தாங்கள் நடுநிலை எனக் கூறிய ஊடகவியலாளர்களும் தங்களை நடுநிலைத் தவறாத பத்திரிகைகள் என்று கூறிக் கொண்டிரிந்தவர்களும் இன்றையதினம் அம்பலப் பட்டுப் போயுள்ளார்கள்.
தொடர்ந்து வந்த இக் குற்றசாட்டு தற்போது நடிகர் விஜய்,கரூர் நிகழ்வுக்குப் பின்னர் சமூக வலைதளங்கள் வளர்ச்சியினால் பல ஊடகத்தினர்,நடுநிலை பத்திரிகைகள்,தொலைக்காட்சியினரை பகிரங்கப் பட்டுவிட்டனர்.
குறிப்பாக புதியதலைதுறை,பாலிமர்,தந்தி தொலைகாட்சிகள் அசிங்கப் பட்டுவிட்டன்.
பல ட்ரோன் களைப் பறக்கவிட்டு செய்திகளை விஜய் வீட்டில் புறப்பட்டதிலிருந்து நேரலை செய்த இத் தொலைகாட்சிகள் விஜய் புகழ் பாடுவதில் நேத்தை வீண்டித்தனரே ஒழிய ட்ரோன்கள் மூலம் மேலிருந்தும்,எல்லா நிலைகளிலும் ஒளிப்பதிவு செய்த இவர்கள் கூட்டத்தில் மயங்கி விழுந்தவர்கள்,மூச்சு விமுடியால் உயிருக்குப் போராடியவர்கள் செய்திகளை உடனே தங்கள் ஒளிபரப்பில் காண்பித்திருந்தால் நடிகர் விஜய்,ரசிகர்கள்,கூட்ட ஏற்பாட்டாளர்கள்,குறிப்பாக காவல் துறையினர் ஏதாவது நடவடிக்கை எடுக்க முடிந்திருக்கும் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம்.
எங்களுக்கு எப்படி தெரியும் எனத் தப்பிக்க முடியாது.பலி விபத்துக்குப் பின் வெளியான
அது தொடர்பான காணொலிக்காட்சிகள் அனைத்தும் அதே ட்ரோன்களால் எடுக்கப் பட்ட காட்சிகள்தான்.
ஆக இத்தனை உயிர்கள்பலியாக தொலைக் காட்சிகளிட் விஜய் காட்சி எடுக்கும் டி.ஆர்.பி.வெறிதான்.
செய்தியை நடுநிலையுடன் தராத பக்கசார்புதான்.
உண்மையை உள்ளபடி தரும் நேர்மை இல்லாத ஊடகவியல்தான்.
உண்மையைச் சொல்ல வேண்டியதுதான் ஊடகங்களின் கடமை. நடுநிலையாக இருக்கிறோம் என்று சொல்கிற ஊடகங்களும், அதில் உள்ள ஊடகர்களும் உண்மைக்கு நேரெதிரான திசையில் பயணிப்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அச்சுப் பத்திரிகைகள் மட்டுமே இருந்த காலத்திலிருந்தே இதுதான் உண்மை என்பது கொஞ்சம் கசப்பாக இருந்தாலும், அந்த உண்மையை மறைக்க முடியாது.
சுதந்திரப் போராட்டக் காலத்திலிருந்தே பிரிட்டிஷ் பக்கம் நிற்பதா, காந்தி பக்கம் நிற்பதா என்று ஊடகங்களுக்கு ஊசலாட்டம் இருந்தது. யார் எந்தப் பக்கம் நின்றார்கள் என்பது அவரவர் விருப்பத்தையும் சூழலையும் பொருத்ததாக அமைந்தது. காந்தியை ஆதரித்து, காங்கிரஸ் செய்திகளை வெளியிட்டவர்கள்கூட அந்தந்த மாநிலத்தில் ஒரே கட்சிக்கும் எதிரும் புதிருமாக நின்ற இரண்டு தலைவர்களில் ஒருவரை ஆதரித்து, மற்றவரை மட்டம் தட்டுவதைத் தங்களின் வாடிக்கையாகக் கொண்டிருந்தார்கள்.
நீதிக்கட்சி என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 1916ல் உருவாகி, பிராமணரல்லாதார் அறிக்கையை வெளியிட்டபோது, புகழ்பெற்ற இந்து பத்திரிகை அந்த இயக்கத்தையும் அதன் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்தது. மற்றொரு பிரபல பத்திரிகையாக இயங்கி வந்த மெயில் பத்திரிகை நீதிக்கட்சித் தலைவர்களின் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது.
சுதந்திர இந்தியாவிலும் பத்திரிகைகள் அதே போக்கையே கடைப்பிடித்தன. ஒரு பத்திரிகையின் வாசகர்கள் ஏதேனும் ஒரு தரப்பின் ஆதரவாளர்களாக இருந்தார்கள் என்றால், மற்றொரு பத்திரிகை அதற்கு நேர் எதிரான தரப்பின் வாசகர்களுடைய ஆதரவைப் பெறுவதற்கேற்ற செய்திகளை வெளியிடும் போக்கு தொடர்ந்து நிலவியது. திராவிடக் கட்சிகள் உருவான போது, பெரிய பத்திரிகைகள் அந்த இயக்கங்களின் செய்திகளை இருட்டடிப்பு செய்து, திராவிட இயக்கத்தினர் எவற்றை விமர்சிக்கிறார்களோ அவற்றைப் புனிதமாகக் கட்டமைத்து, மக்களிடம் அவை பற்றிய பிரமிப்பை உருவாக்கும் வேலைகைளைத் தொடர்ந்து செய்து வந்தன. திராவிட இயக்கத் தலைவர்கள் மாபெரும் மாநாடுகளை நடத்தினால், அவை பற்றி பெயரளவுக்கு பெட்டிச் செய்தி ஒன்றை வெளியிட்டு, தங்களை நடுநிலை என்று காட்டிக் கொண்டன.
இந்த ‘நடுநிலை’ முகமூடிகளை திராவிட இயக்கத்தினர் தங்கள் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக நடத்திய இயக்கப் பத்திரிகைகளும், கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் நடத்திய பத்திரிகைகளும் அம்பலப்படுத்தின. பிறப்பாலேயே தங்களுக்குப் புகழ் உண்டு என்று கருதிக்கொண்டு செயல்பட்ட பிரபல நடுநிலை ஏடுகள் பலவற்றின் யோக்கியதை என்ன என்பதை கட்சிப் பத்திரிகைகள்தான் மக்களிடம் விளக்கின. இந்த உண்மையை ஏற்கவும் கசப்பாகத்தான் இருக்கும் என்றாலும், அதை மறைக்க முடியாது.
அச்சுப் பத்திரிகைகள் மட்டுமே இருந்தவரை, கட்டுரையாளரின் பெயர் மட்டுமே வாசகர்களுக்குத் தெரியும். காட்சி ஊடகங்களான தொலைக்காட்சிகள், இணையதளங்கள் ஆகியவை உருவான பிறகு பத்திரிகை முதலாளிகள், அதில் பணியாற்றும் ஊடகர்கள் தங்கள் முகத்தைக் காட்டும் நிலைமை உருவானது. உண்மையை சொல்வதைவிட, தங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை நியாயம் போல விளக்குவதே காட்சி ஊடகர்களின் முதன்மையான நோக்கமாக அமைந்தது. தங்களை சினிமா ஹீரோக்கள்போல கருதிக் கொண்டார்கள். நான்கு பேர் அவர்களைப் பொதுவெளியில் அடையாளம் கண்டு கொண்டு கைக்குலுக்குவது, ஆட்டோகிராப் வாங்குவது, செல்ஃபி எடுப்பது என்றானவுடன் அவர்களுக்குத் தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் உருவாகிவிட்டது. தலைக்குள் ஒன்றும் இல்லாவதர்கள்கூட ஒளிவட்டத்துடன் அலையத் தொடங்கினர்.
தாங்கள் இல்லாவிட்டால் மக்களுக்கு எந்த உண்மையும் தெரியாது என்பதாக நினைத்துக்கொண்டு, மக்கள் அறிந்த உண்மைகளையும், மக்கள் அறிய வேண்டிய உண்மைகளையும் மறைத்து, தாங்கள் யாருக்கு சாதகமாக செயல்படுகிறார்களோ அவர்களுக்கான ஊடகர்களாக மாறிய அவலமும் தொடங்கியது. அதுவே இப்போதும் தொடர்கிறது. கட்டுரையாக எழுதி வந்தபோது, அதைப் படித்த வாசகர்களின் சிந்தனையில் புதிய கருத்துகள் உருவாகின. காட்சியாகக் காட்டும்போது அவை மக்களின் மனதை ஈர்த்துவிடுகின்றன. சிந்தனைக்கான வாய்ப்பு குறைவாகிவிடுகிறது.
இன்றைய எடிட்டிங் வசதிக்கேற்ப எதைக் காட்டுவது, எதைத் தவிர்ப்பது, எதை முன்னிலைப்படுத்துவது, எவரை பிரம்மாண்டப்படுத்துவது எனத் திட்டமிட்டு செய்யும் ஊடகர்களாலும் ஊடக நிறுவனங்களாலும் உண்மைகள் பல அடி ஆழக்குழிகளில் புதைக்கப்படுகின்றன. ஆனால், இவர்கள் தங்களை நடுநிலை என்று சொல்லிக்கொண்டு இத்தகைய வேலைகளை செய்துவருகிறார்கள்.
அறம் என்பார்கள். நேர்மை என்பார்கள். வார்த்தைகளுக்கு பல வண்ணம் பூசுவார்கள். அவையனைத்தும் தங்களை முன்னிறுத்திக்கொள்வதற்காகத்தான். இந்த புனிதக்கட்டமைப்பும் ஒளிவட்டமும் ஒரு நாள் உடைந்துபோகும் நீர்க்குமிழி என்பதை உணராமல் செய்பவர்கள் ஒருநாள் வசமாகி சிக்கிக்கொள்ளும் போது, அவர்களின் பிம்பம் சிதைந்து, இவ்வளவுதான் இவர் என்று சின்னாபின்னமாக்கிவிடுகிறது காலம்.
முகேஷ் அம்பானிக்கு நெருக்கடி! ஒன்றிய அரசு சமீபத்தில் வஃக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வந்தது, பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. அதற்கு ஜனாதிபதியும் உடனே ஒப்புதல் கொடுத்துள்ளார். வக்ஃபு வாரிய மசோதா நிறைவேற்றம் மத்திய அரசின் இம்முடிவுக்கு எதிராக முஸ்லிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஆனால் மசூதிகள் இருக்கும் இடத்தை பிடுங்கமாட்டோம் என்று மத்திய அரசு கூறிக்கொண்டிருக்கிறது. நாட்டில் அதிகமான மற்றும் முக்கியமான கட்டிடங்கள் இருக்கும் நிலங்கள் வஃக்பு வாரியத்திற்கு சொந்தமானதாக இருக்கிறது. கடும் விவாதத்திற்கு பின் மாநிலங்களவையில் வக்ஃபு வாரிய மசோதா நிறைவேற்றம்! - அடுத்து என்ன? அந்த நிலம் பல்வேறு காலக்கட்டங்களில் பலரின் கைகளுக்கு மாறி இருக்கிறது. அந்த வகையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி தென்மும்பையில் கட்டி இருக்கும் பல அடுக்கு சொகுசு மாளிகையான ஆன்டிலியா கட்டிடம் இருக்கும் நிலமும் வஃக்பு வாரியத்திற்கு சொந்தமானது என்று தெரிய வந்துள்ளது. இந்தியாவிலேயே மிகவும் பணக்கார வீடாக பார்க்கப்படும் முகேஷ் அம்பானியின் வீட்டின் மதிப்பு மட்டும் ரூ.15000 கோடியாகும். இந்த வீடு இருக்கும் நிலத்தை மு...
தமிழ் காமிக்ஸைப் புரட்டிப்போட்ட முத்து காமிக்ஸ்! தமிழில் காமிக்ஸ் என்றால் இரும்புக் கை மாயாவியைப் பற்றிப் பேசாமல் ஆரம்பிக்க முடியாது. இரும்புக் கை மாயாவியின் படத்தைப் பார்த்திராதவர்கள்கூட உச்சரிக்கும் மந்திரப் பெயராக அது புகழ்பெற்றிருக்கிறது. இரும்புக் கை மாயாவி ஏன் இப்படி கொண்டாடப்படுகிறது? மூன்று விஷயங்களை மட்டும் பார்ப்போம்: தமிழகத்தில் இரும்புக்கை மாயாவியின் சகாப்தம் கடந்த நாற்பதாண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்துவருகிறது. இப்போதும்கூட அதன் மறுபதிப்பைத் தேடுபவர்கள் உண்டு. சினிமா இயக்குநர்கள் பிரபு சாலமன், மிஷ்கின், ஏ.ஆர். முருகதாஸ், சிம்புதேவன் உள்ளிட்டோர் தங்களுடைய சிறுவயது இன்ஸ்பிரேஷனாக மாயாவியையே குறிப்பிடுகின்றனர். # எழுபது, எண்பதுகளில் இரும்புக்கை மாயாவியைப் போலவே தங்கக் கை மாயாவி, இரும்பு விரல் மாயாவி, தங்க விரல் மாயாவி, உலோகக் கை மாயாவி, நெருப்பு விரல் சிஐடி என ஏகப்பட்ட 'போலச் செய்யும்' கதாபாத்திரங்கள் வந்ததில் இருந்தே, இரும்புக் கை மாயாவி எவ்வளவு பிரபலம் என்பதைப் புரிந்துகொள்ளலாம். # தொடர்ந்து வந்த கதைகள் மாயாவியின் ஆளுமை, தமிழகத்தில் நிலைத்து நிற்க உதவி...
அதிக உச்சம் தொடும். யுபிஎஸ் அறிக்கையின்படி, தங்கத்தின் விலை 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அவுன்ஸ் ஒன்றுக்கு 2,750 அமெரிக்க டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு தங்கத்தின் ஈர்க்கக்கூடிய 29 சதவீதம் உயர்வு, வலுவான முதலீட்டுத் தேவை, பலவீனமடைந்து வரும் அமெரிக்க டாலர் மற்றும் வளர்ந்து வரும் புவிசார் அரசியல் கவலைகள் ஆகியவை காரணமாக இருக்கிறது. 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 2,850 டாலராகவும், 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 2,900 டாலராகவும் உயரும் என்றும் யுபிஎஸ் கணித்துள்ளது. உலோகமான தங்கத்தின் தற்போதைய உயரமான தொடக்கப் புள்ளி வரவிருக்கும் மாதங்களில் ஆதாயங்களுக்கான அதிக வாய்ப்பை வழங்குகிறது. குறிப்பாக ETF தேவை துரிதப்படுத்தப்படுவதால் யுபிஎஸ் நம்புகிறது. தங்கத்திற்கான சீன தேவை குறைவதற்கான அறிகுறிகள் இருந்தபோதிலும், உள்ளூர் முதலீட்டாளர்களிடமிருந்து அடிப்படை தேவை குறைவதை விட, நாட்டின் இறக்குமதி ஒதுக்கீட்டின் சோர்வு இதற்குக் காரணம் என்று யுபிஎஸ் கூறுகிறது. பன்முகப்படுத்தப்பட்ட அமெரிக்க டாலர் மதிப்பிலான போர்ட்ஃபோலியோவிற்குள் தங்கத்தை மூல ஹெட்ஜ...