திராணி உள்ளதா?

 முருக பக்த மாநாடை நடத்தி முதல்வருக்கு சவால் விட்ட காடேசுவரா மாநாடு வரவு செலவை வருமானவரித்துறை,முருக பக்த கோடிகளுக்கு காண்பிப்பாரா?

இதைச் சவாலாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும்!

முருகன் அருளைப் பெற இந்து மக்கள் கட்சியின் தலைவர் காடேஸ்வரா அழைக்கிறார்” என்று ஊரெங்கும் விளம்பரம் செய்திருந்தது பா.ஜ.க.வின் ஃபேக் ஐ.டி. ஆம்.. பா.ஜ.க. தன் உதிரி பாகங்களைக் கொண்டு மதுரையில் நடத்திய முருக பக்தர்கள் மாநாட்டிற்குத்தான் இப்படியொரு விளம்பரம்.


தமிழ்நாட்டில் முருகனுக்கு அறுபடை வீடு என திருத்தலங்கள் உள்ளன. முருகனை வழிபடும் தமிழ் பக்தர்கள் அங்கே சென்று தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார்கள்.


அவர்கள் நேரடியாக முருகனின் அருளைப் பெறுகிறார்களே தவிர, யாரும் எந்தக் கட்சியின் தலைவர் தயவிலும் முருகனை அருளைப் பெற வேண்டிய அவசியம் தமிழ்நாட்டில் இல்லை. தமிழக் கடவுளான முருகனும் தனக்காக காடேஸ்வரா போன்ற புரோக்கர்களை ஒரு போதும் நியமிப்பதில்லை.


தமிழ்நாட்டில் எந்த வகையிலும் வெற்றி பெற முடியாது என்பதை தெரிந்து கொண்ட பா.ஜ.க., மீண்டும் அ.தி.மு.க தோளில் ஏறி, அதைவிடத் தன்னை உயரமாகக் காட்டிக் கொள்ளும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறது.

அதற்காக, தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டு கோமாளித்தனம் செய்த அண்ணாமலையை மாநிலக் கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, அ.தி.மு.க.விலிருந்து பா.ஜ.க.வுக்கு வந்த நயினார் நாகேந்திரனை கட்சியின் மாநிலத் தலைவராக்கியது.

நயினார் நாகேந்திரனும் யோக்கியரல்ல. நாடாளுமன்றத் தேர்தலின் போது கட்டுக் கட்டாக கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை பரிமாற்றம் செய்வதில் நேரடியாக சிக்கியவர். அ.தி.மு.க.வின் அமைச்சராக இருந்தபோது பல சர்ச்சைகளுக்குள்ளானவர்.


பா.ஜ.க.வைப் பொறுத்தவரை, அவர்களுக்கு எதிரான கட்சியில் இருந்தால் ஊழல்வாதிகள். அதே ஊழல்வாதிகள் பா.ஜ.க.வில் சேர்ந்தவிட்டால் அவர்கள் பா.ஜ.க தலைமை என்கிற வாஷிங் மிஷினால் சுத்தம் செய்யப்பட்டு, புனிதர்களாகிவிடுவார்கள். மராட்டிய மாநிலம் தொடங்கி தமிழ்நாடு வரை பா.ஜ.க.வின் லட்சணம் இதுதான்.


ஊரறிந்த ரகசியம் இதுவென்றாலும், இந்த வாஷிங் மெஷின் டெக்னிக்கும் தமிழ்நாட்டில் எடுபடவில்லை. காரணம், தமிழர்களின் முழுமையான எதிரியாக இருக்கின்ற ஒரே இயக்கம் பா.ஜ.க. மட்டும்தான்.


தமிழ்நாட்டுக்குரிய நிதியை மத்திய பா.ஜ.க. அரசு முழுமையாக ஒதுக்கீடு செய்யவே செய்யாது. பா.ஜ.க.விடம் அடிமையாகிவிட்ட அ.தி.மு.க ஆட்சியிலும் அதுதான் நடந்தது. பா.ஜ.க.வை கடுமையாக எதிர்த்து, இந்திய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிரான கூட்டணியை உருவாக்கிய தி.மு.க ஆட்சியிலும் அதே நிலைமைதான்.

ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டிற்கென்று தனித்துவமான எந்தத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை.

அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை ஒற்றை செங்கல்லுடன்தான் நிற்கிறது. ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் வரைபடம் வெளியாகிறதே தவிர, கட்டடம் கட்டியபாடில்லை.


தமிழ்நாட்டு மக்கள் அனைவருமே பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தங்கள் மாநிலம் வஞ்சிக்கப்படுவதை உணர்ந்தே இருக்கிறார்கள். அதற்கான அண்மைக்கால உதாரணம், கீழடி அகழாய்வு அறிக்கைறை பா.ஜ.க. அரசு ஏற்க மறுத்த தமிழ் விரோதப் போக்கு சாட்சியாக இருக்கிறது.


இதையெல்லாம் திசை திருப்புவதற்கான முருகன் பக்தர்கள் மாநாடு என்ற பெயரில் மதுரையில் அரசியல் விளையாட்டை நடத்தத் திட்டமிட்ட பா.ஜ.க., அதை தனது உதிரி பாகங்கள் மூலமாக நிறைவேற்ற முடிவு செய்தது.


திருப்பரங்குன்றத்தில் பல நூறு ஆண்டுகளாக உள்ள தர்காவை வைத்து பா.ஜ.க. அண்மையில் நடத்திய வன்முறை அரசியலை நன்கறிந்து தமிழ்நாட்டின் உண்மையான பக்தர்கள், பா.ஜ.க.வின் திடீர் குபீர் முருக பக்தியைக் கண்டு அச்சமும் சந்தேகமும் கொண்டார்கள். காரணம், இதுவரை டெல்லியிலோ, உத்தரபிரதேசத்திலோ பா.ஜ.க ஆளும் மற்ற மாநிலங்களிலோ முருக வழிபாட்டை பா.ஜ.க. இதுவரை முன்னெடுத்ததில்லை.


அங்கெல்லாம் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டு, சிறுபான்மையினரை அச்சுறுத்துவதுதான் பா.ஜ.க.வின் வேலை. தமிழ்நாட்டில் ஜெய்ஸ்ரீராம் எடுபடாது என்பதால் முருகனி வேலைத் தூக்கி அரசியல் செய்பவர்கள்தான் பா.ஜ.க.வினர்.

முருக பக்தர்கள் மாநாடு அனுமதி தொடர்பான வழக்கின்போது, மாநாட்டில் அரசியல் இருக்காது என்று உயர்நீதிமன்றத்தில் பா.ஜ.க.வின் உதிரிபாகங்கள் உத்தவராதம் தந்தன.

மாநில பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரனும் இது அரசியல் மாநாடல்ல என்றார். ஆனால், ஜூன் 22 அன்று மதுரையில் நடந்த முருகன் மாநாட்டில், அருள்மிகு முருகனுக்கு எந்தத் தொடர்பும் இல்லாத பகல்ஹாம் தாக்குதல் பற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


மோடி அரசுக்கு ஆதரவான தேர்தல் வியூகத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதுடன், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறைக்கு எதிரானத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.முருக பக்த மாநாடுக்கும் மோடி ஆட்சிக்கும் என்ன தொடர்பு.?


மாநாட்டில் பெரியார்,அண்ணாவைஅவர்கள் கொள்கைகளை விமர்சித்து காணொலி ஙெளியிட்டிருக்கிறார்கள் அதிமுக முன்னால்கள் ஏதோ அண்ணா,பெரியார்,திராவிடம் போன்றவைகளுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லாதவர்கள் போல்,உணர்ச்சி இல்லா மரக்கட்டைகள் போல் ரசித்துப் பார்த்திருகர்கிறார்கள்


கடவுளை வைத்து பச்சையாக அரசியல் செய்து நீதிமன்றத்தை அவமதித்துள்ளது பா.ஜ.க.


இந்து முன்னணி பெயரில் நடந்தது.இதற்கான செலவீடான 200கோடிகள் வந்த வழியை ஆதாரங்களுடன் சொல்ல வேண்டும்?


விவசாயிகள் இருவர் வாங்கிய கோமணங்களுக்கே நோட்டீஸ் அனுப்பி,பத்து ரூபாய் அதிகம் வாங்கிய டாஸ்மாக் ஊழியர்கள் மீதான குற்றசாட்டுக்கு பத்தாயிரம் கோடிகள் ஊழல் என்று டாஸ்மாக் தலைமை அலுவலத்தை குடைந்த அமுலாக்கத்துறை

இந்து முன்னணி அலுவலகத்தை கண்டிப்பாக ஆய்வு செய்ய வேண்டும்!

செய்யத் திராணி உள்ளதா?

 

தான் செய்வது

தற்குறி அரசியல்?

ரசியல் கள நிலவரம் முழுமையாகப் புரிந்ததால் தனது முடிவை மாற்றிக் கொண்டிருக்கிறார் தவெக தலைவர் விஜய். ’ஜனநாயகன்’ படம்தான் திரையுலகில் தனது கடைசிப்படம் என்று சொன்னவர், இப்போது அந்த முடிவில் இருந்து பின் வாங்கியிருக்கிறார்.  

தவெக துவங்கி கட்சியின் பொறுப்பாளர்களை நியமித்து வரும் விஜய், கட்சி தொடர்பான முழு நேர அரசியலில் இன்னும் அவர் ஈடுபடவில்லை.  குறிப்பாக கள அரசியலுக்கு இன்னும் அவர் வரவில்லை.

  தான் நடித்து வரும் ஜன நாயகன் படத்திற்கு பிறகு கள அரசியலுக்கு விஜய் வரப்போவதாக அவரது தவெக நிர்வாகிகள் சொல்லி வருகின்றனர்.

2026 சட்டமன்ற தேர்தலில் தவெக தலைமையில் கூட்டணி அமைத்து முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்துவிடலாம் என்றுதான் முதலில் கணக்குப்போட்டுப் பார்த்தார் விஜய்.  இதற்காக ஆட்சியில் – அதிகாரத்தில் பங்கு என்றெல்லாம் விளம்பரம் செய்து பார்த்தும் பலனில்லை. 

 உடனே, அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து ஆந்திராவில் பவன் கல்யாண் துணை முதல்வர் ஆனதுமாதிரி தானும் துணை முதல்வர் ஆகிவிடலாம் என்று நினைத்தாலும் கூட்டணி பேச்சுவார்த்தையில் இதுவரையிலும் உடன்பாடு எட்டவில்லை.

இந்த அதிருப்தியில் இருக்கும் விஜய்க்கு,  கள ஆய்வு ஒன்று அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.  25% வாக்குகள் தவெகவுக்கு உண்டு என்று பிரசாந்த் கிஷோர் கொளுத்திப்போட்டு போனது எல்லாம் பொய் என்று அந்த  ரிப்போர்ட் சொல்லி இருக்கிறது.   இதில் பெரிதும் அப்செட் ஆன விஜய்,  வந்திருக்கும் கள ஆய்வு முடிவுகள் மாதிரியே 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் தவெகவுக்கு சாதகமாக அமையாமல் போனால் மீண்டும் சினிமாவில் எண்ட்ரி கொடுக்க ஆரம்பித்து விடலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்.

மக்களுக்காக உழைக்க, உச்ச இடத்தை விட்டு, உயர்ந்த சம்பளத்தை விட்டு அரசியலுக்கு வந்ததாகச் சொன்ன விஜய், இப்போது திடீரென்று முடிவை மாற்றிக்கொள்ள தனியார் அமைப்பு மூலம் விஜய் எடுத்த சர்வே முடிவுகள்தான் காரணம் என்கிறது பனையூர் வட்டாரம். 

இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் அமைப்பின் கருத்துக்கணிப்பும் கூட தனக்கு சாதகமாக இல்லை என்பதை தெரிந்துகொண்டார் விஜய். 

உதயநிதிக்குப் பின்னால் இருந்தால் கூட பரவாயில்லை.தனக்கு அண்ணாமலைக்கு அடுத்த இடமே கிடைத்திருப்பது விஜயை அப்செட் ஆக்கியிருக்கிறது. 

இதனால் ஜனநாயகன் கடைசிப்படம் என்ற அறிவிப்பை வாபஸ் பெற்றுவிடலாம் என்று முடிவுக்கு வந்திருக்கிறார் விஜய்.

இந்த முடிவைக் கூட ரகசியமாக வைத்திருக்க தெரியாத தவெக தலைவர் விஜய், ஜனநாயகன் படத்தில் தன்னுடன் நடித்த நடிகை மமிதா பைஜூவிடம் சொன்னது இப்போது வெளியாகி இருக்கிறது.

ஜனநாயகன் படத்தின் கடைசிநாள் படப்பிடிப்பின் போது விஜய் ரொம்ப உணர்ச்சிவயப்பட்டு இருந்தார் என்று சொல்லும் மமிதா பைஜூ, ஜனநாயகன் தான் கடைசிப்படமா? 

இல்லையா?

 என்பதை தேர்தல் முடிவுகள்தான் முடிவு செய்யும் என்று தன்னிடம் விஜய் சொன்னதாகச் சொல்கிறார் மமிதா. ஜனநாயகன் படம்தான் கடைசிப்படமா? என்று தான் கேட்டதற்கு விஜய் அந்தப் பதிலை சொன்னதாகச் சொல்கிறார் மமிதா பைஜூ.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

15000 கோடி வீட்டை காலி செய்ய