நிலையான போர் நிறுத்தம்

 இஸ்ரேல்-ஹமாஸ் 4 நாள் போர் நிறுத்தம் துவங்கியது25 பணய கைதிகள் விடுவிப்பு.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை.

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல். வாக்குப்பதிவு தொடங்கியது.

கருத்தரங்குகளில் மது விநியோகிப்பது சட்டத்திற்கு எதிரானது - சென்னை உயர் நீதிமன்றம் .

முதலமைச்சர்,அமைச்சர்கள் குறித்து அவதூறு.. தூத்துக்குடி பாஜக  ஜான் ரவி என்பவர் பிணை மனு தள்ளுபடி .

 “பக்தி இல்லை, பகல் வேஷம் போடுகின்றனர்.ஒன்றிய அமைச்சரான அவர் கொள்ளையடிக்ப்படும் கோவில்.கொள்ளையடித்தவர்களைப் பற்றி கூறலாமே.அதன் மீதுநாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்.அவள” தானே கருவறை வரை செல்பவர்கள்." - நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி! 
நிலையான
போர் நிறுத்தம்.?
.இஸ்­ரேல் ---–- ஹமாஸ் படை­யி­னர் இடை­யி­லான போர், நான்கு நாட்­கள் நிறுத்­தப்­பட்­டுள்­ளது. 
இதற்­கான ஒப்­பந்­தத்தை இரண்டு தரப்­பும் போட்­டுள்­ளார்­கள். நான்கு நாட்­கள் போர் நிறுத்­தத்­தால் எந்­தப் பய­னும் இல்லை. நிரந்­த­ர­மான போர் நிறுத்­தம்­தான் வேண்­டும்.

அக்­டோ­பர் -– 7 முதல் தொடர்ச்­சி­யாக போர் நடந்து வரு­கி­றது. இத­னால் ஏற்­பட்ட பாதிப்­புக் கொடூ­ரங்­கள் அள­விட முடி­யா­தவை.

 இஸ்­ரேல் ராணு­வம் நடத்­திய தாக்­கு­த­லில் இது­வரை 12 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட பாலஸ்­தீ­னி­யர்­கள் கொல்­லப்­பட்­டுள்­ளார்­கள். 2700க்கும் மேற்­பட்­ட­வர்­க­ளைக் காண­வில்லை. காசா­வின் மொத்த மக்­கள் தொகை 23 லட்­சம் பேர். இதில் இரண்டு பங்கு மக்­கள் தங்­க­ளது வீடு­களை விட்டு வெளி­யேறி விட்­டார்­கள். 

இஸ்­ரே­லைச் சேர்ந்த 1200 பேர் கொல்­லப்­பட்­டுள்­ளார்­கள்.

‘போரில் ஒரு­வர் செத்­தால் மட்­டும்­தான் மர­ணம். அதற்கு மேற்­பட்­ட­வர்­கள் செத்­தால் அது வெறும் புள்­ளி­வி­வ­ரம் தான்’ என்று சொல்­வ­தைப் போல -– இவை அனைத்­தை­யும் வெறும் புள்­ளி­வி­வ­ர­மா­கக் கடந்­து­விட முடி­யாது.

 ‘உல­கம் ஒரு குடைக்­குள் வந்­து­விட்­டது’ என்று பெருமை பீற்­றிக் கொள்­ளும் இந்­தக் காலத்­தில் தான் உல­கின் ஒரு பகு­தி­யில் -– வெளிச்­சத்­தில் -– உலக சமு­தா­யத்­தின் கண் முன்­னால் இத்­த­கைய கொடூ­ரங்­கள் அரங்­கே­றின. அரங்­கேறி வரு­கின்­றன.

“நான்கு நாட்­கள் போர் நிறுத்­தத்­தின் போது காசா­வில் பிணைக் கைதி­க­ளாக உள்ள 50 பெண்­கள் மற்­றும் சிறார்­கள் விடு­விக்­கப்­ப­டு­வார்­கள். 

அந்த நாட்­க­ளில் மோதல் ஏற்­ப­டாது. மீத­முள்ள கைதி­கள் படிப்­ப­டி­யாக விடு­விக்­கப்­ப­டு­வார்­கள். 

போர் நிறுத்­தம் ஒவ்­வொரு நாளாக நீட்­டிக்­கப்­ப­டும்”என்று இஸ்­ரேல் பிர­த­மர் அலு­வ­ல­கம் அறிக்கை வெளி­யிட்­டுள்­ளது.

‘இஸ்­ரே­லில் உள்ள பாலஸ்­தீ­னக் கைதி­களை விடு­வித்­தால் நாங்­கள் எங்­கள் வசம் இருக்­கும் இஸ்­ரேல் கைதி­களை விடு­விக்­கத் தயார்’ என்று ஹமாஸ் படை­யி­னர் சொன்­ன­தால் தான் இந்த நான்கு நாள் போர் நிறுத்­தம் ஏற்­பட்­டது போலத் தெரி­கி­றது. 

இஸ்­ரே­லில் இருந்து 240 பேரை பிணைக் கைதி­க­ளாக ஹமாஸ் படை­யி­னர் பிடித்­துச் சென்று காசா­வில் வைத்­துள்­ளார்­கள். 

இவர்­க­ளைப் பெறும் தந்­தி­ர­மா­கவே இந்த நான்கு நாள் போர் நிறுத்­தத்­துக்கு இஸ்­ரேல் இறங்கி வந்­த­தைப் போலத் தெரி­கி­றது.

இப்­படி கைதி­களை விடு­விப்­பது தொடர்­பாக யாருக்­கா­வது எதிர்ப்பு இருந்­தால் உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் வழக்கு தொடுக்­க­லாம் என்று இஸ்­ரேல் அறி­வித்து இருப்­ப­தும் சரி­யான நட­வ­டிக்கை அல்ல.

 ஏதா­வது கார­ணம் தேடு­வ­தைப் போலவே உள்­ளது.

நான்கு நாட்­கள் போர் நிறுத்­தம் எதற்­காக என்­பது குறித்து இஸ்­ரேல் பிர­த­மர் பெஞ்­ச­மின் நெதன்­யாகு வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யும் அபத்­த­மாக இருக்­கி­றது. 

‘இஸ்­ரேல் தாக்­கு­த­லால் ஹமாஸ் படை­யி­ன­ருக்கு ஏற்­பட்ட மன அழுத்­தம் கார­ண­மாக தற்­கா­லிக போர் நிறுத்­தம் ஏற்­பட்­டுள்­ளது’ என்று அவர் அறி­வித்­தி­ருப்­பது இஸ்­ரேல் இன்­னும் மனம் மாற­வில்லை என்­ப­தையே காட்­டு­கி­றது.

 ‘ஹமாஸ் படை­யி­னரை ஒழித்­தல், இனி இஸ்­ரேல் பாது­காப்­புக்கு காசா­வால் எந்த அச்­சு­றுத்­த­லும் இல்லை என்ற இலக்­கு­களை அடை­யும்­வரை போர் தொட­ரும்’ என்­றும் அவர் அறி­வித்­தி­ருப்­பது போர் நிறுத்­தத்­துக்கு எதி­ரான நிலைப்­பாடு ஆகும்.

நான்கு நாட்­கள் போர் நிறுத்­தம் என்­றும், அது படிப்­ப­டி­யாக ஒவ்­வொரு நாளாக நீடிக்­கும் என்­றும் சொல்­வ­தும் இஸ்­ரேல் அர­சாங்­கம்­தான். 

அந்த நாட்டு அமைச்­சர்­கள் அனை­வ­ரும் கூடி எடுத்த முடி­வு­தான். அமைச்­ச­ர­வைக் கூட்­டம் நடந்து 3 அமைச்­சர்­கள் எதிர்க்க –- 35 அமைச்­சர்­கள் ஆத­ரிக்க எடுக்­கப்­பட்ட முடி­வு­தான் இது. 

அதே நேரத்­தில், ‘ஹமாஸ் படை­யி­னரை ஒழிக்­கும் வரை போர் தொட­ரும்’ என்று சொல்­வ­தும் இஸ்­ரேல் அர­சாங்­கம்­தான். ‘இது போர் நிறுத்­தம் அல்ல, நட­வ­டிக்கை இடை நிறுத்­தம் என்­று­தான் சொல்ல வேண்­டும்’ என்று இஸ்­ரேல் ராணு­வம் தெரி­வித்­தி­ருக்­கி­றது. பிர­த­மர் –- அமைச்­ச­ரவை –- ராணு­வம் ஆகிய மூன்­றும் வேறு வேறு நிலைப்­பா­டு­ க­ளில் உள்­ளதை இதன் மூல­மாக உண­ர­லாம்.

‘இஸ்­ரேல் -–ஹமாஸ் போர் என்­பது பிற நாடு­க­ளை­யும் உள்­ள­டக்­கிய மோத­லாக உடு­வெ­டுக்­கா­மல் இருப்­பதை உறுதி செய்ய வேண்­டும்’ என்று இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­தி­ர­மோடி அவர்­கள் சொல்லி இருப்­ப­தை­யும் கவ­னிக்க வேண்­டும்.

 ஈராக்­கில் உள்ள இரண்டு ஹமாஸ் நிலை­கள் மீது தங்­க­ளது போர்­வி­மா­னங்­கள் தாக்­கு­தல் நடத்­தி­ய­தாக அமெ­ரிக்கா ஒப்­புக் கொண்­டி­ருப்­ப­தை­யும் இத­னு­டன் இணைத்­துப் பார்க்க வேண்­டும். எனவே இஸ்­ரேல் - – ஹமாஸ் போரை இரு தரப்­பின் மோத­லாக மட்­டும் பார்க்க முடி­யாது.

இந்த நான்கு நாள் நாட­கங்­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைத்து –- நிரந்­த­ரப் போர் நிறுத்­தத்தை இரண்டு தரப்­பும் ஒப்­பந்­த­மாக ஆக்க வேண்­டும். 

நிரந்­தர போர் நிறுத்­தத்­துக்கு இஸ்­ரேலை உலக நாடு­கள் பணிய வைக்க வேண்­டும்.

--------------------

மர்ம(?) காய்ச்சல்.

சீனாவில் புதிதாகப் பரவிவரும் ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா வகை கண்டறியப்படாத காய்ச்சல் காரணமாக சீன குழந்தைகளிடையே ஏற்படும் சுவாசக் கோளாறு அதிகமாக உள்ளது.

ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் சுவாச பிரச்னைகளின் பாதிப்பு ஆகிய இரண்டிலும் இந்தியாவிற்கான பாதிப்பு குறைவாக உள்ளதாகவும் ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இருந்து வெளிப்படும் எந்தவொரு நெருக்கடியையும் இந்தியா எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வடக்கு சீனாவில் உள்ள குழந்தைகளிடையே மர்மமான சுவாச நோய் பரவுவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை ஒன்றிய சுகாதார அமைச்சகம் கவனத்தில் கொண்டுள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் "தற்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், கடந்த சில வாரங்களில் சீனாவில் சுவாச நோய்களின் பிரச்னைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வைரஸ் தொற்றானது, ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்கு பரவும் வாய்ப்பு குறைவாக உள்ளதாகவும் மற்றும் குறைந்த இறப்பு விகிதத்தை கொண்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

குழந்தைகளின் சுவாச கோளாறு நோய்க்கு வழக்கமான காரணங்கள் பல இருந்தாலும் அசாதாரண நோய்க்கிருமி அல்லது எதிர்பாராத ஏதேனும் அடையாளம் காணப்படவில்லை எனவும் மருத்துவ அறிக்கைகள் தெரிவிப்பதாகவும் ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?