தெரு நாய்ச் சண்டை மன்னிக்கவும். தெருநாய்க்காக நாய்க்காதலர்கள் சிலர் நாய்போன்றேகுரைத்துவாதாடிக்கொண்டிருப்பதை தொலைக்காட்சியில் பார்த்து அலறிக் கொண்டிருக்கிறோம்.
ரேபிஸ் பயத்தை விட இப்போது சமூகப் பொறுப்பற்ற இவர்களே அச்சமூட்டும் உயிருஇகளாக உள்ளனர்.
இந்த நேரத்தில் இந்த பணக்கார நாய்களை கழுதை உதை தந்திருக்கிறீர் கமல்ஹாசன்.
நாய்களைக் காப்பாற்ற தொலைக் காட்சி வரை வந்து குரைக்கும் இந்த பணக்கார மேட்டுக்குடி நாயை விட சமூகத்திற்கு பல நன்மைகளை தனது உழைப்பால் பொதிசுமந்து களைத்து காணாமல் போன கழுதைகள் பக்கம் ஏன் தங்கள் பார்வையைத்திருப்பவில்லை என மறைமுகமாக குட்டு வைத்திருக்கிறார்.
மனித குல வரலாற்றையே மாற்றி அமைத்தன கழுதைகள் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளார்கள். அக்காலங்களில் கழுதைகள்தான் போக்குவரத்துக்கழகம், தபால் நிலையம், சலவை நிலையம். இந்த நவீன யுகத்தில்தான் காணாமல் போயிருக்கின்றன கழுதைகள்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கூட, கிராமங்களில் உப்பு வியாபாரிகள் கழுதை மேல் உப்பு மூட்டைகளை வைத்துதான் தெருத்தெருவாக சுற்றி உப்பு வியாபாரம் செய்து வருவார்கள். மலையேற்றத்திற்கு கழுதைகளைத்தான் பயன்படுத்தி வந்தார்கள்.
சலவை தொழிலுக்கும் கழுதைகள் தான் பயன்படுத்தப்பட்டு வந்தன. சின்னக்கவுண்டர் படத்தில் கூட சலவைத்தொழில் செய்யும் கவுண்டமணி கழுதைகள் வளர்த்து வருவார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு கூட தமிழ்நாட்டில் இருந்து கேரளா, ஆந்திராவுக்கு ரேசன் அரிசி கடத்தலுக்கு கழுதைகளைத்தான் பயன்படுத்தி வந்தார்கள்.
உலகம் முழுவதும் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கியப்பங்கு வகித்து வந்தன கழுதைகள். அந்தக்கழுதைகள் இப்போது கண்ணில் தென்படுவதில்லை.
நாய்களை அழிக்க வேண்டும் என்று பலரும் போராடி வரும் நிலையில், ’’தெருநாய்களை தெருநாய்கள் என்று சொல்லுவதே தவறு. இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல; எல்லா உயிர்களுக்கும் சமமானது. ஒருநாளைக்கு எத்தனையோ குற்றங்கள் நடைபெறுகின்றன. அதில் நாய்களால் வரும் பிரச்சனை என்பது டெல்லியில் 0,5%தான். அப்படி இருக்கும் போது டெல்லியில் மொத்த நாய்களையும் அழித்துவிட வேண்டும் என்று சொல்வதில் நியாயமில்லை’’ என்று சொல்லி, இயக்குநர் வசந்த் போன்று பலரும் எதிர்க்குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்த நாய்கள் விவகாரம் குறித்து கமல்ஹாசன் எம்.பியிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘’கழுதைகள் எல்லாம் காணாமல் போச்சே, நமக்காக எவ்வளவு பொதி சுமந்திருக்கு. அந்த கழுதைகள் காணாம போச்சேன்னு யாராவது கவலைப்படுறாங்களா? இப்போ கழுதைகள பார்க்க முடியலையே. யாராவது அத காப்பாத்தணும்னு பேசுறாங்களா? எல்லா உயிர்களையும் காப்பாத்தணும். எவ்வளவு முடியுமோ காப்பாத்தணும்’’ என்றார்.
நாய்களுக்காக குரல் கொடுப்பவர்கள் கழதைகளை காப்பாற்றாமல் விட்டு விட்டார்களே என்ற ஆதங்கத்தில் அவர்களைச் சாடுகிறார் கமல்ஹாசன். அதே நேரம், நாய்கள் மட்டுமல்லாது எல்லா உயிர்களையும் பாதுகாக்க வேண்டும் என்கிறார்.
அதிக உச்சம் தொடும். யுபிஎஸ் அறிக்கையின்படி, தங்கத்தின் விலை 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அவுன்ஸ் ஒன்றுக்கு 2,750 அமெரிக்க டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு தங்கத்தின் ஈர்க்கக்கூடிய 29 சதவீதம் உயர்வு, வலுவான முதலீட்டுத் தேவை, பலவீனமடைந்து வரும் அமெரிக்க டாலர் மற்றும் வளர்ந்து வரும் புவிசார் அரசியல் கவலைகள் ஆகியவை காரணமாக இருக்கிறது. 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 2,850 டாலராகவும், 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 2,900 டாலராகவும் உயரும் என்றும் யுபிஎஸ் கணித்துள்ளது. உலோகமான தங்கத்தின் தற்போதைய உயரமான தொடக்கப் புள்ளி வரவிருக்கும் மாதங்களில் ஆதாயங்களுக்கான அதிக வாய்ப்பை வழங்குகிறது. குறிப்பாக ETF தேவை துரிதப்படுத்தப்படுவதால் யுபிஎஸ் நம்புகிறது. தங்கத்திற்கான சீன தேவை குறைவதற்கான அறிகுறிகள் இருந்தபோதிலும், உள்ளூர் முதலீட்டாளர்களிடமிருந்து அடிப்படை தேவை குறைவதை விட, நாட்டின் இறக்குமதி ஒதுக்கீட்டின் சோர்வு இதற்குக் காரணம் என்று யுபிஎஸ் கூறுகிறது. பன்முகப்படுத்தப்பட்ட அமெரிக்க டாலர் மதிப்பிலான போர்ட்ஃபோலியோவிற்குள் தங்கத்தை மூல ஹெட்ஜ...
முகேஷ் அம்பானிக்கு நெருக்கடி! ஒன்றிய அரசு சமீபத்தில் வஃக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வந்தது, பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. அதற்கு ஜனாதிபதியும் உடனே ஒப்புதல் கொடுத்துள்ளார். வக்ஃபு வாரிய மசோதா நிறைவேற்றம் மத்திய அரசின் இம்முடிவுக்கு எதிராக முஸ்லிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஆனால் மசூதிகள் இருக்கும் இடத்தை பிடுங்கமாட்டோம் என்று மத்திய அரசு கூறிக்கொண்டிருக்கிறது. நாட்டில் அதிகமான மற்றும் முக்கியமான கட்டிடங்கள் இருக்கும் நிலங்கள் வஃக்பு வாரியத்திற்கு சொந்தமானதாக இருக்கிறது. கடும் விவாதத்திற்கு பின் மாநிலங்களவையில் வக்ஃபு வாரிய மசோதா நிறைவேற்றம்! - அடுத்து என்ன? அந்த நிலம் பல்வேறு காலக்கட்டங்களில் பலரின் கைகளுக்கு மாறி இருக்கிறது. அந்த வகையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி தென்மும்பையில் கட்டி இருக்கும் பல அடுக்கு சொகுசு மாளிகையான ஆன்டிலியா கட்டிடம் இருக்கும் நிலமும் வஃக்பு வாரியத்திற்கு சொந்தமானது என்று தெரிய வந்துள்ளது. இந்தியாவிலேயே மிகவும் பணக்கார வீடாக பார்க்கப்படும் முகேஷ் அம்பானியின் வீட்டின் மதிப்பு மட்டும் ரூ.15000 கோடியாகும். இந்த வீடு இருக்கும் நிலத்தை மு...
தமிழ் காமிக்ஸைப் புரட்டிப்போட்ட முத்து காமிக்ஸ்! தமிழில் காமிக்ஸ் என்றால் இரும்புக் கை மாயாவியைப் பற்றிப் பேசாமல் ஆரம்பிக்க முடியாது. இரும்புக் கை மாயாவியின் படத்தைப் பார்த்திராதவர்கள்கூட உச்சரிக்கும் மந்திரப் பெயராக அது புகழ்பெற்றிருக்கிறது. இரும்புக் கை மாயாவி ஏன் இப்படி கொண்டாடப்படுகிறது? மூன்று விஷயங்களை மட்டும் பார்ப்போம்: தமிழகத்தில் இரும்புக்கை மாயாவியின் சகாப்தம் கடந்த நாற்பதாண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்துவருகிறது. இப்போதும்கூட அதன் மறுபதிப்பைத் தேடுபவர்கள் உண்டு. சினிமா இயக்குநர்கள் பிரபு சாலமன், மிஷ்கின், ஏ.ஆர். முருகதாஸ், சிம்புதேவன் உள்ளிட்டோர் தங்களுடைய சிறுவயது இன்ஸ்பிரேஷனாக மாயாவியையே குறிப்பிடுகின்றனர். # எழுபது, எண்பதுகளில் இரும்புக்கை மாயாவியைப் போலவே தங்கக் கை மாயாவி, இரும்பு விரல் மாயாவி, தங்க விரல் மாயாவி, உலோகக் கை மாயாவி, நெருப்பு விரல் சிஐடி என ஏகப்பட்ட 'போலச் செய்யும்' கதாபாத்திரங்கள் வந்ததில் இருந்தே, இரும்புக் கை மாயாவி எவ்வளவு பிரபலம் என்பதைப் புரிந்துகொள்ளலாம். # தொடர்ந்து வந்த கதைகள் மாயாவியின் ஆளுமை, தமிழகத்தில் நிலைத்து நிற்க உதவி...