சந்தேகமாக உள்ளது!’

 அதிமுக - பாஜக களத்துக்கு வராதது சந்தேகமாக உள்ளது!’

தமிழகத்தில் 97 லட்சம் வாக்கா ளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப் பட்டுள்ள நிலையில், அதுகுறித்து அதிமுக - பாஜக, எந்தக் கேள்வியும் எழுப்பாமல் இருப்பது, சந்தேகமாக இருக்கிறது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தலை வரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இதுதொடர்பாக பேசி யிருப்பதாவது :- தமிழ்நாடு முழுவதும் வாக்குச் சாவடி வாரியாக மைக்ரோ லெவலில் நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன். 

ஒரே ஒருத்தர் கூட தவறுதலாக விடு பட்டு இருந்தால் கூட அவர் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட வேண்டும். 

 தமிழ்நாட்டின் 15 சதவிகித வாக்கா ளர்களை, அதாவது 97 லட்சம் வாக்கா ளர்களை நீக்கி, வரைவு வாக்காளர் பட்டி யலை தேர்தல் ஆணையம் வெளி யிட்டுள்ளது. இதில் இடம்பெயர்ந்த வர்கள் என்று கூறி மட்டுமே சுமார் 66 லட்சம் பேரை நீக்கியிருக்கிறார்கள்.

 எஸ்ஐஆர் பணிகளை அவசரகதி யில் ஆரம்பித்த போதே இது, பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்றும், தகுதியான தமிழ்நாட்டு வாக்கா ளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் நாம் முன்கூட்டியே எச்சரித் தோம்! மேலும் உச்ச நீதிமன்றத்தி லும் இதுகுறித்து வழக்கு தொடுத்திருக் கிறோம். 

தகுதியான எவரொருவரின் வாக்குரிமையும் பறிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, திமுக மாநில - மாவட்ட நிர்வாகிகள் தொடங்கி, தொகுதிப் பார்வையாளர்கள், கிளைக் கழக நிர்வாகிகள் - பிஎல்ஏ - பிடிஏ - பிஎல்சி - சார்பு அணியினர் அனை வரும் பம்பரமாக உழைத்தீர்கள். 

ஆனால், அ.தி.மு.க.வும், பா.ஜ.க. வும் களத்துக்கே வரவில்லை. துரும்பை கூட கிள்ளி போடவில்லை. அதனால்தான், நாம் சந்தேகப்பட வேண்டியதாக உள்ளது. எனவே, நீக்கப்பட்ட 97 லட்சம் வாக்காளர்களில் நம் வாக்காளர்கள் இருக்கிறார்களா என கவனமாக பார்க்க வேண்டும். 

168 தொகுதிகளில் 10 சதவிகிதத்திற் கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப் பட்டுள்ளனர். இதனை நாம் வாக்குச் சாவடி வாரியாகப் பார்க்க வேண்டும்.  உதாரணமாக கும்மிடிப்பூண்டி தொகு தியின் முதல் வாக்குச்சாவடியில் 40 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 

நீக்கப்பட்ட அந்த 40 பேர்களில், 4 பேர், ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பு மூலமாக சேர்ந்தவர்கள். அதில் ஒருவர் இறந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளனர். அதேபோல, மற்ற 3 பேரையும் எதற் காக நீக்கியுள்ளார்கள் என்று சரி பார்க்க வேண்டும். 

நாம் இவ்வளவு கவன மாக இருந்தும், ஒரே வாக்குச்சாவடி யில், ‘ஓரணியில் தமிழ்நாட்டில்’ இணைந்த 4 பேர் விடுபட்டிருக்கிறார்கள் என்றால் நாம் இன்னும் விழிப்போடு செயல்பட வேண்டும் என அர்த்தம்! 

நானே இவ்வளவு மைக்ரோ அளவில் பார்க்கிறேன் என்றால் நீங்கள் எல்லாரும் இதனை எவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும் என புரிந்து கொள்ள வேண்டும். 

 அடுத்து நம்முடைய பணி, இவர்கள் இறந்துவிட்டார்களா, இடம் மாறிவிட்டார்களா, டபுள் எண்ட்ரியா என சரிபார்க்க வேண்டும். ஒரே  ஒருத்தர் தவறுதலாக விடுபட்டு இருந்தால் கூட, படிவம்-6ஐ நிரப்பிக் கொடுத்து வாக்காளர் பட்டியலில் இணைக்க வேண்டும்.  

தமிழ்நாடு முழுக்க இருந்த வாக்குச் சாவடிகளில் எண்ணிக்கை, 68  ஆயிரத்து 467-ல் இருந்து, 75 ஆயிரத்து 32-ஆக ஆகியிருக்கிறது. பூத்  எண் மட்டும் மாறியிருக்கும் வாக்குச்சாவடிகளுக்கு, ஏற்கெனவே நிய மிக்கப்பட்டிருக்கும் பிஎல்ஏ-2க்கள் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும். 

 புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடிகள் அனைத்துக்கும் புதிய பிஎல்ஏ-2 மற்றும் பிஎல்சி பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும்! நம்மை நேர்மையாக நேர்வழியில் வீழ்த்த முடியாத பாசிச சக்திகளும்,  எதிரிகளும், குறுக்கு வழியில் காரியம் சாதிக்க நினைப்பார்கள். அதற்கு  நாம் கடுகளவுகூட இடம் தரக்கூடாது. 

நம் கவனத்தை திசைதிருப்பவும், நம்முடைய உழைப்பை வீணாக்கவும் எதிரிகள் கூட்டமும், வீணர்கள் கூட்டமும் முயற்சி செய்வார்கள். அதையெல்லாம் புறந்தள்ளி, தேர்தல்  பணி ஆற்றுங்கள். வெற்றிக் கோட்டை நெருங்கும் நேரத்தில் பதற்றமோ, அசதியோ கூடாது.

 இனிமேதான் நம் முழு பலத்தையும் கொடுத்து ஓட வேண்டும்.  களத்தில் நாம்தான் வலிமையாக உள்ளோம். நம் கூட்டணிதான் வெற்றிக்  கூட்டணி. வெற்றியை எட்டும் வரைக்கும் கவனம் சிதறாமல் உழையுங்கள்!  உழையுங்கள்!

 தில்லி படையெடுப்புக்கு தமிழ்நாடு ஒருபோதும் அஞ்சாது! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடே வெல்லும்! இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

இழுபறியா?

திமுக – பாஜக இடையேயான தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாமல் இழுபறி ஏற்பட்டிருக்கிறது. 

தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த பாஜக  தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வந்தார்.  

அதிமுகவுடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேசுவதற்கு முன்பாக தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் சென்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  

பின்னர் அவர் எம்.ஆர்.சி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார்.  அங்கே அதிமுக – பாஜக  தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடந்தது. அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி , கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  பாஜக தரப்பில் பியூஷ் கோயல்,     எல்.முருகன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்த்தையில் பாஜக மற்றும் தங்களுடன் வரும் கட்சிகளுக்கும் சேர்த்து 70 சீட் கேட்டிருக்கிறார் பியூஷ் கோயல்.  அதாவது கடந்த தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட  பாஜக இந்த தேர்தலில் 30 முதல் 40 தொகுதிகளில் போட்டியிடுவதென்று முடிவு செய்திருக்கிறது. 

 மற்ற கட்சியினருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதால்,  இதில் ஓபிஎஸ், டிடிவி உள்ளிட்டோரும்  வருவார்கள் என்கிற நம்பிக்கையில்  அவர்களுக்கும் சேர்த்து 70  தொகுதிகளை கேட்டிருக்கிறார் பியூஷ் கோயல்.

ஆனால், பாஜகவுக்கு கடந்த முறை 20 சீட் கொடுத்திருப்பதால் இந்த முறை 20ல் இருந்து 25 சீட் வரையில் மட்டுமே தருவதாக சொல்லி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதே நேரம், அதிமுக 170 தொகுதியில் போட்டியிடும் என்றும், கூட்டணியில் இருக்கும் பிற கட்சியினருக்கு தானே முன்னின்று மீதமிருக்கும் சீட்களை பிரித்து தருவதாகச் சொல்லி இருக்கிறார் பழனிசாமி. 

இதில் அதிருப்தி அடைந்திருக்கிறார் பியூஷ் கோயல்,.  இதனால் அதிமுக – பாஜக தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாமல் இழுபறி ஏற்பட்டிருக்கிறது.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை