அமெரிக்க சொர்க்கம்?
ஒசூரில் இன்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முதலீட்டாளர்கள் மாநாடு.ரூ.24,307 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
நாடு தழுவிய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் அடுத்த மாதம் தொடங்கும் என தகவல். மாநிலத் தேர்தல் அதிகாரிகளுடன் இந்தியத் தேர்தல் ஆணையம் டெல்லியில் ஆலோசனை.


தமிழகத்தின் செங்கல்பட்டில் அண்மையில் லஷ்கர் இ தொய்பா- பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த முகம்மது கைது செய்யப்பட்டார். பீகாரைச் சேர்ந்த முகம்மது- லஷ்கர் அமைப்பின் ஸ்லீப்பர் செல்லாக, கூலித் தொழிலாளி போல செங்கல்பட்டில் பதுங்கி இருந்த போது கைது செய்யப்பட்டார்.
தற்போது முகம்மதுவிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வளமும் வசதியும் நிறைந்த அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனிலும், சிலர் வாழ்க்கையின் அடிப்படை தேவைகளுக்கும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
28 வயதான ஸ்டெபானி வீடில்லாமல், கென்னடி சென்டர் அருகே ஒரு போம் மேட்ரஸில் ஓய்வெடுத்தபடி இருந்தார். அவரது உலகம் அங்கு இருக்கும் சிலரைப் போலவே சோகத்திலும் தனிமையிலும் மூழ்கியிருந்தது.
ஸ்டெபானியின் நிலை, ஒரு மறைக்கப்பட்ட போராட்டத்தின் சின்னம். வேலைவாய்ப்பு இழப்பு, உயர்ந்துவரும் வீட்டு வாடகை, மனநலப் பிரச்சினைகள், குடும்ப ஆதரவு இல்லாமை - இவை அனைத்தும் அவரைப் போன்ற ஆயிரக்கணக்கானோரின் வாழ்க்கையை சிக்கலாக்குகின்றன.
நகரின் பிரகாசமான வெளிப்புறங்களும், கலாச்சாரம் மற்றும் பொருளாதார வளம் நிறைந்த இடங்களும், இவர்களைப் போன்றவர்களின் வாழ்வியலை மறைத்து விடுகிறது.
வீடற்றோர் பிரச்சினை அமெரிக்காவில் தீவிரமாகி வருகிறது,நாட்டின் கவுரவம் கெடும் என்று வாஷிங்டன், டி.சி.யில் சாலைகளில் தங்குவதை அரசு ஆதரிப்பதில்லை அதையும் மீறி ஆயிரக்கணக்கானோர், சாலைகளில் தங்கியிருப்பதற்காகவே போராடுகிறார்கள்.
அரசு மற்றும் சமூக அமைப்புகள் உணவு, தற்காலிக முகாம்கள், மருத்துவ உதவிகளை வழங்கினாலும், அது போதவில்லை .
சிலர் கடுமையான காலநிலை, பாதுகாப்பின்மை மற்றும் ஒதுக்கப்பட்ட சமுதாய வாழ்வால் இப்படி இன்னும் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்தியா போன்ற நாடுகளில் உள்ள சிலர். சொர்க்கபுரி அமெரிக் கா என நினைப்பது
தவறு.உண்மை வேறு..