வின் பாஸ்ட்!
தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் உற்பத்தி நிலையத்தில் இருந்து புதிய கார் விற்பனைக்கான முன்பதிவு ஜூலை 15ல் தொடங்குகிறதுவியட்நாமை தலைமையிடமாக கொண்ட வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில்தான் ஆலை அமைத்தது.கடந்தாண்டு பிப்ரவரி 25ம் தேதி ஆலை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.




அதாவது, ஒரு நொடியில் 1.02 பெட்டாபைட்ஸ் இன்டர்நெட் வேகத்தை எட்டியிருப்பதாக அந்நாட்டின் தேசிய தகவல் தொடர்பு தொழில்நுட்ப மையம் (என்ஐசிடி) அறிவித்துள்ளது. இதன் மூலம் நெட்பிலிக்சிடம் உள்ள அத்தனை படங்களையும் ஒரே நொடியில் பதிவிறக்கம் செய்ய முடியும். மேலும், விக்கிபீடியாவில் ஆங்கிலத்தில் உள்ள தகவல்கள் அனைத்தையும் ஒரே நொடியில் பதிவிறக்கலாம். இந்தியாவில் தற்போது அதிகபட்ச இன்டர்நெட் வேகம் 63.55 எம்பிபிஎஸ் ஆக உள்ளது.
இதை விட ஜப்பானின் இன்டர்நெட் வேகம் 1.6 கோடி மடங்கு அதிகம். அமெரிக்காவின் இன்டர்நெட் வேகத்தை விட 35 லட்சம் மடங்கு அதிகம். இந்த அதிவேக இன்டர்நெட்காக சுமிடோமோ எலக்ட்ரிக் நிறுவனம் மற்றும் ஐரோப்பிய ஆய்வாளர்களுடன் இணைந்து பிரத்யேக பைபர் கேபிள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த கேபிள் வழியாக ஒரே நொடியில் தரவுகளை 1,808 கிமீ தூரத்திற்கு அனுப்பி வைக்க முடியும். இந்த அதிவேக இன்டர்நெட் எதிர்கால ஏஐ தொழில்நுட்பத்திற்கு மிகவும் அவசியமானதாக இருக்கும்.
