நான்காவது என்ற மாயை!

‘நான் என்ன செய்வேன் என்று யாருக்கும் ஏன் எனக்கே தெரியாது’ - ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை குறித்து ட்ரம்ப்.

ஈரான் மீது தாக்குதல் நடத்தி இஸ்ரேல் பெரும் தவறு செய்துவிட்டது, இதற்காக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்; நாங்கள் ஒருபோதும் சரண் அடைய மாட்டோம்; அமெரிக்கா ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டால் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும்.

எந்தவொரு இராணுவத் தலையீடும் சந்தேகத்திற்கு இடமின்றி மீளமுடியாத தீங்கு விளைவிக்கும் என்பதை அமெரிக்கர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஈரானிய நாடு திணிக்கப்பட்ட போரை உறுதியாக எதிர்க்கிறது,

மேலும் திணிக்கப்பட்ட அமைதியையும் உறுதியாக எதிர்க்கும்.

இந்த நாடு ஒருபோதும் அழுத்தத்திற்கு சரணடையாது.

போர் போரால் எதிர்கொள்ளப்படுகிறது,

குண்டுவீச்சால் குண்டுவீச்ச எதிர்கொள்ளப்படுகிறது.

தாக்குதல் மூலம் தாக்குதல் எதிர்கொள்ளப்படுகிறது.

ஈரானியர்கள் சரணடைய மாட்டார்கள் அல்லது கட்டளைகளுக்கு அடிபணிய மாட்டார்கள் என்பதை அமெரிக்கர்கள் அறிந்திருக்க வேண்டும்.

- ஈரான் ஆட்சியாளரும், மதத்தலைவருமான கமேனி அறிவிப்பு

டாஸ்மாக் வழக்கில் ஆகாஷ் பாஸ்கரனுக்கு தொடர்பு இல்லை - சென்னை உயர் நீதிமன்றம்







சோர்வாக இருக்கிறீர்களா?
 ஒரு நொடியில் புத்துணர்ச்சி பெற வேண்டுமா? 

அப்படியானால், டாக்டர் மண்டெல் (Dr. Mandell) ளின் இந்த எளிய, ஆனால் சக்திவாய்ந்த முறையை நீங்கள் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்! 

உடற்சோர்வு ஏற்படும்போது உடனடி ஆற்றலைத் தூண்டும் ஒரு ரகசியத்தை அவர் தனது வீடியோவில் பகிர்ந்துள்ளார்.
 
நமது உடலிலேயே அமைந்துள்ள ஒரு அற்புதப் புள்ளியைத் தூண்டுவதன் மூலம், சோர்வைப் போக்கி புத்துணர்ச்சியைப் பெற முடியும் என்கிறார் டாக்டர் மண்டெல். அது என்ன புள்ளி? எப்படிச் செய்வது? வாருங்கள் பார்ப்போம்!

  அந்த ரகசியப் புள்ளி எது?

டாக்டர் மண்டெல் குறிப்பிடும் அந்த புள்ளி, நமது தொப்புளுக்குச் சற்றுக் கீழே, இரண்டு விரல் அகல தூரத்தில் அமைந்துள்ளது. இந்தப் புள்ளியைத்தான் நாம் தூண்டப்போகிறோம்.

உங்கள் தொப்புளுக்குக் கீழே இரண்டு விரல் அகல தூரத்தில் உள்ள புள்ளியைக் கண்டறியவும். உங்கள் கட்டைவிரல் அல்லது வேறு விரல்களின் உதவியுடன் அந்தப் புள்ளியை நேராக உள்ளே அழுத்துங்கள். சுமார் ஒன்று முதல் இரண்டு நிமிடங்கள் வரை அழுத்திப் பிடித்துக் கொள்ளவும்.

இந்த புள்ளியை அழுத்தியவுடன், நீங்கள் உடனடி மாற்றங்களை உணர்வீர்கள் என்கிறார் டாக்டர் மண்டெல். குறிப்பாக, உங்கள் மூக்கின் பின் பகுதிக்குக் கீழ் ஒருவித உணர்வு ஏற்படும். 

இது உங்கள் சிம்பதெடிக் நரம்பு மண்டலத்தைத் (sympathetic nervous system) தூண்டி, உடலில் ஆற்றலை அதிகரிக்கும். இதன் விளைவாக, நீங்கள் அற்புதமான புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும் உணர்வீர்கள்.

happy person

நமது உடலில் உள்ள சில அழுத்தப் புள்ளிகள் (pressure points) நரம்பு மண்டலத்துடன் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளன.

 இந்தப் புள்ளிகளைத் தூண்டும்போது, அவை உடலின் ஆற்றல் ஓட்டத்தைத் தூண்டி, சோர்வைப் போக்கி, மனதையும் உடலையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகின்றன. டாக்டர் மண்டெல் கூறும் இந்தப் புள்ளியும் அத்தகைய ஒரு முக்கியப் புள்ளியாகும்.

ஆகவே, அடுத்த முறை நீங்கள் சோர்வாக உணரும்போது, இந்த எளிய நுட்பத்தை முயற்சித்து உடனடி ஆற்றலைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

நான்காவது என்ற மாயை!

உலகின் நான்காவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை உயர்த்தி விட்டோம் என்று பா.ஜ.க சொல்லிக் கொள்கிறது.

இதனையே தங்களது ஆட்சியின் மிகப் பெரிய சாதனையாகவும் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள்.


பிரதமர் மோடியோ இன்னும் பல படிகள் தாண்டிப் பேசத் தொடங்கி இருக்கிறார்."


உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா உருவெடுக்கும்”என்று சைப்ரஸ் நாட்டில் நேற்றைய தினம் பேசி இருக்கிறார் பிரதமர்.

நான்காவது இடத்தை எட்டி விட்டோம் என்பதும், மூன்றாவது இடத்துக்குப் போய்விடுவோம் என்பதும் பா.ஜ.க. உருவாக்க நினைக்கும் மாயைகள் ஆகும்.


இந்தியா நான்காவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளதாக முதலில் சொன்னது நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர். சுப்பிரமணியம்.

ஐ.எம்.எஃப். எனப்படும் சர்வதேச நிதியத்தின் உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தின் படி இப்படி கணிக்கப்பட்டுள்ளதாக அவர் சொல்கிறார்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.2 லட்சம், அமெரிக்க டாலராக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இது ஜப்பான் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட கொஞ்சம் கூடுதல்.


இதை வைத்துத்தான் நான்காவது பொருளாதாரமாக இந்தியாவை உயர்த்தி விட்டோம் என்று சொல்கிறார்கள்.

2024 ஆம் ஆண்டில் ஜப்பான் நாட்டின் 4.112 டிரில்லியன் டாலர் ஜி.டி.பி.யுடன் 4 ஆவது இடத்திலும்,

இந்தியா 3.942 டிரில்லியன் டாலர் ஜி.டி.பி.யுடன் 5 ஆவது இடத்திலும் இருந்தது. (ஒரு டிரில்லியன் டாலர் என்றால் ரூ. 85 லட்சம் கோடி) இதில் 5 ஆவது இடத்தில் இருந்து 4 ஆவது இடத்துக்கு இந்தியா உயர்ந்து விட்டது என்பது இவர்களது கூற்று.

2025 ஆம் ஆண்டுக்கான ஐ.எம்.எஃப். அறிக்கையானது,

2025ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவின் ஜி.டி.பி.யானது 4.187 டிரில்லியன் அமெரிக்க டாலராகவும், ஜப்பான் நாட்டின் ஜி.டி.பி.யானது 4.186 டிரில்லியன் அமெரிக்க டாலராகவும் உயரும் என்று சொல்லி இருக்கிறது.

இதை வைத்துத்தான் இப்படி பரப்புரை செய்கிறார்கள்.

அதாவது, இது ‘அடைந்த’ வளர்ச்சி அல்ல. ‘அடையப் போவதாகச் சொல்லும்' வளர்ச்சியே ஆகும்.

அதாவது, ‘நான்காவது இடத்தை இந்தியா எட்டலாம்' என்ற கணிப்புதான் இது. எட்டலாம், எட்டாமலும் போகலாம் என்றுதான் இதனைப் பார்க்க வேண்டுமே தவிர, 'எட்டிவிட்டது' என்று சொல்ல முடியாது.

உலகின் முதல் பொருளாதார நாடாக அமெரிக்கா இருக்கிறது. இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக சீனா இருக்கிறது. மூன்றாவது இடத்தில் ஜெர்மனி இருக்கிறது. நான்காவது இடத்தில் ஜப்பான் இருக்கிறது.


இந்தியா மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர்ந்திருக்க வேண்டும், வளர்த்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்,


அப்படி வளர்வதற்குத் தகுதியுள்ள நாடுதான் இந்தியா. உலகின் அதிகப்படியான மக்கள் தொகையைக் கொண்ட நாடு இந்தியா. மிகப்பெரிய நாடு இந்தியா. ஆனால் அதனைச் செய்வதற்கான மிகச் சரியான நடவடிக்கைகளில் பா.ஜ.க. அரசு செய்ததா என்றால் இல்லை.

இந்தியாவில் தனிநபர் வருமானம், ஜப்பானின் தனிநபர் வருமானத்தில் 11 இல் ஒரு பங்குதான். இந்தியாவின் மக்கள் தொகை 146 கோடி. ஜப்பானின் மக்கள் தொகை 12 கோடிதான். இந்த அடிப்படையில் ஜப்பானை முந்துவதாக மார் தட்ட முடியுமா?

• இந்தியாவில் பொருளாதாரச் சமநிலைமை இல்லை.


• ஒரு விழுக்காடு மக்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 விழுக்காட்டை கட்டுப்படுத்துகிறார்கள்.

• இந்தியாவில் ஒரு விழுக்காடு மனிதர்கள், இந்திய செல்வத்தின் 50 விழுக்காடு வைத்துள்ளார்கள். அடிமட்டத்தில் உள்ள 50 விழுக்காடு மக்களிடம் நாட்டின் செல்வமானது 3 விழுக்காடு மட்டுமே இருக்கிறது.


• வருமானத்திலும் சமம் இல்லை. 10 விழுக்காடு மக்கள், தேசிய வருமானத்தில் 57 விழுக்காட்டை பெறுகிறார்கள்.

• அனைத்துத் துறைகளும் சமமான வளர்ச்சியைப் பெறவில்லை. சேவை மற்றும் பெருநிறுவனங்களை மட்டுமே பா.ஜ.க. அரசு வளர்த்துள்ளது.


• புதிய வேலைவாய்ப்புகளை பா.ஜ.க. அரசு உருவாக்க வில்லை. (பட்டதாரிகளின் வேலைவாய்ப்பின்மை 2.1 விழுக்காடாகவும், அதற்கு அடுத்த நிலையில் இருப்பவர்களில் 18.4 விழுக்காடு நபர்கள் வேலையில்லாமல் இருப்பதாகவும் புள்ளிவிபரங்கள் சொல்கிறது)

• வேளாண்மையை முற்றிலும் புறக்கணிக்கிறது.

• பா.ஜ.க. அரசின் வரிக் கொள்கை, ஏழை எளிய நடுத்தர மக்களைச் சுரண்டுவதாக அமைந்துள்ளது.

• மாநில அரசுகளை சிதைப்பதாக பா.ஜ.க. அரசின் அரசியல், நிர்வாக, பொருளாதாரக் கொள்கைகள் அமைந்துள்ளன.

• ஒற்றைத் தன்மை கொண்டதாக இந்தியாவை மாற்றுவதாக பா.ஜ.க.வின் சிந்தனை உள்ளது.)

- இப்படி அனைத்திலும் சமமற்ற நிலைமையைத்தான் இந்தியாவில் பா.ஜ.க. உருவாக்கி இருக்கிறது.


இதனை வளர்ச்சி என்று எப்படிச் சொல்ல முடியும்.

பொருளாதாரத்துக்கு ஏற்ப வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளதா? இல்லை.

அமெரிக்காவின் தனிநபர் வருமானம் 89,195 டாலர்.

சீனாவில் தனிநபர் வருமானம் 13,687 டாலர்.

ஜெர்மனியில் தனிநபர் வருமானம் 55,911 டாலர்.

ஜப்பானில் தனிநபர் வருமானம் 56,999 டாலர்.

இந்தியாவில் தனிநபர் வருமானம் 2,878 டாலர். (நாட்டின் ஜி.டி.பி. அடிப்படையில் கணிக்கப்படுவது) மற்ற நாடுகளுக்கும் இந்தியாவுக்குமான வேறுபாடு மலையளவு இருக்கிறது.


மனித வளத்தை மேம்படுத்தாமல் அடையும் வளர்ச்சி நிலையானதாக இருக்க முடியாது. அனைத்தையும் தாங்கும், எதிர்கொள்ளும், போராடும் வலிமை மனித சக்திக்கே உள்ளது.


பொருளாதார வளர்ச்சி என்பது எண்களால் ஆனது அல்ல, எண்ணங்களால் ஆனது. எண்ணங்கள் பழுதுபட்டால், எண்கள் பழுதுபடும். அதனைத்தான் இன்று பா.ஜ.க. ஆட்சியில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தியா உலகின் முதல் பொருளாதார நாடாகக் கூட உயரும். அதற்கு ஒன்றிய பா.ஜ.க.ஆட்சியாளர்களின் எண்ணங்கள் மாற வேண்டும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

15000 கோடி வீட்டை காலி செய்ய