சிங்கப்பூரில்.......!

 அமெரிக்காவுக்கு பெரும் அழிவு காத்திருக்கிறது - காமேனி எச்சரிக்கை.

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளம் மீது தாக்குதல் நடத்தப்படும்.தாமதமின்றி உடனடியாக தாக்குதல் நடத்த இதுவே சரியான தருணம் - ஈரான் உச்ச தலைவர் காமேனியின் பிரதிநிதி எச்சரிக்கை.

“நீங்கள் தொடங்கியதை நாங்கள் முடித்து வைப்போம்”அமெரிக்காவின் தாக்குதலை தொடர்ந்து ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தகவல்.ஈரானின் மூன்று அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருந்தது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில், முன்னாள் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையிடம் விசாரணை நடத்த வேண்டும் என கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ரவி என்பவரால் மனுதாக்கல்செய்யப்பட்டுள்ளது.
ஜூன் 20, 2025 தேதியான இன்று சுங்க அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற அரியவகை விலகுகள் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, சுங்க அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்ர்றனர்.
சென்னை நுங்கம்பாக்கம் அருகே இருக்கக்கூடிய வள்ளுவர் கோட்டத்தில் (Valluvar Kottam) 80 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த பணிகள் நிறைவடைந்த நிலையில் ஜூன் 21 2025 தேதியான இன்று மாலை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் (TN CM MK Stalin) அதனை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கிறார். வள்ளுவர் கோட்டம் என்பது சென்னையின் ஒரு முக்கிய அடையாளமாகும். இந்த திருவள்ளுவரை நினைவாக இது 1974 முதல் 1976 ஆம் ஆண்டுகளில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியால் கட்டமைக்கப்பட்டது.
மாற்றுத் திறனாளிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 'சிங்கம் சிலை' பரிசாக வழங்கப்பட்டது!
ஈரான் மீதான தாக்குதல் (Attack On Iran) தொடர்ந்தால் இன்னும் பேரழிவு தரும் தாக்குதல் நடத்தப்படும் என்று அதன் அதிபர் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ஐ.நா (UN – United Nations) பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து ஈரான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.



சிங்கப்பூர் பறந்த ஓ.பன்னீர்.

ops airport

நாற்காலிக்கு வந்த குடைச்சல், உறவினர் வீட்டு ரெய்டு என்று அடுத்தடுத்த கவலைகளுடன் சிங்கப்பூர் பறந்திருக்கிறார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் ஓ.பன்னீர்செல்வத்தின் உறவினர் சுகுமார், துறைமுக கட்டுமானத்தில் மோசடி செய்ததாக துறைமுக அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் சென்னை சூளைமேடு பஜனை கோவில் தெருவில்  உள்ள சுகுமார் வீடு மற்றும் தேனாம்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு நடத்தி அதில் கிடைக்கப்பெற்ற ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

முன்னதாக ஓ.பன்னீர்செல்வத்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகரிடம் புகாரளித்திருந்தார் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மிலானி.  2021 சட்டமன்ற தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், 2024 நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரத்தில் சுயேட்சையாக பலாப்பழ சின்னத்தில் போட்டியிட்டார்.  அதிமுக இரட்டை இலை சின்னத்தில் நின்று வென்றவர் அந்த கட்சி வேட்பாளருக்கு எதிராகவே நின்று எம்.பி. தேர்தலில் போட்டியிட்டது  அரசியலமைப்புச் சட்டம் 10ஆவது அட்டவணை பிரிவு 2/1க்கு எதிரானது. ஆகவே, ஓ.பன்னீர்செல்வத்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகருக்கு புகார் அளித்திருக்கிறார். 

இதனால், முதல்வர், துணை முதல்வர், நிதி அமைச்சர் பொறுப்பு எல்லாம் வகித்து வந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு எம்.எல்.ஏ. பதவியும் இல்லாமல் போகும் நிலை வந்துவிட்டதா? என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கவலையில் இருந்தது.

அதிமுக சார்பில்  கொறடாவோ, நிர்வாகிகளோ புகாரளிக்கா விட்டாலும் கூட, தொகுதியைச் சேர்ந்தவர் புகார் அளித்திருப்பதால் இந்த புகார் குறித்து ஆய்வு செய்து பேரவை விதிப்படியும், சட்டப்படியும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார் சபாநாயகர் அப்பாவு.

ஆனாலும், அதிமுக அதிகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் இதுகுறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க முடியும் என்று தகவலும் பரவுகிறது.

பதவிக்கு வந்த திடீர் பங்கம், உறவினர் வீட்டு ரெய்டு என்று அடுத்தடுத்து தலைவலி அதிகமானதானோ என்னவோ தெரியவில்லை, மருத்துவர் பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்று சொல்லி ஒருவாரம் சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

15000 கோடி வீட்டை காலி செய்ய