2600-க்குள் பூமி...?

இருள் கவ்விய நேரத்தில் உதவிய நண்பன் இந்தியா: இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய.

பாமகவுக்கும், அன்புமணிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது: ராமதாஸ்.
அதிமுகவின் 54வது தொடக்க நாளை ஒட்டி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு  மரியாதை.
திருவிடைமருதூர் அருகே கார் - லாரி மோதிய விபத்தில் கணவன் - மனைவி உயிரிழப்பு.
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு லாரியில் ரகசிய அறை அமைத்து கடத்திய ரூ.2 கோடி கஞ்சா பறிமுதல்: டிரைவர் உள்பட 2 பேர் கைது.
அமெரிக்காவின் தொடர் எதிர்ப்பால் ரஷ்யாவிடம் இந்தியா இனி எண்ணெய் வாங்காது: பிரதமர் மோடி உறுதி அளித்ததாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு.
தமிழ்நாட்டில் அடுக்குமாடி குடியிருப்புகளை போல தனி வீடுகளுக்கும் பார்க்கிங் கட்டாயம்: அரசு ஆணை.
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு தொடர்பாக முன்னாள் அர்ச்சகர் உன்னி கிருஷ்ணன் கைது.
கரூர் நெரிசல் படு கொலைகள் வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்தது எஸ்.ஐ.டி.












2600-க்குள் பூமிக்கு என்ன ஆகும்?

உலகின் தலைசிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரான புகழ்பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங், நமது பூமி ஒருநாள் "ஒரு மாபெரும் தீக்கோளமாக" (Giant Ball of Fire) மாறும் என்று திகிலூட்டும் கணிப்பை வெளியிட்டார். 

2017-ம் ஆண்டு டென்சென்ட் WE உச்சி மாநாட்டில் அவர் ஆற்றிய உரையில்தான் இந்த அதிர்ச்சியூட்டும் எச்சரிக்கையை விடுத்தார். 

இதற்கு காரணமாக அவர் சுட்டிக்காட்டியது 2 விஷயங்கள்தான்: கட்டுப்பாடு இல்லாத மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் அதிகரிக்கும் எரிசக்தி நுகர்வு.

தொழில்நுட்பத்தின் மின்னல் வேக வளர்ச்சி குறித்தும் ஹாக்கிங் ஆழ்ந்த கவலையைப் பதிவு செய்தார். இந்த வேகத்தில் நாம் சென்றால், மனித குலம் மெதுவாக அழிவை நோக்கித்தான் சென்றுகொண்டிருக்கிறது என்று அவர் அஞ்சினார்.

 அறிவியல் அல்லது தொழில்நுட்ப வளர்ச்சிகள் எதிர்காலத்தில் குறையும் என்றோ அல்லது நிற்கும் என்றோ நான் பார்க்கவில்லை, என்று கூறிய அவர், தற்போதைய அசுர வேக வளர்ச்சி (Exponential Growth) அடுத்த 1,000 ஆண்டுகளுக்கு நிச்சயம் நீடிக்காது என்றும் அறுதியிட்டுக் கூறினார்.

ஹாக்கிங்கின் கணிப்புப்படி, கி.பி. 2600-க்குள் நமது உலகின் மக்கள் தொகை கட்டுக்கடங்காமல் பெருகிவிடும். இதனால் ஏற்படும் உச்சபட்ச மின்சார நுகர்வு, பூமியை அப்படியே சிவந்துபோகச் செய்து, நெருப்புக் கோளம்போல் ஒளிரச் செய்யும். 

இது முற்றிலும் நீடிக்க முடியாத நிலை என அவர் ஆணித்தரமாகக் கூறினார். இந்த விகிதத்தில் மனிதர்கள் பெருகிக் கொண்டே போனால், அது அணு ஆயுதப் போர் போன்ற மாபெரும் பேரழிவுக்கு வழிவகுத்து, மனித இனத்தையே பூண்டோடு அழிக்கக்கூடும் என்றும் அந்த மாமேதை எச்சரித்தார்.

ஹாக்கிங் பட்டியலிட்ட மற்ற அச்சுறுத்தல்களில், சமீபத்திய பெருந்தொற்றுகள் (Pandemics), வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் வேற்றுகிரகவாசிகள் படையெடுப்பு ஆகியவை அடங்கும். 

குறிப்பாக, உக்ரைன் போரில் ரஷ்யா அணு ஆயுதத் தாக்குதல் பற்றிப் பேசுவதும், மத்திய கிழக்கு மோதல்களும் நடக்கும் இக்காலகட்டத்தில், அணு ஆயுதப் போர் குறித்த ஹாக்கிங்கின் எச்சரிக்கை மிகவும் ஆழமானதாக உணரப்படுகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை