ரமணா மருத்துவமனை

 *ஸ்ரீபெரும்புதூரில் 5 வயது சிறுவன் ஆரவ் குமார் (5-year-old boy Aarav Kumar) காணாமல் போனதால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு, சிறுவன் முட்புதரில் சடலமாக மீட்கப்பட்டார். முதலில் தவறி விழுந்து உயிரிழந்ததாக சந்தேகித்த போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், அசாமைச் சேர்ந்த போல்தேவ் (Boldev from Assam) என்பவர் சிறுவனை அழைத்துச் செல்வது பதிவாகி இருந்தது. விசாரணையில், ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் சிறுவனை கல்லால் அடித்து கொன்றதாக (Boy beaten to death with a stone) போல்தேவ் தெரிவித்துளார்.

*அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஞானசேகரன் யார், யாரிடம் பேசினார் என்பது தொடர்பான ஆதாரங்கள் இருப்பதாக கூறியது குறித்து தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
*ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கார் டயரில் சிக்கி கட்சி தொண்டர் ஒருவர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி வாகன பேரணியில் ஈடுபட்டிருந்த போது, இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
*சென்னை பெரம்பூர் பகுதியில் 10 வயது சிறுமி மீது லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யும் லாரிகள் இயக்கும் நேரத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகல் நேரத்தில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
*ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என நேற்று பரிந்துரைத்த பாகிஸ்தான், ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு தற்போது கண்டனம் தெரிவித்துள்ளது.இந்த தாக்குதல் அனைத்து சர்வதேச சட்டங்களுக்கும் எதிரானது. தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள ஈரானுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளது” என பாகிஸ்தான் அறிக்கை.
*அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய பங்காக உள்ள ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் நாடாளுமன்றம் அனுமதி.உலகம் முழுவதுக்குமான 20% கச்சா எண்ணெய் இந்த நீரிணை வழியேதான் பல்வேறு பகுதிகளுக்கு கப்பலில் கொண்டு செல்லப்படுவதால், கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.








ரமணா மருத்துவமனை

இறந்தவர் உடலை பெற்றுக்கொள்ள ரூ.2 லட்சம் பேரம் பேசிய தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டு, வாசலிலேயே இறுதிச்சடங்கு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாதுரை (56), அங்குள்ள தனியார் வங்கி ஒன்றில் தூய்மைப் பணியாளராக வேலைபார்த்து வந்தார். இவருக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர்.

 இந்நிலையில், அண்ணாதுரைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை விருதுநகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக உறவினர் சேர்த்துள்ளனர்.

அவரது நிலைமை மோசமாக இருந்ததால், சுமார் 14 நாள்கள் கழித்து மதுரையில் உள்ள வேறு மருத்துவமனைக்கு அவரை கொண்டு செல்லுமாறு அரசு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதனையடுத்து, மதுரை காளவாசல் அருகேயுள்ள, தனியார் மருத்துவமனையில் ஜுன் 12 (வியாழக்கிழமை) அன்று அண்ணாதுரை மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது சிகிச்சைக்காக ரூ.4 லட்சம் செலுத்த வேண்டும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மருத்துவமனையில் சேர்த்த மறுநாள், அதாவது ஜூன் 13-ஆம் தேதியே அண்ணாதுரை இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அவர் இறந்ததை மருத்துவர்கள் உறுதி செய்யும்வரை, மருத்துவக் கட்டணமாக 2 லட்சம் ரூபாய் செலுத்தியதாக அண்ணாதுரையின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மீதித் தொகையான ரூ.2 லட்சத்தை செலுத்திவிட்டு, அண்ணாதுரையின் உடலை பெற்றுக்கொள்ளும்படி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பணம் செலுத்தவில்லை என்றால், அண்ணாதுரையின் உடலை ஒப்படைக்க மாட்டோம் என்று மருத்துவமனை நிர்வாகம் கறாராக கூறவே, அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மருத்துவமனை முன் அண்ணாதுரை உடலை கேட்டு கதறி அழும் உறவினர்கள்

இறந்த அண்ணாதுரையின் உடலை மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைக்காத நிலையில், அவருக்கான இறுதிச்சடங்கை மருத்துவமனையின் வாசலிலேயே நடத்த உறவினர்கள் முடிவு செய்தனர். மேலும், மண் பானை, மலர் மாலைகள் வாங்கி வரப்பட்டு, மருத்துவமனையின் முகப்பு வாசலில் இறுதிச்சடங்கு செய்ய அண்ணாதுரையின் உறவினர்கள் ஆயத்தமாகினர். இதற்கு ஆதரவாக தமிழ் புலிகள் அமைப்பும் அண்ணாதுரையின் குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டது.

அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு, போராட்டத்தை நிறுத்தும்படி வலியுறுத்தியுள்ளனர். ஆனால், உடலை ஒப்படைக்க சம்மதம் தெரிவித்தால் மட்டுமே, இறுதிச்சடங்கு நிகழ்வுகள் கைவிடப்படும் என உறவினர்கள் கூறியுள்ளனர்.

தகவலறிந்த காளவாசல் காவல்துறையினர், மருத்துவமனை வந்து இருதரப்பினருக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இறுதியாக, மருத்துவமனை நிர்வாகம் அண்ணாதுரையின் உடலை ஒப்படைக்க சம்மதம் தெரிவித்ததோடு, பணம் ஏதும் செலுத்த தேவையில்லை எனவும் உறுதிமொழி அளித்தது. இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டு, அண்ணாதுரையின் உடல் இறுதிச்சடங்கு செய்வதற்காக அவரது சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது.


கலப்பட லட்டுக்கு

அரோகரா!

திருப்பதி லட்டு கலப்பட நெய் விவகாரம் ஒரு தீவிரமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதன் தற்போதைய நிலை குறித்த தகவல்கள் பின்வருமாறு:

 * புதிய திருப்பங்கள்: சமீபத்திய விசாரணைகளில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த "போலே பாபா" என்ற நிறுவனம், திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய்க்குப் பதிலாக ரசாயனம் கலந்த பாமாயிலை வழங்கியுள்ளது சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே கருப்புப் பட்டியலில் இருந்தபோதும், போலி ஆவணங்கள் மூலம் ஏ.ஆர். டெய்ரி மற்றும் வைஷ்ணவி டெய்ரி போன்ற மற்ற நிறுவனங்கள் மூலம் கலப்பட நெய்யை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

 * கைதுகள் மற்றும் வழக்குகள்: இந்த விவகாரத்தில் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜு ராஜசேகரன், போலே பாபா டெய்ரி இயக்குநர்கள் போமில் ஜெயின், விபின் ஜெயின், வைஷ்ணவி டெய்ரி தலைமை நிர்வாக அதிகாரி அபூர்வா வினயகாந்த் சாவடா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், சிபிஐ அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 * உயர் நீதிமன்ற உத்தரவு: திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்தின் உரிமத்தை நிறுத்தி வைத்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்துள்ளது. இது இந்த வழக்கில் ஒரு முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

 * தேவஸ்தானத்தின் நடவடிக்கைகள்: பக்தர்கள் மத்தியில் ஏற்பட்ட கவலைகளைப் போக்கும் வகையில், திருப்பதி தேவஸ்தானம் லட்டின் தரத்தை உறுதிப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கர்நாடகா கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சம்மேளனத்தின் "நந்தினி நெய்" மீண்டும் லட்டு தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது. தரமான நெய்யை கொள்முதல் செய்ய 4 பேர் கொண்ட நிபுணர் குழுவையும் தேவஸ்தானம் அமைத்துள்ளது.

 * அரசியல் குற்றச்சாட்டுகள்: இந்த விவகாரம் ஆந்திர அரசியலிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜகன் மோகன் ரெட்டி ஆட்சியில் திருமலையின் புனிதத்தைக் கெடுத்துவிட்டதாகவும், விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தி லட்டை அசுத்தப்படுத்திவிட்டதாகவும் தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.

துணைமுதல்வர் பவன் கல்யாண் இந்த புனிதம் கெட்ட விவகாரத்தில் அளவுக்கு அதிகதாகவே ஆர்ப்பாட்டம் செய்து பிரச்னையை வேறு திசைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்து அதில் தோல்வியடைந்தார்.கடைசியில் தமிழ்நாட்டை இலக்கு வைத்த தாக்குதல் உ.பிரதேசத்துக்கு மாறிவிட்டது.இப்போது அனைத்தையும் மூடிக்கொண்டனர் சங்கிகள்.

சுருக்கமாக, திருப்பதி லட்டு கலப்பட நெய் விவகாரம் இன்னும் விசாரணையில் உள்ளது. சிபிஐ, உயர் நீதிமன்றம் மற்றும் திருப்பதி தேவஸ்தானம் ஆகியவை இதில் ஈடுபட்டுள்ளன. பக்தர்கள் மத்தியில் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

15000 கோடி வீட்டை காலி செய்ய