வாக்குத் திருட்டுப் பட்டியல்?

 "தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுவடைய கூடும்.

சென்னைக்கு 720 கிமீ கிழக்கு தென்கிழக்கிலும், ஆந்திராவின் விசாகப்பட்டினத்திற்கு 790 கிமீ தெற்கு தென்கிழக்கிலும், காக்கிநாடாவிற்கு 780 கிமீ தென்கிழக்கிலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.

கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் மேற்கு வடமேற்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்கிறது"

-இந்திய வானிலை ஆய்வு மையம்

நாடு தழுவிய அளவில் வாக்காளர் பட்டியலை திருத்தும் செயல்முறை குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் நாளை வெளியிட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் இந்திய தேர்தல் ஆணையம் திருத்தம் மேற்கொண்டது. 

சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரிலான இந்த செயல்முறை மூலம் போலி வாக்காளர்கள், இரட்டை வாக்குரிமை கொண்டிருந்தவர்கள், மரணமடைந்தவர்கள், வெளிநாடுகளில் இருந்து ஊடுருவியவர்கள் ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டு வாக்காளர் பட்டியல் தூய்மைப்படுத்தப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. 

இந்த செயல்முறையில் சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

 இந்த நடவடிக்கையின் மூலம் தேர்தல் ஆணையம் ஆளும் பாஜகவுக்கு துணை போவதாக அவை குற்றம் சாட்டின. 

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி காங்கிரஸ், திமுக உள்பட பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

எனினும், சிறப்பு தீவிர திருத்தத்துக்கு தடையோ, இடைக்கால தடையோ வழங்க மறுத்துவிட்ட உச்ச நீதிமன்றம், சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் தொடர்வதற்கு தடையில்லை என அறிவித்தது.

இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் உள்பட தேர்தல் ஆணையர்கள் நாளை (அக். 27) மாலை செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளதாகவும், சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை நாடு தழுவிய அளவில் மேற்கொள்வது குறித்த அறிவிப்பை அவர்கள் வெளியிட வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயி​ரிழந்த வழக்​கில் சிபிஐ தாக்​கல் செய்த முதல் தகவல் அறிக்​கை​யில் தவெக பொதுச் செய​லா​ளர் ஆனந்த் உள்​ளிட்ட நிர்​வாகி​களின் பெயர்​கள் இடம் பெற்​றுள்​ளன.

கரூர் வேலு​சாமிபுரத்​தில் செப். 27-ம் தேதி நடை​பெற்ற தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். இந்த வழக்கை உச்ச நீதி​மன்ற உத்​தர​வின்​படி சிபிஐ விசா​ரித்து வரு​கிறது. முன்​ன​தாக, கடந்த 17-ம் தேதி கரூர் வந்த சிபிஐ குழு​விடம், கரூர் டவுன் போலீ​ஸார் மற்​றும் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலை​மையி​லான சிறப்பு புல​னாய்​வுக் குழு​வினர் ஆவணங்​களை ஒப்​படைத்​தனர்.

இதையடுத்​து, சிபிஐ குழு​வைச் சேர்ந்த ஆய்​வாளர் மனோகரன், கரூர் குற்​ற​வியல் நீதி​மன்​றம் 2-ல் நீதிபதி சார்​லஸ் ஆல்​பர்ட் முன்​னிலை​யில் முதல்தகவல் அறிக்​கையை கடந்த 22-ம் தேதி தாக்​கல் செய்​தார். அதில், கரூர் மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் வி.பி.ம​தி​யழகன், பொதுச் செய​லா​ளர் என்​.ஆனந்த், இணைச் செய​லா​ளர் நிர்​மல்​கு​மார் மற்​றும் தவெக​வினர் பலர் என குறிப்​பிட்​டு, விசா​ரணை​யைத் தொடர உள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், கரூர் குற்​ற​வியல் நீதி​மன்​றம் 1-ல் சிபிஐ தாக்​கல் செய்​துள்ள எஃப்​ஐஆரின் நகலைக் கேட்டு தவெக வழக்​கறிஞர்​கள் நேற்று மனு தாக்​கல் செய்​தனர். இதையடுத்​து, சிபிஐ தாக்​கல் செய்த எஃப்​ஐஆரின் நகல் அவர்​களிடம் வழங்​கப்​பட்​டது குறிப்​பிடத்​தக்​கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை