(தென்)துருவ வெற்றி

ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை விண்ணப்பங்களை சரிபார்க்க இன்று முதல் வீடுகளில் கள ஆய்வு.

சந்த்ரயான் 3 - விக்ரம் லேண்டர் நிலவில் இறங்குவதை இஸ்ரோ யூ ட்யூப் சானலில் மட்டும் 6 மில்லியன்+ (6 கோடிக்கும் அதிகம்) பேர் பார்த்துள்ளனர். இது உலக சாதனையாகும்.

புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு: ஒன்றிய அரசு அறிவிப்பு.

வாக்னர் குழு தலைவர் எவ்கேனி பிரிகோஜின் விமான விபத்தில் பலிரஷ்யாவில் புதினுக்கு எதிராக ராணுவ புரட்சியில் ஈடுபட்டவர் பிரிகோஜின்.பெலாரசில் தஞ்சமடைந்த பிரிகோஜின் விமான விபத்தில் உயிரிழந்ததாக அறிவிப்பு.

திருவாரூர், நாகை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்வதற்காக இன்று காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சி செல்லும் முதல்வர், அங்கிருந்து நாகப்பட்டினம் சென்று  தங்குகிறார்.

கிரீஸ் நாட்டில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. தொடர்ந்து வெப்ப அலை மற்றும் பலத்த காற்று வீசுவதால் காட்டுத் தீயின் தாக்கம் தொடர்ந்து நீடிக்கிறது. இந்நிலையில், காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள வடமேற்கு ஏவ்ராஸ் பகுதியில் உள்ள டாடியா வனப்பகுதியின் அருகே 20 பேரின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன

பாரதியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆளுநர் கோவை பயணம்  மேற்கொள்ள உள்ள நிலையில் கருப்பு கொடி காட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம் திட்டமிட்டுள்ளது.

வெற்றிகரமாக தரையிறங்கியது சந்திரயான்-3; தென்துருவத்தில் இறங்கிய முதல் நாடு; இஸ்ரோ விஞ்ஞானிகள் வரலாற்று சாதனை.

மிசோரத்தில் ரயில்வே பாலம் இடிந்து 17 பேர் உயிரிழந்துள்ளனர். மிசோரமின் சைராங் பகுதிக்கு அருகே புதிதாக கட்டப்பட்டு வந்த ரயில்வே பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் 17 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.


"எங்களுக்கும் சாமியார்களைத் தெரியும்

ஆனால் காலில் விழ மாட்டோம்."

------------------------------------------

சந்திராயன் வெற்றி

நிலவின் தென் துருவத்தில் இதுவரை எந்த நாடும் விண்கலங்களை இறக்கியதில்லை. அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளே நிலவின் தென்துருவப் பகுதிக்கு விண்கலங்களை அனுப்பி தோல்வியை தழுவியுள்ளன. 

அந்த வகையில் வல்லரசு நாடுகளுக்கு இந்தியா தனது வல்லமையை நிரூபித்து காட்டியுள்ளது. இந்த சாதனையை இந்தியாவுக்கு உரித்தாக்கிய இஸ்ரோ விஞ்ஞானிகளை இந்திய நாடே கொண்டாடி வருகிறது. 

நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக சந்திரயான் – 3ஐ தரையிறக்கிய இஸ்ரோ விஞ்ஞானிகளை, உலக நாடுகள் அனைத்தும் வெகுவாக பாராட்டி வருகின்றன.

கடந்த ஜூலை 14ம் தேதி நிலவின் தென்துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான் – 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. 

இந்த விண்கலமானது புவி வட்டப்பாதையை வெற்றிகரமாக அடைந்தது. தொடர்ந்து சுற்றுவட்ட பாதை படிப்படியாக உயர்த்தப்பட்டு கடந்த ஆக. 5ம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது. 

பின்னர் சந்திரயான் – 3 விண்கலத்தின் பாதை குறைக்கப்பட்டு விக்ரம் லேண்டரை பிரிக்கும் பணிகள் கடந்த 17ம் தேதி மேற்கொள்ளப்பட்டன.

தொடர்ந்து நிலவை சுற்றி வர வசதியாக விக்ரம் லேண்டரின் பாதை குறைக்கப்பட்டு நிலவின் அருகில் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து நிலவின் முதல் படத்தை விக்ரம் லேண்டர் இஸ்ரோவுக்கு அனுப்பி வைத்தது. இதனால் நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கப்படுமென்ற நம்பிக்கையில் இஸ்ரோ விஞ்ஞானிகள், இந்திய மக்கள் நம்பிக்கையோடு காத்திருந்தனர். 

நேற்று மாலை நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டரை தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆர்வமுடன் களமிறங்கினர். மாலை 5.44 மணிக்கு விக்ரம் லேண்டரை தரையிறக்குவதற்கான முயற்சியை தொடங்கினர்.

நேரம் நெருங்க, நெருங்க பதற்றம் அதிகரித்தது. விக்ரம் லேண்டரை தரையிறக்கும்போது, நிலவின் ஈர்ப்புவிசை மிக முக்கிய பங்கு வகித்ததால், அதற்கு ஏற்ற வகையில், லேண்டரின் வேகத்தை கட்டுப்படுத்தும் பணிகளில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டனர். 

மிகச்சரியாக தரையிறங்க வேண்டுமே என விஞ்ஞானிகளோடு, இந்திய மக்களும் ஆர்வமுடனும், பதற்றத்துடனும் காத்திருந்தனர். மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.

இதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தங்களது மகிழ்ச்சியை கைத்தட்டியும், ஆரவாரத்துடனும் உற்சாகமாக கொண்டாடினர்.

 உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை வானளாவிய அளவில் உயர்த்திய விஞ்ஞானிகளைஇந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர்.

 உலக தலைவர்களும் இஸ்ரோவுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, சந்திரயான் -2 தோல்வியடைந்ததால், இம்முறை இஸ்ரோ விஞ்ஞானிகள் முழுமூச்சோடு வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். 

------------------------------------------------------

சோவியத் ரஷ்யாவுக்கு அமெரிக்கா தனது  ராணுவ ஆற்றல் ,அறிவியல் ஆற்றல் குறித்து அறியவைக்கும் முயற்சியாக நிலாவில் அணுகுண்டு தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டது.

----------------------------------------------------

நிலா-10 தகவல்கள்.

1.நிலா வட்டமாக இல்லை
பௌர்ணமி நாளில், சந்திரன் சரியாக முழு வட்டமாகத் தோன்றும்.
ஆனால் உண்மையில் சந்திரன் ஒரு செயற்கைக்கோளைப் போல் பந்து போன்ற வட்டமானது அல்ல. அது தட்டையான உருவ அமைப்பைப் பெற்றுள்ளது.

ஆனால், நீங்கள் சந்திரனைப் பார்க்கும்போது, ​​அதன் ஒரு பகுதியை மட்டுமே பார்க்க முடியும்.

இத்துடன், சந்திரனின் எடை அதன் வடிவியல் மையத்தில் குவிந்திருக்கவில்லை.
நிலாவின் மொத்த எடையும் அதன் வடிவியல் மையத்திலிருந்து 1.2 மைல் தொலைவில் உள்ளது.
நிலாவை எப்போதும் நாம் முழுமையாகக் காணமுடியாது.


2. நிலாவை ஒருபோதும் நீங்கள் முழுமையாகக் காணமுடியாது
பொதுவாக நீங்கள் சந்திரனைப் பார்த்தால், அதிகபட்சமாக அதன் மொத்த உருவத்தில் 59 சதவீதத்தை மட்டுமே உங்களால் பார்க்க முடியும்.
பூமியிலிருந்து பார்க்கும் போது நிலாவின் 41 சதவீதம் பரப்பு கண்களுக்குத் தெரியாது.
நீங்கள் விண்வெளிக்குச் சென்று அங்கிருந்து நிலாவின் 41 சதவீத நிலப்பரப்பில் இறங்கி நின்று பார்த்தால் உங்களால் பூமியைப் பார்க்க முடியாது.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட ஒரு எரிமலை வெடிப்பு நீல நிலாவுடன் தொடர்புடுத்தப்பட்டது.


3. நீல நிலாவுக்கும் (Blue Moon) எரிமலை வெடிப்புக்கும் இடையிலான தொடர்பு
1883 ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் கிரகடோவா தீவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் காரணமாக அதனுடன் நீல நிலாவைத் தொடர்புபடுத்தும் வழக்கம் நடைமுறைக்கு வந்ததாக நம்பப்படுகிறது.
அந்த எரிமலை வெடிப்பு பூமியின் வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமான எரிமலை வெடிப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
உலக அளவில் கிடைத்துள்ள தகவல்களின்படி, அந்த எரிமலை வெடிப்பின்போது எழுந்த சத்தம் மேற்கு ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள பெர்த் நகர் வரை கேட்டது.
அதைத் தொடர்ந்து வளிமண்டலத்தில் அதிக அளவில் சாம்பல் பரவியது. சாம்பல் நிறைந்த இரவுகளில் சந்திரன் நீல நிறத்தில் தோன்றியது. இதற்குப் பிறகுதான், எரிமலை வெடிப்பையும், நீல நிலவையும் தொடர்புபடுத்தும் பழக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு சத்தம் ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதி வரை கேட்டது.


4. நிலவில் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் ரகசிய திட்டம்
பனிப்போரின் உச்சகட்டத்தில் நிலவில் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தும் திட்டத்தை அமெரிக்கா தீவிரமாகப் பரிசீலித்த ஒரு காலம் இருந்தது.
அதன் நோக்கம் சோவியத் யூனியனை ஒரு அழுத்தத்தின் கீழ் கொண்டுவரும் வகையில் அமெரிக்க இராணுவத்தின் சக்தியைப் பற்றி பறைசாற்றுவதே ஆகும்.
இந்த ரகசிய திட்டத்தை 'நிலாவுக்கு மேற்கொள்ளப்படும் பயணங்கள் பற்றிய ஆய்வு' என்ற நோக்கில் 'Project A119' என்ற பெயரில் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ரஷ்யாவுக்கு அமெரிக்காவின் ராணுவ ஆற்றல் குறித்து அறியவைக்கும் முயற்சியாக நிலாவில் அணுகுண்டு தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டது.

5. நிலவில் ஏன் ஆழமான குழிகள் ஏற்படுத்தப்பட்டன

ஒரு பாம்பு சூரியனை விழுங்குவதால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது என்று தென்கிழக்கு ஆசியாவில் ஒரு பழங்கால நம்பிக்கை உள்ளது.
சீனாவிலும் இதே போல் ஒரு பழக்கம் இருந்த நிலையில், கிரகணம் ஏற்படும் போது இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீன மக்கள் முடிந்தவரை சத்தம் போடுவதை வழக்கமாகக்கொண்டுள்ளனர்.
இதே போல் நிலவில் உள்ள குழிகளில் ஒரு தவளை அமர்ந்திருகிறது என்றும் பழங்கால சீனர்கள் நம்பினர்.
ஆனால் நிலவில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள், அதாவது ஆழமான குழிகள், நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கோள்கள் மோதியதால் உருவானவை என்பது தான் உண்மை.
பூமியின் வேகத்தை ஒரு நூற்றாண்டுக்கு 1.5 மில்லி வினாடிகள் அளவுக்கு நிலா குறைத்து வருகிறது.


6. பூமியின் வேகத்தைக் குறைக்கும் நிலா
நிலா பூமிக்கு மிக அருகில் இருந்தால், அது அண்மைநிலை (Perigee) என்று அழைக்கப்படுகிறது.
இந்த நேரத்தில், கடல் அலையின் வேகம் வழக்கத்தை விட கணிசமாக அதிகரிக்கிறது.
அப்போது, ​​சந்திரன் பூமியின் சுழற்சி சக்தியையும் குறைக்கிறது. இதன் காரணமாக பூமி சுற்றும் கால அளவு ஒவ்வொரு நூற்றாண்டிலும் 1.5 மில்லி விநாடிகள் குறைகிறது.
முழு நிலவை விட சூரியன் 14 மடங்கு அதிக அளவு பிரகாசிக்கிறது.

7. நிலாவிலிருந்து எவ்வளவு வெளிச்சம் கிடைக்கிறது?
சூரியன் முழு நிலவை விட 14 மடங்கு பிரகாசமாக இருக்கிறது.
ஒரு பௌர்ணமியில் தோன்றும் ஒளியில் இருந்து சூரியனின் ஒளிக்கு சமமான ஒளியை நீங்கள் விரும்பினால், உங்களுக்கு 3,98,110 நிலவுகள் தேவைப்படும்.
சந்திர கிரகணம் ஏற்பட்டு, நிலா பூமியின் நிழலில் நுழையும் போது, ​​அதன் மேற்பரப்பு வெப்பநிலை 500 பாரன்ஹீட் வரை குறைகிறது.
மேலும், இந்த கிரகணம் 90 நிமிடங்களுக்கும் குறைவான காலத்திற்கு மட்டுமே நீடிக்கும்.
நிலா சுருங்கவும் இல்லை, விரிவிடையவும் இல்லை என முதன்முதலில் லியோனார்டோ டாவின்சி கண்டுபிடித்தார்.


8. லியோனார்டோ டாவின்சி நிலாவைப் பற்றி என்ன கண்டுபிடித்தார்?
சில நேரங்களில் நிலா ஒரு வளையம் போல் தெரிகிறது. இதை அர்த்தசந்திரா அல்லது பால்சந்திரா என்றும் அழைக்கிறோம்.
அத்தகைய சூழ்நிலையில், சந்திரனின் மையத்தில் சூரியன் பிரகாசிப்பது போன்ற ஒன்றைக் காண்கிறோம்.
சந்திரனின் மற்ற பகுதிகள் மங்கலான பின்னணியில் மட்டுமே தெரியும். இதை வைத்துக்கொண்டு நாம் நிலவு சுருங்குவதாக நினைக்கிறோம்.
ஆனால், நிலா சுருங்கவில்லை என்பது மட்டுமின்றி விரிவடைவதும் இல்லை என்றும், அதன் ஒரு பகுதி மட்டுமே நம் பார்வையில் இருந்து மறைகிறது என்றும் உலகில் முதன்முதலாக லியோனார்டோ டா வின்சி கண்டுபிடித்தார்.
பல நேரங்களில் நிலாவின் பெரும் பகுதிகள் மங்கலாக இருப்பதால் நம் கண்களுக்குத் தெரிவதில்லை.

9. சந்திரனில் உள்ள பள்ளத்தின் பெயர்கள் எதனடிப்படையில் சூட்டப்படுகின்றன?

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் நிலவில் உள்ள பள்ளங்களுக்கு மட்டுமல்லாமல் விண்வெளியில் தெரியும் எந்த ஒரு பொருளுக்கும் பெயர் வைக்கும் பணியையும் மேற்கொண்டுவருகிறது.
சந்திரனில் உள்ள பள்ளங்களுக்கு பிரபல விஞ்ஞானிகள், கலைஞர்கள் அல்லது ஆய்வாளர்களின் பெயர்கள் சூட்டப்படுகின்றன.
அப்பல்லோ பள்ளம் மற்றும் மேயர் மாஸ்கோவின்ஸின் அருகிலுள்ள பள்ளங்களுக்கு அமெரிக்க மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
மேயர் மாஸ்கோவின்ஸ் என்பது சந்திரனின் கடல் பகுதி என்று அழைக்கப்படுகிறது.
சந்திரனைப் பற்றி மனிதர்களுக்குத் தெரியாத மேலும் பல விஷயங்கள் உள்ளன.
அரிசோனாவின் லோவெல் அப்சர்வேட்டரி ஆஃப் ஃபிளாக்ஸ்டாஃப் (Lowell Observatory of Flagstaff) 1988 ஆம் ஆண்டில் சந்திரனைப் பற்றி ஒரு ஆய்வு நடத்தியது.
இதில் பங்கேற்ற 13 சதவீதம் பேர் நிலவு பாலாடைக்கட்டியால் ஆனது என கருதுவதாக தெரிவித்தனர்.
நிலாவில் கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் கோள்கள் மோதியதால் பெரும் பள்ளங்கள் ஏற்பட்டன.


10. நிலாவின் மர்மம் நிறைந்த தென்துருவம்
சந்திரயான்-3 செயற்கைக்கோள் சென்றடைய முயற்சிக்கும் நிலவின் தென் துருவப் பகுதி மிகவும் வியப்பை ஏற்படுத்தும் பகுதியாகக் கருதப்படுகிறது.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் கூற்றின்படி, இந்த பகுதியில் பல ஆழமான குழிகளும் மலைகளும் உள்ளன என்றும், அவற்றைத் தாண்டி, சூரிய ஒளி பல பில்லியன் ஆண்டுகளாக அந்த நிலப்பரப்புகளை அடையவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

------------------------------------------





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?