நெஸ்லே பால்பவுடரில் நச்சு!
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 13,03,487 பேர் படிவம் 6, 6ஏ -ஐ சமர்ப்பித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அவகாசம் நிறைவடைந்த நிலையில் 13 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் ஆட்சேபனை குறித்த படிவம் 7ஐ 35,646 பேர் சமர்ப்பித்துள்ளனர்.
வாகனங்கள் மிக நெருக்கமாக வரும்போது உடனே எச்சரிக்கை செய்யும் Vehicle-to-Vehicle (V2V) எனப்படும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை அனைத்து வாகனத்திலும் பொருத்துவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தை இணைக்கும் வகையில் மூன்று புதிய அம்ரித் பாரத் ரயில்கள் உட்பட 9 புதிய அம்ரித் பாரத் ரயில்களின் சேவை தொடங்கின.நெஸ்லே குழந்தைகள் பால் பவுடரில்
நச்சுப் பொருள் !
நெஸ்லே பால் பவுடர்கள் 12 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குத் தாய்ப்பாலுக்கு மாற்றாக வழங்கப்படுகின்றன.
இந்த பால் முக்கியமாக தாய்ப்பால் போதாத, அல்லது பால் சுரக்காத குழந்தைகளுக்கே பரிந்துரைக்கப்படுகிறது.
பிரபலமான உணவு மற்றும் பால் தயாரிப்பு நிறுவனம் நெஸ்லே, தனது குழந்தை பால் தயாரிப்புகளில் சிலவற்றை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திரும்பப் பெறுவதற்கு அறிவித்துள்ளது.
இதன் காரணமாக குழந்தைகள் பாதுகாப்பும் நல்வாழ்வு உறுதி செய்யப்பட வேண்டும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
நெஸ்லே தயாரிக்கும் முக்கியமான 3 தயாரிப்புகள் SMA, BEBA மற்றும் NAN ஆகியவையில் ‘Cereulide (செருலியீடு)’ எனப்படும் நச்சுப் பொருள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ளதால், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 25 ஐரோப்பிய நாடுகளில் விநியோகிக்கப்படும் பால் பவுடர்களை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளது.
(இதில் ஐரோப்பிய நாடுகள் மட்டுமே உள்ளது.
இந்தியா,ஆப்ரிக்கநாடுகள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் எக்கேடு போனால் என்ன?)
திருவாரூரைச் சேர்ந்த மருத்துவர் பிரகாஷ்குமார் இதைப் பற்றி கூறியபடி, “இந்த தயாரிப்புகளில் அரக்கிலோனிக் அமிலம் சேர்க்கப்படும். இதனால் Bacillus Cereus என்ற பாக்டீரியா உருவாகி, அதில் ‘செருலியீடு’ என்ற ஆபத்தான நச்சுப் பொருள் தயாராகும்.
இது அதிக வெப்பநிலையில் வாழக்கூடியது.
குழந்தைகள் இதை உட்கொண்டால், 6 மணி நேரத்துக்குள் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. என தெரிவித்தார்.
நெஸ்லே நிறுவனம் வலியுறுத்தும் விதத்தில், தற்போழுது எந்தவொரு குழந்தைக்கும் பாதிப்பு உறுதியாக ஏற்பட்டதாக தெரியவில்லை. இருப்பினும், குழந்தைகளுக்குத் பால் வழங்கும் போது, இது பாதிப்பைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உள்ளது.
செருலியீடு போன்ற நச்சுப்பொருட்கள் பொதுவாக சமைக்கும் போது அல்லது கொதிக்கும் போது அழிக்கப்படலாம், ஆனால் சிலவற்றில், குறிப்பாக பால் பவுடர்கள் போன்ற தயாரிப்புகளில் இது அழிக்கப்படுவதில்லை என பிரிட்டனின் உணவுத் தர முகமை தெரிவித்துள்ளது.
நெஸ்லே பால் பவுடர்கள் 12 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குத் தாய்ப்பாலுக்கு மாற்றாக வழங்கப்படுகின்றன.
இந்த பால் முக்கியமாக தாய்ப்பால் போதாத, அல்லது பால் சுரக்காத குழந்தைகளுக்கே பரிந்துரைக்கப்படுகிறது.
நெஸ்லே, பால் பவுடர் வைத்திருப்போர் இனி குழந்தைகளுக்கு இதைப் பயன்படுத்த வேண்டாம் என முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
காமராஜர் முதல் ராகுல் வரை
காங்கிரஸின் 75 ஆண்டு பயணம்!
தமிழக அரசியலில் காங்கிரஸின் உண்மையான பலம் என்ன?
காமராஜர் காலத்து பொற்காலம் முதல் இன்றைய கூட்டணி அரசியல் வரை காங்கிரஸின் தேர்தல் வரலாறு, குறித்து பார்ப்போம்.
தமிழகத் தேர்தல் களத்தில் காங்கிரஸின் 75 ஆண்டுகாலப் பயணம் பற்றிய பார்வை:-.
தமிழக காங்கிரஸ் கட்சியின் வரலாறு, 1885-ல் இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவப்பட்டதிலிருந்து தொடங்கி, சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றி, 1947-1967 வரை காமராஜர் தலைமையில் ஆட்சியைப் பிடித்து, பின்னர் தி.மு.க, அ.தி.மு.க-வின் எழுச்சியால் ஒரு பிரதான சக்தியாக இல்லாவிட்டாலும், கூட்டணிப் பங்காளியாக நீடித்தது, 1996-ல் தமிழ் மாநில காங்கிரஸ் (த.மா.கா) போன்ற பிளவுகளைக் கண்டு, இன்றுவரை தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் ஒரு நீண்ட பயணமாகும்.
காங்கிரஸின் இன்றைய பலம் என்பது அதன் கூட்டணி மதிப்பிலும் (Alliance Value) மற்றும் குறிப்பிட்ட நிலையான வாக்கு வங்கியிலும் உள்ளது.
தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தேசியப் பார்வையை முன்வைக்கும் கட்சியாக காங்கிரஸ் இன்றும் பார்க்கப்படுகிறது.
சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களின் வாக்குகளில் காங்கிரஸிற்கு ஒரு கணிசமான பங்கு உண்டு.
தி.மு.க அல்லது அ.தி.மு.க என எந்த அணியில் காங்கிரஸ் இருக்கிறதோ, அந்த அணியின் வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்தும் 'கூடுதல் பலமாக' காங்கிரஸ் திகழ்கிறது.
குறிப்பாக 5% முதல் 8% வரையிலான வாக்குகள் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன. கன்னியாகுமரி, திருநெல்வேலி போன்ற தென் மாவட்டங்களில் காங்கிரஸிற்கு இன்றும் பாரம்பரியமான மற்றும் வலுவான வாக்கு வங்கி உள்ளது.
ராகுல் காந்தி போன்ற தேசியத் தலைவர்களின் வருகை, தேர்தல் சமயத்தில் பெரிய எழுச்சியை உருவாக்க உதவுகிறது.
காங்கிரஸின் வரலாறு என்பது 'ஆட்சியாளர்' என்பதில் தொடங்கி 'ஆட்சியைத் தீர்மானிப்பவர்' என்பது வரை நீள்கிறது.
சுதந்திரத்திற்குப் பிறகு தமிழகத்தில் காங்கிரஸின் பொற்காலம் நிலவியது. ஓமந்தூர் ராமசாமி, ராஜாஜி மற்றும் காமராஜர் ஆட்சிக்காலம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது.
1952, 1957 மற்றும் 1962 தேர்தல்களில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது.
1967-ல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக அண்ணா தலைமையிலான திமுகவிடம் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது.
அதன் பிறகு இன்று வரை காங்கிரஸால் தமிழகத்தில் தனித்து ஆட்சி அமைக்க முடியவில்லை. 1970-களுக்குப் பிறகு காங்கிரஸ் ஒரு 'ஜூனியர் பார்ட்னராக' திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்கத் தொடங்கியது.
ராஜீவ் காந்தியின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அனுதாப அலையில், 1991-ல் அ.தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு ஜி.கே. மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் (TMC) பிரிந்தது அக்கட்சிக்கு ஒரு பெரிய பின்னடைவாக அமைந்தது.
2006-ல் திமுகவிற்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸின் ஆதரவுடன் 'மைனாரிட்டி தி.மு.க அரசு' அமைந்தது. இது காங்கிரஸின் 'கிங் மேக்கர்' அந்தஸ்தை உறுதிப்படுத்தியது.
2016-ல் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து 41 இடங்களில் போட்டியிட்டு வெறும் 8 இடங்களில் மட்டுமே வென்றது
2021-ல் மீண்டும் தி.மு.க. கூட்டணியில் 25 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்று (72% Strike Rate), தனது இருப்பை வலுவாக நிரூபித்தது.
உள்கட்சி கோஷ்டிப் பூசல் என்பது காங்கிரஸின் நீண்டகாலப் பிரச்சனையாக உள்ளது. திராவிடக் கட்சிகளுடன் ஒப்பிடும்போது அடிமட்ட அளவில் (Booth level) காங்கிரஸின் கட்டமைப்பு சற்று பலவீனமாகவே உள்ளது.
தமிழ்நாடு அளவில் மக்கள் செல்வாக்கு மிக்க 'தலைவர் இல்லாதது ஒரு குறையாகப் பார்க்கப்படுகிறது.
|காங்கிரசின் கூட்டணி வரலாறு|









