“திருப்புமுனை” அல்ல!

 சோனியா , ராகுலுக்கு எதிராக அமலாக்கத் துறை  குற்றப்பத்திரிகையை ஏற்க மறுப்பு!

காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுலுக்கு எதிராக, நேஷனல் ஹெரால்டு வழக்கில், அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரோஸ் அவென்யூ கோர்ட்டு நிராகரித்துள்ளது.

சட்டவிரோதப் பணிப்பரிவர்த்தனை வழக்கு எந்த விசாரணை அமைப்பின் அடிப்படையிலும் நடத்தப்படாமல், தனி நபர் அளித்த புகார் அடிப்படையிலானது என கோர்ட்டு நிராகரித்துவிட்டது.


காவல்துறை போன்ற அமைப்பின் விசாரணையின்படி அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்யவில்லை. அதற்கு மேல், சட்டவிரோத பணப்பரிமாற்றம் என முதல் தகவல் அறிக்கையில் ஆரம்பத்தில் வழக்குப் பதிவு செய்யவில்லை என்று அமலாக்கத் துறையின் நடவடிக்கைகள் குறித்து கோர்ட்டு  சுட்டிக்காட்டியிருக்கிறது.


இந்த வழக்கில், சமீபத்தில்தான், டெல்லி காவல்துறை நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கையே பதிவு செய்திருக்கிறது.


ஆனால், அமலாக்கத் துறை சார்பில் இதுவரை நடைபெற்ற விசாரணை தனிநபர் அளித்த புகாரின் அடிப்படையில் நடந்துள்ளது.

அதாவது, நேஷனல் ஹெரால்டு நிறுவன சொத்துகளை அபகரிக்க முயன்றதாக சுப்பிரமணிய சுவாமி மனு கொடுத்திருக்கிறார்.அந்த மனுவில், நேஷனல் ஹெரால்டு நிறுவன சொத்துகளை மிகக் குறைந்த பணத்தைக் கொடுத்து அபகரிக்க முயன்றதாக சோனியா,ராகுல்மீது

குற்றம் சாட்டப்பட்டிருந்தது.


இந்த மனு அடிப்படையில், அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வந்துள்ளது என  குறிப்பிட்ட கோர்ட்டு, குற்றப்பத்திரிகையை நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளது.


ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவரான சஜித் அக்ரம், இந்தியாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் என்று தெலுங்கானா காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

சஜித் அக்ரம் 1998ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தார், மேலும் அவர் இந்திய பாஸ்போர்ட்டை வைத்திருக்கிறார். சஜித் அக்ரமின் மகன் நவீத் அக்ரமும் தாக்குதலில் ஈடுபட்டார்,

அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சஜித் அக்ரம் போலீசாருடனான துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர், மேலும் இது ஆஸ்திரேலியாவில் கடந்த 30 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதலாக கருதப்படுகிறது..

திருவனந்தபுரம்  “திருப்புமுனை” அல்ல!

கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில், திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களைப் பெற்றது, பிரத மர் மோடியால் “புதிய சகாப்தத்தின் துவக்கம்” என்றும், காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர் சசி தரூரால் “வரலாற்றுச் செயல்பாடு” என்றும் முழங்கப்படுகிறது.

 ஆனால், இந்த வெற்றியைப் பிரமாண்டப்படுத்தும் அவர்களது கூற்றுக்கும், நிஜமான தேர்தல் தரவுகளுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சியின் ஜான் பிரிட்டாஸ் எம்.பி. சுட்டிக்காட்டியபடி, தரவுகளை ஒப்பிடுவது இந்த “வரலாற்று” முழக்கத்தின் காற்றை ஒரு நொடியில் நீக்கிவிடும்; திருவனந்தபுரத்தில் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்ற மொத்த வாக்குகள் 2,13,214. 

2025 உள்ளாட்சித் தேர்தலில் இது 22.1% குறைந்து 1,65,891 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. 

இதே காலகட்டத்தில், இடது ஜனநாயக முன்னணி (LDF) பெற்ற வாக்கு கள் 1,29,048-இலிருந்து 29.8% உயர்ந்து 1,67,522 ஆக அதிகரித்துள்ளது.

திருவனந்தபுரம் தேர்தலில் மிகப் பெரிய தோல்வியை எதிர்கொண்டது காங்கிரஸ் தலை மையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) தான். 

அதன் வாக்குகள் 1,84,727-இலிருந்து 31.8% வீழ்ச்சியடைந்து 1,25,984 ஆகக் குறைந்தது.

வெளியே தெரிந்த வெற்றிச் செய்தியை மட்டும் வைத்து, திருவனந்தபுரத்தில் உள்ளா ட்சித் தேர்தலில் பாஜக கூடுதல் இடங்களைப்  பிடித்ததை “வரலாற்றுச் சாதனை” எனச் சசி தரூர் பாராட்டுவது, சுயபரிசோதனைக்குத்  தயாராக இல்லாத அவரது கட்சியின் தோல்வி  மனப்பான்மையையே காட்டுகிறது

.தனது கோட்டை என யுடிஎப் கருதும் திருவனந்த புரத்தில் தமது வாக்குகள் 32% படுவீழ்ச்சி அடைந் ததைப் பற்றிப் பேசாமல்,அந்த இடங்களில் ஒரு பகுதி பாஜகவுக்கு போனதை வியந்து போற்றுவது என்ன அரசியல்? 

பிரதமர் மோடியின் “திருப்புமுனை” என்ற  கூற்றும் எடுபடாது. ஒரு கட்சி தனது முந்தைய வாக்குகளிலிருந்து 22% இழந்தால், அது எப்படி ஒரு “புதிய சகாப்தத்தின் துவக்கம்” ஆக  முடியும்? 

பாஜகவின் பலம் கூடியதால் அல்ல, பிரதான எதிர்த்தரப்பின் பலவீனம் தந்த இலவசம் இது.

திருவனந்தபுரத்தின் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், கேரளத்தில் ஒரு “திருப்புமுனை” அல்ல; மாறாக, காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப்பின் வியூகத் தோல்வியின் விளைவாக, பாஜகவால் தற்காலிகமாக அறுவடை செய் யப்பட்ட ஒரு சம்பவமே. இந்தத் தரவுகளைப் புறக் கணித்துவிட்டு, “வரலாற்றுச் சாதனை” எனப் பிரச்சாரம் செய்வது, கேரள அரசியலின் உண் மையான காட்சியைக் குலைக்கும் முயற்சி ஆகும்.

 இந்த மாய வலைக்குப் பலியாகாமல், இடதுசாரி ஜனநாயக சக்திகள் யுடிஎப்பின் வீழ்ச்சியை ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்திக் கொள்வதே காலத்தின் தேவை. 

அதை நிச்சயம் அவர்கள் செய்வார்கள்.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை