கீழடியான் முகம்?

 "மொதல்ல கூட்டணி ஆட்சிதான். ஆனா  பழனிச்சாமியார்தான் முதல்வர்ன்னானுங்க."

"ஆமண்ணே."

"அடுத்து கூட்டணி ஆட்சிதான். ஆனா  அதிமுகலேர்ந்துதான் முதல்வர்னாங்க."

"அட ஆமண்ணே."

"இப்பக் கூட்டணி ஆட்சிதான். ஆனா முதலமைச்சர் யாருன்றதை பாராளுமன்றக் குழு முடிவு செய்யும்றானுங்க. தமிழ்நாடு முதலமைச்சரை எதுக்குயா பா.ஜ.க. பாராளுமன்றக் குழு முடிவு செய்யணும்?"

"ஐயய்யோ ஆமண்ணே!"

                                                      -சங்கர் ரமணி

ஒடிசா: பூரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரையின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர், 500-க்கும் மேற்பட்டோர்நெரிசலில் காயமடைந்தனர்.

இந்தியாவின் மொத்த வெளிநாட்டுக் கடன் 2025 மார்ச் இறுதியில் 73.630 கோடி டாலராக அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி .

என்டிஏ கூட்டண தமிழ்நாடு முதல்வர் வேட்பாளரை பாஜதான் முடிவு செய்யும்: எச்.ராஜா அதிரடி .














தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்வதை தவிர்க்கலாம் என்பது உண்மையா?


ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரைத் தவிர்க்கலாம் என்ற பழமொழியை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் உண்மையில் இந்த ஆப்பிள் பழம், நம் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறதா?

உலகம் ஆப்பிள்களை விரும்புகிறது. ஒவ்வொரு ஆண்டும், உலகளவில் கிட்டத்தட்ட 100 மில்லியன் டன் ஆப்பிள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பல்வேறு வண்ணங்கள் மற்றும் சுவைகளில் வரும் இந்தப் பழங்கள், மனிதர்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என்ற நற்பெயரை நீண்ட காலமாகவே கொண்டுள்ளன.


"ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரைத் தவிர்க்கலாம்" என்ற பிரபலமான சொற்றொடர், 1866ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு வேல்ஸ் (Wales) பழமொழியிலிருந்து உருவானது.


"உறங்கச் செல்லும் போது ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், அது மருத்துவரின் வருமானத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம்."

ஆனால் இந்த பழமொழியில் ஏதேனும் உண்மை இருக்கிறதா? மற்ற பழங்களை விட ஆப்பிள்கள் அதிக சத்தானவையா?


முதலில், ஆப்பிளில் உள்ள ஊட்டச்சத்துக்களைப் பற்றி பார்ப்போம். ஒன்று, அவை ஃபிளாவனால்கள் உள்ளிட்ட பைட்டோ கெமிக்கல்களின் வளமான மூலமாகும். இந்த சேர்மங்கள் ஆரோக்கியமான எடையை பராமரித்தல் மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைத்தல் போன்ற பல ஆரோக்கிய நன்மைகளுடன் தொடர்புடையவை.

கூடுதலாக, ஆப்பிளில் அந்தோசயினின்ஸ் போன்ற பல்வேறு பாலிஃபினால்கள் உள்ளன, அவை சில வகை ஆப்பிள்களின் சிவப்பு நிறத்திற்கு பங்களிக்கின்றன மற்றும் இவை இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன.


ஆப்பிளில் நாம் காணக்கூடிய மற்றொரு பாலிஃபினால், ஃபுளோரிட்சன் ஆகும். இது ரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த உதவுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.


விஞ்ஞானிகள் ஆப்பிள் சாப்பிடுவதை பரிந்துரைக்க முக்கிய காரணம் அவை மிகவும் பரவலாகக் கிடைப்பதால்.

ஆப்பிள்களில் நிறைய நார்ச்சத்து உள்ளது, பெரும்பாலும் பெக்டின். இது நமது ரத்தத்தில் உள்ள குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டின்களின் (LDLs- இவை ஆரோக்கியமற்ற கொழுப்பின் வடிவமாகும்) அளவைக் குறைக்கிறது.


பெக்டின்- உணவில் இருந்து நாம் உறிஞ்சும் சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவையும் குறைத்து, நமது ரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்த உதவுகிறது.

ஆப்பிளில் உள்ள இந்த ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதாகத் தெரிகிறது. 2017இல் ஐந்து ஆய்வுகளை மதிப்பாய்வு செய்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.

அதன்படி, ஆப்பிள் சாப்பிடுவதால் டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு 18% குறைகிறது.


18 ஆய்வுகளை பகுப்பாய்வு செய்த 2022இன் மற்றொரு மதிப்பாய்வு, அதிக ஆப்பிள்களை சாப்பிடுவது அல்லது ஆப்பிள் சாறு போன்ற ஆப்பிளில் இருந்து பெறப்பட்டவற்றை எடுத்துக்கொள்வது (நீங்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக இந்தப் பழக்கத்தைத் தொடர்ந்தால்) கொழுப்பைக் குறைக்கும் என்று கண்டறிந்துள்ளது.


ஆப்பிளில் பைட்டோ கெமிக்கல்கள் எனப்படும் உயிரியல் ரீதியாகச் செயல்படும் சேர்மங்கள் இருப்பதால், சமச்சீரான உணவை உட்கொள்வது புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை 40% வரை குறைக்கும்.

சில ஆய்வுகளில் ஆப்பிள் சாப்பிடுவது சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைப்பதாகக் கூட தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆப்பிள்களை தவறாமல் சாப்பிடுவது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுடன் தொடர்புடையதாகத் தெரிகிறது. மேலும் அவை ஆரோக்கியமான சேர்மங்களால் நிரம்பியுள்ளன என்பதை நாம் அறிவோம். ஆனால், குறிப்பாக மருத்துவரைத் தவிர்ப்பது என்ற விஷயத்தில், மற்ற தாவர அடிப்படையிலான உணவுகளை விட ஆப்பிள்கள் அதிக பயனுள்ளவையாக இருக்குமா?


"ஆப்பிள்களில் வைட்டமின் சி அதிகம் இல்லை, அவற்றில் இரும்புச்சத்து அல்லது கால்சியம் இல்லை. ஆனால் அவற்றில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் உடலுக்கு அற்புதமான விஷயங்களைச் செய்யும் பல பொருட்கள் உள்ளன," என்கிறார் அமெரிக்காவின் மிடில் டென்னசி மாகாண பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து மற்றும் உணவு அறிவியல் துறை பேராசிரியர் ஜேனட் கோல்சன்.


இத்தாலியில் உள்ள வெரோனா பல்கலைக்கழகத்தின் தாவர உயிரியலின் இணைப் பேராசிரியர் ஃபிளாவியா குஸ்ஸோ, "பல பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள பொதுவான சேர்மங்கள் ஆப்பிள்களிலும் உள்ளன, அவற்றில் பயனுள்ள பாலிஃபினால்களும் அடங்கும்." என்கிறார்.


பாலிஃபினால்கள் வலுவான ஆக்ஸிஜனேற்ற (Antioxidant) மூலக்கூறுகள். ஃப்ரீ ரேடிக்கல்கள் எனப்படும் செல்களை சேதப்படுத்தும் திறன் கொண்ட மிகவும் வினைத்திறன் மிக்க ஆக்ஸிஜன் மூலக்கூறுகளை சமநிலைப்படுத்த இவை உதவுகின்றன.


ஃப்ரீ ரேடிக்கல்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம், புற்றுநோய் மற்றும் இதய நோய் உள்ளிட்ட நாள்பட்ட அழற்சி தொடர்பான பாதிப்புகள் ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கலாம்.

சில ஆராய்ச்சியாளர்கள், "மிக உயர்ந்த ஆக்ஸிஜனேற்ற சக்தியைக் கொண்ட பழங்கள் என்ற பட்டியலில் ஆப்பிள்கள் இரண்டாவது இடத்தில் உள்ளன" என்று கூறுகின்றனர்.

ஆப்பிள்களில் பாலிஃபினால் ஃபுளோரிட்சன் உள்ளது, இது நாம் பொதுவாக எடுத்துக்கொள்ளும் மற்ற பழங்களில் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. பெக்டினைப் போலவே, ஃபுளோரிட்சனும் உணவில் இருந்து நம் ரத்தத்தில் உறிஞ்சப்படும் சர்க்கரையின் அளவைக் குறைப்பதாகத் தெரிகிறது.


ஆப்பிள்கள் ஃபீனாலிக் சேர்மங்களின் நல்ல மூலமாகும், அவை பைட்டோ கெமிக்கலின் மற்றொரு வடிவமாகும். அமெரிக்காவில் வசிக்கும் மக்கள் தங்கள் மொத்த ஃபீனாலிக் உட்கொள்ளலில் ஐந்தில் ஒரு பங்கை ஆப்பிள்கள் மூலம் பெறுகிறார்கள் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.


ஆப்பிள் ஃபீனாலிக் சேர்மங்கள் இதய நோய், புற்றுநோய், ஆஸ்துமா, நீரிழிவு மற்றும் உடல் பருமன் ஆகியவற்றின் குறைந்த அபாயத்துடன் தொடர்புடையவை என்று ஆராய்ச்சி கூறுகிறது.


ஆனால், சில விஞ்ஞானிகள் மற்ற பழங்களை விட ஆப்பிள்களை பரிந்துரைக்க, சக்திவாய்ந்த பாலிஃபினால்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் மட்டுமே காரணமல்ல.

பல ஆய்வுக் கட்டுரைகளில், ஆப்பிள் சாப்பிடுவதை பரிந்துரைக்க முக்கிய காரணம் அவை மிகவும் பரவலாகக் கிடைப்பதால். அதாவது ஒப்பீட்டளவில், அவற்றைத் தொடர்ந்து சாப்பிடுவது என்பது பலருக்கு அடையக்கூடிய ஒரு இலக்காக இருக்கும்.


தினமும் ஆப்பிள் சாப்பிடுபவர்கள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை சார்ந்திருப்பது குறைவு.

ஆப்பிள்கள், நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டது என்பது தெளிவாகிறது. ஆனால் தினமும் ஒன்று சாப்பிடுவது 'மருத்துவரிடம் செல்வதைத் தடுக்கும்' என்று சொல்வது மிகப்பெரிய கூற்றாகும்.


2015ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, இந்தக் கேள்வியையே பிரதானமாக எடுத்துக் கொண்டது. ஆராய்ச்சியாளர்கள் கிட்டத்தட்ட 9,000 பேரிடம் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பை பகுப்பாய்வு செய்தனர்.

அதில் பங்கேற்றவர்கள், ஒரு நாளில் அவர்கள் என்ன சாப்பிட்டார்கள் என்பதைக் குறிப்பிட்டனர், இது அவர்களின் வழக்கமான தினசரி உணவு முறையை குறிப்பதாகக் கூறினர்.


ஆப்பிள் சாப்பிடாதவர்களுடன் ஒப்பிடும்போது, ஆப்பிள் சாப்பிடுபவர்களுக்கு மருத்துவரிடம் செல்வதற்கான வாய்ப்புகள் குறைவு என அந்த பகுப்பாய்வில் கண்டறியப்பட்டது.

இருப்பினும், ஆப்பிள்களை உணவு முறையில் சேர்த்துக்கொள்பவர்கள் கல்வியறிவு பெற்றவர்களாகவும், அவர்களுக்கு புகைபிடிக்கும் பழக்கம் குறைவாகவும் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் இந்த முடிவு, புள்ளிவிவர ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை.

"முக்கிய கண்டுபிடிப்பு என்னவென்றால், தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுபவர்களுக்கும், மருத்துவரை சந்திப்பதற்கான வாய்ப்புக்கும் இடையே அதிக தொடர்புகள் இல்லை. ஏனெனில் இது சிக்கலான ஒரு விஷயம்" என்கிறார் முன்னணி ஆராய்ச்சியாளர் மேத்யூ டேவிஸ்.

இவர், அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள டார்ட்மவுத் கீசல் மருத்துவப் கல்லூரியின் தொற்றுநோயியல் இணைப் பேராசிரியராக உள்ளார்.


"எங்கள் பகுப்பாய்வுகளின் அடிப்படையில், ஆப்பிள்களை உட்கொள்பவர்கள் பொதுவாக ஆரோக்கியமானவர்கள்." என்கிறார் மேத்யூ டேவிஸ்.

ஆனால், தினமும் ஆப்பிள் சாப்பிடுபவர்கள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை சார்ந்திருப்பது குறைவு என்பதையும் அவர்கள் கண்டறிந்தனர். மேலும் ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிடுபவர்களுக்கும் சாப்பிடாதவர்களுக்கும் இடையிலான சமூகப்-பொருளாதார வேறுபாடுகளை சரிசெய்தபோது, இது இன்னும் ஒரு குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பாக இருந்தது.


எனவே, "ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் என்பது, மருந்தாளரை (Pharmacist) தவிர்க்க உதவுகிறது" என்பது மிகவும் பொருத்தமான கூற்று என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.


அது முழு ஆப்பிளாக இருக்க வேண்டிய அவசியமில்லை - ஆப்பிள் சாறு கூட ஆரோக்கியமானது தான்.

ஆனால் டேவிஸுக்கு "ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள்" என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளன. மேலும் தினசரி ஆப்பிள் நுகர்வுக்கும் மருத்துவரிடம் செல்வதற்கும் இடையேயான தொடர்பை, அவரும் அவரது குழுவும் கண்டுபிடிக்காததற்கு மற்றொரு காரணமும் இருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.


"நீங்கள் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது மட்டுமே மருத்துவரைப் பார்க்கிறீர்கள் என்பது அடிப்படையான அனுமானம். ஆனால் மக்கள் வருடாந்திர பரிசோதனைகள் மற்றும் நோய் தடுப்பு போன்ற பிற விஷயங்களுக்காக மருத்துவரைப் பார்க்கிறார்கள்," என்று அவர் கூறுகிறார்.


இதனால்தான் டேவிஸ் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய தரவுகளையும் பகுப்பாய்வு செய்தார்.


"இது ஆப்பிள் சாப்பிடுவது நாள்பட்ட நோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கிறது என்பதை உணர்த்துகிறது." என்று அவர் கூறுகிறார்.


ஆனால் இறுதியில், மருத்துவரைத் தவிர்க்க ஆப்பிள்கள் மட்டும் போதாது என்றும், ஒட்டுமொத்தமாக ஒரு ஆரோக்கியமான உணவு முறையைப் பின்பற்றுவதுதான் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் விஷயம் என்றும் அவர் கூறுகிறார்.

"உண்மையில், இதுதான் அந்தப் பழமொழியின் நோக்கமாக இருக்கும்" என்கிறார்.


"ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள்" என்ற சொற்றொடர் தாவர அடிப்படையிலான உணவுகளை தவறாமல் சாப்பிடுவதைக் குறிக்கிறது என்பதை கோல்சன் ஒப்புக்கொள்கிறார்.


ஆப்பிள்கள் ஒரு நல்ல உதாரணம், ஏனெனில் அவை மிகவும் எளிதில் கிடைக்கின்றன, மலிவு விலையில் உள்ளன, சீக்கிரம் கெட்டுபோகாதவை.

பிற ஆய்வுகள் தினமும் ஆப்பிள் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளைக் கண்டறிந்துள்ளன, ஆனால் ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஆப்பிள்களை உட்கொள்ளும்போது மட்டுமே.

                                          - பி.பி.சி.தமிழோசை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

15000 கோடி வீட்டை காலி செய்ய