400ஆண்டுகால பயணம்?

  3000ஆண்டுகால வரலாறு நீருக்கடியில்?

இத்தாலியில் உள்ள மெசானோ ஏரியின் அடியில், கி.மு. 1700 முதல் 1150 வரையிலான வெண்கலக் காலத்தைச் சேர்ந்த ஒரு 'மரக்கம்பக் கிராமத்தின்' (Stilt Village) எச்சங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இத்தாலியின் மத்தியப் பகுதியில் உள்ள மெசானோ ஏரியின் (Lake Mezzano) அடியில், 3 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மர்மம் உறங்கிக்கொண்டிருந்தது. நீருக்கடியில் உள்ள தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள், அந்த கால பயணத்தின் கதையைத் தற்போது வெளிக் கொண்டு வந்துள்ளனர்:


அதுதான், வெண்கலக் காலத்தைச் சேர்ந்த ஒரு 'மரக்கம்பக் கிராமம்' (Stilt Village)! இந்த ஏரியின் ஆழத்தில், ஒரு காலத்தில் குடியிருப்பாக இருந்த 600-க்கும் மேற்பட்ட மரக் கம்பங்கள் இன்னும் நீரின் அடியில் நிற்கின்றன.


இவை வெறும் மரத் துண்டுகள் அல்ல; ஒரு காலத்தில் ஏரியின் மீது மிதந்து கொண்டிருந்த ஒரு சமூகத்தின் அடித்தளங்கள் எனலாம்.

கி.மு. 1700 முதல் 1150 வரையிலான காலகட்டத்தில், இத்தாலியின் வாலென்டானோ அருகே, மக்கள் ஏரியின் மேற்பரப்பில் சிக்கலான மரத் தளங்களை அமைத்து அதன் மீது வசித்துள்ளனர்.


இந்த நீருக்கடி தொல்லியல் ஆய்வாளர்கள், இதுவரை 600 கம்பங்களை வரைபடமாக்கி உள்ளனர். இந்தக் கம்பங்கள் 8 அடி முதல் 32 அடி வரை வெவ்வேறு ஆழங்களில் இருப்பதால், பல நூற்றாண்டுகளாக ஏரியின் நீர் மட்டத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதைக் காட்டுகிறது. இந்த ஏரி ஒரு பண்டைய எரிமலைப் பகுதியாக இருப்பதால், அங்கிருக்கும் அடர்ந்த களிமண், இந்த மரக்கம்ப அஸ்திவாரங்களை இத்தனை ஆண்டுகாலம் 'இயற்கை நேரக் குடுவை' போலச் சேதப்படுத்தாமல் பாதுகாத்துள்ளது.



இந்த ஆய்வில் கிடைத்திருக்கும் வெண்கலப் பொருள்கள் தான் மிகவும் சுவாரசியமானவை. ஏரியின் அடிப்பகுதி களிமண்ணால் மூடப்பட்டு இருந்ததால், 25-க்கும் மேற்பட்ட வெண்கலப் பொருள்கள் ஆச்சரியப்படும் வகையில் சேதமின்றிப் பாதுகாக்கப்பட்டுள்ளன.


விளிம்புகள் கொண்ட கோடாரிகள், ஈட்டி முனைகள், அரிவாள்கள், அழகிய ஆபரணங்கள் மற்றும் வெண்கல ஊசிகள் ஆகியவை இதில் அடங்கும்.

வெண்கல கட்டிகள் (Bronze Ingots) கண்டுபிடிக்கப்பட்டது, இந்தக் கிராமம் ஒரு அமைதியான குடியேற்றமாக இல்லாமல், வெண்கலப் பொருள்களை உற்பத்தி செய்து, வர்த்தகம் செய்யும் ஒரு சுறுசுறுப்பான மையமாக இருந்திருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது.

ஆனால், இந்தக் கிராமம் ஏன் கைவிடப்பட்டது? ஆராய்ச்சியாளர்களை இதுவே பெரிய குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. நெருப்பின் அடையாளம்: இந்தக் வெண்கலப் பொருள்களில் பல தீயில் கருகியதற்கான அறிகுறிகளைக் காட்டுகின்றன. இடிபாடுகளில் எரிமலைக் கற்கள் சிதறிக் கிடப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இது ஒரு பயங்கரமான தீ விபத்தினால் கிராமம் அழிந்ததா, அல்லது ஒரு மாபெரும் எரிமலை நிலச்சரிவால் அவசரத்தில் மக்கள் தங்கள் உடைமைகளை விட்டுவிட்டுத் தப்பிச் சென்றார்களா என்ற கேள்விகள் எழுகின்றன. ஒருவேளை, எரிமலை, வெள்ளம், தீ ஆகிய மூன்றும் சேர்ந்து இந்தக் கிராமத்தின் முடிவுக்குக் காரணமானதா என்றும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.


இத்தாலியின் நீருக்கடி தொல்லியல் ஆய்வுகளுக்கு ஒரு முக்கியத் தளமாக உருவாகியுள்ள மெசானோ ஏரி, வெண்கலக் கால மக்களின் வாழ்க்கை முறை, அவர்களின் பொறியியல் திறன்கள் மற்றும் இயற்கைப் பேரழிவுகளுக்கு அவர்கள் எவ்வாறு பலியானார்கள் என்பதற்கான புதிய சாட்சியங்களை ஒவ்வொரு நாளும் அளித்துக் கொண்டிருக்கிறது.

400 ஆண்டுகால விண்வெளி பயணம்!

விண்வெளி வீரர்களை அல்லாமல், சுமார் 1,000 மனிதர்களைக் கொண்ட நாகரிகத்தையே சுமந்து செல்வது இதன் நோக்கம்.


இது 4.2 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புரோக்சிமா செண்டாரி பி என்ற கோளை நோக்கிச் சுமார் 400 ஆண்டுகள் பயணிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரு முறை பயணம், நோ ரிட்டன்... 400 ஆண்டுகால பயணத்திற்குத் தயாராகும் ராட்சத விண்கலம்!

மனிதகுலம் பூமியிலிருந்து தப்பிச் செல்வதை பற்றி யோசித்தால், முதலில் நினைவுக்கு வருவது செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் சின்னஞ்சிறிய, அதிவேக ராக்கெட்டுகள்தான்.


ஆனால், விஞ்ஞானிகள் ஒரு சவாலான புதிய திட்டத்தை முன்வைத்துள்ளனர்: அது மிகப்பெரியது, மிக மெதுவாகப் பயணிப்பது, மேலும் ஒருமுறை கிளம்பினால் திரும்பவே வராது.


அதுதான் 'கிறிசாலிஸ்' (Chrysalis). இது 2.4 பில்லியன் டன் எடையுள்ள, மன்ஹாடன் தீவை விட நீளமான 'ஜெனரேஷன் விண்கலம்' (Generation Ship). இது விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்ல அல்ல, மாறாக ஒரு நகரத்தையே சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


பூமிக்கு மிக அருகில் இருக்கும் நட்சத்திரமான புரோக்சிமா செண்டாரி பி (Proxima Centauri b). இது 4.2 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இந்த பயணத்தை முடிக்கக் கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் ஆகும். சுமார் 1,000 மனிதர்கள்.


அவர்களுடைய இந்த விண்கலத்திலேயே பிறந்து, வளர்ந்து, இறந்து போவார்கள். இதில் பிறந்தவர்கள் யாரும் பூமியைப் பார்க்க மாட்டார்கள்.


அவ்வளவாக பெரிய விண்கலம் மெதுவாகச் சுழலும் போது, உள்ளே வசிப்பவர்களுக்கு எந்தவிதமான உடல்நலக் குறைவும் ஏற்படாமல் இருக்க, செயற்கை ஈர்ப்புவிசையை (Artificial Gravity) உருவாக்குகிறது.


செயற்கை ஈர்ப்புவிசையை உருவாக்க, விண்கலத்தின் மையப்பகுதி தொடர்ச்சியாகச் சுழலும் சிலிண்டர்களைக் கொண்டிருக்கும். பூமியின் இயற்கையான சூழலை உருவகப்படுத்தும் பிரம்மாண்டமான இடங்கள் இருக்கும். இங்குதான் உணவு உற்பத்தி, கழிவு மறுசுழற்சி, நீர் சுழற்சி அனைத்தும் நடைபெறும்.

ஆண்டு விழாக்கள், விண்மீன்களைப் பார்ப்பதற்காக 130 மீட்டர் உயரமுள்ள 'விண்வெளி குவிமாடமும்' இருக்கும். செயற்கை நுண்ணறிவு (AI), ரோபோக்கள், மற்றும் மனிதர்கள் இணைந்து வாழ்க்கைத் தேவைகள், நிர்வாகம் மற்றும் கல்வியைக் கவனித்துக் கொள்வார்கள்.


சுருக்கமாகச் சொன்னால், இது வெறும் விண்கலம் அல்ல; இது விண்வெளியில் நகரும் ஒரு கலாச்சாரம்!

இவ்வளவு பிரம்மாண்டமான கப்பலை பூமியில் கட்டவே முடியாது.


எனவோ, இந்தக் கட்டுமானம் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள நிலையான ஈர்ப்புவிசைப் பகுதியான லாக்ரேஞ்ச் புள்ளி 1 (L1)-இல் விண்வெளியிலேயே நடைபெறும். விண்வெளியில் கட்டுமானத்திற்குத் தேவையான அனைத்து சூரிய ஒளியும், குறைவான ஈர்ப்புவிசையும் இந்தப் புள்ளியில் கிடைப்பதால், இதுவே ஏவுதளமாகவும் செயல்படும்.


ஆனால், இந்தப் பயணத்திற்கான மனிதர்களைத் தயார் செய்யும் திட்டம் மிகவும் ஆச்சரியமானது.


விண்கலம் ஏவுவதற்கு முன்பு, தேர்ந்தெடுக்கப்பட்ட குழு உறுப்பினர்கள் பல தசாப்தங்களுக்கு அண்டார்டிகாவில் தனிமைப்படுத்தப்பட்டு வாழ்வார்கள். விண்வெளியில் நீண்ட காலம் அடைபட்டிருப்பதால் ஏற்படும் சமூக மற்றும் உளவியல் சவால்களைச் சமாளிக்க இந்தக் கடுமையான தனிமைப் பயிற்சி அவசியம்.


'கிறிசாலிஸ்' திட்டம், வெறும் பொறியியல் சவால்களை மட்டும் கொண்டதல்ல. அது நம்மை ஒரு முக்கியமான கேள்வியையும் சிந்திக்க வைக்கிறது. 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை