கடும் எதிர்ப்பு!
இந்தி திணிப்பிற்கு மகாராஷ்டிராவில் கடும் எதிர்ப்பு!
🔹தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை இந்தி மொழிக் கட்டாயமாக்கப்படுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது
🔹இந்நிலையில், இந்தி மொழியைக் கட்டாயமாக்கும் முடிவை ரத்து செய்ய வேண்டுமென, அம்மாநில அரசின் மொழி ஆலோசனைக் குழு தலைவர் லட்சுமிகாந்த் தேஷ்முக் அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்
🔹அக்கடிதத்தில், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குத் தாய்மொழி கற்பிக்கப்பட வேண்டும். இந்தி மொழியைக் கட்டாயமாக்கும் அர்சின் முடிவு தேவையற்றது. இது ஆசிரியர்களுக்குப் பணிச்சுமையை அதிகரிப்பதுடன், மாணவர்கள் ஒரு மொழியையாவது முறையாகக் கற்கும் வாய்ப்பையும் குறைக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது
🔹மேலும், உயர் கல்விக்கு ஆங்கிலம் தேவைப்படுவதால் 2001ம் ஆண்டு முதல் ‘better English with better Marathi’ என்ற கொள்கையின் அடிப்படையில் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்தி மொழியால் மகாராஷ்டிராவிற்கு ஏற்பட்ட மொழியியல் மற்றும் கலாச்சாரச் சேதம் போல் வேறு எந்த மாநிலத்திற்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனப் பல மொழியியல் அறிஞர்கள் கூறுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
🔹அதுமட்டுமின்றி, மகாராஷ்டிராவில் இந்தி கற்பிக்கப்பட்டபோதிலும், வட மாநிலங்களில் மராத்தி மொழிக் கற்பிக்கப்படவில்லை. இங்குள்ள வட இந்தியர்களும் மராத்தியில் பேசத் தயாராக இல்லை என்னும் போது, அரசு இந்தியைக் கட்டாயமாக்குவது மராட்டியர்களை அவமதிக்கும் செயல் எனக் கூறப்பட்டுள்ளது.
கணித_மேதை_
சகுந்தலா"
நினைவு தினம்.....
21.04.2013.
கணக்கு... பாடம் அல்ல, வாழ்க்கை! கின்னஸ் சாதனையாளர் கணித மேதை சகுந்தலா
கணக்கு என்றாலே கசக்கும் பலருக்கு. பெருக்கலில் 16-ம் வாய்ப்பாடுக்கு மேல் படித்தவர்கள் அதிகம் இருக்க மாட்டார்கள். இன்று தொழிலுக்கேற்ற கணித முறைகள் பல வந்துவிட்டன. ஆனாலும், அன்று தன் அளப்பரிய கணித ஆற்றலால் அதில் பல ஆக்கபூர்வ முயற்சிகள் செய்தவர், கணித மேதை சகுந்தலா தேவி.
கணக்கு... பாடம் அல்ல, வாழ்க்கை! கின்னஸ் சாதனையாளர் கணித மேதை சகுந்தலா
கணக்கு என்றாலே கசக்கும் பலருக்கு. பெருக்கலில் 16-ம் வாய்ப்பாடுக்கு மேல் படித்தவர்கள் அதிகம் இருக்க மாட்டார்கள். இன்று தொழிலுக்கேற்ற கணித முறைகள் பல வந்துவிட்டன. ஆனாலும், அன்று தன் அளப்பரிய கணித ஆற்றலால் அதில் பல ஆக்கபூர்வ முயற்சிகள் செய்தவர், கணித மேதை சகுந்தலா தேவி.
1939-ம் ஆண்டு நவம்பர் மாதம் 4-ம் தேதி, கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூருவில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் சகுந்தலா. இவருடைய தந்தை ஒரு சர்க்கஸில் வேலைபார்த்து வந்தார். சுவாரஸ்யமான வித்தைகளை ரசிகர்கள் முன் செய்துகாட்டி அனைவரையும் சந்தோஷப்படுத்தி வந்தவருக்கு, தன் வீட்டிலேயே ஒரு மகிழ்ச்சி காத்திருந்தது.சர்க்கஸில் காட்டிய வித்தைகளில் ஒன்றான சீட்டுக் கட்டு வித்தையை தன் மகள் சகுந்தலாவிடம் அவர் அப்பா விளையாட்டுக்குச் செய்துகாட்ட, அதைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த மூன்று வயது சகுந்தலா, ஒருநாள், 'நானும் கொஞ்சம் சீட்டில் வித்தை காட்டட்டுமா?' என்று கேட்டு, தந்தையை ஆச்சர்யத்தில் மூழ்கடித்தார். 'இனிமேல் நாம் சர்க்கஸ் வேலைக்குப் போக வேண்டியதில்லை. இந்த சீட்டு வித்தை போதும்' எனத் தன் மகள் சகுந்தலாவுடன் ஊர் ஊராகச் சுற்ற ஆரம்பித்தார் அவர்.
வித்தை மூலம் வருமானம் வந்ததோடு, சகுந்தலாவின் திறமையும் வெளிப்பட்டது. தன் ஆறு வயதில் கணக்கு மற்றும் நினைவாற்றல் திறமைகளை மைசூர் பல்கலைக்கழகத்திலும், எட்டு வயதில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் வெளிப்படுத்தி, அனைவரையும் தன்னைத் திரும்பிப் பார்க்கச் செய்தார்.
கணிதப் புதிர்களுக்கு கம்ப்யூட்டர், கால்குலேட்டர் இயந்திரங்களின் வேகத்தை முந்தி விடையளிக்கும் திறமை பெற்றிருந்தவர் சகுந்தலா. தன் கணிதத் திறமையை உலகறியச் செய்ய, அவர் பல நாடுகளுக்குச் சென்று வந்தார். 1977-ம் ஆண்டு 201-க்கு ‘23’கனமூலத்தை மனதில் நினைத்தே கூறினார். லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், இரண்டு 13 இலக்க எண்களைப் (7,868, 369,774,870 * 2,465,099,745,779 = 18.947.668.177.995.426.462.773.730) பெருக்கி, 28 விநாடிகளில் விடை கூறி, உலகையே வியக்கவைத்தார். இந்த விடை, 26 இலக்கங்கள் கொண்டது. இதுவே அவரது உலக சாதனையானது.
அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் இருந்து அழைப்பு வந்தபோது, சகுந்தலாவின் வயது 46. மூளை அதே வேகத்தில் வேலை செய்யுமா தெரியவில்லை. சோதித்துப்பார்த்துவிடலாம் எனக் களம் இறங்கினர். அவர்கள் கொடுத்த91674867692003915809866092758538016248310668014430862240712651642793465704086709659 3279205767480806790022783016354924852380335745316935111903596577547340075681688305 620821016129132845564805780158806771 என்கிற இந்த 201 இலக்க எண்ணின் 23-வது வர்க்க மூலத்தைக் கேட்டார்கள். கம்ப்யூட்டர், 13,000 கட்டளைகளுக்குப் பின் ஒரு நிமிடத்தில் பதில் சொல்லத் தயாரானபோது, சகுந்தலா, 546372891 என
10 நொடிகள் முன்னதாகவே சொல்லிவிட்டார்.
ஐன்ஸ்டீன் மூன்று மணி நேரம் செலவழித்துக் கண்டுபிடித்த ஒரு கணக்கின் விடையை, மிகச் சில நொடிகளிலேயே தீர்த்த சகுந்தலாவின் சாதனை, வரலாற்றில் உள்ளது.
கணிதத்தில் மட்டுமல்லாமல் ஜோதிடக் கலையிலும் வல்லவராக இருந்தார் சகுந்தலா. பின் வரும் தலைமுறையினர் படித்துப் பயன்பெறும் வகையில், கணிதவியலைப் பற்றி அவர் எழுதியுள்ள புத்தகங்கள் பல. ‘புக் நம்பர்ஸ்’, ‘பெர்ஃபெக்ட் மர்டர்’, ‘ஃபிங்கரிங்: தி ஜாய் ஆஃப் நம்பர்ஸ்’, ‘இன் தி வொண்டேர்லேண்ட் ஆஃப் நம்பர்ஸ்’, ‘அஸ்ட்ராலஜி ஃபார் யூ’ என அந்த நூல்கள் அவர் திறமையின் சான்றுகளாக, நமக்குப் பயன் தந்துகொண்டிருக்கின்றன.
உடல் நலக் குறைவினால், 2013 ஏப்ரல் 21-ம் தேதி காலமானார் சகுந்தலா தேவி. இந்தியாவின் இந்த பெண் கணித மேதை, மறக்கமுடியாத ஆளுமை.
10 நொடிகள் முன்னதாகவே சொல்லிவிட்டார்.
ஐன்ஸ்டீன் மூன்று மணி நேரம் செலவழித்துக் கண்டுபிடித்த ஒரு கணக்கின் விடையை, மிகச் சில நொடிகளிலேயே தீர்த்த சகுந்தலாவின் சாதனை, வரலாற்றில் உள்ளது.
கணிதத்தில் மட்டுமல்லாமல் ஜோதிடக் கலையிலும் வல்லவராக இருந்தார் சகுந்தலா. பின் வரும் தலைமுறையினர் படித்துப் பயன்பெறும் வகையில், கணிதவியலைப் பற்றி அவர் எழுதியுள்ள புத்தகங்கள் பல. ‘புக் நம்பர்ஸ்’, ‘பெர்ஃபெக்ட் மர்டர்’, ‘ஃபிங்கரிங்: தி ஜாய் ஆஃப் நம்பர்ஸ்’, ‘இன் தி வொண்டேர்லேண்ட் ஆஃப் நம்பர்ஸ்’, ‘அஸ்ட்ராலஜி ஃபார் யூ’ என அந்த நூல்கள் அவர் திறமையின் சான்றுகளாக, நமக்குப் பயன் தந்துகொண்டிருக்கின்றன.
உடல் நலக் குறைவினால், 2013 ஏப்ரல் 21-ம் தேதி காலமானார் சகுந்தலா தேவி. இந்தியாவின் இந்த பெண் கணித மேதை, மறக்கமுடியாத ஆளுமை.
