கொட்டமடக்கப்பட்ட..பார"தீய"ம்

தனது தந்தை சிவகுமாருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது குறித்து நடிகர் சூர்யா மகிழ்ச்சித் தெரிவித்ததோடு தனது பெருமிதத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகளுக்கான விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான கால அவகாசத்தை ஒரு வார காலத்திற்கு நீட்டித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் டிட்வா புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து சென்னைக்கு தெற்கு தென்கிழக்கில் 220 கி.மீ. தொலைவில் மையம். அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழ்நாடு கடலோர பகுதிகளுக்கு இணையாக புயல் வடதிசையில் நகரும்” -வானிலை ஆய்வு மையம் தகவல்.
டிட்வா புயலால் தமிழ்நாட்டில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 38 நிவாரண முகாம்களில் 2,393 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
டிட்வா புயல் கனமழையால் 56,000 ஹெக்டேர் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதாகவும், நிவாரணம் குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் எனவும் அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் தகவல்.
டிட்வா புயலின் வேகமும், மழையும் குறைந்ததை அடுத்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சிக்கு இயக்கப்படும் விமானங்கள் இன்று வழக்கம் போல் இயக்கம் - சென்னை-யாழ்ப்பாணம் இடையே இயக்கப்படும் 2 விமானங்கள் மட்டும் இன்று (நவ.30) ரத்து செய்யப்பட்டுள்ளன.

‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பரப்புரை பயணத்தை கோபி தொகுதியில் இருந்து இன்று மீண்டும் தொடங்குகிறார் இபிஎஸ்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால், இந்தியாவிற்குள் ஊடுருவ உதவும் 72 பயங்கரவாத தளங்களை, தொலைதூரப் பகுதிகளுக்கு பாகிஸ்தான் இடம் மாற்றியுள்ளதாக எல்லை பாதுகாப்புப் படை தகவல்.

இலங்கையின் கண்டி-சரசவிகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால், 23 தமிழர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.


போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகும் இஸ்ரேலிய ராணுவத் தாக்குதல்கள் தொடர்வதால், காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70,000-த்தை தாண்டியுள்ளது.


உக்ரைன் தலைநகரில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 3 பேர் பலியான நிலையில், கருங்கடலில் ரஷ்யாவின் எண்ணெய் கப்பல்களை ட்ரோன் மூலம் தாக்கி அழித்துள்ளது உக்ரைன்.


ஆப்பிரிக்க கண்டத்தின் கிழக்கு பகுதி மெதுவாகப் பிளந்து, அடுத்த 5 முதல் 10 மில்லியன் ஆண்டுகளுக்குள் புதிய பெருங்கடல் உருவாகும் என விஞ்ஞானிகள் கணிப்பு.

போலியான தகவல்களை வைத்து மூன்றாவது பெரிய பொருளாதார நாடு என்று ஏமாற்றிக் கொண்ட திரிவதை கண்டுபிடித்த ஐ எம் எஃப் காரி  துப்பி விட்டது

போலியான தகவல்  ஆதாரமற்ற அக்கவுண்ட் டேட்டா போன்றவை வைத்துக்கொண்டு ஊரை ஏமாற்றிக் கொண்டு திரிகிறார்கள்

உலகில் மிக மோசமான பட்டியலில்தான்  இரண்டாவது இடம் இந்தியா பிடித்துள்ளது.


பா.ஜ.க. கொட்டம் அடக்கிய பஞ்சாப்!

சண்டிகரை தனது ஒன்றிய அரசின் அதிகாரத்துக்குள் கொண்டு வர நினைத்த பா.ஜ.க. வின் சதிச் செயலை வீறு கொண்டு தடுத்துள்ளது பஞ்சாப்.

ஒன்றிய பா.ஜ.க. அரசின் அதிகாரத்துக்குள் வர மறுக்கும் மாநிலங்களைச் சிதைப்பது பா.ஜ.க. கடைப்பிடிக்கும் பிரித்தாளும் கொள்கை ஆகும். அதனை முதலில் காஷ்மீரில் செய்தார்கள்.

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி வழங்கிய, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 ஐ, கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதியன்று ஒன்றிய பா.ஜ., அரசு ரத்து செய்தது. இதையடுத்து அம்மாநிலம், ஜம்மு- காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதில், சட்ட சபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு - காஷ்மீர் பிரிக்கப்பட்டது. 

அது முதல் ஜம்மு காஷ்மீருக்கு மாநிலத் தகுதியை விரைவில் தருவோம் என்று பா.ஜ.க. சொல்லி வருகிறது. ஆனால் செய்யவில்லை. அடுத்ததாக பஞ்சாப்பில் செய்யப் பார்த்தார்கள்.

பா.ஜ.க. வின் பசப்பு அரசியல் எடுபடாத மாநிலமாக பஞ்சாப் இருக்கிறது. அங்கு அவர்களால் ஆட்சிக்கு வர முடியாது. அதனால் பஞ்சாப்பின் முகத்தை, கனத்தை, வலிமையைச் சிதைக்க நினைத்தது பா.ஜ.க.

பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு 1966 ஆம் ஆண்டு அரியானா மாநிலம் உருவாக்கப்பட்டது. அரியானா, பஞ்சாப் ஆகிய இரண்டு மாநிலங்களின் பொதுவான தலைநகராக சண்டிகர் இருந்து வருகிறது. 

1984 ஆம் ஆண்டில் பஞ்சாப் ஆளுநரின் கட்டுப்பாட்டில் சண்டிகர் கொண்டு வரப்பட்டது. தலைமைச் செயலாளர் பதவி, ஆளுநரின் ஆலோசகர் பதவியாக மாற்றப்பட்டது.

அதில் இருந்து, ‘சண்டிகர் தங்களுக்குதான் சொந்தம்' என்று பஞ்சாப், அரியானா ஆகிய இரு மாநிலங்களும் உரிமை கோரி வருகிறார்கள். 

இந்த பிரச்சினையை சரி செய்வதற்காக சண்டிகர் யூனியன் பிரதேசமாக அமைக்கப்பட்டது. பஞ்சாப் மாநில ஆளுநரே சண்டிகரின் நிர்வாக அதிகாரியாக இருந்து வருகிறார்.இது பா.ஜ.க.வின் கண்ணை பல காலமாக உறுத்தி வந்தது.

சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகத்தில் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் அரசியலமைப்பு பிரிவு 246 கொண்டு வருவதற்கான மசோதாவை நிறைவேற்ற ஒன்றிய பா.ஜ.க. அரசு திட்டமிட்டது. 

இதற்காக, 131வது அரசியல் சாசன சட்ட திருத்த மசோதாவை வரும் குளிர்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தவும் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது.

இந்த திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால், அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள், லட்சத்தீவு, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டையூ மற்றும் டாமன், புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்கள் போல சட்டசபை கலைக்கப்பட்டால், ஜனாதிபதியின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் சண்டிகர் சென்றுவிடும்.

சண்டிகரின் நிர்வாக அதிகாரியாக பஞ்சாப் கவர்னரே தற்போது செயல்பட்டு வரும் சூழலில், இந்த திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால், சண்டிகருக்கு என தனியாக நிர்வாக அதிகாரி நியமிக்கப்படுவார். இதனை பஞ்சாப் மாநிலம் கடுமையாக எதிர்த்தது.

இது நடந்தால் சண்டிகர் நிர்வாக அதிகாரியை நியமிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்படும்.

 அதை வைத்து தாங்கள் எதையும் செய்யலாம் என்று பா.ஜ.க. நினைத்தது. காங்கிரஸ், ஆம் ஆத்மி, அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் இதனைக் கடுமையாக எதிர்க்கின்றன. 

"சண்டிகர் பஞ்சாப்புக்குச் சொந்தமானது.” என்ற குரல் அதிகரித்து கொண்டிருக்கிறது. ‘பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சண்டிகரை பிரிக்க நினைக்கும் முயற்சி' என்று பஞ்சாப் மாநிலக் கட்சிகள் கடுமையாக எதிர்த்தார்கள்.

பா.ஜ.க-வின் கொட்டத்தை அடக்கிய பஞ்சாப் : சண்டிகர் திட்டத்தில் இருந்து பின் வாங்கிய ஒன்றிய அரசு - முரசொலி!

ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், “சண்டிகரில் பஞ்சாப் மாநிலத்திற்கான உரிமையை பா.ஜ.க. பறிக்கிறது. இது அரசியலமைப்பு மீது நடத்தப்படும் தாக்குதல்.” என்று சொல்லி இருக்கிறார்.

 சண்டிகர் மக்களின் அடையாளங்களை அழிப்பதற்கான முயற்சி என பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் கூறும்போது, “எந்த ஒரு சர்வாதிகாரி முன்பும் பஞ்சாப்பியர்கள் தலைவணங்க மாட்டார்கள் என்பதை வரலாறு சொல்லும். சண்டிகர் பஞ்சாப் மாநிலத்துக்கு சொந்தமானது” என்றார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுவ் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, கூட்டாட்சி மீதான பலவீனப்படுத்தும் தாக்குதல் என கண்டனம் தெரிவித்துள்ளார். "1966 பஞ்சாப் மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ் இரு மாநில தலைநகராக சண்டிகர் இருக்கும் நிலையில், பஞ்சாப் மற்றும் அரியானா மாநில உரிமைகளின் மீதான தாக்குதலைச் செய்யக் கூடாது.

 எனது கேள்வி என்னவென்றால், மோடி அரசும் பா.ஜ.க.வும் அரியானா, பஞ்சாப் மாநிலங்களுக்கு விரோதமாக நடந்து கொள்வது ஏன்? சகோதரத்துவத்துடன் இயங்கும் இரண்டு மாநிலங்களிடையே மோதலை உருவாக்குவது ஏன்?” என்ற கேள்வியை எழுப்பி இருந்தார்.

இந்த நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் தனது முடிவில் இருந்து பின் வாங்கி உள்ளார். “”தற்போது வரை அதில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

 சண்டிகர், யூனியன் பிரதேசத்தின் பாரம்பரிய நிர்வாக கட்டமைப்பை மாற்றும் நோக்கம் மத்திய அரசுக்கு இல்லை” என்று சொல்லி இருக்கிறார்கள். குளிர்காலக் கூட்டத் தொடரில் இதனைக் கொண்டு வரும் திட்டமில்லை என்று பின் வாங்கி விட்டது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

பஞ்சாப்பில் குழப்பத்தை ஏற்படுத்த நினைத்தது பா.ஜ.க. அதன் கொட்டத்தை அடக்கி விட்டது பஞ்சாப்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை