தலைவாங்கும் சிரிப்புச் சாமியார்

 ராணுவ தடுப்புகளை அகற்ற முயற்சி மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: 5 மாவட்டங்களில் முழு ஊரடங்கு நடைமுறை.

ஜி20 உச்சி மாநாட்டின் விருந்தில் பங்கேற்க நாளை மறுநாள்(செப்.9) டெல்லி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.குடியரசுத் தலைவர் விருந்தில் பங்கேற்கிறார்.

பல்லடம் நால்வர் கொலை வழக்கில் போலீசில் சரணடைந்த முக்கிய நபரான வெங்கடேஷ், தப்பி ஓடும் போது துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டார்.

அமெரிக்காவில் கிரீன் கார்டு பெறுவதற்குள் 4 லட்சம் இந்தியர்கள் இறக்கும் அபாயம்.ஆய்வில் தகவல்.

இந்தியா நிலவுக்கு சந்திரயான் விண்கலம் அனுப்பியதை தொடர்ந்து ஜப்பானும் நிலவுக்கு விண்கலம் அனுப்பியது.

அமைச்சர் உதயநிதிக்கு மிரட்டல் விடுத்த உபி சாமியார் மீது 6 பிரிவுகளில் வழக்கு.

பிரேசில் நாட்டை புரட்டிப்போட்ட சூறாவளியால் இதுவரை 26 பேர் பலி.

---------------------------------------------

தலைவாங்கும் சிரிப்புச் சாமியார்

சனாதானத்தை ஒழித்துகட்டவேண்டும் என்று சொன்ன அமைச்சர் உதயநிதியின் தலையை வெட்டிக் கொண்டுவருபவருக்கு 10 கோடி ரூபாய் பரிசு – என்று அறிவித்த சாமியார், அஸால்டாக ஒரு அமைச்சரின் தலையை வெட்டச் சொல்லி பேட்டி கொடுக்கிறாரே யாரு இந்த ஆளு..என்று பார்த்தால்.. 

ஒரு அக்மார்க் தாதா பேசும் அத்தனை அசிங்கங்களையும் பேசியிருக்கிறார் சாமியார் என்று சொல்லிக்கொள்ளும் இந்த பரமஹம்ச ஆச்சார்யா.

இவரது ரிஷிமூலம் என்ன என்று பார்த்தால்.. கடந்த 2019ல் உயிருக்கு பயந்து அயோத்தியை விட்டே ஓடியிருக்கிறார் பரமஹன்ஸ் ஆச்சார்யா. 

ராம் ஜன்மபூமி ந்யாஸ் என்று அழைக்கப்படும் அயோத்தி ராமர் கோவில் கட்டும் குழுவின் தலைவரும், அயோத்தியின் பிரதான மதகுருவான மஹந்த் ந்ருத்ய கோபால் தாஸ் குறித்து இந்த பரமஹன்ஸ் தவறாக பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பானது. 

பொங்கி எழுந்த அயோத்தி சாமியார்கள் – தங்கள் தபஸ்வி கி ச்சாவ்னி என்ற அயோத்தி சாமியார்கள் அமைப்பில் இருந்தே இவரை நீக்கினர். அப்போதிலிருந்து தன்னைத்தானே ஜகத் குரு என்று சொல்லிக்கொண்டு, பரபரப்புக்காக எதாவது ஸ்டண்ட் அடிப்பதை வாடிக்கையாக(வேடிக்கையாக?) வைத்திருக்கிரார் இந்த பரமஹன்ஸ் ஆச்சார்யா.

2021ம் ஆண்டு பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை விடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். 

அக்டோபர் 2ம் தேதிக்குள் இந்தியாவை இந்துக்களின் நாடு என்று அறிவிக்காவிட்டால் சராயு நதியில் மூழ்கி ஜல சமாதி அடைவேன் என்று எச்சரித்தார்.ஆனால் சமாதியாவில்லை.

 மேலும், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். 

அதனால் பரபரப்பான உத்தரபிரதேச அரசு அவரை வீட்டுச்சிறையில் அடைத்தது. இதே காரணத்தை வலியுறுத்தி இவர் தீக்குளிக்கப் போவதாகக் கூறினார்.

 ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.

கடந்த ஆண்டு டிசம்பரில் ஷாரூக்கானின் பதான் திரைப்படத்தின் பாடல் வெளியானபோது தீபிகா படுகோன் அணிந்திருந்த காவி உடைமீது சர்ச்சை ஏற்பட்டது. ஷாருக்கான் ஒரு ஜிகாதி என்று கூறி, அவரின் தோலை உரித்து, உயிருடன் கொளுத்தி விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்தார் பரமஹன்ஸ் ஆச்சார்யா.

 ஷாருக்கான் மட்டும் இல்லை, அமீர்கான், சல்மான் கான் ஆகியோரையும் கொல்ல வேண்டும் என்று கூறிய அவர் இவர்களை கொல்பவர்களுக்கு பரிசுத்தொகையும் தரப்படும் என்று அறிவித்தார்.

 உத்தரப்பிரதேச சட்டமன்ற கவுன்சிலில் உள்ள சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த சுவாமி பிரசாத் மவுரியாஹிந்துக்களின் புனித நூலை எரித்ததாகக் கூறப்பட்ட விவகாரத்தில், மவுரியாவின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 100 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று பகிரங்கமாக அறிவித்தார்.

வெறுப்பு பேச்சுகளின் உச்சத்தை இந்த ஆண்டு மார்ச்சில் தொட்டார் பரமஹன்ஸ் ஆச்சார்யா. ”நாட்டில் ஒரே ஒரு வெள்ளிக்கிழமை மட்டும் என்னை பிரதமராக அறிவித்தால் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் இனப்படுகொலை செய்துவிடுவேன்” என்று சொல்லி

அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அதேபோல பசு குண்டர்களால் நடத்தப்படும் கொலைகளை ஆதரித்துப் பேசிய இவர், பசுவை யார் கொல்கிறார்களோ அவர்கள் திருப்பிக்கொல்லப்படவேண்டும் என்று கூறினார். 

ஆனால் அமைதியை போதிக்கவேண்டிய சாமியார் தோற்றத்தில் இருந்துகொண்டு இப்படியெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசித் திரியும் இந்த பரமஹன்ஸ் ஆச்சார்யா ஒரு முறை கூட கைது செய்யப்படவோ, விசாரிக்கப்படவோ இல்லை. 

எந்த நடவடிக்கையும் இவருக்கு எதிராக இதுவரை எடுக்கவில்லை.

இவரைச் சிரிப்புச் சாமியாரகவேப் பார்க்கிறார்கள்.

யாரும் புகார் சொல்லவில்லை.

100,10கோடிகளில் தலை எடுப்பவர்க்களுக்குப் பரிசு அறிவிக்கும் இவரின் சொத்துமதிப்பு லட்சத்தொடாது என்பதுதான் உண்மை.

-------------------------------------------------

குழந்தை திருமணம் குறித்த மனுஸ்மிருதி(சனாதனம்) சொல்வது என்ன ? 

பெண் குழந்தைகளுக்கு 8 வயதிற்குள் திருமணம் செய்து கொடுத்துவிட வேண்டும். திருமணம் ஆகாமல் தகப்பன் வீட்டிலேயே  பெண் பூப்பெய்தி விட்டால் , ஒவ்வொரு மாதவிடாயின் போதும் அந்த கழிவுகளை தகப்பன் பருக வேண்டும். 

அது சிரமம் என்றால் ஒவ்வொரு மாத மாதவிடாயின் போதும் ஒவ்வொரு நாளும் ஒரு பசுமாட்டை பிராமணனுக்கு தானம் செய்ய வேண்டும்.திருமணம் முடியும் வரை ஒவ்வொரு மாதமும் இது தொடர வேண்டும் 

எவ்வளவு கேவலத்தை நம் மீது சுமத்தி இருக்கிறார்கள் பார்த்தீர்களா ? நம் பொருளாதாரத்தை பார்ப்பனர்கள் எப்படி சூறையாடி உள்ளார்கள் பார்த்தீர்களா ?

இந்த சாக்கடை சனாதனத்தை நாம் ஏற்க வேண்டுமா ?

மோடியும் ,அமித்ஷாவும் பின்பற்றட்டும் எங்களுக்கு எதற்கு இந்த சாக்கடை சனாதனம் ?

மனுஸ்மிருதியின் கோர முகத்தை பார்த்தீர்களா ? நிலையான கட்டுப்பாடுகளை விடாது கடைபிப்பதுதான் "சனாதனம்."

-------------------------------------------

வாட்ஸ் அப்பில் வந்தது.

பலருக்கு ஜீயின் சாணக்கியம் புரிவதில்லை.! 

அதனால்தான் ஜீயை அனைவரும் கேலி செய்கின்றனர்.!

இந்தியாவோட கடன் எவ்வளவு.!?

156 லட்சம் கோடி.!

கடந்த 9 ஆண்டுகளில் மட்டுமே ஜீ வாங்கிய கடன் எவ்வளவு.!?

104 லட்சம் கோடி.!

இப்போதுதான் எங்கள் ஜீயின் தந்திரத்தை புரிந்துகொள்ள வேண்டும்.!

ஜீ எந்த பெயரில் கடன் வாங்கினார்.!?

இந்தியா என்ற பெயரில் கடன் வாங்கினார்.!

இப்போது நமது நாட்டின் பெயரை ஜீ என்னவென்று மாற்றிவிட்டார்.!?

பாரத் என்று.!

உலக வங்கி, IMF, ஜப்பான், அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் யாரிடம் கடனை திருப்பி கேட்பார்கள்.!?

இந்தியாவிடம்.!

அந்த 156 லட்சம் கோடி கடன்களை பாரத் ஏன் திருப்பி கொடுக்க வேண்டும்.!?

இந்தியா என்ற பெயரை பாக்கிஸ்தான் எடுத்துக் கொண்டால்,அந்த 156 லட்சம் கோடி கடனை திருப்பி கொடுக்க வேண்டிய பொறுப்பு யாரோடது.!?

இந்தியா என்ற பாக்கிஸ்தானோடது.!

எப்படி  ஜீயின் அதிரடி.!

வாழ்க பாரத்.,

வந்தே பாரத்.!


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?