ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் ஆளுநரான சத்யபால் மாலிக், தனது 79-வது வயதில் காலமானார்.
நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், டெல்லி ஆர்.எம்.எல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார்.
அவரது மறைவை அவரது அதிகாரப்பூர்வ X தளத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆர்.எம்.எல் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையின்படி, சத்யபால் மாலிக், சர்க்கரை நோய் சார்ந்த சிறுநீரகப் பிரச்னை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார்.
மே 11 அன்று சிறுநீர்ப்பாதை தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு செப்டிக் ஷாக், நிமோனியா மற்றும் பல உறுப்பு செயலிழப்புகள் ஏற்பட்டன. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவரது உடல்நிலை மோசமடைந்து அவர் உயிரிழந்தார்.
உத்தரப் பிரதேசத்தின் பாக்மத் பகுதியைச் சேர்ந்த சத்யபால் மாலிக், 1970-களில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். மீரட் கல்லூரியின் மாணவர் அமைப்பின் தலைவராக மாலிக், தன்னுடைய அரசியல் பயணத்துக்கு பிள்ளையார் சூழி போட்டுத் தொடங்கினார்.
கால் நூற்றாண்டுக்கும் மேலான அவரது அரசியல் பயணத்தில், அவர் பல கட்சிகளில் பயணித்துள்ளார். 1980-ல் சரண் சிங் தலைமையிலான லோக் தளத்தில் இருந்து ராஜ்ய சபா உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1984-ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, 1986-ல் மீண்டும் ராஜ்ய சபா உறுப்பினரானார். அரசியலில் வெளிப்படையாகப் பேசக்கூடியவராக அறியப்பட்ட மாலிக், தனது அரசியல் வாழ்க்கையில் பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார்.
சத்யபால் மாலிக், ஜம்மு-காஷ்மீர், கோவா, மேகாலயா போன்ற மாநிலங்களின் ஆளுநராகப் பதவி வகித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் ஆளுநராக அவர் இருந்த காலத்தில்தான், அரசமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவு நீக்கப்பட்டது. 2019 புல்வாமா தாக்குதல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய அரசுக்கு எதிராக அவர் தெரிவித்த கருத்துகள் பரவலாக விவாதிக்கப்பட்டன.
அவரது உடல் டெல்லியில் உள்ள அவரது இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, புதன்கிழமை லோதி மயானத்தில் தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிரா மாநில பாஜக செய்தித் தொடர்பாளராக உள்ள ஆர்த்தி சாதே என்பவரை,மும்பை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டது அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தராகண்டில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் 4 பேர் உயிரிழப்பு. காணாமல் போன 100-க்கும் மேற்பட்டோரை தேடும் பணியில் ராணுவம் தீவிரம்
தான் பாஜகவுக்கு அடிமை இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம். கொள்கை வேறு, கூட்டணி வேறு என்றும் கருத்து
இந்தியா மீதான வரியை அடுத்த 24 மணி நேரத்தில் உயர்த்த திட்டம். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல்.
இந்தியா மீதான வரி உயர்வு குறித்த டிரம்பின் எச்சரிக்கைக்கு ரஷ்யா கண்டனம். வர்த்தக கூட்டாளியை தேர்வு செய்யும் உரிமை இந்தியாவுக்கு உள்ளது என்றும் கருத்து.
ஆரியர்கள் வந்தேறிகள். அவர்களுக்கு சொந்தமாக நிலம் கிடையாது. அதனால் தான் செத்தவர்களை ஆற்றில் வீசினார்கள். அதன் தொடர்ச்சி தான் காசியில் பிணத்தை கங்கையில் வீசுவது.
ஆனால் திராவிடர்கள் சிந்து சமவெளியில் வீடு கட்டி வாழ்ந்தவர்கள். அவர்களுக்கு நிலம் இருந்தது. இறந்தவர்களை புதைத்தார்கள். பட்டினத்தார் கடவுள் இல்லை. வள்ளலார் கடவுள் இல்லை. சாய் பாபாக்கள் பங்காரு அடிகளார் எப்படிக் கடவுள். கடவுள் இல்லை என்பது தமிழரின் ஆன்மீகக் கோட்பாடு.
-சுகி சிவம்.
பாஜக ஆளும் 16-மாநிலங்கள்
தமிழ் நாட்டை விடஅதிகமா கடன் வாங்கி இருக்குமோடி அரசு அள்ளி அள்ளி கொடுத்தும் அவங்க தான் அதிகமா கடன் வாங்கிட்டு இருக்காங்க-பொருளாதார கணிப்பு தகவல்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுவிக்கக்கோரி ஆதரவாளர்கள் நாடு தழுவிய போராட்டம். கராச்சியில் போலீஸ் தடுத்ததால் இருதரப்பு இடையே மோதல்
திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் யாரிடமும் பூசாரிகள்,தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் : கோவில் நிர்வாகம்.
அடிமைத்தன உச்சம்!
தேர்தல் நடைமுறைகளில் சீர்திருத்தங்கள் மிகவும் அவசியமாகும்.
அந்த சீர்திருத்தங்கள் நேர்மையானதாகவும், பாரபட்சமின்றியும் நடைபெற வேண்டும்.
பீகார் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட SIR (Special Intensive Revision) எனும் வாக்காளர் பட்டியல் மறுஆய்வு இந்திய அளவில் பல மாநிலங்களிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்காளம் போன்ற அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் மாநிலங்களில் கூடுதல் அதிர்வை உண்டாக்கியுள்ளது.
இந்தியாவில் 18 வயது நிரம்பிய ஆண்-பெண் இருவருக்கும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உண்டு. அதை நிலைநிறுத்துவதுதான் தேர்தல் ஆணையத்தின் முதல் கடமை. அதற்கு மாறாக, பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் பல லட்சம் பேரின் வாக்குரிமையைப் பறிப்பதில் கவனமாக இருந்து செயல்பட்டுள்ளது தேர்தல் ஆணையம். பீகாரில் பிற நாடுகளை (மியான்மர், பங்களாதேஷ்) சேர்ந்தவர்கள் நீண்டகாலமாக இருப்பதாலும், அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை இல்லாதததாலும் அவர்களின் வாக்குரிமையை நீக்குவதற்காக இந்த வாக்காளர் பட்டியல் ஆய்வை தேர்தல் ஆணையம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது.
குடியுரிமை உள்ளவர்கள்தான் வாக்களிக்க முடியும். எனினும், குடியுரிமை என்பதற்கான ஆதாரமாக பிறப்புச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் போன்ற எளிய மக்களிடம் இல்லாத ஆதாரங்களைக் கேட்டது தேர்தல் ஆணையம். வாக்காளர் அடையாள அட்டை என்பது தேர்தல் ஆணையமே வழங்கிய சான்றாவணமாகும். அதையே ஏற்கமுடியாது என்று ஆணையம் சொல்லிவிட்டது. ஆதார் அடையாள அட்டையையும் ஆதாரமாக ஏற்க முடியாது என்று தெரிவித்துவிட்டது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்திற்குச் சென்றபோது, “சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் எதற்காக இந்த சரிபார்ப்பு நடவடிக்கை? மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து நடத்தலாமா?” என நீதிபதிகள் தெரிவித்ததுடன், “பெரும்பாலான மக்கள் வாக்குரிமையை இழக்கக்கூடிய சூழல் ஏற்படுமானால் நீதிமன்றம் இதில் தலையிடும்” என்றும் தெரிவித்தனர்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சியினர் இதனை விவாதிக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தியதுடன், ஆளுந்தரப்பு உடனடியாக அதற்கு இடம் தராததால், நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கண்டன முழக்கங்களும் வெளிப்பட்டன. இதற்கிடையே, பீகாரில உள்ள 7.89 கோடி வாக்காளர்களிடம் என்னென்ன ஆதாரங்கள் இருக்கின்றன என்பதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெறும் முகாம்கள் மாநிலந் தழுவிய அளவில் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டன. இதில் 7.24 கோடி பேர் விண்ணப்பங்களை அளித்தனர். இதனையடுத்து, 65 இலட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த முறையை விட 3.95 இலட்சம் வாக்காளர்கள் குறைந்துள்ளனர். தேர்தல் ஆணையமோ, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் இறந்துபோனவர்கள், இரு இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் கொண்டவர்கள், பீகார் மாநிலத்தை விட்டு நிரந்தரமாக வெளியேறியவர்கள், எங்கு இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியாதவர்கள் ஆகியோர்தான் என்று தெரிவிக்கிறது. இதில் நிறைய கேள்விகள் உள்ளன.
இரு இடங்களில் பெயர் கொண்டவர்கள், இரண்டு வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க முடியுமா? அவர்களுக்கு இரண்டு இடங்களிலும் வாக்காளர் அடையாள அட்டை வழங்க முடியுமா? தேர்தல் ஆணையம் இணையதளம் மூலமாக பல்வேறு வசதிகளை உருவாக்கியுள்ள நிலையில், இவற்றை எளிதாக செயல்பாட்டுக்கு கொண்டு வரக்கூடிய நடைமுறைகள் உள்ளன. ஆனால், தேர்தல் நேரத்தில்தான் இப்படிப்பட்ட வேலைகளை மேற்கொள்வோம் என்று செயல்படுவது உள்நோக்கம் கொண்டதாகவும், மத்திய ஆட்சியாளர்களுக்கு சாதகமாகவும் அமைந்து விடுகிறது.
பீகாரில் வேலைவாய்ப்பு இல்லாதததால் தென்னிந்திய மாநிலங்களுக்கு பீகார்வாசிகள் வருவது வழக்கமாக உள்ளது. அப்படித் தமிழ்நாட்டுக்கு வந்து வேலை பார்க்கும் 6.5 இலட்சம் வாக்காளர்களை, தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான நடைமுறைகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. மியான்மர், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து பீகாருக்கு வந்தவர்களுக்கு எப்படி இந்திய நிலைமை தெரியாதோ, அதுபோல பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களிலிருந்து இங்கே வந்தவர்களுக்குத் தமிழ்நாட்டின் தனித்துவமான அரசியல் நிலைமைகள் தெரியாது. அவர்களுக்கு உடனடியாக இங்கே வாக்குரிமை அளிப்பது என்பது தேர்தல் அரசியல் களத்தில் குழப்பத்தையே உண்டாக்கும்.
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டிற்கு வருபவர்களுக்கெல்லாம் வாக்குரிமை கிடைக்கும் என்றால் அது தமிழ்நாட்டு மக்களிடம் எதிர்மறையான எண்ணங்களை உருவாக்கும் வாய்ப்புள்ளது. அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில் தேவையற்ற சர்ச்சைக்கு இடமளிக்கிறது தேர்தல் ஆணைய பா.ஜக அடிமைத்தனம்.
அதிக உச்சம் தொடும். யுபிஎஸ் அறிக்கையின்படி, தங்கத்தின் விலை 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அவுன்ஸ் ஒன்றுக்கு 2,750 அமெரிக்க டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு தங்கத்தின் ஈர்க்கக்கூடிய 29 சதவீதம் உயர்வு, வலுவான முதலீட்டுத் தேவை, பலவீனமடைந்து வரும் அமெரிக்க டாலர் மற்றும் வளர்ந்து வரும் புவிசார் அரசியல் கவலைகள் ஆகியவை காரணமாக இருக்கிறது. 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 2,850 டாலராகவும், 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 2,900 டாலராகவும் உயரும் என்றும் யுபிஎஸ் கணித்துள்ளது. உலோகமான தங்கத்தின் தற்போதைய உயரமான தொடக்கப் புள்ளி வரவிருக்கும் மாதங்களில் ஆதாயங்களுக்கான அதிக வாய்ப்பை வழங்குகிறது. குறிப்பாக ETF தேவை துரிதப்படுத்தப்படுவதால் யுபிஎஸ் நம்புகிறது. தங்கத்திற்கான சீன தேவை குறைவதற்கான அறிகுறிகள் இருந்தபோதிலும், உள்ளூர் முதலீட்டாளர்களிடமிருந்து அடிப்படை தேவை குறைவதை விட, நாட்டின் இறக்குமதி ஒதுக்கீட்டின் சோர்வு இதற்குக் காரணம் என்று யுபிஎஸ் கூறுகிறது. பன்முகப்படுத்தப்பட்ட அமெரிக்க டாலர் மதிப்பிலான போர்ட்ஃபோலியோவிற்குள் தங்கத்தை மூல ஹெட்ஜ...
முகேஷ் அம்பானிக்கு நெருக்கடி! ஒன்றிய அரசு சமீபத்தில் வஃக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வந்தது, பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. அதற்கு ஜனாதிபதியும் உடனே ஒப்புதல் கொடுத்துள்ளார். வக்ஃபு வாரிய மசோதா நிறைவேற்றம் மத்திய அரசின் இம்முடிவுக்கு எதிராக முஸ்லிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஆனால் மசூதிகள் இருக்கும் இடத்தை பிடுங்கமாட்டோம் என்று மத்திய அரசு கூறிக்கொண்டிருக்கிறது. நாட்டில் அதிகமான மற்றும் முக்கியமான கட்டிடங்கள் இருக்கும் நிலங்கள் வஃக்பு வாரியத்திற்கு சொந்தமானதாக இருக்கிறது. கடும் விவாதத்திற்கு பின் மாநிலங்களவையில் வக்ஃபு வாரிய மசோதா நிறைவேற்றம்! - அடுத்து என்ன? அந்த நிலம் பல்வேறு காலக்கட்டங்களில் பலரின் கைகளுக்கு மாறி இருக்கிறது. அந்த வகையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி தென்மும்பையில் கட்டி இருக்கும் பல அடுக்கு சொகுசு மாளிகையான ஆன்டிலியா கட்டிடம் இருக்கும் நிலமும் வஃக்பு வாரியத்திற்கு சொந்தமானது என்று தெரிய வந்துள்ளது. இந்தியாவிலேயே மிகவும் பணக்கார வீடாக பார்க்கப்படும் முகேஷ் அம்பானியின் வீட்டின் மதிப்பு மட்டும் ரூ.15000 கோடியாகும். இந்த வீடு இருக்கும் நிலத்தை மு...
தமிழ் காமிக்ஸைப் புரட்டிப்போட்ட முத்து காமிக்ஸ்! தமிழில் காமிக்ஸ் என்றால் இரும்புக் கை மாயாவியைப் பற்றிப் பேசாமல் ஆரம்பிக்க முடியாது. இரும்புக் கை மாயாவியின் படத்தைப் பார்த்திராதவர்கள்கூட உச்சரிக்கும் மந்திரப் பெயராக அது புகழ்பெற்றிருக்கிறது. இரும்புக் கை மாயாவி ஏன் இப்படி கொண்டாடப்படுகிறது? மூன்று விஷயங்களை மட்டும் பார்ப்போம்: தமிழகத்தில் இரும்புக்கை மாயாவியின் சகாப்தம் கடந்த நாற்பதாண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்துவருகிறது. இப்போதும்கூட அதன் மறுபதிப்பைத் தேடுபவர்கள் உண்டு. சினிமா இயக்குநர்கள் பிரபு சாலமன், மிஷ்கின், ஏ.ஆர். முருகதாஸ், சிம்புதேவன் உள்ளிட்டோர் தங்களுடைய சிறுவயது இன்ஸ்பிரேஷனாக மாயாவியையே குறிப்பிடுகின்றனர். # எழுபது, எண்பதுகளில் இரும்புக்கை மாயாவியைப் போலவே தங்கக் கை மாயாவி, இரும்பு விரல் மாயாவி, தங்க விரல் மாயாவி, உலோகக் கை மாயாவி, நெருப்பு விரல் சிஐடி என ஏகப்பட்ட 'போலச் செய்யும்' கதாபாத்திரங்கள் வந்ததில் இருந்தே, இரும்புக் கை மாயாவி எவ்வளவு பிரபலம் என்பதைப் புரிந்துகொள்ளலாம். # தொடர்ந்து வந்த கதைகள் மாயாவியின் ஆளுமை, தமிழகத்தில் நிலைத்து நிற்க உதவி...