கூட்டணிக்கு கட்சிகள் தேவை!

 தமிழ்நாட்டில் திருவள்ளூர், கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழை. இன்று நீலகிரி, ஈரோடு, வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் அடுத்த வாரம் தொடங்க வாய்ப்பு. முதல் புயல் சின்னம் வரும் 22-ம் தேதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு
ஒரே நாளில் அடுத்தடுத்து 47 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை. மீனவர்களை விடுவிக்க, இலங்கை அரசிடம் ஒன்றிய அரசு வலியுறுத்த முதலமைச்சர் கோரிக்கை
நாமக்கலில் எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் அதிகரித்த தவெக கொடி. அதிமுக - பாஜக கூட்டணி அமைத்ததில் என்ன தவறு என்று எடப்பாடி கேள்வி
நாளுக்கு நாள் விறுவிறுவென உயரும் தங்கம் விலை. நகை வாங்குவது கனவாக மாறிவிட்டதாக பொதுமக்கள் கவலை
கரூர் நெரிசல் குறித்து விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு எதிராக தவெக தாக்கல் செய்த மனு. உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
மத்தியப் பிரதேச போலீஸாரின் விசாரணை வளையத்தில் கோல்ட் ரிஃப் இருமல் மருந்து நிறுவன உரிமையாளர். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அழைத்துச் சென்றனர்.
திருவண்ணாமலையில் ரேபிஸ் பாதித்து சிகிக்சை பெற்று வந்த நபர் உயிரிழப்பு. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணம். 
இங்கிலாந்து உடனான வர்த்தகத்தை இருமடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயம். கெய்ர் ஸ்டார்மர் உடனான சந்திப்புக்கு பிறகு பிரதமர் மோடி அறிவிப்பு
கேரள மாநிலம் மலப்புரத்தில் சாலையோர தேநீர் கடையில் வெடித்த சிலிண்டர். கண்ணூரில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு
தென்மேற்கு பருவ மழைக்காலத்தில் கடும் பாதிப்பை சந்தித்த ஜார்க்கண்ட். இந்த ஆண்டில் மழை மற்றும் மின்னல் தாக்கி 458 பேர் உயிரிழப்பு
பீகாரில் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி.
மருத்​து​வம், இயற்​பியல், வேதி​யியல், இலக்​கி​யம், அமை​தி, பொருளா​தா​ரம் ஆகிய துறை​களில் சாதனை படைப்​போருக்கு ஆண்​டு​தோறும் நோபல் பரிசு வழங்​கப்​படு​கிறது.ஹங்கேரி நாட்டைச் சேர்ந்தலாஸ்லோக்ராஸ்னாஹோர்காய்க்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணிக்கு கட்சிகள் தேவை!

ரம்பத்தில் இருந்தே வலுவான – பிரம்மாண்ட கூட்டணியை அமைப்பேன் என்று அழுத்தமாகச் சொல்லி வருகிறார் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி. 

 தவெக தங்கள் அணியில் இணையும் என்பதை மனதில் வைத்துதான் இப்படி சொல்கிறார் என்று பேச்சு பரவியது.  அதற்கேற்றார் போல் அதிமுகவுடன் தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்கிற தகவலும் பரவியது.

ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்கிற விஜயின் பிடிவாதத்தால், பழனிசாமி அதற்கு ஒப்புக்கொள்ளாததால் கூட்டணி அமைவதில் இழுபறி ஏற்பட்டது. 

 இந்த இழுபறி நீடித்து வந்ததால் இது சரிப்பட்டு வராது என்கிற முடிவுக்கு வந்து பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் பழனிசாமி.

தவெக தனித்து போட்டியிடுவதாகவே அக்கட்சித் தலைவர் விஜய் சொல்லி வந்தார்.  கரூர் சம்பவத்திற்கு பின்னர் எல்லாமே தலைகீழாக மாறிப்போய்விட்டது.   கரூர் சம்பவத்தில் தவெக பக்கம் நின்றார் பழனிசாமி.   

இதனால் தவெகவினரின் ஆதரவு அவருக்கு கிடைத்திருக்கிறது.  தருமபுரி மற்றும் நாமக்கல் மாவட்ட பிரச்சாரங்களின் போது தவெகவினர் கட்சிக்கொடியுடன் பழனிசாமியின் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று பரபரப்பை ஏற்படுத்தினர்.

குமார பாளையத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்திலும் தவெக கொடிகள் பறந்தன.  இதைப்பார்த்துதான் பழனிசாமி பரவசமானார்.

’’அண்ணா திமுக தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி வலுவான கூட்டணியாக அமையும்’’ என்று    சொன்ன பழனிசாமி, கூட்டத்தில் பறந்த தவெக கொடியை சுட்டிக்காட்டி, ‘’அங்க பாருங்க கொடி பறக்குது..பிள்ளையார் சுழி போட்டாங்க.. எழுச்சி ஆரவாரம்..’’ என்று சொல்லிவிட்டு சிரித்தார்.

தவெகவை தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக மேலிடம் விஜயிடம் பேசிவருவதாக தகவல் பரவும் நிலையில்,  அதிமுக – தவெக கூட்டணி அமையப்போகிறது என்பதை சூசகமாக சொல்லி விட்டார் பழனிசாமி.

’’பாஜகவுக்கு புதிய அடிமைகள் கிடைக்கும். எத்தனை அடிமைகள் வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது’’ என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சொல்லி இருப்பதன் மூலம், அவர் சொன்ன அந்த புதிய அடிமை  தவெகவென்று தெரிகிறது  என்கிற பேச்சு எழுந்திருக்கிறது.

கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டும் என்கிற நம்பிக்கையில், பழனிசாமியின் பிரச்சாரக் கூட்டங்களில் அதிமுகவினரே தவெக கொடிகளை ஏந்தி பரபரப்பை ஏற்படுத்துவதாக தகவல். தவெக தரப்பில் இருந்தும் இதற்கு மறுப்பு எதுவும் இல்லாததால் கூட்டணிக்கு அவர்களும் கிரீன் சிக்னல் காட்டுவதாகவே தெரிகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை