நடந்தவை எல்லாமே சிறப்பு?

 தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டு மசோதாக்களை தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். 2025-26ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கை இன்று தாக்கல்.

வேலூர் மாவட்டத்தில் கொட்டிய மழையால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர். குடியாத்தம் அருகே ஏரி நிரம்பி ஊருக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் பாதிப்பு.

நாளைய தினம் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல். நீலகிரி, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு.

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்தது உச்சநீதிமன்றம். மாநில அரசின் உரிமையை அமலாக்கத்துறை பறிக்கப் பார்க்கிறதா என்றும் சரமாரி கேள்வி.

கோல்ட்ரிப் உள்பட 3 இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
தீபாவளி தினத்தன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழ்நாடு அரசு அனுமதி. அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது எனவும் கட்டுப்பாடு.
இன்ஸ்டாகிராமில் இளம் வயதினர் கணக்குகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த மெட்டா.
கனமழை எச்சரிக்கை,நெல்லை திருமலை நம்பி,சதுரகிரி மலை கோயில்களுக்கு செல்ல தடை.
தமிழகம், கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஏடிஎம் கொள்ளை வழக்கு 4 பேருக்கு 24 ஆண்டு சிறை தண்டனை: இருவருக்கு 12 வருடம் ஜெயில், திருச்செங்கோடு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
குன்னூர் அருகே கும்பாடியில் பாறைகள் உருண்டு சாலையில் விழுந்ததால் பரபரப்பு: கேரள அரசுப் பேருந்து சேதம்.




நடந்தவை எல்லாமே சிறப்பு?

ரூரில் நடிகர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிர்ப்பலியான விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்கும் என்றும், உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சரியா அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது. 

இது இடைக்கால உத்தரவு என்றும் தெரிவித்துள்ளது. கரூர் உயிர்ப்பலிகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை இதன்காரணமாக இனி நடைபெறாது.

 சிறப்பு புலனாய்வுக் குழு இதுவரை விசாரித்த விவரங்களையும், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை விவரங்களையும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றங்கள் பல தீர்ப்புகளை வழங்குகின்றன. அவற்றை சட்டவல்லுநர்கள் ஆராய்ந்து கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள். சென்னை உயர்நீதிமன்றத்தின் எல்லைக்குட்பட்டதாக கரூர் வழக்கு இல்லையென்றும், சிவில் வழக்கை கிரிமினல் வழக்காக பதிவு செய்து விசாரித்தது குறித்தும் உயர்நீதிமன்ற பதிவாளரை பதிலளிக்க உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் உத்தரவில் இருந்த பல கருத்துகள் குறித்து கண்டனக் கருத்துகளையும் தெரிவித்திருக்கிறது. 

அதே நேரத்தில், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 5 மனுக்களில் இரண்டு பேர், அதுவும் கரூர் நெரிசலில் உயிர்ப்பலியானவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர், தாங்கள் இந்த மனுவைத் தாக்கல் செய்யவில்லையென்றும், தங்களிடம் நிவாரணம் வழங்குவதாகக்கூறியும், வேலை வாங்கித் தருவதாகக் கூறியும் கையெழுத்து வாங்கிவிட்டார்கள் என்று தெரிவித்திருப்பது அதிர்ச்சிக்குரியதாக இருக்கிறது. 

இது குறித்து, தேவைப்பட்டால் சி.பி.ஐ. விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பளித்த நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மிக முக்கியமான வழக்கு குறித்து அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்தது குறித்தும் உச்சநீதிமன்றம் தன் கருத்துகளைப் பதிவு செய்துள்ளது. 

இது குறித்து விளக்கும் சட்ட வல்லுநர்கள், “இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சிக் கூட்டத்திலும் இப்படியொரு நெரிசல் ஏற்பட்டு உயிர்ப்பலிகளானதில்லை. இது மிகவும் கொடூரமான நிலவரம். 

கூட்டம் நடத்திய தலைவர் உள்பட அவரது கட்சியை சார்ந்த யாரும், இந்த நெரிசலுக்கும் உயிர்ப்பலிகளுக்கும் பொறுப்பேற்காமல் பொறுப்பற்றத்தனமாக இன்று வரை உள்ளதுடன், காவல்துறை மீதும், அரசு மீதும், மருத்துவர்கள்-ஆம்புலன்ஸ் செயல்பாடுகளுக்கு உள்நோக்கம் கற்பித்தும் திட்டமிட்டுப் பரப்பிய சதிக்கோட்பாடுகள் அதிவேகத்தில் பரவிய நிலையில், மக்களிடம் தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டியது அதிகாரிகள் கடமையாகும்.

 அதனால்தான் வீடியோ ஆதாரங்களுடனும், மற்ற புள்ளிவிவரங்களுடனும் தங்கள் விளக்கங்களை அளித்தனர். அதனை செய்யாமல் விட்டிருந்தால், தமிழ்நாட்டில் பதற்றம் அதிகமாகி, நிலைமை மேலும் மோசமாகியிருக்கும். 

அந்த வகையில் அரசு அதிகாரிகள், காவல்துறையினர் தங்கள் கடமையை செய்திருக்கின்றனர் என்ற கோணத்தில் இதனை அணுகவேண்டும்” என்கின்றனர்.

உச்சநீதிமன்ற உத்தரவில், சி.பி.ஐ.க்கு எல்லா வசதிகளையும் அதற்குரிய செலவுகளையும் தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அத்துடன், சி.பி.ஐ.க்கு ஒத்துழைப்பாக இரண்டு ஐ.பி.எஸ். அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும், அவர்கள் தமிழ்நாட்டு கேடரை சேர்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டை சொந்த மாநிலமாகக் கொண்டவர்களாக இருக்கக்கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பணியாற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளில் கேடர் அதிகாரிகள், தமிழ்நாட்டு அதிகாரிகள் என்று பிரித்திருப்பது புதுவகை அணுகுமுறையாக இருப்பது  குறித்து வழக்கறிஞர் அருள்மொழி தன் கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.

 “இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில், இது இந்த சமூகம் சார்நத வழக்கு. அதனால் இந்த இந்த சமூகத்தைச் சேர்ந்த நீதிபதிகள்தான் இருக்கவேண்டும். இந்த இந்த சமூகத்து நீதிபதிகள் இருக்கக்கூடாது என்று உத்தரவிடும் நிலைகூட வருமா?” என்கிற கோணத்தில் அவருடைய கருத்து அமைந்துள்ளது.

மூத்த வழக்கறிஞர் கே.எஸ்.விஜயன், “கரூர் நெரிசல் சம்பவத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றியது சிறப்பான உத்தரவல்ல. உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி குழு கண்காணிக்கம் என்பதெல்லாம் சற்று மிகையாக உள்ளது” என கருத்து தெரிவித்துள்ளார். 

ஒரு தீர்ப்பு அல்ல உத்தரவு குறித்து சட்டரீதியான பார்வையுடன் பல கருத்துகள் வெளிப்படுவது இயல்பு. உச்சநீதிமன்ற அமர்வின் உத்தரவு என்பதால், அந்த உத்தரவின்படிதான் இனி விசாரணை நடைபெறும்.

இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி வழக்கில் இதைவிட பல கட்டுப்பாடுகள் இருந்தன. சி.பி.ஐ கோர்ட் விசாரணையை உச்சநீதிமன்றமே நேரடியாக கண்காணிக்கும் என்று உத்தரவிடப்பட்டது.

 அந்த வழக்கின் தீர்ப்பை நாடறியும். கரூர் நெரிசல் உயிர்ப்பலி வழக்கிலும், இறுதி உத்தரவில் தீர்ப்புகள் திருத்தப்படலாம்.


யார் இந்த நீதிபதி. அஜய் ரஸ்தோகி

2021 கரோனா தொற்றுநோய் காலத்தில் யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுக்கான கடைசி வாய்ப்பு இருந்தவர்கள் தங்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்க கோரிய தேர்வர்களின் மனுவை, 'இதில் நாடாளுமன்றத்துக்கே அதிகாரம்' என்று கூறி நிராகரித்தார்.

2022ல் குஜராத் கலவரத்தின்போது பில்கிஸ் பானு என்று கர்ப்பிணி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அவரது 3 வயது குழந்தை உள்பட குடும்பத்தினர் 7 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில், குற்றவாளி ஒருவரின் முன்கூட்டிய விடுதலையை பரிசீலனை செய்யுமாறு குஜராத் அரசுக்கு உத்தரவிட்ட 3 நீதிபதிகளில் அஜய் ரஸ்தோகியும் ஒருவர். இவரது உத்தரவின் அடிப்படையிலேயே இந்த வழக்கில் 11 குற்றவாளிகளையும் குஜராத் அரசு விடுவித்தது. பின்னர் இந்த வழக்கில் நீதிபதி பி.வி. நாக ரத்னா குற்றவாளிகளின் விடுதலையை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

கருப்புப் பை மர்மம்?

ரம்பத்தில் இருந்தே கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சொல்லி வந்த  தவெக, தாங்கள் நினைத்தது மாதிரியே சிபிஐ விசாரணையை பெற்றுவிட்டனர்.   ஆனால், அதிமுகவின் தயவால் போலியான கையெழுத்துகளால் சம்பந்தப் பட்டவர்களின் அனுமதி இல்லாமல் சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்டது அம்பலமாகி இருக்கிறது.  சிபிஐ விசாரணையில் இது உறுதியானால் யானை தன் தலைமேலேயே மண்ணை வாரி இறைத்துக்கொண்ட கதையாகிவிடும் நிலை இருக்கிறது.

இது ஒரு புறமிருக்க, சிபிஐ விசாரணையில் விஜயின் கை பேக்கினையும் சோதனை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்திருக்கிறது.

கர்ணனுக்கு கவசம் குண்டலம் மாதிரியே எங்கு சென்றாலும் ஒரு கருப்பு நிற பேக்குடனேயே செல்கிறார் விஜய்.   நாமக்கல் பரப்புரையின் போது விஜய் உளறிக்கொட்டியதற்கும் இந்த பேக்கிற்குள் இருக்கும் சமாச்சாரம் தான் காரணம் என்கிறார்கள்.

’’விஜய தன்னோடு கொண்டு செல்லும் கருப்பு பையில் என்ன இருக்கிறது எனப்பல தகவல்கள் சொல்லப்படுகிறது. அதில் ஆபத்தான ஒரு தகவலும் வந்து சேர்ந்துள்ளது. சிபிஐ இதையும் விசாரிக்க வேண்டும்.

அந்தப்பையில் பல லட்சம் விலை உயர்ந்த மதுபானம் இருப்பதாகவும், அதை குடித்தால் மட்டுமே அவரால் செயல்பட முடியும் என்றும் சொல்கிறார்கள்.  அவரால் குடிக்காமல் இருக்கவே முடியாது என்றும், அதை குடித்துவிட்டு தான் நாமக்கல் கூட்டத்தில் உளறிக் கொட்டினார் என்பதும் தகவல்.  மேலும் கரூர் கூட்டத்திற்கு வரும் முன்னர் விளக்கை அணைத்துவிட்டு உள்ளே சென்றதும், குடிப்பதற்காகத்தான் என்பது கூடுதல் தகவல்.

குடிப்பது ஒருவரின் தனிப்பட்ட விசயமாக கூட இருக்கலாம். ஆனால் மக்கள் மத்தியில் பேச வரும் ஒருவர் நிதானமிழந்து பேசினால் வரும் எதிர் விளைவுகள் மோசமானதாகும்.

அவரது மேடைப்பேச்சுகள் எதுவுமே நிதானமானதாக இதுவரை இல்லை.   அவர் மீது குடித்துவிட்டு பேசுகிறார் என்ற குற்றச்சாட்டு தவறு என்றால்,

விஜய் தன்னை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள தயாரா என்பது, அவர் குடித்துவிட்டு உளறுகிறார் என்ற குற்றச்சாட்டை வைப்பவர்களின் கேள்வியாக இருக்கிறது.

விஜய்க்கு கட்டுப்படுத்த முடியாத குடிப்பழக்கம் இருக்கிறதென்றால், அவரது உடல்நலத்தைக் கணக்கில் கொண்டு சொல்வது ஒன்று தான்.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்.   குடித்துவிட்டு வாகனம் மீது ஏறி நின்று பேசாதீர்’’ என்கிறார் எழுத்தாளர் சூர்யா சேவியர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை