கீழடி'க் காலத் தமிழர்கள்!
இந்தித் திணிப்புக்கு எதிராக மும்பையில் ஜூலை 5ம் தேதி பிரமாண்ட பேரணி நடத்தப்படும் என உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே ஆகியோர் கூட்டாக அறிவித்திருந்த நிலையில் நடவடிக்கை.மகாராஷ்டிராவில் 1 முதல் 5ம் வகுப்பு வரை 3வது மொழியாக இந்தி கற்பிக்கப்படும் என்ற தீர்மானத்தை திரும்பப் பெற்றது மாநில பாஜக அரசு.


இந்தியாவில் ரீல்ஸ் மோகம் வெறிபிடித்தாற்போல் அதிகரித்து வருகிறது. அதில் வரும் லைக்ஸ் ஷேருக்காக எந்த எல்லைக்கும் செல்ல பலர் தயாராக உள்ளனர். தங்கள் உயிரை பற்றி கவலைப் படாமல் ரீல்ஸ் எடுத்து உயிரை பலர் இழந்து லைக்'கைப் பார்க்காமலேயே போய் விட்டார்கள்.
ஆனால் ரீல்ஸ்'க்காக லைக்'குக்காக பிறர் உயிரைப் பறிக்குமளவு சிலர் துணிந்து விட்டனர்.
ரீல்ஸ்களை உருவாக்குவதற்காக, ஒரு இளைஞரை கொடூரமாக கொன்று, அவரிடமிருந்த ஐபோனை இரண்டு சிறுவர்கள் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் அதற்கு மறுநாளே அவர் காணாமல் போனதாக உறவினர்கள் தேஹாட் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
உடனடியாக விசாரணையைத் தொடங்கிய போலீசார், காணாமல் போன ஷதாப்பின் உடலை கிராமத்திற்கு வெளியே உள்ள ஒரு கொய்யாத் தோட்டத்தில் உள்ள ஒரு பாழடைந்த குழாய் கிணற்றுக்கு அருகில் கண்டுபிடித்தனர்.
அப்போது கழுத்து அறுக்கப்பட்டு, கல்லால் தலை நசுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையே தொடர்ந்து விசாரித்து வந்த போலீசார் சந்தேகத்தின் பேரில், அதே ஊரைச் சேர்ந்த 14 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுவர்களை கடந்த 16ஆம் தேதி அழைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது இருவரும் தாங்கள் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
அவர்கள் கடந்த 20ஆம் தேதி இரவு, ரீல்ஸ் உருவாக்குவதாகக் கூறி ஷதாப்பை கிராமத்திற்கு வெளியே உள்ள ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்துச் சென்றதும், அங்கு அவரைத் தாக்கி, கழுத்தை அறுத்து, பின்னர் அவரது தலையை ஒரு செங்கலால் அடித்து நசுக்கி கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து சிறுவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதுதொடர்பாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராமானந்த் பிரசாத் குஷ்வாஹா நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த கொலையை சிறுவர்கள் நான்கு நாட்களுக்கு முன்பாகவே திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளனர்.
பாரதிய நியாய் சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவுகள் 103(1) (கொலை) மற்றும் 238 (ஆதாரங்களை மறைத்தல்) ஆகியவற்றின் கீழ் இரண்டு மைனர் குற்றவாளிகள் மற்றும் அவர்களுக்கு உதவிய குடும்ப உறுப்பினர்கள் உட்பட நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
உறவினர்களில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்னொருவரை தேடி வருகிறோம்” என்றார்.
தற்போது கைதான இரண்டு சிறுவர்களும் தற்போது கோண்டாவில் உள்ள சிறார் சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கீழடி'க் காலத் தமிழர்கள்!
தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை கீழடி அகழாய்வுத் தளத்தில் 2018-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து தற்போது வரை ஐந்து கட்டங்களாக அகழாய்வு மேற்கொண்டு வருகிறது. தமிழர்களின் பண்பாட்டின் முக்கியத்துவம் மற்றும் தொன்மையை நிரூபிக்கவும், அதை உலகளவில் கொண்டு செல்லவும் தொல்லியல் துறை உலகப் புகழ்பெற்ற அறிவியல் ஆய்வகங்களுக்கு கீழடியில் கண்டெடுக்கப்பட்ட முக்கியமான கண்டுபிடிப்புகளை அனுப்பி அதிகாரபூர்வமான முடிவுகளைப் பெற்றுள்ளது.
கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட மாதிரிகளின் அறிவியல் காலக்கணிப்பு கி.மு. ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வைகை ஆற்றங்கரையில் நகரமயமாக்கல் இருந்ததை உறுதிப்படுத்தியது. மேலும், கங்கைச் சமவெளியின் நகரமயமாக்கலுக்கு சமகாலமானது என்பதையும் உறுதிபடுத்தியுள்ளது. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தமிழ்ச் சமூகம் கல்வியறிவும் எழுத்தறிவும் பெற்றிருந்தனர் என்பதை அறிவியல் அடிப்படையில் நிலைநிறுத்தியுள்ளது.
கீழடி அகழாய்வில் 1000-க்கும் மேற்பட்ட குறியீடுகளும், 60-க்கும் மேற்பட்ட தமிழி எழுத்துப் பொறிப்புக் கொண்ட பானை ஓடுகளும் கண்டெக்கப்பட்டுள்ளன. இப்பானை ஓடுகளில் குவிரன் ஆதன், ஆதன் போன்ற தனிநபர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளதன் வாயிலாக சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரும் கல்வியறிவு பெற்றிருந்தனர் என்பதை வெளிப்படுகிறது.

தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தரவுகள் மற்றும் மற்றும் கண்டுபிடிப்புகளின் வாயிலாக வைகை ஆற்றங்கரையில் வாழ்ந்த தமிழ்ச் சமூகமானது வேளாண்மை மூலம் பொருளாதாரத்தினை உயர்த்திக் கொண்டனர், மட்கலன்கள், இரும்பு, நெசவு, மணிகள், சங்கு வளையல்கள் ஆகிய தொழில்களை மேற்கொண்டிருந்தனர் என்பதும் அகழாய்வுச் சான்றுகள் மூலம் அறிகிறோம்.
மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் பகுதிகளில் கிடைக்கப்பெறுகின்ற மூலக்கற்களைக் கொண்டு சூதுபவள மணிகள், அகேட் போன்ற கல்மணிகள் செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பைக் காட்டுகின்றனது.
அதுபோல, கங்கைச் சமவெளியைச் சார்ந்த கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முந்தைய வெள்ளி முத்திரைக் காசுகள் கிடைப்பதின் மூலம் கங்கைச் சமவெளியுடன் வணிகப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதை உறுதிசெய்ய முடிகிறது.
இந்நிலையில், மதுரையில் இருந்து 12 கி.மீ தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கீழடியில் கிடைத்த மண்டை ஓடுகளை வைத்து, 2,500 ஆண்டுகளுக்கு முன்பு கீழடி பகுதியில் வாழ்ந்த இருவரின் முகங்களை 3D செயல்முறையில் வடிவமைத்துள்ளது இங்கிலாந்தின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம்.
தமிழரின் தொன்மை ஆராய்ச்சியில், ஓர் முக்கிய நகர்வாக இந்த வடிவமைப்பு அமைந்துள்ளது. இந்நிலையில், கீழடி ஆராய்ச்சியை விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு முற்பட்டுள்ளது.
காரணம், தமிழர்களின் பெருமையான கீழடியின் 110 ஏக்கர் பரப்பளவில், வெறும் 4% இடங்களை மட்டுமே தொல்லியல் துறையினர் ஆராய்ச்சி செய்துள்ளனர். இதில் கிடைத்த 1,000க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள், தமிழர்கள் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே செழுமையுடன் வாழ்ந்ததை உறுதி செய்கின்றன.
ஆகையால், தமிழ்நாடு அரசு கூடுதலான ஆராய்ச்சியில் ஈடுபட்டு, கீழடியின் சாலை அமைப்பையும், ஊரின் கட்டமைப்பையும் கண்டறிய திட்டமிட்டுள்ளது. அறிவியல் ஏந்துகளின் உதவியோடு, சங்ககாலத் தமிழ் மக்களின் வாழ்வியல் கட்டமைப்பை மீண்டும் வெளிக்கொண்டுவர முயற்சிப்பதாகவும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.