வளரும் அதிமுக கூட்டணி?
விழுப்புரம் மாவட்டம் வளத்தி பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனைகணக்கில் வராத ரூ.2.17 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கேரள ஆளுநர் மாளிகை நடத்தும் நிகழ்ச்சிகளில் தேசியக் கொடி, இலச்சினை மட்டுமே பயன்படுத்துவதை ஆளுநர் உறுதி செய்ய வேண்டும் என மாநில அரசு கடிதம்சமீபத்தில் ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் RSS-ன் பாரத மாதா புகைப்படம் இருந்ததால், அமைச்சர் நிகழ்ச்சியை புறக்கணித்து வெளியேறியது பரபரப்பானது.

வளரும் அதிமுக கூட்டணி?
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒருபோதும் சேரமாட்டோம் என மீண்டும் தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது.
இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முதல் நயினார் நாகேந்திரன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக இணையும் என நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
புதுக்கோட்டையில் நேற்று (ஜூன் 27) செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ”அதிமுக – பாஜக கூட்டணியில் தவெக இணைவதற்கு சாத்தியங்கள் உள்ளன, விவாதங்கள் நடந்து வருகின்றன. அது எப்படி முடியும் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்” என்றார்.
கடந்த மாதம் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, ஆளும் திமுகவை “மக்கள் விரோத” கட்சியாக விஜய் கருதுவதாகவும், திமுகவை எதிர்க்கும் ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகள் ஒன்றிணையும் எனவும் கூறியிருந்தார்.
அதே போன்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும், தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக இணையும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் தவெக செய்தித் தொடர்பாளர் எஸ். வீர விக்னேஷ்வரன் அளித்த பேட்டியில், “தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் தவெக தரப்பில் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை.
ஏற்கெனவே கடந்த ஆண்டு விக்கிரவாண்டியில் நடந்த தவெக முதல் மாநில மாநாட்டில், கட்சித் தலைவர் விஜய், திமுகவை அரசியல் எதிரி என்றும் பாஜகவை கருத்தியல் எதிரி என்றும் தெளிவாக தெரிவித்தார். பாஜக பிளவுபடுத்தும் அரசியலில் ஈடுபட்டுள்ள ஒரு மதவெறி சக்தி. எனவே தவெக ஒருபோதும் பாஜகவுடன் இணையாது” என அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே வரும் ஜூலை 4ஆம் தேதி தவெக மாநில அளவிலான செயற்குழு கூட்டம் பனையூரில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெற உள்ளது.
அதில் கட்சியின் கட்டமைப்பை மேம்படுத்துதல், பூத் முகவர்களுக்கான மண்டல அளவிலான பயிற்சித் திட்டங்களை மீண்டும் தொடங்குதல் மற்றும் விஜய்யின் மாநிலம் தழுவிய சுற்றுப்பயணம் உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்எனஎதிர்பார்க்கப்படுகிறது.