தியாகம் இல்லாமல்

 “தியாகம் இல்லாமல் சாதனை இல்லை”

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிறிய கிராமத்தில் ராமசாமி-கருப்பாயி தம்பதிக்கு 3-வது மகனாக பிறந்தவர் நல்லகண்ணு.


அடித்தட்டு மக்களின் உரிமைக்களுக்காக தன்னுடைய வாழ்க்கையை அற்பணித்தவர்.இவரின் வாழ்க்கையின் பெரும்பகுதி போராட்டங்களிலும் சிறை சாலைகளில் கழிந்தது.

இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் உறுதியான காவலராக விளங்கியவர் நல்லகண்ணு.


“தியாகம் இல்லாமல் சாதனை இல்லை” என்ற தனது எண்ணத்தை வாழ்வில் நடைமுறையாகக் காட்டியவர் அவர்.


ஆர்.என்.கே என்று அன்புடன் அழைக்கப்பட்ட தோழர் நல்லகண்ணு, தனது கொள்கைக்கும் மக்கள் நலனுக்கும் முழு அர்ப்பணிப்புடன் வாழ்ந்த அரசியல் தலைவர் ஆவார்.

பாரதியாரின் புரட்சிப் பாடல்கள் மற்றும் வ.உ.சிதம்பரனாரின் சுதந்திர இயக்கப் பாதை ஆகியவை நல்லகண்ணுவின் மனதில் விடுதலைச் சிந்தனையை விதைத்தன.


மாணவப் பருவத்திலேயே போராட்டங்களில் கலந்துகொண்ட அவர், காந்தியை விட நேருவின் பொதுவுடைமை கருத்துகளால் அதிகம் ஈர்க்கப்பட்டு பின்னர் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்தார்.


இந்த ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்ட காலத்தில் இளைஞர்களை ஒருங்கிணைத்து ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்ததற்காக கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார்.

இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட உணவுக் குறைபாட்டை சமாளிக்க, பதுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளை மீட்டு ஏழை மக்களுக்கு பகிர்ந்தளித்தார்.


சாதி ஒழிப்பு மற்றும் சுரண்டல் இல்லாத சமுதாயம் என்பதே அவரது இலட்சியமாக இருந்தது. 1944ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து விரைவில் கிளைச் செயலாளராக பொறுப்பேற்றார்.


1948ஆம் ஆண்டு ‘உழுபவனுக்கே நிலம் சொந்தம்’ என்ற போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட அவர் கடுமையான சித்ரவதைகளை எதிர்கொண்டார்.


தலைகீழாக தொங்கவைத்து அடித்தும் ஒப்புக்கொள்ளாத அவர் மீசை பிடுங்கப்பட்ட கொடுமையைச் சந்தித்தார்.


அதன்பிறகு அவர் மீசையில்லாமல் இருந்தது இதன் நினைவுச் சின்னமாகும்.


27வது வயதில் நெல்லை சதி வழக்கில் சிறை தண்டனை அனுபவித்தார். பட்டியலின மக்களுக்கு நில உரிமை கிடைக்க போராடினார்.

1996ஆம் ஆண்டு தென் மாவட்டங்களில் ஏற்பட்ட சாதி கலவர காலத்திலும் அமைதியை நிலைநிறுத்த முக்கிய பங்காற்றினார்.


தாமிரபரணி நதியை மணல் கொள்ளையிலிருந்து காக்க நீதிமன்றத்தில் நேரடியாக வாதாடி வெற்றி பெற்றார். 1992ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு 13 ஆண்டுகள் பணியாற்றினார்.


தேர்தல்களில் தோல்வி வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாதவர்.

எளிமையான வாழ்க்கை முறையை பின்பற்றி, கிடைத்த நிதியுதவிகளை கூட கட்சிக்கும் பொதுநலத்திற்கும் திருப்பி அளித்தார்.


2022ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ‘தகைசால் தமிழர்’ விருதுத் தொகையையும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.


இறுதி வரை செங்கொடியை தாங்கிய நல்லகண்ணு, கொள்கை நிலைப்பாடு மற்றும் தியாக வாழ்க்கைக்கான மறக்க முடியாத முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.


இத்தனைய சிறப்பு மிக்க மாமனிதர் பிப். 25 ஆம் தேதி சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் வயது மூப்புகாரணமாக சிகிச்சை பலனின்றி காலமானார்.

 

நல்லகண்ணுவை முழு அரசு மரியாதையுடன் வழியனுப்புவோம்-முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் என இரங்கல்!

தமிழ் மொழியின் பெருமை.

ஒருவர் இறந்தார் என்பதை ஆங்கிலத்தில் Died அல்லது Passed away எனச் சொல்வார்கள். 

ஆனால் அதை வைத்து அவர் எப்படி இறந்தார் எனத் தெரிந்து கொள்ள முடியாது.

    தமிழ் மொழியில் மட்டும் சரியாகப் எழுதினால் அதனை அறிய முடியும் என்பது உண்மை.


1) காலமானார் - வயதாகி இறப்பது

2) மரணமடைந்தார் - மாரடைப்பினால் இறப்பது 

3) அகால மரணம் - விபத்துகளால் இறப்பது 

4) உயிர் நீத்தார் - தற்கொலைச் செய்து கொண்டு செய்வது 

5) கொலையுண்டார் - கொலையாகி இறப்பது

6) துயில் எய்தினார் -:தூக்கத்தில் உயிர் போகுதல்

7) இயற்கை எய்தினார் - 

பஞ்ச பூதங்களால் உயிர் போகுதல் தீ விபத்து , பூகம்பம் ஏற்பட்டு உயிர் போதல் , காற்றுப் புயலில் மூச்சு விட முடியாமல் போகுதல், நீர் - ஜல சமாதி ஆகுதல் , ஆகாயம்  - விமானம்,கப்பலில் போகும் போது விபத்து ஏற்பட்டு இறப்பது .




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை