200 கோடிகள் கொள்ளை?
சத்தீஸ்கர் மாநிலம் காரியாபந்த்தில் 3 மாதங்களுக்குப் பின்னர் ரேஷன் கடையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டதால் கேட்டை உடைத்து ஆர்பாட்டம் செய்த மக்கள்.
ஜாபர் சாதிக் போதைப்பொருள் வழக்கில் கைதானபோது, ஊடகங்கள் கொந்தளித்தன. ஒவ்வொரு பத்திரிக்கையாளரும் போட்டி போட்டுக் கொண்டு write-up எழுதியதை மறந்துவிட முடியுமா? தொடர் செய்திகள், டிவி விவாதங்களில் மணிக்கணக்கில் இதுவே தலைப்பு, யூடியூப் லைவ்கள், சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்—எல்லாம் ஜாபர் சாதிக் பற்றியே. அவரது ஒவ்வொரு அசைவும், பின்னணியும் ஆராயப்பட்டு, திமுகவுடனான தொடர்பு பெரிதாக பரப்பப்பட்டது.
இப்போது அதே போதைப்பொருள் வழக்கில் #அதிமுக நிர்வாகி பிரசாத் சிக்கியிருக்கிறான். இவனது நெட்வொர்க் சினிமா உலகம் முழுக்க பரவியிருக்கிறது. பின்னணியை ஆராய்ந்தால், அதிமுகவின் முக்கிய புள்ளிகள் வரை இவனது தொடர்பு நீள்கிறது. இது மட்டுமா? இவனது செயல்கள் பல கோடி ரூபாய் பணப்பரிமாற்றங்களை உள்ளடக்கியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. ஆனால், இவ்வளவு பெரிய விவகாரத்தில் ஊடகங்களில் ஒரு சத்தமும் இல்லை.
ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஒரு பத்திரிக்கையாளர் கூட இதைப் பற்றி ஒரு வரி எழுதவில்லை. ஒரு ட்வீட், ஒரு ஃபேஸ்புக் பதிவு, ஒரு யூடியூப் வீடியோ கூட இல்லை. டிவி சேனல்களில் இதைப் பற்றிய செய்தியோ, விவாதமோ இல்லை. சமூக வலைதளங்களில் இதைப் பற்றி யாரும் பெரிதாக பேசவில்லை.
திமுகவில் யாராவது சிறிய தவறு செய்தாலும், ஊடகங்கள் பொங்கி எழுந்து, தொடர் செய்திகள், கண்டனங்கள், விமர்சனங்கள் என புயலாக்கிவிடும். ஆனால், அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் இவ்வளவு பெரிய வழக்கில் சிக்கியிருக்கிறார், ஆனால் ஊடகங்கள் மௌனமாக இருக்கின்றன. இது வெளிப்படையான இரட்டை வேடம் இல்லையா? இந்த மௌனம் திட்டமிட்டது போலவே தெரிகிறது.
ஊடகங்கள் திமுகவை விமர்சிப்பது பரவாயில்லை, விமர்சிக்கப்பட வேண்டும். அது ஜனநாயகத்தில் சகஜம். ஆனால், அதே ஊடகங்கள் அதிமுகவையும் அதேபோல் விமர்சிக்க வேண்டும். இரு கட்சிகளையும் ஒரே அளவுகோலில் அணுகினால்தான் அவற்றின் நம்பகத்தன்மை தக்கவைக்கப்படும். இல்லையெனில், இவை அரசியல் கைப்பாவைகளாக, ‘ஊடக புரோக்கர்களாக’ மாறிவிடும். இந்த மௌனத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? பணமா, அழுத்தமா, அரசியல் ஒப்பந்தமா? மக்கள் இதை அறிய வேண்டும்.
ஒரு தரப்புக்கு ஆதரவாக மட்டும் செயல்பட்டு, மற்றொரு தரப்புக்கு எதிராக மட்டும் குரல் கொடுத்தால், ஊடகங்களின் நீதி, நேர்மை, அறம் எங்கே போகிறது? இது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதா? மக்களுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டிய ஊடகங்கள், இப்படி தேர்ந்தெடுத்த மௌனத்தை கடைபிடிக்கலாமா?

பார்ப்பானுக்கு மட்டுமே பகவத்கீதை படித்து,விளக்கி உபதேசம் செய்யும் உரிமையும் உண்டு!உத்திர பிரதேசத்தில் யாதவ சமூகத்தை சேர்ந்த ஒருவர் பொதுவெளியில் பகவத்கீதை வாசித்ததால்,அவருக்கு மொட்டையடித்து தண்டனையை நிறைவேற்றியது தீக்ஷிதர் குழு.
முன்னாள் அ.இ.அ.தி.மு.க,அமைச்சரிடம்
ரூ200 கோடிகளை ஆட்டைப் போட்ட பாஜக.
அதிமுக மாஜி அமைச்சரின் பண்ணை வீட்டில் ரூ.200 கோடி பணத்தை பாஜவினர் கட்டப்பஞ்சாயத்து செய்து ரவுடிகள் மூலம் பறித்ததாக சமூக வலைதளத்தில் பாஜ பிரமுகர் வெளியிட்ட பதிவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாஜ ஆதரவாளரான மதுரையைச் சேர்ந்த ரவிக்குமார், தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"மதுரை மாநகர் பாஜ வழக்கறிஞர்களில் சிலர் கட்டப்பஞ்சாயத்துகள் செய்வதும், சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்வதும் வாடிக்கையாக உள்ளது. இதை தடுக்கவில்லை எனில், மதுரை பாஜவிற்கு சங்கடங்கள் ஏற்படும்.

இதை சில பாஜ தலைவர்கள் ஆதரிக்கிறார்கள். பாஜ பலர் உயிரை கொடுத்து வளர்த்த கட்சி. தற்போது கட்சி வளர்ச்சியடைத்த உடன் சிலர் ஆதாயம் தேடி பதவிக்கு வந்தவர்கள்.
நேற்று (ஞாயிறு) மதுரை அதிமுக பிரமுகர் ஒருவரின் பல கோடி பணத்தை ரவுடிகளை வைத்து பறித்து சென்றுள்ளனர்.
இதனால் பாஜவிற்கும், ஆர்எஸ்எஸ்க்கும் தான் கெட்டப்பெயர் ஏற்படும். இப்படி பதிவிட வருத்தமாகத்தான் இருக்கிறது. எனது மகன் தவறு செய்தாலும் குற்றம் குற்றமே. இதில் யார் என்மேல் வருத்தம் கொண்டாலும் கவலையில்லை (தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்). பாஜ நேர்மையான கட்சி என்றால் நடவடிக்கை எடு. மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இல்லை என்றால் தகுந்த ஆதாரத்துடன் உண்மைகள் வெளி வரும்.கட்சிக்கு உண்மையாக உழைப்பவர்களுக்கு மரியாதை கொடுங்கள். கட்சியை வளர்ப்பதற்காக முடிச்சவிக்கி, மொள்ளமாரிக்கு பதவியை தாரை வார்க்காதீர்கள்.
இது பலர் உயிர் தியாகம் செய்து வளர்த்த கட்சி. அவர்கள் ஆன்மா பார்த்து கொண்டு இருக்கிறது. (தவறு இருந்தால் மன்னிக்கவும்). இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவரது பதிவில், மதுரை அதிமுக பிரமுகர் ஒருவரின் பல கோடி பணத்தை ரவுடிகளை வைத்து பறித்து சென்றுள்ளனர் என கூறியது, தென்மாவட்ட அரசியல்வாதிகளிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், ‘‘மதுரையைச் சேர்ந்த அதிமுக மாஜி அமைச்சர் ஒருவருக்கு மதுரை மாவட்டம் துவரிமான் பகுதியில் பண்ணைத்தோட்டம் உள்ளது.
இங்கு தான் முக்கிய ஆவணங்கள், பணம் மற்றும் நகைகளை பதுக்கி வைத்துள்ளார். இதில் பெரும் பகுதி பணம் கருப்பு பணம் என்று கூறப்படுகிறது. சுமார் ரூ.200 கோடி வரை இங்கு ரொக்கமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஞாயிறன்று பெரும்பகுதி கருப்பு பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது’’ என்றார்.
மாஜி அமைச்சர் பண்ணை வீட்டில் பதுக்கிய பணத்தை நோட்டமிட்ட ஒரு கும்பல் பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது, அதிமுக மட்டுமின்றி பாஜ வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்னும் ஓரிரு நாட்களில் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வரும் என கூறப்படுகிறது.
* பாஜ நேர்மையான கட்சி என்றால் நடவடிக்கை எடு. மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இல்லை என்றால் தகுந்த ஆதாரத்துடன் உண்மைகள் வெளி வரும்.
* மாஜி அமைச்சர் பண்ணை வீட்டில் சுமார் ரூ.200 ேகாடி வரை ரொக்கமாக கருப்பு பணம் இருந்ததாகவும், இந்த பணத்தை வரும் சட்டமன்ற தேர்தலில் செலவிடுவதற்காக மாஜி அமைச்சர் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
* முருகர் மாநாட்டில் அவசர அவசரமாக மாஜி வெளியேறியதற்கு இதுதான் காரணமா?
கடந்த 22ம் தேதி மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக மாஜி அமைச்சர்கள் பங்கேற்றனர்.
மாநாடு நடைபெற்று கொண்டிருந்தபோதே அதிமுக மாஜி அமைச்சர் ஒருவர் பதற்றத்துடன் அவசர அவசரமாக வெளியேறினார். மாநாடு நடந்த அன்றுதான் அதிமுக மாஜி அமைச்சர் பண்ணை வீட்டில் ரூ.200 கோடி கொள்ளையடிக்கப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனால், கொள்ளையடிக்கப்பட்ட தகவல் அறிந்துதான் அவர் மாநாட்டில் இருந்து அவசர அவசரமாக வெளியேறினாரா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.