சோதித்து பாருமே?

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் அருகே செம்மஞ்சேரியில் நடந்த சாலை விபத்தில் 4 பேர் பலி


திறனிருந்தால் சோதித்து பாருமே?

மாநில கல்­வித் திட்­டம் குறித்து தமிழ்­நாடு ஆளு­ந­ரின் அவ­தூறு கருத்­துக்கு அமைச்­சர்­கள் முனைவர் க.பொன்­முடி, அன்­பில் மகேஸ் பொய்­யா­மொழி ஆகி­யோர் தக்க பதி­லடி கொடுத்­துள்­ள­னர்.

உயர்­கல்­வித்­துறை அமைச்­சர் க.பொன்­முடி!

இதுகுறித்து சென்னை காயிதே மில்­லத் கல்­லூரி 45 ஆவது பட்­ட­ம­ளிப்பு விழா­வில் உயர் கல்­வித்­துறை அமைச்­சர் க.பொன்­முடி பேசி­ய­தா­வது:

2006 ஆம் ஆண்டே சமச்­சீர் கல்­வியை கொண்டு வந்­த­வர் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் சி.பி.எஸ்.சி.க்கு நிக­ராக நம்­மு­டைய அரசு பள்ளி பாடப்­பி­ரி­வும் திறன் பட இருக்­கி­றது. அதற்கு உதா­ர­ணம் இந்­தியா மட்­டு­மல்­லா­மல் உல­கமே பாராட்­டு­கின்ற இஸ்­ரோ­வில் பணி­யாற்­றும் நிலவை ஆராய்ச்சி செய்­யும் வீர முத்­து­வேல். அரசு பள்­ளி­யில் படித்து பாலி­டெக்­னிக் கல்­லூ­ரி­யி­லும் பொறி­யி­யல் கல்­லூ­ரி­யி­லும் படித்து சிறந்து விளங்­கு­ கி­றார் என்­றால் நம்­மு­டைய உயர்­கல்வி உடைய பாடப்­பி­ரிவுதான்.

ட்ரோன் மூலம் பல்­வேறு ஆராய்ச்­சி­களை செய்து தற்­போது சிறந்து விளங்­கு­கி­றார்­கள் நம்­மு­டைய பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் அதற்­கும் முதன்­மை­யாக இருப்­பது நம்­மு­டைய பாடப்­­பிரிவு தான்.

பள்ளி கல்வி மற்­றும் உயர் கல்­வி­யில் நம்­மு­டைய பாடப்­பி­ரிவு சிறந்து விளங்­கு­கி­றது. தமி­ழ­கத்­தில் தான் அனைத்து பல்­க­லைக்­க­ழ­கத்­திற்­கும் சீரான பாடப்­பி­ரிவை கொண்டு வந்­தது திரா­விட மாடல் ஆட்­சி­யில்தான்.

படிக்­கும் போதே திறனை வளர்த்­துக் கொள்ள வேண்­டும் என தமி­ழக முத­ல­மைச்­ச­ரின் ஆழ்ந்த சிந்­த­னை­யில் உரு­வா­னது­ தான் நான் முதல்­வன் திட்­டம். இன்று ‘நான் முதல்­வன் திட்­டம்’ மூலம் பல ஆயி­ரக்­க­ணக்­கான இளை­ஞர்­கள் வேலை­வாய்ப்பு பெற்று வரு­கின்­ற­னர்.

கல்வி கூடங்­கள் எண்­ணிக்கை மட்­டும் உயர்ந்­தால் போதாது, கல்­வித் தரத்­தை­யும் உயர்த்த வேண்­டும் அது­தான் நான் முதல்­வன் திட்­டம் முக்­கிய நோக்­க­மா­கும்.

அறி­வுத்­தி­றன் வாய்ந்த பாடத்­திட்­டங்­கள் தமி­ழ­கத்­தில் மட்­டுமே உள்­ளது. ஆரம்­பப் பள்­ளி­க­ளில் இருந்து உயர்­கல்வி வரை சிறந்த பாடத்­திட்­டம் வேறு எந்த மாநி­லத்­­திலும் இல்லை.

இவ்­வாறு உயர்­கல்­வித்­துறை அமைச்­சர் க.பொன்­முடி அவர்­கள் கூறி­னார்.

பள்­ளிக் கல்­வித்­துறை அமைச்­சர் அன்­பில் மகேஸ் பொய்­யா­மொழி!

தமி­ழக பள்­ளிக்­கல்­வித்­துறை சார்­பில் ஆய்­வக உத­வி­யா­ள­ருக்­கான பயிற்சி சான்­றி­தழ் மற்­றும் பயிற்சி கட்­ட­கம் வெளி­யீட்டு விழா திருச்சி தேசிய கல்­லூரி பள்ளி மைதா­னத்­தில் மாவட்ட ஆட்­சித் தலை­வர் பிர­தீப் குமார் தலை­மை­யில் நடை­பெற்­றது.இந்­நி­கழ்­வில் தமிழ்­நாடு அரசு பள்­ளிக்­கல்­வித் துறை­யி­லுள்ள ஆய்­வக உத­வி­யா­ளர் பணி­யி­டத்­தில் பணி­பு­ரி­யும் 4786 ஆய்­வக உத­வி­யா­ளர்­க­ளுக்கு ஏப்­ரல் மற்­றும் மே 2024 இல் பணி­யி­டை­ப­யிற்சி நடை­பெற்­றது. இதில் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற 3020 ஆய்­வக உத­வி­யா­ளர்­க­ளுக்கு பள்­ளிக்­கல்­வித்­துறை அமைச்­சர் அன்­பில் மகேஷ் பொய்­யா­மொழி கலந்­து­கொண்டு ஆய்­வக உத­வி­யா­ளர்­க­ளுக்­கான பயிற்சி சான்­றி­தழ் வழங்கி பயிற்சி கட்­ட­கத்தை வெளி­யிட்டு சிறப்­பு­ரை­யாற்­றி­னார்.

பின்­னர் அமைச்­சர் அன்­பில் மகேஸ் பொய்­யா­மொழி செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­ய­தா­வது:–

ஒருங்­கி­ணைந்த கல்வி மூல­மாக ஒன்­றிய அரசு நிதி வழங்­கிக் கொண்­டுள்­ளது. இந்த வரு­டம் நிதி ரூ. 2153 கோடி நிதியை வழங்­க­வில்லை இத­னால் கேள்­விக்­கு­றி­யாக உள்­ளது மாண­வர்­க­ளின் கல்வி மற்­றும் ஆசி­ரி­யர்­க­ளின் சம்­ப­ளம் உள்­ளிட்­டவை பாதிக்­கப்­ப­டும்.

நாடா­ளு­மன்ற தேர்­த­லுக்கு முன்­பாக ஒன்­றிய அமைச்­சரை இரண்டு முறை சந்­தித்து கருத்­து­களை தெரி­வித்­தோம். இது குறித்து பார்த்து சொல்­கி­றோம் என கூறி­னார் மீண்­டும் நாடா­ளு­மன்ற தேர்­தல் முடிந்த பின்பு சந்­தித்து நிதி வர­வில்லை என கூறி­னோம். நீங்­கள் தேசிய கல்­விக் கொள்­கை­யில் கையெ­ழுத்திட்டால் அரை மணி நேரத்­தில் நிதி ஒதுக்­கு­வ­தா­கத் தெரி­வித்­தார், நாங்­கள் 3 , 5 , 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு, மும்­மொழி கொள்கை , குலக்­கல்வி திட்­டம் மறை­மு­க­மாக கொண்­டு­வ­ரு­வது உள்­ளிட்ட பாத­கங்­களை கூறி­யும் நீங்­கள் யோசித்­துக் கூறுங்­கள் என சொல்­லி­விட்­டார்.

இதை முத­ல­மைச்­சர் கவ­னத்­திற்கு கொண்டு சென்­றுள்­ளோம். அவர் என்ன கூறு­கி­றாரோ அதை சார்ந்து எங்­கள் நட­வ­டிக்கை இருக்­கும்.

ஆளு­நர் மாநில பாடம் திட்­டம் குறித்து கூறிய கேள்­விக்கு பதி­ல­ளித்த அமைச்­சர் பள்ளி நூல­கங்­க­ளில் டி.என்.பி.எஸ்.சி. போட்டி தேர்­வு­கள் ஆறாம் வகுப்பு முதல் பனி­ரெண்­டாம் வகுப்பு வரை உள்ள மாநில பாடப் புத்­த­கத்­தில் இருந்து தான் படிக்­கின்­ற­னர். யுபி­எஸ்சி முதற்­கொண்டு மாநில பாட புத்­த­கத்­தில் தான் படிக்­கின்­ற­னர். வேண்­டு­மென்­றால் ஆளு­நரை அழைத்­துச் சென்று போகி­றேன். அங்கு போட்­டித் தேர்­வுக்கு படிக்­கும் மாண­வர்­க­ளி­டம் அவரே கேள்வி கேட்­கட்­டும் என்­றார்.

ஏமாற்றாதே!


விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க 14ஆயிரம் கோடி ரூபாயில் ஏழு திட்டங்கள் என்று ஒன்றிய பாஜக கூட்டணி அரசின் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திங்களன்று தில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். அதா வது பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்குத்தான் இவ்வளவு ‘பில்டப்’ கொடுத்தி ருக்கிறார் அஸ்வினி வைஷ்ணவ்.

இந்தத் திட்டங்களால் விவசாயிகளின் வரு மானம் எப்படி அதிகரிக்கும்? உண்மையில் இந்தத் திட்டங்கள் விவசாயிகளுக்கு பெரிதாக எந்தப் பயனையும் அளிக்கப் போவதில்லை. வேளாண் துறை சார்ந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கிடைக்கும். ஓரிரு அரசுத்துறைகள் மூலம் பாஜக வின் இந்துத்துவா கல்விக் கொள்கையைத் திணிப்பதற்கு அவை பயன்படும். இதில் விவசாயி களின் வாழ்வாதாரம் மற்றும் வருவாய் அதிக ரிப்புக்கு வாய்ப்பு எங்கே இருக்கிறது? விவசாயி கள் ஏமாற மாட்டார்கள்.

விவசாயிகளின் நீண்ட கால முக்கிய கோரிக் கையான விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயச் சட்டம் கொண்டு வருவது பற்றி பிரதமர் வாயைத் திறப்பதில்லை; சிறு துரும் பையும் அசைப்பதில்லை. ஒருமுறை கடன் தள்ளு படி செய்ய வேண்டும் என்பது பற்றியும் போராட்டக் களத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்க ளுக்கும் உ.பி.யில் அப்போதைய ஒன்றிய  அமைச்சரின் மகன் கார் ஏற்றிக் கொன்ற விவசாயிகளின் குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்குவது பற்றியும் பேசுவதேயில்லை. 

இந்நிலையில் திடீரென விவசாயிகள் மீது அக்கறை கொண்டுள்ளது போல காட்டிக் கொள்வதன் பின்னணி என்ன? ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தல் தான் காரணம். பஞ்சாப், ஹரியானா மாநில எல்லையான ஷம்பு பகுதியில் விவசாயிகள் 200 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலை யில் உச்சநீதிமன்றம் விவசாயிகளின் பிரச்சனை களைத் தீர்க்க நிபுணர் குழுவை அமைக்க உத்தரவிட்டிருந்தது.

தற்போது முன்னாள் நீதிபதி நவாப் சிங் தலை மையில் உயர் அதிகாரம் கொண்ட குழுவை அமைத்துள்ளது. அத்துடன் அதன் முதல் கூட்டம்  ஒரு வாரத்துக்குள் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. சௌத்ரி சரண்சிங் ஹரியானா வேளாண் பல்கலை.துணைவேந்தர் பி.ஆர்.கம்போஜிடம் நிபுணர் ஆலோசனை பெறுமாறும் குழுவுக்கு வழிகாட்டியுள்ளது. அதே நேரத்தில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இந்த நிலையிலேயே ஒன்றிய அரசு மேற் கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் பாஜக கூட்டணி அரசுக்கு எதிரான மக்களின் கோபாவேசத்தையும் மல்யுத்த வீராங் கனை வினேஷ் போகத்துக்கு இழைத்த அநீதிக்கு எதிரான அலையையும் சமாளிக்கவே இந்த திசை திருப்பும் வேலையில் இறங்கியுள்ளது. ஆயினும் இவை எதுவும் பாஜகவுக்கு பயனளிக்கப் போவதில்லை.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?

கார்பரேட்டுகளால் கார்பரேட்டுகளுக்காக