புல் புல் பறவை கதை

 குஜராத், மழை வெள்ளத்தில் வந்து கூட்டம் கூட்டமாக வேட்டையாடும் முதலைகளால் அதிர்ச்சி.

1000 ஆண்டுகள் பழமையான சீர்காழி சிவன் கோயிலுக்கு சொந்தமான 200 ஏக்கர் நிலத்தை தருமபுரம் ஆதீனம் விற்றதாக புகார்.அறநிலைய துறை நடவடிக்கை எடுக்க உயர்நீதி மன்றம் உத்தரவு.

மோடி திறந்தது, 8 மாதத்தில் இடிந்த சிவாஜி சிலை கட்டுமானத்தில் மிகப்பெரிய ஊழல்: ரூ.1 கோடி செலவு செய்து விட்டு ரூ.236 கோடி என கணக்கு காட்டியதாக குற்றச்சாட்டு.
பாகிஸ்தானில் நேற்றிரவு 11.59 மணிக்கு லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவு.
பிரதமர் மோடியை உளவியல் ரீதியாக உடைத்துவிட்டோம்: ராகுல்காந்தி பேச்சு

.
அதானிக்கு மட்டுமே தள்ளுபடி செய்ய சட்டம்?

நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த 10 நிறுவனங்களை அதானி குழுமம் வாங்கியது.

அந்நிறுவனங்களின் ரூ.62,000 கோடி கடனுக்கு வெறும் ரூ.16,000 கோடியை மட்டும் பொதுத்துறை பெற்றுக் கொண்ட தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் வெளியிட்ட புள்ளிவிவரங்களை குறிப்பிட்டு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த 10 நிறுவனங்களை அதானி குழுமத்தின் பல்வேறு நிறுவனங்கள் கைப்பற்றி உள்ளன. 

இது குறித்த அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், எச்டிஐஎல் நிறுவனமும் ஒன்று.

இந்நிறுவனம் ரூ.7,795 கோடி கடன் வாங்கியிருந்த நிலையில், அதானி புராபர்ட்டீஸ் நிறுவனம் வெறும் ரூ.285 கோடி செலுத்தி வாங்கி உள்ளது. மீதமுள்ள 96 சதவீத கடனை தள்ளுபடி செய்துள்ளது. இதற்கு அவர்கள் பயன்படுத்தும் அழகான வார்த்தை ‘ஹேர்கட்’.

இவ்வாறு 10 நிறுவனங்கள் ரூ.62,000 கோடி செலுத்த வேண்டிய நிலையில் அதானி குழுமம் ரூ.16,000 கோடியை மட்டும் செலுத்தி உள்ளது. பாக்கி 74 சதவீத கடனை பொதுத்துறை வங்கிகள் ஹேர்கட் செய்துள்ளன. ஆனால் மாணவர்களின் கல்விகடனை வேலையில்லாதவர்களுக்கு தள்ளுபடி செய்யாமல் ஏழைமாணவர்களை தற்கொலை செய்யுமளவு தள்ளிஙிடுகின்றன இதே வங்கிகள்.

பல்வேறு நிதி மோசடிகளால் குற்றம்சாட்டப்படும் அதானி லாபத்தை பெருக்க, அரசு அமைப்புகளே சலுகைகளை அள்ளித் தருகின்றன.இவ்வாறு கூறி உள்ளார்.

புல் புல் பறவை கதை இல்லாததால்

“புல் புல் பறவை சாவர்க்­கரை காப்­பாற்­றிய கதை இல்­லாத ஏமாற்­றத்­தில் ஆளு­நர் பேசு­கி­றார்” என்று மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யைச் சேர்ந்த மதுரை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சு.வெங்­க­டே­சன் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளார்.

இதுகுறித்து அவர் விடுத்­துள்ள அறிக்கை வரு­மாறு:–

கல்­வி­யில் சிறந்த மாநி­ல­மாக தமிழ்­நாடு விளங்கி வரு­கி­றது. அண்­மை­யில் ஒன்­றிய கல்வி அமைச்­ச­கம் வெளி­யிட்ட உயர்­கல்வி நிலை­யங்­க­ளின் தர­வ­ரிசை பட்­டி­ய­லில், முதல் 100 இடங்­களில் தமிழ்­நாட்­டி­லி­ருந்து 22 பல்­கலைக்­க­ழ­கங்­கள் இடம் பிடித்­துள்­ளன.

முதல் 50 அரசு பல்­கலைக்­க­ழ­கங்­கள் பட்­டி­ய­லில் தமிழ்­நாடு அர­சின், அண்ணா பல்­க­லைக்­க­ழ­கம், பார­தி­யார் பல்­க­லைக்­க­ழ­கம், சென்னை பல்­­கலைக்­க­ழ­கம், பார­தி­தா­சன் பல்­க­லைக்­க­ழ­கம், அழ­கப்பா பல்­க­லைக்­க­ழ­கம், பெரி­யார் பல்­க­லைக்­க­ழ­கம், அண்­ணா­மலை பல்­கலைக்­க­ழ­கம், மனோன்­ம­ணி­யம் சுந்­த­ர­னார் பல்­கலைக்­க­ழ­கம், தமிழ்­நாடு விவ­சாய பல்­க­லைக்­க­ழ­கம் ஆகிய பல்­க­லைக்­க­ழ­கங்­கள் இடம் பிடித்­ துள்­ளன.

அதி­லும், இந்­தி­யா­வி­லேயே முதல் மாநில பல்­கலைக்­க­ழ­கம் என்ற பெரு­மை­யைப் பெற்­றுள்­ளது அண்ணா பல்­க­லைக்­க­ழ­கம்.இப்­படி தொடக்க கல்வி முதல் உயர்­கல்வி வரை கல்­வி­யில் தமிழ்­நாடு சிறந்து விளங்கி வரு­கிறது.

இத­னால்­தான் ஒன்­றிய அர­சின் குலக்­கல்­வியை போதிக்­கும் தேசிய கல்­விக் கொள்­கையை தமிழ்­நாடு அரசு எதிர்க்­கி­றது.

மேலும் இரு­மொழி கொள்­கை­யி­லும் தமிழ்­நாடு அரசு உறு­தி­யாக உள்­ளது. இதை தாங்­கிக் கொள்ள முடி­யாத ஒன்­றிய அரசு, கல்­விக்கு தர­வேண்­டிய நிதியை கொடுக்­கா­மல் நிறுத்­தி ­வைத்­துள்­ளது.

தற்­போது ஆளு­நரை வைத்து மாநில அர­சின் பாடத்­திட்­டத்தை விமர்­சிக்க தொடங்கி இருக்­கி­றது.தமிழ்­நாட்­டில் ஆளு­ந­ராக இருக்­கும் ஆர்.என்.ரவி, ‘‘தேசிய பாடத்­திட்­டத்தை ஒப்­பி­டும்­போது, மாநில பாடத்­திட்­டங்­கள் தரம் மோச­மாக உள்­ளது” என பேசி­யுள்­ளார்.

ஆளு­ந­ரின் இந்த பேச்­சுக்கு அமைச்­சர்­கள் பொன்­முடி, அன்­பில் மகேஷ் பொய்­யா­மொழி ஆகி­யோர் கண்­டித்­துள்­ள­னர். மேலும் கல்­வி­யா­ளர்­க­ளும் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­லை­யில் மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் மதுரை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சு.வெங்­க­டே­சன், ‘‘மாநில பாடத்­திட்­டம் தரம் தாழ்ந்து இருப்­ப­தாக ஆளு­நர் ஆர்.என்.ரவி கூறி­யுள்­ளார்.

புல் புல் பறவை சாவர்க்­கரை காப்­பாற்­றிய கதையோ, முத­லை­க­ளி­ட­மி­ருந்து மோடி தப்­பித்த கதையோ தமிழ்­நாட்டு பாடங்­களில் இல்லை. தனக்கு பிடித்த காட்சி இல்­லாத ஏமாற்­றத்தை வெளிப்­ப­டுத்­தும் உரிமை

ஆளு­நருக்­கும் உண்டு” என ஆளு­நரின் பேச்சு உள்­ளது.

இவ்­வாறு சு.வெங்­க­டே­சன் எம்.பி. தமது அறிக்­கை­யில் கூறி­யுள்­ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?

கார்பரேட்டுகளால் கார்பரேட்டுகளுக்காக