கனமழை!
இன்று (நவம்பர் 23, 2025) முக்கிய செய்திகள்
12,000 கி.மீ. பயணித்த 3 மாத தமிழ்நாடு யாத்திரையை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முடித்தது. கட்சிக்கு இது உத்வேகம் அளிக்கும் என கூறுகிறார்கள்.வங்கக்கடலில் குறைந்த அழுத்தமான பகுதி உருவாகியுள்ளது. தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு; இந்திய வானிலை அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒன்றிய அரசு, சந்திகார் நிர்வாக மாற்றங்கள் குறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. பஞ்சாப் அரசியல் கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
பெங்களூரு 80 லட்சம் டாலர் மதிப்புள்ள வங்கி கொள்ளையில் 3 பேர் கைது. 5.76 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
பிரேசில் நடந்த காப்ப30 முடிவுக்கு வந்தது. காலநிலை நிதி திட்டம் அறிவிக்கப்பட்டது, ஆனால் அரசியல் எரிசக்தி விவகாரம் தவிர்க்கப்பட்டது. இந்தியா ஆதரவு தெரிவித்தது.
டெக் நிறுவனங்கள் AI சிப்கள் மற்றும் டேட்டா சென்டர்களில் பில்லியன் கணக்கில் முதலீடு செய்கின்றன; கடன் மற்றும் ஆபத்தான உத்திகளைப் பயன்படுத்துகின்றன.கனமழை எச்சரிக்கை!
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு காற்று சுழற்சி காரணமாக தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் எனவே அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மாவட்ட நிருவாகத்திற்கு அறிவுறுத்தல்.
தெற்கு இலங்கைக்கு அருகிலுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு காற்று சுழற்சி காரணமாக இன்றும் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இன்று மிகக்கனமழை பெய்யக்கூடும் (OrangeAlert) என இந்தியா வானிலை மையம் எச்சரித்துள்ளது.

கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மிககனமழை மற்றும் கனமழை எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் நாடு அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் இரண்டு அணியினர் தூத்துக்குடி மாவட்டத்திலும், ஒரு அணி திருநெல்வேலி மாவட்டத்திலும் மீட்பு மற்றும் நிவாரண பணிக்காக முன்னெச்சரிக்கையாக நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.
கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ளதால், மாநில அவசர கால செயல்பாட்டு மையம் மூலம் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.



