எது தேசத் துரோகம்! தாக்குதலுக்கு

 மயிலாடுதுறையில் நாய்கள் தாக்கியதில் ஒரே நாளில் 20 பேர் காயமடைந்தனர்.காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆன்லைன் விற்பனையால் ரூ.100 கோடி இழப்பு தீபாவளிக்கு பட்டாசு விலை ராக்கெட் வேகத்தில் உயரும்: சிவகாசியில் வணிகர் கூட்டமைப்பினர் தகவல்.

திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் கோவையில் ரயில்வே போலீசார் நடத்திய சோதனையில் 23.1 கிலோ கஞ்சா பறிமுதல்.
இந்தியாவிலேயே பணக்கார முதலமைச்சர்கள் பட்டியலில் சந்திரபாபு நாயுடு முதலிடம் .
காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்யும் போதெல்லாம் குழந்தைகளின் வயிறு நிறைகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே பெண் குழந்தையை விற்பனை செய்த பெற்றோர் உட்பட 4 பேர் கைது.
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும்:- எடப்பாடி  பழனிசாமி.
துணை ஜனாதிபதி தேர்தல் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சுதர்சன் ரெட்டி இன்று சந்திப்பு: இந்தியா கூட்டணி கட்சித்தலைவர்கள், எம்பிக்களிடமும் ஆதரவு கோருகிறார் .
வகுப்பறை இடிந்து7 மாணவர்கள் பலி. ராஜஸ்தானில் 86,000 வகுப்பறைகளை பயன்படுத்த தடை.
தர்மஸ்தலாவில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கொன்று புதைக்கப்பட்டதாக புகார் அளித்த கோயில் பணியாளர் கைது.


எது கெத்து?

குட்ஷெப்பர்டு பள்ளியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டார். பிறகு அந்த நிகழ்ச்சியில் அவர் சிறப்புரையாற்றினார்.

:

நல்ல முறையில் வழி நடத்துபவர்தான் நல்ல ஆயன்! அத்தகைய பேரை தாங்கி நின்று, நூற்றாண்டு கண்டுள்ள இந்த குட்ஷெப்பர்டு பள்ளியை வாழ்த்தி, , என்னுடைய பாராட்டுக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்!


இன்றைக்கு சென்னை நாள்! இந்த சென்னைக்கு பல்வேறு வரலாற்று அடையாளங்கள் இருக்கிறது! அப்படிப்பட்ட அடையாளங்களில் ஒன்றுதான், நூற்றாண்டு கண்டுள்ள இந்த குட்ஷெப்பர்டு பள்ளியும் என்பதை நான் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!

கல்வி எனும் பேராயுதத்தை கடைக்கோடி மக்களிடமும் கொண்டு வந்து சேர்த்த வரலாறும், பெருமையும் கிறித்துவ தொண்டு நிறுவனங்களுக்கு இருக்கிறது! இந்த நெடிய பாரம்பரியத்தில் குட்-ஷெப்பர்டு பள்ளிக்கு என்று ஒரு தனி இடம் இருக்கிறது! இதனுடைய வரலாற்றை நான் எண்ணிப் பார்க்கிறேன்…


1835-ல் பிரான்ஸ் நாட்டில், பின்தங்கிய மக்களுக்கு கல்வியையும், வாழ்க்கையையும் வழங்குவதற்கு உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம், 1854-ல் இந்தியாவுக்குள் நுழைந்து 110 கான்வெண்ட்டுகளை உருவாக்கினார்கள்.


1925-ல் இந்த பள்ளியை தொடங்கினார்கள். நூறு ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த நூறு ஆண்டுகளில், மதிப்பிற்குரிய முன்னாள் ஒன்றிய அமைச்சர் திரு.ப.சிதம்பரம் அவர்களைப்போல, ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து, முன்னேறி, உயர்ந்த பொறுப்புகளில் உட்கார்ந்து, அரசியல் தலைவர்களாக, நேர்மையான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளாக, மருத்துவர்களாக, விளையாட்டு வீரர்களாக, தொழில் முனைவோர்களாக திறமையான கலைஞர்களாக புகழ் பெற்றிருக்கிறார்கள்!


இப்படி, இலட்சக்கணக்கானோர் புகழ் பெறவேண்டும் என்றுதான் இந்த நிறுவனத்தை தொடங்கிய, புனித மேரி யூப்ரேசியா அவர்கள் விரும்பியிருப்பார்கள்! அவருடைய தொலைநோக்குச் சிந்தனையை நனவாக்க உழைத்த அத்தனை பேரையும் நினைவுகூர்ந்து போற்ற வேண்டியது நம்முடைய கடமை!


கல்வியைப் பற்றி புனித மேரி யூப்ரேசியா அவர்கள் என்ன சொன்னார்கள் என்றால், “கல்வி என்பது, மனித ஆளுமையில், உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும், அறிவு ரீதியாகவும், அழகியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் சிறந்த அனைத்தையும் வளர்ப்பது” என்று சொன்னார்.


அதாவது, பாடப்புத்தகங்களைக் கடந்து, பண்பாட்டை வளர்க்கும் கல்வியை வடிவமைத்தார்கள்! அதனால்தான், அறிவுத் தாகம், இரக்கம் மற்றும் தைரியம், பொறுப்பான குடியுரிமை, பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு, பங்கேற்பு மற்றும் ஜனநாயகம், வேற்றுமையில் ஒற்றுமை ஆகிய கொள்கைகள் கொண்டவர்களாக மாணவர்களை உருவாக்கவேண்டும் என்று கட்டளையிட்டார். அந்தக் கட்டளையை ஏற்று, பசுமையான இந்தப் பள்ளி வளாகத்தில், கல்வியின் பன்முகத் திறமைகளையும் கற்றுத் தந்து ஏராளமான திறமைசாலிகளை உருவாக்கியிருக்கிறீர்கள்!


கல்விப் பணிகளை கடந்து, சமூக சேவையிலும் ஈடுபட்டு, சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட, கல்வி கற்க இயலாத பெண்களுக்கு, கல்வியையும், வாழ்வாதாரத்தையும் வழங்க, ‘மரியன் ஹோம்’, ‘மொட்டுக்கள் இல்லம்’, நடுத்தர, விளிம்பு நிலைப் பெண்களுக்கான பாதுகாப்பான தங்குமிடம் வழங்கும் ‘ரோஷினி நிவாஸ்’ என்று சமூக சேவை நிறுவனங்களையும் நடத்திக் கொண்டு வருவதற்கு என்னுடைய வாழ்த்துகள்!

இங்கே மாணவர்கள் இருக்கிறீர்கள்.


ஒரு காலத்தில் கல்வி என்பது, நமக்கு மறுக்கப்பட்ட ஒன்று! ஏராளமான போராட்டங்களுக்குப் பிறகுதான் கல்விக் கதவுகள் நமக்கு திறக்கப்பட்டது! இப்பொழுதும் கல்விக்காக போராடும் மக்கள் இருக்கிறார்கள்.

கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகத்தான், காலை உணவுத் திட்டம், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் என்று நிறைய திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம்! இப்போது கூட பள்ளி மாணவர்களுக்காகவே சிறப்புப் பேருந்துகள் தொடங்கியிருக்கிறோம்.


நாம் அனைத்துத் தரப்புக்கும் இத்தனை திட்டங்களை தொடங்கி எல்லார்க்கும் எல்லாம் என்று செயல்படுகிறோம். ஆனால், இந்திய அளவில், பல மாநிலங்களில் வெறுப்புணர்வு தூண்டப்படுகிறது. அதற்கு அரசே துணைபோகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் சிறுபான்மையினர் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார்கள். இது எல்லாம் நிரந்தரமல்ல!


இந்தியாவின் மதநல்லிணக்கத்தை கெடுக்க நினைக்கின்ற சக்திகளின் கொட்டம் அதிக நாள் நீடிக்காது! சாதி, மத பிரிவினை பார்க்காமல், எல்லோரையும் சமமாக நடத்துகின்ற பண்பை பள்ளிக் கூடங்களிலேயே நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். தும்பை விட்டுவிட்டு வாலை பிடிக்க கூடாது என்று சொல்லுவார்கள்.


அப்படிதான், தமிழ்நாடு எப்போதும் சமத்துவப் பூங்காவாக சகோதரத்துவத்துடன் திகழவேண்டும் என்றால், மாணவர்களான நீங்கள் இப்போதே அந்த எண்ணத்துடன் வளர்ந்தால்தான் முடியும்! அதனால்தான், பள்ளி நிகழ்ச்சியில் கூட, அரசியலும், அட்வைசும் பேச வேண்டியதாக இருக்கிறது.

சமூகப் படிநிலையில் பலருக்கும் அனைத்து வாய்ப்புகளும் கிடைப்பதில்லை. வாய்ப்பு கிடைப்பவர்கள், அதனால் வரும் திறமையை, வாய்ப்பு இல்லாதவர்களுக்கு கொண்டு சேர்க்கவேண்டும்! இதுதான், புனித மேரி யுப்ரேசியா போன்றவர்கள் ஆற்றிய தொண்டு!


இன்றைக்கு நல்ல பள்ளியில் படிக்கின்ற நீங்கள், அடுத்து, பட்டப்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்பு என்று படித்து முன்னேறவேண்டும்.இன்றைக்கு Science எவ்வளவோ வளர்ந்துவிட்டது. உங்களுக்குத் தேவையான அறிவை பெற, நிறைய Options இருக்கிறது! அதிலும் இப்போது A.I-யின் வளர்ச்சி புது புரட்சியையே உண்டாக்கிக் கொண்டிருக்கிறது! அதற்காக, “எல்லாவற்றுக்கும் A.I. இருக்கிறது! நாம் எதற்கு படிக்கவேண்டும்” என்று நினைத்துவிடாதீர்கள்.


எந்த கண்டுபிடிப்பையும் நீங்கள் உங்கள் வளர்ச்சிக்காகதான் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, அது உங்களுடைய சிந்தனையை சிதைக்க அனுமதிக்க கூடாது! அதேபோல, உங்கள் Role Model-ஐ Instagram-ல் தேடாதீர்கள்! பொழுதுபோக்கு வாழ்க்கையின் ஒரு அங்கம்தான்! அதுவே வாழ்க்கை இல்லை!

சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், நீங்கள் Reels பார்ப்பதெல்லாம் Reality என்று நம்பிவிடாதீர்கள். Likes, Views-ல் கெத்து இல்லை! Marks, Degrees-ல் தான் உண்மையான கெத்து இருக்கிறது!


படிப்பதுடன் நன்றாக விளையாடுங்கள். உடல்நலனையும் பார்த்துக்கொள்ளுங்கள். ஆசிரியர்களும் இன்றைக்கு இருக்கின்ற பிள்ளைகளுக்கு ஏற்றது போல Upgrade ஆகவேண்டும்!


பெற்றோர்களும் “நம்முடைய பிள்ளைகள் என்ன நினைக்கிறார்கள்?” என்று காது கொடுத்து கேளுங்கள். மனதுவிட்டு பேசுங்கள். அவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் பயப்படாமல், நம்மிடம் தைரியமாக Share செய்யவேண்டும்! அந்த நம்பிக்கையை அவர்களுக்கு நீங்கள் கொடுக்கவேண்டும்.


பிள்ளைகளிடம், உன் பெஸ்ட் ஃபிரண்ட் யாரு என்று கேட்டால், “எங்க அப்பா - அம்மா” என்று சொல்லவேண்டும். அப்படி பழகுங்கள்! கல்வி - நண்பர்கள் - சூழல் - இதுதான் பிள்ளைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்!


எனவே, நல்ல ஆயராக இருந்து, பிள்ளைகளை முன்னேற்ற வேண்டும் என்று அனைவரையும் வாழ்த்தி, குட்ஷெப்பர்டு பள்ளிக்கு நூற்றாண்டு வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்து, இந்த இனிய வாய்ப்பைத் தந்த இந்த பள்ளியின் நிர்வாகத்திற்கு மீண்டும் என்னுடைய நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்து, விடைபெறுகிறேன்.

எது தேசத் துரோகம்!
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் பகுதியில் இந்திய ராணு வம் “ஆபரேசன் சிந்தூர்” என்ற பெயரில் பதில் தாக்குதல் நடத்தியது.


 இந்த தாக்குதல் தொடர்பாக உண்மைத் தன்மை பற்றி பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. ஆனால் இதுதொ டர்பாக மோடி அரசு நாடாளுமன்றத்தில் கூட உறுதியான தகவல்  அளிக்கவில்லை. சர்வதேச ஊடகங்களின் மேற்கோள்படி “தி வயர்” இணைய இதழ் ஆபரேசன் சிந்தூர் தொடர்பாக கட்டுரை ஒன்றை வெளியிட்டது.


 இந்த கட்டுரையால் அதிர்ச்சி அடைந்த மோடி  அரசு, “தி வயர்” இணைய இதழை முடக்கியது.  கட்டுரை நீக்கப்பட்ட பின்பு “தி வயர்” இதழ் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது. இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து செவ்வாய்க்கிழமை அன்று “ஆபரே சன் சிந்தூர்” கட்டுரைக்காக “தி வயர்” இணைய இதழின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன், மூத்த ஊடகவியலாளர் கரண் தாப்பர் மீது தேசத் துரோக வழக்கு பிரிவின் (பிஎஸ்எஸ் 152) கீழ்  பதிவு செய்யப்பட்ட வழக்கின் (மே 9 - பதிவு) மூலம் பாஜக ஆளும் அசாம் காவல்துறை (கவு காத்தி குற்றப்பிரிவு) சம்மன் அனுப்பியுள்ளது. 

இதனை எதிர்த்து “தி வயர்” செய்தி இணைய தளத்தை சித்தார்த் வரதராஜனுடன் இணைந்து நிர்வகிக்கும் “தனி ஊடகங்களின் அறக்கட்ட ளை” உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. இந்த வழக்கு வெள்ளிக்கிழமை அன்று நீதிபதிகள் சூர்யா காந்த், ஜாய்மால்யா பாக்சி அமர்வில் விசாரணைக்கு வந்தது.


  பத்திரிகையாளர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நித்யா ராமகிருஷ்ணன், “அசாம் காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின்படி பத்திரிகையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 எனினும் கவு காத்தி குற்றப்பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. இதனால் இரு பத்திரிகையாளர்களும் கைது செய்யப்படும் வாய்ப்புள்ளது” என வாதிட்டார். இதனையடுத்து நீதிபதிகள் சூர்யா காந்த், ஜாய்மால்யா பாக்சி,“இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தொடர்ந்து கண்காணித்து வரு கிறது. 


அசாம் காவல்துறை பதிவு செய்துள்ள  எப்ஐஆர்-இன் அடிப்படையில் பத்திரிகையா ளர்கள் இருவர் மீதும் கைது நடவடிக்கை எதை யும் மேற்கொள்ளக் கூடாது. பத்திரிகையா ளர்கள் காவல்துறை விசாரணைக்கு ஒத்து ழைப்பு அளிக்க வேண்டும்” என உத்தர விட்டனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி