நடிப்புச் சுதேசிகள்
CBI, ED, IT, தேர்தல் ஆணையம் என அனைத்தும் திமுகவுக்கு எதிராக ஏவப்படலாம். அனைத்தையும் எதிர்கொண்டு பணியாற்ற வேண்டும் என மாவட்டச் செயலாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று விவாதம். 10 மணி நேரம் விவாதம் நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவிப்பு.யானைகள் இடமாற்றத்திற்கு வழிகாட்டு நெறிமுறை உருவாக்க 6 பேர் நிபுணர் குழு அமைப்பு: 2 காட்டு யானைகள் உயிரிழப்பால் தமிழக அரசு நடவடிக்கை.
அனைத்து கன்டெய்னர், டாரஸ் லாரிகள் இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்: மற்றொரு தரப்பினர் வாகனத்தை இயக்குவோம் என அறிவிப்பு.
கட்சி விதிமுறைகளை சமர்ப்பிக்க அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் 30 நாள் கெடு.
மேற்கு வங்கத்தில் பாபர் மசூதி கட்ட குவிகிறது நிதி இதுவரை ரூ.1.3 கோடி வந்துள்ளது.
இது பணமோசடிக் குற்றங்கள் மற்றும் அன்னியச் செலாவணிச் சட்ட மீறல்கள் ஆகியவற்றை விசாரிக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது.
மறுபுறம், வருமான வரித்துறை முக்கியமாக வரி ஏய்ப்பு, கருப்புப் பணம், வருமான வரிக் கணக்குகளில் சலுகைகள் மற்றும் விலக்குகளுக்கான போலி உரிமைகோரல்கள் போன்றவற்றை விசாரிப்பதன் மூலம் ஆய்வுகளை மேற்கொள்கிறது.
2014-15 நிதியாண்டு முதல், அமலாக்க இயக்குநரகம் (இ.டி) மொத்தம் 6,444 வழக்குகளை (இ.சி.ஐ.ஆர் பணமோசடி தடுப்புச் சட்டம் (பி.எம்.எல்.ஏ) 2002-ன் கீழ் பதிவு செய்துள்ளது. அதே சமயம், வருமான வரித்துறை (ஐ.டி) மொத்தம் 13,877 வழக்குத் தொடர்வு வழக்குகளை தாக்கல் செய்துள்ளது.
மக்களவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன் எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி டிசம்பர் 8-எழுத்துபூர்வ அறிக்கையில் பதிலளித்தபோது இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
அமலாக்க இயக்குநரகம் (இ.டி) மற்றும் வருமான வரித் துறை (ஐ.டி) வழக்குகள் (2014-15 முதல்)
அமலாக்க இயக்குநரகம் (இ.டி) மற்றும் வருமான வரித் துறை (ஐ.டி) வழக்குகள் (2014-15 முதல்)
நடிப்புச் சுதேசிகள்
“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு- நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு” என்ற வரிகள் மகாகவி பாரதியாரால் எழுதப் பட்டவை. பக்கிம் சந்திர சட்டர்ஜியின் வந்தே மாதரம் பாடலை தழுவி, இந்தப் பாடலை பாரதி யார் எழுதியுள்ளார்.
வந்தே மாதரம் என்று துவங்கும் பாடல் பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய ஆனந்தமடம் நாவலில் இடம் பெற்றுள்ளது. இதுகுறித்த வரலாற்றுக் குறிப்பில் இந்தப் பாடல் பக்கிம் சந்திர சட்டர்ஜி யால் நாவலுக்காக எழுதப்படவில்லை என்றும், அந்நாவலில் காலியாக இருந்த ஒரு பக்கத்தில் இந்தப் பாடலை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஒரு நண்பர் கூறியதாகவும், ஆனால் அதற்கு பக்கிம் சந்திர சட்டர்ஜி இணங்க வில்லை என்றும், கடுமையாக நண்பர் வற்புறுத்தி யதால் “இது நல்லதா, கெட்டதா என்று உங்க ளால் இப்போது ஊகிக்கமுடியாது. காலம் சொல் லும். அதற்குள் நான் இறந்துவிடுவேன்” என்று அவர் சொன்னதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் ஆர்எஸ்எஸ் பரிவாரம் மக்களி டையே பகைமையையும், பிரிவினையையும் தூண்டுவதற்காக இந்தப் பாடலை இப்போது உயர்த்திப் பிடிக்கிறது என்பதுதான் உண்மை.
வந்தே மாதரம் பாடலின் 150ஆவது ஆண்டின் சிறப்பு விவாதம் என்று சொல்லி இரு அவை களிலும் விவாதம் நடைபெறுகிறது. தங்களு டைய இஸ்லாமிய வெறுப்பை விசிறிவிட இந்த சந்தர்ப்பத்தை பாஜக பயன்படுத்திக் கொள்கிறது.
ஆனந்தமடம் நாவல் சர்ச்சைக்குரிய ஒன்று. அதில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பைக் கக்கும் உரையாடல்கள் இடம் பெற்றிருப்பதை நாவலைப் படிப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும்.
ஆனால் வந்தே மாதரம் பாடலை தேசிய கீதமாக வைக்க வேண்டும் என் பதை அப்பொழுதே உண்மையான தேச பக்தர் கள் ஏற்கவில்லை. சில பத்திகளை நீக்கிய பிறகு முதல் 2 பத்திகள் மட்டுமே தேசியப் பாடலாக ஏற்கப்பட்டது.
விடுதலைப் போராட்டத்தில் எந்த வகை யிலும் சம்பந்தப்படாத இன்னும் சொல்லப்போ னால், பிரிட்டிஷாரிடம் சலுகைகள் பெற்ற, மாட்டிக் கொண்டபோது மன்னிப்புக் கடிதம் எழு துவதையே முழு நேரத் தொழிலாகக் கொண்ட வர்களின் வாரிசுகள் தான் இந்துத்துவாவாதிகள் என்பதை வரலாறு நெடுகிலும் அறியமுடியும்.
வந்தே மாதரம் குறித்த விவாதத்தில் பேசிய நரேந்திர மோடி தாய்நாட்டை மீட்பதற்கான கருவியாக இந்தப் பாடல் அமைந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் காப்பீட்டுத் துறை யில் நூறு சதவீத அந்நிய முதலீடு, அணுசக்தி துறையிலும் தனியார் நுழைவு உள்ளிட்ட பல்வேறு சட்ட முன்மொழிவுகளை நிறைவேற்ற ஒருபுறத்தில் துடிப்பவர்கள், மறுபுறத்தில் வந்தே மாதரம் பாடலை புகழ்ந்து பேசுகிறார்கள். பாரதி யின் பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.
“சிந்தையில் கள் விரும்பி சிவ சிவ என்பது போல் வந்தே மாதரம் என்பார்- கிளியே மனதிலதனை கொள்ளார்”.















