அயோக்கியருக்கு சுதந்திரம்?

 பீகாரில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங்கை ஒருவர் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.1,74,962 கோடி வசூலாகி உள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 2023 ஆகஸ்டில் ரூ.1,59,069 கோடியாக இருந்த சரக்கு மற்றும் சேவை வரி வசூல், இந்த ஆகஸ்டில் 10% அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது
குஜராத் மாநிலம் வதோதரா ஏற்கெனவே வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில், செப்டம்பர் 2 முதல் 4 வரை மீண்டும் அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வுமையம்எச்சரிக்கைவிடுத்துள்ளது.

“மலையாள திரையுலகை உலுக்கி வரும் நீதிபதி ஹேமா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்” என நடிகர் மம்முட்டி வலியுறுத்தியுள்ளார். 
தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸில் சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 47 இந்தியர்கள் மோசடி மையங்களில் இருந்து மீட்கப் பட்டதாக இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது..
ஹரியானாவில் மாட்டிறைச்சியை உண்டதாக புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவரை பசுக்  குண்டர்கள் கொலை செய்த சம்பவத்தை அம்மாநில முதல்வர் நயாப் சிங் சைனிநியாப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்து அவர் 'இது ஆணவக் கொலை வழக்கு அல்ல. பசு பாதுகாப்பு சட்டத்தை ஹரியானா சட்டமன்றம் அமல்படுத்தி யுள்ளது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்” எனக் கொலையை நியாயப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.பசுபாதுகாப்பை நீதிமன்றம் முடிவு செய்யும் முன். இந்துவெறியர்கள் கொலை செய்யும் உரிமையை கொடுத்தது யார்?
தில்லியில் தற்போதே தேர்தல் நடத்தினால் 70% வாக்குகளுடன் ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றி 70 சட்டமன்ற தொகுதிகளையும் கைப்பற்றும்” என ஆம் ஆத்மி மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா கூறியுள்ளார். 
இண்டிகோ விமான நிறுவனம் சென்னையில் இருந்து இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்துக்கு தினசரி விமான சேவையைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.ஜம்மு-காஷ்மீர் குரியத் மாநாட்டு கட்சியின் மூத்த தலைவர் சையத் சலீம் கிலானி முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி முன்னிலையில் ஞாயிறன்று மக்கள் ஜனநாயகக் கட்சியில் இணைந்தார்.
ஜம்மு-காஷ்மீர் குரியத் மாநாட்டு கட்சியின் மூத்த தலைவர் சையத் சலீம் கிலானி முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி முன்னிலையில் ஞாயிறன்று மக்கள் ஜனநாயகக் கட்சியில் இணைந்தார்.

கொட்டும் மழை.
ஆந்திரா திணறல்

கடந்த 2 நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.


அதிகபட்சமாக கம்மம் மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் 52.1 செ.மீக்கு மழை கொட்டியது. கனமழைக்கு 10 பேர் பலியாகி உள்ளனர். ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பல பகுதிகளில் கடந்த 2 நாட்கள் தொடர் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக இரு மாநிலங்களிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவில், கம்மம் மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் 52.1 செ.மீக்கு மழை பெய்ததின் விளைவாகக் கம்மம்-வாரங்கல் ரயில் வழித்தடத்தின் ஒரு பகுதி வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.


மகபூபாபாத் மாவட்டம், கேசமுத்திரம் மண்டலம் தல்லபூசப்பள்ளி ரயில் நிலையம் அருகே மழை வெள்ளத்தால் ரயில்வே தண்டவாளம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் மசூலிப்பட்டினம் எக்ஸ்பிரஸ் மஹபூபாபாத்தில் நிறுத்தப்பட்டது, பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடுமையாக தவித்து வருகின்றனர்.


கனமழையால் 100 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 54 ரயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் தெற்கு மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

தலைநகர் ஐதராபாத்தில் கனமழை மேலும் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.


குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் பலரும் வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். இதனால் மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வருவாய்த் துறை, நீர்ப்பாசனத்துறை மற்றும் மற்ற துறைகளின் அதிகாரிகளை நிவாரண பணிகளில் ஈடுபடுமாறு உத்தரவிட்டுள்ளார்.


கம்மம் மாவட்டத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததால், ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு நபர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்கள். குண்டூர் மாவட்டத்தில் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்த ஒரு ஆசிரியரும் இரு மாணவர்களும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டனர்.


தெலங்கானாவில் ஒரு லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. ஆந்திராவில் விஜயாவாடா, மச்சிலிபட்னம், குடிவாடா, மங்களகிரி போன்ற மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தொடர் மழை வெள்ளத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் வெள்ள நிலைமை குறித்து மாநில உள்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் வாங்கலபுடி அனிதா நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.


அப்போது அமைச்சர் அனிதா கூறுகையில், ‘‘கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக என்டிஆர், கிருஷ்ணா, பாபட்லா, குண்டூர், பல்நாடு ஆகிய மாவட்டங்களில் இதுவரை 100 மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டு 294 கிராமங்களை சேர்ந்த 13,227 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


அந்தப் பகுதிகளில் 61 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. கனமழைக்கு போலீசார், என்.டி.ஆர்.எப் மற்றும் எஸ்.டி.ஆர்.எப் வீரர்கள் வெள்ளத்தில் சிக்கிய 600 பேரை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளனர். மழையால் ஒன்றரை லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது.

7218 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது’’ என்றார். ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு நிவாரண பணிகளுக்காக பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ.3 கோடி விடுவிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு படகில் சென்று ஆய்வு செய்தார். இதற்கிடையில், கோதாவரி அற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவரும் நிலையில் மற்ற ஆறுகளிலும் அடுத்த 2 நாட்களுக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடும் என்று மத்திய நீர்வளத்துறை ஆணையம் எச்சரித்துள்ளது.

வெள்ளத்தால் ஆந்திராவில் 9 பேரும், தெலங்கானாவில் ஒருவரும் பலியாகி உள்ளனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?

கார்பரேட்டுகளால் கார்பரேட்டுகளுக்காக