புதிய பிரதமரா?
உழவர் நலத் துறையின் திட்டங்களை விளக்கும் வகையில் வேளாண் வணிகத் திருவிழா. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.


நேபாள் புதிய பிரதமர்?
இந்தியாவின் மூன்று அண்டை நாடுகளில் மக்கள் புரட்சி வெடித்து அரச மாளிகைகள் அடித்து நொறுக்கப்பட்டதில் ஆட்சியாளர்கள் பதவி விலகும் நிலைமை ஏற்பட்டது. 2022ல் இலங்கையிலும், 2024ல் வங்கதேசத்திலும் வெடித்த மக்கள் புரட்சி இப்போது நேபாளத்தில் வெடித்திருக்கிறது.
நேபாளத்தில் நிலவும் வேலை வாய்ப்பின்மையும், பொருளாதாரத்தில் நேபாளம் சந்திக்கும் பின்னடைவு குறித்தும், ஊழல் செய்யும் அரசியல்வாதிகளும் அவர்களின் வாரிசுகளும் வாழும் ஆடம்பர வாழ்க்கை குறித்தும் Gen Z எனும் இளந்தலைமுறையினர் சமூக வலைத்தளங்களில் ஆதாரங்களுடன் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர்.

இது அரசுக்கு எதிரான பிரச்சாரம் என்று சொல்லி பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 26 சமூக வலைத்தளங்களை முடக்கியது நேபாள அரசு. Gen Z தலைமுறையினர் இதற்கெதிரான போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்த போராட்டங்களை ஒடுக்க நினைத்து அரசு தோற்றுப்போனது. அது மக்கள் புரட்சியாக நாடு முழுவதும் வெடித்தது.
அமைச்சர்கள், அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள், முன்னாள் பிரதமர் ஷெர் பததூர் தேவ்பாவையும் அடித்து உதைத்தனர். நேபாளத்தின் நிதி அமைச்சர் விஷ்ணு பவுடாலை நடுரோட்டில் ஓட ஓட விரட்ட்டி அடித்து உடைத்துள்ளனர்.

நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் நடந்த போராட்டத்தின் போது நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர். பிரதமர் சர்மா ஒலி வீட்டின் மீது கற்களை தாக்கினர். போராட்டத்தை ஒடுக்க துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். 400க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த இளைஞர்கள், மாணவர்கள் திரண்டு அதிபர், பிரதமர் மாளிகைகளுக்கு தீ வைத்தனர். நாடாளுமன்றமும் இதில் தப்பவில்லை. இதனால் ஹெலிகாப்டரில் பாதுகாப்பான இடத்திற்கு தப்பிச்செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார் பிரதமர் சர்மா ஒலி. நாட்டின் நிலைமையை உணர்ந்து அவர் தனது பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.
இதையடுத்து புதிய பிரதமராக பாலேந்திர ஷா பதவியேற்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்று தெரிகிறது.
யார் இந்த பாலேந்திர ஷா? ஏன் இவர் நேபாளத்தின் புதிய பிரதமராக Gen Z விரும்புகிறார்கள்?
நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் 1990ல் பிறந்தவர் பாலேந்திர ஷா. எம்.டெக். பட்டதாரி. நேபாளத்தில் சிவில் இன் ஜினியரிங் படித்துவிட்டு, இந்தியாவில் கர்நாடக மாநிலம் பெல்காமில் VTU எனும் விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பொறியியல் முதுகலை படித்தார்.

பொறியல் பட்டதாரி என்றாலும் பாலேந்திர ஷா, ’ராப்’ பாடகராகவே அறியப்பட்டார். அதுவும் ஊழல் மற்றும் சமூக சமத்துவமின்மை பிரச்சனைகளுக்காக பாடல்கள் இயற்றி பாடினார். இதனால் இவர் மீது Gen Z தலைமுறையினரால் அதிகம் ஈர்க்கப்பட்டார்.
சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று ஊழலுக்கு எதிராகவும் சமூகத்தின் குரலாகவும் ஒலித்து வருவதாலும் இவர் Gen Z தலைமுறையினரால் அதிகம் அதிகம் ஈர்க்கப்பட்டுள்ளார்.

Gen Z தலைமுறையினரின் வேண்டுகோளை ஏற்று அரசியலிலும் இறங்கி கடந்த 2022ல் காதமண்டு நகர மேயர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்டு வென்றார். மேயராக இருந்து கொண்டே பிரதமர் சர்மா ஒலி ஆட்சியின் முறைகேடுகளை கடுமையாக சாடி வந்தார். கடந்த ஆண்டில் காத்மாண்டு மாநகராட்சி ஊழியர்களுக்கு 4 மாத சம்பள பாக்கி விவகாரத்தில் சர்மால் ஒலிக்கும் பாலேந்திர ஷாவுக்கும் இடையே மோதல் வெடித்தது.

இந்நிலையில் 26 சமூக ஊடகங்களுக்கு தடை வித்ததைக் கண்டித்து முதலில் குரல் எழுப்பினார் பாலேந்திர ஷா. இதனால் அவர் மீது Gen Z தலைமுறையினருக்கு ஈர்ப்பு அதிகமானது. அரசுக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமையேற்க வருமாறு அழைப்பு விடுத்தனர். ஆனால் பாலேந்திர ஷாவோ, தனக்கு 35 வயது ஆகிவிட்டது என்பதை சொல்லி, 28 வயதுக்கு மேல் ஆகிவிட்டதால் Gen Z தலைமுறை போராட்டத்திற்கு தலைமை ஏற்க முடியாது என்று சொல்லி, Gen Z தலைமுறையினரையே தலைமையேற்று நடத்தச் சொல்லிவிட்டார்.
நேபாளத்தில் நிலவும் போராட்டம் – கலவரத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார் பாலேந்திர ஷா. சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலகியதுமே எக்ஸ் தளம் மூலமாக பாலேந்திர ஷாவை ‘’தலைமையேற்க வா!’’ என்று பலரும் அழைப்பு விடுத்து வருகின்றனர்.

வங்கதேசம், இலங்கையில் மக்கள் புரட்சி வெடித்தாலும் நேபாளத்தில் மக்கள் புரட்சி வெடித்ததற்கே ஒரு அர்த்தம் இருக்கிறது. ஏனென்றால் இங்கே பாலேந்திர ஷா எனும் தன்னலமற்ற மக்கள் தலைவர் இருக்கிறார் என்றும் சொல்லி வருகின்றனர். இதனால் நேபாளத்தின் புதிய பிரதமராக பாலேந்திர ஷா வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.