தடைகளைத் தாண்டி...!
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் 2-ஆம் கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கூடுதலாக 17 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்க நடவடிக்கை.
`வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசின் பிரம்மாண்ட விழா. பல்வேறு திட்டங்களால் பலனடைந்த பெண்கள் அனுபவங்களைக் கூறி நெகிழ்ச்சி
மேகதாது அணைத் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல். விவசாயிகளின் நலன்களைக் காக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு உறுதி.
திரைப்படங்கள் வெளியாகி 100 நாட்களுக்குப் பிறகே OTT-யில் வெளியிட வேண்டும். ஜன.1 முதல் புதிய விதிமுறையை அறிவித்தது திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்.
புதிய உச்சத்தை எட்டிய முட்டை விலை. நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.6.15 காசுகளாக நிர்ணயம்.2024-25-ம் ஆண்டில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட பட்டியலின் படி, தமிழ்நாடு மதிப்பு அடிப்படையில் 16% பொருளாதார வளர்ச்சி விகிதத்தைப் அடைந்துள்ளது.
மேலும், பணவீக்கம் கணக்கில் கொள்ளாத வளர்ச்சியில் நாட்டின் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்வது குறிப்பிடத்தக்கது.2024-25ல் 16% பொருளாதார வளர்ச்சியுடன் சாதனை படைத்த தமிழ்நாடு
2024–25 ஆம் ஆண்டுக்கான மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) வளர்ச்சி விகிதம் தொடர்பான கையேட்டை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதில் நாடு முழுவதும் பொருளாதார வளர்ச்சி வேகத்தில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்திருப்பது முக்கியமான சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, பணவீக்கம் கணக்கில் கொள்ளாத மதிப்பு அடிப்படையிலான வளர்ச்சியில் தமிழ்நாடு 16 சதவீத உயர்வுடன் இந்திய மாநிலங்களில் முதலிடம் பெற்றுள்ளது.
கடந்த 2023–24 நிதியாண்டில் தமிழ்நாட்டின் GSDP 26 லட்சத்து 88ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. புதிய தரவுகளின் படி, 2024–25 ஆம் ஆண்டில் இந்த மதிப்பு 31 லட்சத்து 18 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.
மேலும், சாதாரண ஆண்டு சார்ந்த வளர்ச்சியை விட மிக உயர்ந்த வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்திருப்பது, மாநிலத்தின் தொழில், சேவை, உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளின் நிலையான முன்னேற்றத்தைக் காட்டுகிறது.
இருப்பினும், மகாராஷ்டிரா மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 45 லட்சம் கோடி ரூபாயுடன் நாடு முழுவதும் முதல் இடத்தைப் பெற்றாலும், வளர்ச்சி வீதத்தில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. வளர்ச்சி வீதம் என்பது மாநிலத்தின் பொருளாதார துடிப்பையும், புதிய முதலீடுகளை ஈர்க்கும் திறனையும் வெளிப்படுத்தும் முக்கியமான குறியீடாகும்.

தொடர்ந்து, தமிழ்நாட்டின் 16% உயர்வு, தற்போதைய முதலீட்டு சூழல், தொழில் வளர்ச்சி, உற்பத்தி திறன் விரிவு, சேவைத் துறையின் வளர்ச்சி மற்றும் அரசின் திட்டமிட்ட பொருளாதார மேலாண்மை ஆகியவை சேர்ந்து உருவாக்கிய நேரடி விளைவாகக் கருதப்படுகிறது.
குறிப்பாக புதிய தொழிற்பேட்டைகள், ஸ்டார்ட்அப் சூழல் விரிவு, உள்கட்டமைப்பு மேம்பாடுகள், பன்னாட்டு முதலீடுகளின் வருகை ஆகியவை வளர்ச்சிக்கு முக்கிய காரணிகளாக ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்தியாவின் பொருளாதார வரைபடத்தில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருவது இந்த அறிக்கையின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆண்டுகளில் மாநிலம் இன்னும் அதிக முதலீடுகள் ஈர்த்து, தொழில்துறை மற்றும் சேவைத் துறைகளில் வலுவான வளர்ச்சியைத் தொடரும் வாய்ப்புகள் உள்ளன.
மொத்தத்தில், 2024–25 நிதியாண்டு தமிழ்நாட்டின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க சாதனையைப் பதிவுசெய்துள்ளது.
இந்த வளர்ச்சி பயணம் இந்தியாவின் மிகுந்த போட்டி நிலை கொண்ட பொருளாதார சூழலிலும் தமிழ்நாடு தனது முன்னணியை உறுதிப்படுத்துகின்றது.













