முட்டி போட்டு நடக்க

இதுதான் காரணமா? நேற்று திருச்சியில் அந்தோணியார் ஆலயத்திற்குச் சென்ற விஜய், அங்குள்ள பீடத்தின் முன் மண்டியிட்டு, முட்டிப் போட்டபடி நடந்து சென்று நீண்ட நேரம் உருக்கமாகப் பிரார்த்தனை செய்தார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. இதற்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் சமீபத்திய நகர்வுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


குறிப்பாக, திருச்சி மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அவர் போட்டியிடும் வேளையில், அவருக்குக் கிடைத்துள்ள ரகசிய கள ஆய்வுகள் அவருக்குச் சாதகமாக இல்லை என்று தகவல்கள் கசிந்துள்ளன.


விஜய் போட்டியிடும் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அவரது வெற்றி வாய்ப்பு குறித்து கட்சி மேலிடம் நடத்திய ரகசிய ஆய்வில், அவருக்குப் பின்னடைவு ஏற்பட 

பெரம்பூரில் ஆளும் திமுகவின் பலமான கட்டமைப்பு மற்றும்

திருச்சி கிழக்கில் இனிகோ இருதயராஜூக்கு இருக்கும் கிறிஸ்துவர்கள் வாக்குஆகியவை விஜய்க்கு சவாலாக உள்ளன.


இந்த இரண்டு தொகுதிகளிலும் விஜய் தோல்வியைத் தழுவக்கூடும் என்ற 'நெகட்டிவ் ரிப்போர்ட்' வந்ததைத் தொடர்ந்து, அவர் தனது தேர்தல் வியூகத்தை அதிரடியாக மாற்றியுள்ளார்.


திருச்சி கிழக்குத் தொகுதியைப் பொறுத்தவரை, சுமார் 35% கிறிஸ்தவ வாக்காளர்கள் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர்.

ஏற்கனவே கிறிஸ்தவ ஆயர்கள் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது விஜய்க்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.


இந்தச் சூழலில், எப்படியாவது சிறுபான்மையின வாக்குகளைத் தன் பக்கம் திருப்ப வேண்டும் என்பதற்காகவே, புனித அந்தோணியார் ஆலயத்தில் விஜய் முட்டிப் போட்டுப் பிரார்த்தனை செய்ததாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.


இது ஒரு 'இறுதிக்கட்ட முயற்சி' என்றும், தனது மத அடையாளத்தை வெளிப்படுத்துவதன் மூலம் மக்களின் உணர்வுகளைக் கவர விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


விஜய்யின் இந்த திடீர் 'பக்தி அரசியல்'

கண்டு அதிமுக உற்சாகத்தில் உள்ளது. திமுகவின் வாக்குகள் விஜய்யால் பிரிக்கப்பட்டால், அது தங்களுக்கு எளிதான வெற்றியைத் தேடித்தரும் என அதிமுக கணக்குப் போடுகிறது.


பொதுவாக கிறிஸ்தவ மற்றும் சிறுபான்மையின வாக்குகள் திமுகவின் கோட்டையாகக் கருதப்படுபவை. தற்போது விஜய் அந்த வாக்கு வங்கியில் கை வைப்பதால், திமுகவிற்குச் செல்ல வேண்டிய வாக்குகள் இரண்டாகப் பிரியும் (DMK & TVK). இதில் விஜய் பாதியை எடுத்தால் போதும்.. வாக்குகள் அப்படியே சிதறும்.


அப்படியே மற்ற வாக்குகள் எதிரணிக்கு செல்லும். அதாவது அதிமுகவிற்கு மற்ற வாக்குகள் அதிமுகவிற்கு செல்லும். அதிமுக வாக்குகள் உடையாமல் இருப்பதால் அது அவர்களுக்கு சாதகமாக மாறும்.


இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெறுவது விஜய்யின் அரசியல் எதிர்காலத்திற்கு மிக முக்கியமானது.


தோல்வி பயம் காரணமாக அவர் மேற்கொண்டுள்ள இந்தத் தீவிர முயற்சி, திருச்சி மற்றும் பெரம்பூர் மக்களிடம்  அவருக்குப் பின்னடைவு ஏற்படுத்துமா?

விடை மே-4ல் தெரிந்துவிடும்.!






* ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியுள்ளார். டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தமிழகம் வந்துள்ளார். தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து அவர் தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளார். இதுபற்றி கெஜ்ரிவால் தனது எக்ஸ் பக்கத்தில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்ததில் பெருமை கொள்கிறேன். கல்வி, சுகாதாரம், மகளிர் மேம்பாடு ஆகிய அதுறைகள் குறித்து நாங்கள் ஒரு பொதுவான தொலைநோக்குப் பார்வையைக் கொண்டுள்ளோம்.

திராவிட மாடல் 2. 0 ஆட்சி அமைப்போம் - ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், இன்று கழக வாக்குச்சாவடி முகவர்களுடன் (BLA 2) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடி ஆலோசனைகளை வழங்கினார். கால் பிரிட்ஜிங் (Call Bridging) நவீனத் தொழில்நுட்ப முறையில் ஒரே நேரத்தில் 75000- BLA 2-களுடனும் அலைபேசி வாயிலாக நேரடியாகப் பேசிய முதலமைச்சர், திராவிட மாடல் 2.O ஆட்சி அமைத்திட இந்த 2 நாட்கள் முழு மூச்சுடன் ஓய்வின்றி உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஒவ்வொரு வாக்கும் மிக முக்கியம் என்பதை உணர்ந்து பணியாற்றும்படி கூறினார்.சேலம் மேச்சேரியில் பா.ம.க தலைவர் அன்புமணி பரப்புரை கூட்டத்தில் நுழைய முயன்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வீரப்பன் மகள் வித்யா போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.* அன்பார்ந்த பாட்டாளி சொந்தங்களே.. தர்மபுரி தொகுதியில் சௌமியா அன்புமணி தோற்கணும். பணத்துக்காவும், அதிகாரத்திற்காகவும் மட்டுமே தேர்தலில் போட்டியிடுகிறார் சௌமியா என வீடியோ வெளியிட்டு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.* த.வெ.க தலைவர் விஜய் வேட்பு மனுவில் தனது சொத்தை குறைத்து காண்பித்தது முறைகேடானது. இதுகுறித்து வருமான வரித் துறை ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

.* இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் வாக்குகள் திமுக கூட்டணிக்கு போக விடாமல் தடுத்து, தேசிய ஜனநாயக கூட்டணியை ஆட்சியில் அமர்த்த பா.ஜ.க.,வால் திட்டமிட்டு களம் இறக்கப்பட்டவர்தான் விஜய் எம கும்பகோணம் பரப்புரையில் வி.சி.க தலைவர் திருமாவளவன் எம்.பி. கூறியுள்ளார்.

* காரைக்குடியில் உள்ள காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகத்தில் பணம் பதுக்கப்பட்டிருப்பதாக வந்த புகாரையடுத்து, அங்கு ஆய்வு மேற்கொண்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ரூ.13.40 லட்சத்தைப் பறிமுதல் செய்து விசாரித்த நிலையில், மர்ம நபர்கள் இருவர் பணப் பையை பறித்துக் கொண்டு தப்பியதாகவும், அவர்களை விரட்டிப் பிடிக்க அதிகாரிகள் காரை எடுக்க முயன்றபோது தேர்தல் பறக்கும் படை வாகனத்தின் சாவியையே பறித்துக் கொண்டு தப்பிச் சென்றதாகப் புகார் எழுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. * கன்னியாகுமரி லட்சுமிபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேச்சு: “மணிப்பூரில் பாஜக என்ன செய்தது?; அமைதியான மாநிலத்தில் இன்னும் உள்நாட்டுப் போர் நடக்கிறது; அமைதியை இழந்து மணிப்பூர் மாநிலம் சின்னாபின்னமாக ஆகியதற்கு காரணம் பா.ஜ.க” என்று கடுமையாகத் தாக்கினார்.





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை