75 ஆண்டுகளைக் கடந்து நிற்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம்! 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள் இந்திய அரசியல் நிர்ணய சபையால் அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டது. 1950 ஜனவரி 26 ஆம் நாள் அரசமைப்புச் சட்டமானது நடைமுறைக்கு வந்தது.
நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் இன்றைய தினம் (நவம்பர் 26) சிறப்புக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 75 ஆவது ஆண்டைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
"மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பை உள்ளடக்கி இந்தியாவை வளமான பாதையில் முன்னெடுத்துச் செல்லும் ஒரு உன்னத உருவாக்கம்தான் அண்ணல் அம்பேத்கர் வடிவமைத்துத் தந்த அரசமைப்புச் சட்டம்" என்று முதலமைச்சர் பெருமிதத்துடன் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை போற்றுவதும் காப்பதும் இந்திய நாட்டு மக்களின் அடிப்படைக் கடமையாகும். இன்றைக்கு இந்தக் காலச் சூழலில் இது மிகமிக முக்கியமானது ஆகும்.
"400 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று பிரதமர் மோடி ஏன் சொல்கிறார் என்றால், அரசியலமைப்பு சட்டத்தை நாம் மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்காகத்தான்" என்று பா.ஜ.க. எம்.பி.யும் முன்னாள் அமைச்சருமான அனந்த குமார் சொன்னார்.
“இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஆவணம்” என்று தமிழ்நாட்டு ஆளுநர் ரவியும் அவ்வப்போது சொல்லிக் கொண்டு இருக்கிறார். 'அன்னியக் கண்ணோட்டத்துடன் அரசியலமைப்புச் சட்டம் எழுதப்பட்டுள்ளது' என்று அன்றைய ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் சொன்னார்கள். அவர்களது வாரிசுகள்தான் இன்று ஒன்றியத்தை ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இத்தகையவர்களின் கையில் அதிகாரம் போய் விட்ட காலத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பது என்பது இந்திய மக்களின் மிகமுக்கியக் கடமை ஆகும். அந்தளவுக்கு பெரும் பெரும்பான்மை அதிகாரம் பா.ஜ.க.வுக்கு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய மக்கள் வழங்கவில்லை. அந்த வகையில் அரசியலமைப்புச் சட்டத்தை மக்களே காப்பாற்றி இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமை களைக் காக்க வேண்டும். இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கிறது என்ற உண்மையை ஒப்புக் கொண்டு ஒன்றிய ஆட்சியாளர்கள் செயல்பட வேண்டும். அதுதான் அரசியலமைப்புச் சட்டத்தை காக்கும் வழியாகும். பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள்... "அரசின் இறைமை என்பது பொதுமக்களிடம் தான் நிலைத்துள்ளது என அரசியலமைப்பின் முகவுரை கூறுகிறது.
சட்டம் சார்ந்த இறைமையானது கூட்டாட்சி ஒன்றியத்துக்கும் அதன் அங்கங்களான மாநிலங்களுக்கும் இடையே பிரித்துத் தரப்பட்டுள்ளது. அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் ஒற்றையாட்சி அமைப்பு கூடாது; கூட்டாட்சி அமைப்பு முறை தான் வேண்டும் என்று சொன்னார்கள்.
இது ஒரு துணைக்கண்டம் என்று அழைக்கக் கூடிய அளவுக்கு பரந்து விரிந்துள்ளது. ஆனால் சுங்கத் தொகை வசூலிக்கும் நகராட்சி மன்றங்களைப் போல மாநிலங்களை மாற்றி வருகிறீர்கள்" என்று 1963 சனவரி 25 அன்று மாநிலங்களவையில் பேரறிஞர் அண்ணா அவர்கள் உரையாற்றினார்கள்.
இன்றைக்கும் மாநிலங்களை அப்படித்தான் மனரீதியாக வைத்திருக்கிறது ஒன்றிய ஆட்சி. எனவே தான், 'மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற சட்ட முன்னெடுப்புகளைச் செய்வோம்' என்று முதலமைச்சர் அவர்கள் தனது முப்பெரும் விழா உரையில் குறிப்பிட்டார்.
மக்களுக்கு நேரடியாக நெருக்கமான மக்களுக்கான அனைத்து சேவைகளையும் செய்து தரக் கூடிய மாநிலங்களை வேதனையில் தள்ளிவிட்டு இந்தியாவைக் காக்க முடியாது.
இந்திய அரசியலமைப்பு சட்ட அவையில் அண்ணல் அம்பேத்கர் ஆற்றிய இறுதி உரை மிகமிக முக்கியமானது. "1950 ஜனவரி 26 ஆம் நாள் நாம் முரண்பாடுகள் நிறைந்த வாழ்க்கைக்குள் நுழைய இருக்கிறோம். அரசியலில் நாம் சமத்துவத்தைப் பெற்றிருப்போம். சமூகப் பொருளாதார வாழ்வில் ஏற்றத்தாழ்வைப் பெற்றிருப்போம்.
அரசியலில் ஒருவருக்கு ஒரு வாக்கு, ஒவ்வொரு வாக்குக்கும் ஒவ்வொரு மதிப்பு என்றிருக்கும். நமது சமூக பொருளாதார வாழ்விலோ 'ஒரு மனிதன் ஒரு மதிப்பு' என்ற கோட்பாட்டை தொடர்ந்து நிராகரிப்பவர்களாக இருப்போம். எவ்வளவு காலத்துக்கு இந்த முரண்பட்ட வாழ்வை வாழப் போகிறோம்?" என்று கேட்டார் அண்ணல்.
சமூக, பொருளாதாரத்தில் மட்டுமல்ல அரசியலிலும் 'ஒரு மனிதன் ஒரு மதிப்பு' கோட்பாடு இன்னமும் வரவில்லை, வர விடமாட்டார்கள் என்பதையே இன்று பலரது நடவடிக்கைகளும் காட்டிக் கொண்டிருக்கிறது. "இந்த அவை தமக்கு அளிக்கப்பட்டுள்ள இறையாண்மை மிக்க அதிகாரத்தை அறிவார்ந்த முறையில் பயன்படுத்தும் என்பதை நாம் நமது நடத்தையின் மூலம் நிரூபிப்போம்" என்றார் அண்ணல் அம்பேத்கர். அப்படி நிரூபிக்கும் கடமை இந்திய நாட்டின் அனைத்து மக்களுக்கும் உள்ளது.
அதனைச் செயல்படுத்த உறுதி ஏற்போம்!
மாநில சுயாட்சி - சமூகநீதி - சமத்துவம் - சமதர்மம் - சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகளைக் காப்பதன் மூலமாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்போம்.
அதிக உச்சம் தொடும். யுபிஎஸ் அறிக்கையின்படி, தங்கத்தின் விலை 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அவுன்ஸ் ஒன்றுக்கு 2,750 அமெரிக்க டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு தங்கத்தின் ஈர்க்கக்கூடிய 29 சதவீதம் உயர்வு, வலுவான முதலீட்டுத் தேவை, பலவீனமடைந்து வரும் அமெரிக்க டாலர் மற்றும் வளர்ந்து வரும் புவிசார் அரசியல் கவலைகள் ஆகியவை காரணமாக இருக்கிறது. 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 2,850 டாலராகவும், 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 2,900 டாலராகவும் உயரும் என்றும் யுபிஎஸ் கணித்துள்ளது. உலோகமான தங்கத்தின் தற்போதைய உயரமான தொடக்கப் புள்ளி வரவிருக்கும் மாதங்களில் ஆதாயங்களுக்கான அதிக வாய்ப்பை வழங்குகிறது. குறிப்பாக ETF தேவை துரிதப்படுத்தப்படுவதால் யுபிஎஸ் நம்புகிறது. தங்கத்திற்கான சீன தேவை குறைவதற்கான அறிகுறிகள் இருந்தபோதிலும், உள்ளூர் முதலீட்டாளர்களிடமிருந்து அடிப்படை தேவை குறைவதை விட, நாட்டின் இறக்குமதி ஒதுக்கீட்டின் சோர்வு இதற்குக் காரணம் என்று யுபிஎஸ் கூறுகிறது. பன்முகப்படுத்தப்பட்ட அமெரிக்க டாலர் மதிப்பிலான போர்ட்ஃபோலியோவிற்குள் தங்கத்தை மூல ஹெட்ஜ...
முகேஷ் அம்பானிக்கு நெருக்கடி! ஒன்றிய அரசு சமீபத்தில் வஃக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வந்தது, பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. அதற்கு ஜனாதிபதியும் உடனே ஒப்புதல் கொடுத்துள்ளார். வக்ஃபு வாரிய மசோதா நிறைவேற்றம் மத்திய அரசின் இம்முடிவுக்கு எதிராக முஸ்லிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஆனால் மசூதிகள் இருக்கும் இடத்தை பிடுங்கமாட்டோம் என்று மத்திய அரசு கூறிக்கொண்டிருக்கிறது. நாட்டில் அதிகமான மற்றும் முக்கியமான கட்டிடங்கள் இருக்கும் நிலங்கள் வஃக்பு வாரியத்திற்கு சொந்தமானதாக இருக்கிறது. கடும் விவாதத்திற்கு பின் மாநிலங்களவையில் வக்ஃபு வாரிய மசோதா நிறைவேற்றம்! - அடுத்து என்ன? அந்த நிலம் பல்வேறு காலக்கட்டங்களில் பலரின் கைகளுக்கு மாறி இருக்கிறது. அந்த வகையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி தென்மும்பையில் கட்டி இருக்கும் பல அடுக்கு சொகுசு மாளிகையான ஆன்டிலியா கட்டிடம் இருக்கும் நிலமும் வஃக்பு வாரியத்திற்கு சொந்தமானது என்று தெரிய வந்துள்ளது. இந்தியாவிலேயே மிகவும் பணக்கார வீடாக பார்க்கப்படும் முகேஷ் அம்பானியின் வீட்டின் மதிப்பு மட்டும் ரூ.15000 கோடியாகும். இந்த வீடு இருக்கும் நிலத்தை மு...
தமிழ் காமிக்ஸைப் புரட்டிப்போட்ட முத்து காமிக்ஸ்! தமிழில் காமிக்ஸ் என்றால் இரும்புக் கை மாயாவியைப் பற்றிப் பேசாமல் ஆரம்பிக்க முடியாது. இரும்புக் கை மாயாவியின் படத்தைப் பார்த்திராதவர்கள்கூட உச்சரிக்கும் மந்திரப் பெயராக அது புகழ்பெற்றிருக்கிறது. இரும்புக் கை மாயாவி ஏன் இப்படி கொண்டாடப்படுகிறது? மூன்று விஷயங்களை மட்டும் பார்ப்போம்: தமிழகத்தில் இரும்புக்கை மாயாவியின் சகாப்தம் கடந்த நாற்பதாண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்துவருகிறது. இப்போதும்கூட அதன் மறுபதிப்பைத் தேடுபவர்கள் உண்டு. சினிமா இயக்குநர்கள் பிரபு சாலமன், மிஷ்கின், ஏ.ஆர். முருகதாஸ், சிம்புதேவன் உள்ளிட்டோர் தங்களுடைய சிறுவயது இன்ஸ்பிரேஷனாக மாயாவியையே குறிப்பிடுகின்றனர். # எழுபது, எண்பதுகளில் இரும்புக்கை மாயாவியைப் போலவே தங்கக் கை மாயாவி, இரும்பு விரல் மாயாவி, தங்க விரல் மாயாவி, உலோகக் கை மாயாவி, நெருப்பு விரல் சிஐடி என ஏகப்பட்ட 'போலச் செய்யும்' கதாபாத்திரங்கள் வந்ததில் இருந்தே, இரும்புக் கை மாயாவி எவ்வளவு பிரபலம் என்பதைப் புரிந்துகொள்ளலாம். # தொடர்ந்து வந்த கதைகள் மாயாவியின் ஆளுமை, தமிழகத்தில் நிலைத்து நிற்க உதவி...