என்னச்செய்யப் போகிறார்?
*சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மல்லாக்கோட்டை பகுதியில் உள்ள மேகா புளூமெட்டல்ஸ் என்ற குவாரியில் கடந்த மாதம் 6 தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் உரிமம் காலாவதி ஆன பிறகும் குவாரி இயங்கி வந்தது தெரியவந்துள்ளதுஇதனை அடுத்து கண்காணிக்கத் தவறியதாக கனிமவளத்துறை ஆர்.ஐ., வி.ஏ.ஓ இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், தற்போது குவாரி உரிமையாளருக்கு ரூ.91 கோடி அபராதம் விதிப்பு.

போர் நிறுத்தம் பற்றியோ, ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவோ எந்தவித ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை - ஈரானின் வெளியுறவு துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி.
இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது.
போரை நிறுத்துவது பற்றிய இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும். அந்த முடிவை எங்களுடைய தலைவரே மேற்கொள்வார்.
வேறு நாடுகளின் தலையீட்டிற்கு இதில் அனுமதி இல்லை.
போரை மேற்கத்திய நாடுகளே தொடங்கின. அதனால், போரை நிறுத்துவது பற்றி ஈரானே முடிவு செய்யும். இஸ்ரேல் போரை நிறுத்தினால், நாங்களும் நிறுத்துவோம். ஈரான் மக்களுக்கு எதிரான சட்டவிரோத ஆக்கிரமிப்பை இஸ்ரேல் நிறுத்தினால், நாங்கள் போரை தொடரமாட்டோம் - வெளியுறவு துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி.
வெட்கம்!
என்னச்செய்யப் போகிறார் பிரதமர்?
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் இந்தியாவிற்கு வரும் அமெரிக்க சுற்றுலாப்பயணிகளை அந்நாட்டு வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது.
இத்தோடு நிற்கவில்லை. இந்தியாவிற்கு தனியாக போக வேண்டாம் என்று அமெரிக்கப் பெண்களுக்கு அந்நாடு எச்சரிக்கை செய்திருக்கிறது. இது உலகரங்கில் இந்தியாவிற்கு ஏற்பட்ட அவமானம் என்று, இதற்கு காரணமான பாஜக அரசுக்கு கண்டனம் வலுத்து வருகிறது.
அமெரிக்க வெளியுறவுத்துறை கடந்த 16.6.2025இல் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுலா வரும் அமெரிக்கப் பயணிகளுக்கு அந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது அமெரிக்க குடிமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு செய்துள்ளது. அதில், இந்தியாவை தரவரிசை Level 2 என்று பதிவிட்டுள்ளது.

இந்தியாவில் பாலியல் குற்றங்கள் பெருகி வருகின்றன. சுற்றுலாத்தலங்கள் மற்றும் பிற இடங்களில் பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன. ஆகவே பெண்கள் தனியாக செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை செய்துள்ளது.
சுற்றுலாத்தலங்கள், அரசு முக்கிய அலுவலகங்கள், ஷாப்பி மால்கள், சந்தைகள் உள்ளிட்ட முக்கிய இடங்களை பயங்கரவாதிகள் குறி வைக்கின்றனர். அவ்விடங்களில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தக்கூடும்.
இந்தியாவின் கிராமப்புறங்களில் அமெரிக்க குடிமக்களுக்கு ஆபத்து நேரும் போது அவர்களுக்கு உதவிடும் அளவிற்கு அரசிடம் போதிய திறன் இல்லை. கிழக்கு மகாராஷ்டிரா, வடக்கு தெலுங்கானா, மேற்கு வங்காளம் மேற்கு பகுதிகளில் ஆபத்து அதிகம் உள்ளது. அதனால் அமெரிக்க குடிமக்கள் இந்தப் பகுதிகளுக்கு பயணிப்பதாக இருந்தால் சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது அமெரிக்க வெளியுறவுத்துறை.

ஜம்மு காஷ்மீர், இந்தியா – பாகிஸ்தான் எல்லைகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அமெரிக்க குடிமக்களுக்கு எச்சரிக்கை செய்திருக்கிறது அந்நாட்டு வெளியுறவுத்துறை. அதே நேரம் ஆபத்தான பகுதிகள் என்று மணிப்பூ, ஒடிசா, மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட், மேகாலயா, சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு அமெரிக்க குடிமக்கள் பயணிப்பதாக இருந்தால் கண்டிப்பாக சிறப்பு அனுமதி பெற்றே ஆக வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது.
அமெரிக்க வெளியுறவுத்துறையின் இந்த எச்சரிக்கை, ’’உலக அளவில் இந்தியாவுக்கு அவமானம்’’என்றும், ’’பாஜக ஆட்சியின் பரிணாமம்’’ என்றும் சொல்கிறார் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்.
அவர் மேலும், ’’இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் குற்றங்களில் ஒன்று பாலியல் வன்கொடுமை; பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கடுமையான குற்றங்கள் சுற்றுலா தலங்கள் மற்றும் பிற இடங்களில் நடக்கின்றன என அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக, “பயணிப்பவர் பெண் பாலினத்தவராக இருந்தால், தனியாகப் பயணம் செய்ய வேண்டாம் எனக் கூறப்பட்டுள்ளது. இது மிகப்பெரும் வெட்கக்கேடு. இது உலக அரங்கில் இந்தியாவிற்கு பெரும் அவமானம், தலைகுனிவு’’ என்று வருத்தத்தை பதிவு செய்கிறார் அமைச்சர்.
’’பிரதமர் மோடி தன்னால் இயன்றவரை இந்தியாவை அனைத்து தளங்களிலும் பின்னோக்கி இழுத்துக் கொண்டு செல்கிறார்.
15 ஆண்டுகள் இந்த ஆட்சி தொடர்ந்தால் இந்தியா 50 ஆண்டுகள் பின்னோக்கி நகரும்’’ என்று எச்சரிக்கும் அமைச்சர் மனோ தங்கராஜ், ’’மதக்கலவரம், கலாச்சார செருக்கு, வெறுப்பு பேச்சு, வீண் விளம்பரங்கள் போன்ற முட்டாள் தனங்களுக்கு பாஜக அரசு செலுத்தும் அக்கறையை நாட்டின் முன்னேற்றத்திலும், பாதுகாப்பிலும் காண்பிக்க வேண்டும்’’ என்று ஆத்திரத்தை கொட்டி இருக்கிறார்.
குறுக்கு வழியை கைவிடுக!
ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை தருவேன் என்று 2014 தேர்தல் பிரச்சாரத்தின் போது நரேந்திர மோடி நீட்டி முழக்கி னார். அவர் ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகள் ஆகி விட்டது.
அவரது கணக்குப்படி இதுவரை 22 கோடிப் பேருக்கு வேலை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் வேலையில்லாத இளைய தலைமுறையை விரக்தியுடன் தெருக்கோடியில் நிறுத்தியதுதான் மோடி அரசின் சாதனை.

மாறாக, உலகின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகவும், உலகில் மூன்றாவது பெரிய ரயில்வே நிறுவனமா கவும் விளங்குகிற இந்திய ரயில்வேத் துறையில் காலிப் பணியிடங்களை ஏற்கெனவே ஓய்வு பெற்ற வர்களைக் கொண்டு நிரப்ப ஒன்றிய அரசு நட வடிக்கை எடுத்து வருகிறது.
இதுதொடர்பாக ஒன்றிய ரயில்வே அமைச்ச கம் சார்பில் மண்டல அலுவலகங்களுக்கு அனுப் பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பித்தால் அவர்கள் ஏற்கெனவே வகித்த பணியிடத்துக்கோ அல்லது அதற்கு கீழுள்ள பணியிடத்துக்கோ முன்னனுபவ அடிப்படையில் தற்காலிக அடிப்படையில் பணியமர்த்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைய தலைமுறையை வெளியே தள்ளி கதவ டைக்கிற அப்பட்டமான துரோகமாகும். விபத்து கள் அதிகமாக நடப்பதால் அனுபவம் பெற்றவர்க ளை பணியமர்த்துவதாக ஒரு சொத்தைக் கார ணத்தை முன்வைக்கிறார்கள்.
வயது முதிர்வின் அடிப்படையிலேயே அவர்கள் ஓய்வு பெற்றுள்ள னர். அவர்களை மீண்டும் பணியமர்த்துவதன் மூலம் எப்படி செயல்திறன் வெளிப்படும்?
ரயில்வே கட்டமைப்பை மேம்படுத்தி விபத்து களை தவிர்ப்பதற்கு பதிலாக போலியான வாதத்தை முன்வைக்கிறது ஒன்றிய அரசு. வேலை வாய்ப்புக்காக காத்திருப்பவர்களை பணிய மர்த்தி உரிய பயிற்சி அளிப்பதன் மூலம் செயல் திறனை மேம்படுத்த முடியும்.
மேலும் ஓய்வு பெற்றவர்களுக்கு தற்காலிக அடிப்படையில் குறைந்த ஊதியம் தருவதன் மூலம் அவர்களை யும் சுரண்டுகிற ஏற்பாடு இது
தற்காலிகப் பணியிடங்களாக நிரந்தரப் பணி யிடங்களை மாற்றுவதன் மூலம் இடஒதுக்கீடு அடிப்படையிலான சமூக நீதியையும் ஒன்றிய அரசு மறுக்கிறது. இந்தப் பின்னணியில் காலிப் பணியிடங்களை ஓய்வு பெற்றவர்களைக் கொண்டு நிரப்பும் முடிவை கைவிட்டு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைய தலைமுறையினரை நிரந்தரப் பணியிட அடிப்ப டையில் நிரப்ப வேண்டும்.
இந்தியாவில் வேலை யின்மை மிகப் பெரிய பிரச்சனையாக உரு வெடுத்துள்ள நிலையில், குறுக்கு வழிகளை தேடு வதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.