பான்மையைப் பெறத் தவறிவிட்டது என்பது தெளிவாகிறது.
2008 மற்றும் 2019 ஆகிய இருமுறையும் கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைத்தது, ஆனால் எந்தத் தேர்தலிலும் அக்கட்சிக்கு தெளிவான பெரும்பான்மை கிடைக்கவில்லை.
2008 இல் பாஜக அதிகபட்சமாக 110 இடங்களையும், 2018 இல் 105 இடங்களையும் பெற்றது. 2018 இல் காங்கிரஸ் 78 இடங்களையும், மதசார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களையும் பெற்றன.
இரண்டு முறையும் பாஜக மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
2013 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மோசமான தோல்வியை சந்திக்க நேர்ந்தது. அப்போது எடியூரப்பா பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி அமைத்து தேர்தலில் போட்டியிட்டார்.
2013 இல் பாஜகவுக்கு 40 இடங்கள் மட்டுமே கிடைத்தது.
2008 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பாஜக ஆட்சி அமைக்க, மற்ற கட்சி உறுப்பினர்கள் அல்லது சுயேச்சை உறுப்பினர்களை தன்பக்கம் கொண்டுவந்தது. அவர்கள் பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள்.
இந்த சாதிகள் - பிராமணர்கள், லிங்காயத்-வீரசைவர் மற்றும் அவற்றின் துணை சாதிகள், வொக்கலிகாக்கள், குருபாக்கள், சிறிய பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர்.
லிங்காயத்துகளின் ஆதரவு
இந்த எம்எல்ஏக்கள் அனைவரும் பாஜகவுக்கு வெற்றி கடினமாக இருந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
இந்த எம்எல்ஏக்கள் அனைவருக்கும் அப்பகுதிகளில் சமூக அடித்தளம் இருந்தது மற்றும் அந்த பகுதிகளில் பாஜகவை பிரபலமாக்கும் திறன் அவர்களுக்கு இருந்தது.
காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளில் இருந்து ராஜிநாமா செய்து பாஜகவில் இணைந்த எம்எல்ஏக்கள், மீண்டும் பாஜக சார்பில் போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற்றனர்.
பல்வேறு சாதிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை உடைத்து, தாங்கள் ஊடுருவக்கடினமாக உள்ள பகுதிகளை அவர்கள் மூலம் அடையும் இந்த வழி, பாஜகவின் உத்தியின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.
லிங்காயத்துகளின் வாக்குகளை மட்டுமே நம்பி இருக்க பாஜக விரும்பவில்லை.
2018 இல் காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் இணைந்து ஆட்சி அமைத்தது. ஆனால் 14 மாதங்களில் ஆட்சி கவிழ்ந்தது. உறுப்பினர்களை விலைக்கு வாங்கியதாக பாஜக மற்றும் எடியூரப்பா மீது குற்றம் சாட்டப்பட்டது.
2008 கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் மும்பை கர்நாடகா பகுதியில் பாஜக அதிகபட்ச இடங்களைப்பெற்றது.
இந்த பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் லிங்காயத் சமூகத்தினர், எண்ணிக்கை அடிப்படையில் மிகவும் வலுவாக உள்ளனர்.
1994 இல் கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக 40 இடங்களைப் பெற்றபோது இப்பகுதியில் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
'ஏமாற்ற' அலை
ஆனால் பாஜகவின் தலைமை எடியூரப்பாவிடம் வந்தபிறகு 2004ல் மும்பை-கர்நாடகா பகுதியில் 24 இடங்களையும், 2008ல் 34 இடங்களையும் அக்கட்சி கைப்பற்றியது.
எச்.டி.குமாரசாமி (வொக்கலிகா சமூகம்) தன்னை ஏமாற்றிவிட்டார் என்ற உணர்வை எடியூரப்பாவால் மக்களிடையே பரப்ப முடிந்ததால் 2008-ல் பாஜக அதிகபட்ச இடங்களைப் பெற்றதாக கூறப்படுகிறது.
கர்நாடகாவில் லிங்காயத்துகளின் தொகை சுமார் 17 சதவிகிதமாகவும், வொக்கலிகர்களின் தொகை 12 சதவிகிதமாகவும் உள்ளது. பாரம்பரியமாக, லிங்காயத்துகள் பாஜகவையும், வொக்கலிகாக்கள் காங்கிரஸையும் ஆதரித்து வந்தனர்.
பாஜக.வுடன் அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் இருந்தபோதிலும் 2007 ஆம் ஆண்டில் முதல்வர் நாற்காலியை விட்டுக்கொடுக்க குமாரசாமி மறுத்துவிட்டார்.
குமாரசாமியின் இந்த நிலைப்பாட்டை தனக்கு சாதகமாக எடியூரப்பா பயன்படுத்தி லிங்காயத்து வாக்குகளை திரட்டினார். 2008-ல் பாஜக முதல்முறையாக ஆட்சி அமைத்தது.
2012ல் எடியூரப்பா பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி அமைத்த போதும், பாஜக தன்னை முதுகில் குத்திவிட்டது என்றும் மக்கள் அக்கட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றும் பிரசாரம் செய்தார்.
2013 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் தேர்தல் முடிவுகள் மிகவும் மோசமாக இருந்தது.
இந்தப் பகுதியில் பாஜக 13 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 2018 தேர்தலை ஒப்பிடும்போது 23 இடங்கள் இழப்பு ஏற்பட்டது. பாஜகவின் வாக்கு சதவிகிதத்திலும் 8.5 சதவிகித சரிவு ஏற்பட்டது.
எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சியும் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதன் வாக்கு சதவிகிதம் 10.3 ஆக இருந்தது.
லிங்காயத்துகள், பாஜகவுக்கு மாற்றாக கேஜேபியை பார்க்காமல் காங்கிரஸை பார்த்ததாக கூறப்பட்டது.
கர்நாடகாவின் தக்ஷிண் கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டங்கள் இந்துத்துவாவின் பரிசோதனைக்களம் என்று அழைக்கப்படுகின்றன. தக்ஷிண கன்னடாவில் உள்ள எட்டு இடங்களிலும், உடுப்பியில் உள்ள ஐந்து இடங்களிலும் 1989 முதல் பாஜகவின் வாக்கு சதவிகிதம் அதிகரித்து வருகிறது.
2008 இல் இந்த இரண்டு மாவட்டங்களிலும் மொத்தமுள்ள 13 இடங்களில் 10 இல் பாஜக வெற்றி பெற்றது.
லிங்காயத் மற்றும் பாஜக
காங்கிரஸின் முதல்வராக இருந்த தேவ்ராஜ் அர்ஸ் செய்த சமூக மாற்றங்களின் (social engineering) விளைவால்தான் லிங்காயத்துகள் பாஜக பக்கம் சாய்ந்தனர் என்று கூறப்படுகிறது.
தேவ்ராஜ் அர்ஸ், லிங்காயத் அல்லாத மற்றும் வொக்கலிகா அல்லாத சாதி சமன்பாட்டு விளையாட்டை விளையாடினார்.
தேவ்ராஜ் அர்ஸ் மாநிலத்தில் நிலச் சீர்திருத்தம் செய்தார். இது உயர் சாதியினரின் ஆதிக்கத்தை சவால் செய்தது.
தேவ்ராஜ் அர்ஸின் இந்த நடவடிக்கைகளால் காங்கிரஸுக்கு பலம் கிடைத்தது.
தேவ்ராஜ் அர்ஸ் காரணமாகவே கர்நாடகாவில் உயர்சாதியினர் காங்கிரசிடமிருந்து இருந்து விலகியதாக கூறப்படுகிறது.
மாநிலத்தில் ஜனதா கட்சியின் தலைமை ராமகிருஷ்ண ஹெக்டேவிடம் வந்தபோது அக்கட்சி, காங்கிரஸுக்கு மாற்றாக உருவானது மற்றும் லிங்காயத்துகள் ஜனதா கட்சியின் பக்கம் சாய்ந்தனர்.
ராமகிருஷ்ண ஹெக்டே ஒரு பிராமணர். ஆனால் அவரது தலைமையில் ஜனதா கட்சி மற்றும் ஜனதா தளம் தொடர்ந்து லிங்காயத்துகளின் ஆதரவைப் பெற்றது.
லிங்காயத்துகள் ஆரம்பத்திலிருந்தே பாஜகவுடன் இருக்கிறார்கள் என்று சொல்லமுடியாது. 1983 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 110 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால் 18 இடங்களில் மட்டுமே அது வெற்றி பெற்றது.
1985 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் பாஜக முறையே 116 மற்றும் 118 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால் இரண்டு மற்றும் நான்கு இடங்களில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது.
பின்னர் ஜனதா தளம் பிளவுபட்டு தேவகெளடா முதல்வரானார்.
ஹெக்டேக்கு கிடைத்த ஆதரவு
லிங்காயத்துகளின் நலம் விரும்பியாக கருதப்பட்ட ஹெக்டே, தேவகெளடாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
ராமகிருஷ்ண ஹெக்டேயின் லோக்சக்தி கட்சி மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தது, அதன் மூலம் பாஜக நேரடியாக பலனடைந்தது.
லிங்காயத்துகள் ஹெக்டேயுடன் இருந்தனர். அதன் பலனை பாஜகவும் பெற்றது. 1999 இல் பாஜக 144 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி 44 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் எடியூரப்பா இரண்டாவது முறையாக கர்நாடக பாஜக தலைவராக ஆனார்.
2004 இல் கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களை நிறுத்தி 79 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்தது.
ஏறக்குறைய இந்த 79 எம்எல்ஏக்களும் புதுமுகங்கள் மற்றும் வட கர்நாடகத்தைச்சேர்ந்த லிங்காயத்துகள்.
2008 இல் எடியூரப்பா முதல்வராக பதவியேற்றபோது லிங்காயத்துகள் அவருக்கு ஆதரவாகத்திரண்டனர்.
கர்நாடக பாஜகவில் எடியூரப்பாவை விட பெரிய தலைவர் யாரும் இல்லை என்றும் அதிக பிரபலம் இல்லாதவராக அவர் இருந்தாலும்கூட கட்சியில் அவரை விட பெரிய தலைவர் யாரும் இல்லை என்றும் மூத்த செய்தியாளர் நீரஜா செளத்ரி கூறுகிறார்.
“நரேந்திர மோதி மற்றும் அமித் ஷாவுக்கும் எடியூரப்பாவின் வலு பற்றித்தெரியும். 2013 இல் எடியூரப்பா தனிக்கட்சி அமைத்து சட்டப்பேரவைத்தேர்தலில் போட்டியிட்டபோது, பாஜக வுக்கு 40 இடங்கள் மட்டுமே கிடைத்தது.
2014-ல் நரேந்திர மோதி பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது, எடியூரப்பா மீண்டும் கட்சிக்குள் கொண்டுவரப்பட்டார். 2014 பொதுத் தேர்தலில் பாஜக, எடியூரப்பாவின் மறுவருகையின் பலனையும் பெற்றது,”என்று அவர் குறிப்பிட்டார்.
2014 மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவின் மொத்தமுள்ள 28 இடங்களில் பாஜக 17 இடங்களில் வெற்றி பெற்றது.
2009 ஐ ஒப்பிடும்போது இது இரண்டு இடங்கள் குறைவு. ஆனால் 2019 மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் பாஜக 25 இடங்களில் வெற்றி பெற்றது.
“கர்நாடகாவில் பாஜகவுக்கு எடியூரப்பாவைத் தவிர வேறு தலைவர்கள் இல்லை என்பதே பிரச்சனை. பாஜகவின் பலம் லிங்காயத்துகள் மற்றும் லிங்காயத் சமூகத்தின் ஆதரவு எடியூரப்பாவின் காரணமாகவே உள்ளது. எடியூரப்பாவின் புகழ் குறைந்து வருவதால் லிங்காயத்துகளுக்கு பாஜக மீதான விசுவாசம் நிரந்தரமாக இருக்காது. ஆனால் கர்நாடகாவில் காங்கிரஸின் வெற்றியை வைத்து 2024 மக்களவைத்தேர்தலில் மோதி தோற்கடிக்கப்படுவார் என்று கூறுவது அவசரத்தனமாக இருக்கும். சட்டப்பேரவை மற்றும் மக்களவை முடிவுகள் வெவ்வேறாக இருப்பது நாடு முழுவதும் நடக்கிறது. 2014 மற்றும் 2019-ல் கர்நாடகத்திலும் இது நடந்ததை நாம் காணலாம்,” என்று நீரஜா செளத்ரி கூறினார்.
கர்நாடக மாநிலம் பாஜகவுக்கு தென்னிந்தியாவின் நுழைவாயில் என்று அழைக்கப்பட்டது, ஆனால் அந்த கட்சியால் இந்த முறை ஆட்சியை தக்க வைக்கும் அளவுக்கு வாக்கு வங்கியைப் பெறும் போட்டியில் முன்னேற முடியவில்லை. இதற்கு என்ன காரணம்?
“கர்நாடகாவில் இருக்கும் 'எடியூரப்பா' போன்ற தலைவர் தென்னிந்தியாவின் மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு இல்லை. தென்னிந்தியாவில் மொழிபெயர்ப்பாளரை சார்ந்தே மோதி பொதுமக்களுடன் உரையாடுகிறார்.
இந்துத்துவ அரசியலின் பலம் வட இந்தியாவைப் போல தென்னிந்தியாவில் இல்லை. இங்குள்ள பிராந்திய கட்சிகள் அதிக வலுவாக உள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கர்நாடகா பாஜகவுக்கு தென்னிந்தியாவின் வாசலாக மாறிய பிறகும் மற்ற மாநிலங்களின் கதவுகளை திறக்க முடியவில்லை,” என்று குறிப்பிட்டார் நீரஜா செளத்ரி.
                                                  நன்றி: பிபிசி தமிழ்:

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?