பொய்.பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை!

கீழடி அகழாய்வில் சுடுமண் குழாய்கள் கண்டெடுப்பு. உறை கிணறுகளில் இருந்து தண்ணீரை கொண்டு செல்ல பயன்பட்டிருக்கலாம் என கணிப்பு.அதிமுக எனும் ஆலமரத்தை சாய்க்க சிலர் முயற்சிப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு. குதிரை பேரம் நடத்தி அதிமுகவின் முதுகில் குத்துவதாக முதலமைச்சர் விஜய்க்கு கண்டனம்.தமிழ்நாட்டின் பல பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை அகற்ற வலுக்கும் கோரிக்கை. பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் கடைகளை அகற்றக்கோரி ஆட்சியர் அலுவலகங்களில் மனு.தொழிலதிபர் கவுதம் அதானி மீதான அனைத்து வழக்குகளும் கைவிடப்படுவதாக அமெரிக்க நீதிமன்றம் அறிவிப்பு. சுமார் 6 மில்லியன் டாலர் அபராதம் செலுத்த ஒப்புக்கொண்டதை அடுத்து முடிவுக்கு வந்த வழக்கு.

புதுக்கோட்டை அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை 2 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு. ஒருவர் கைதான நிலையில் மற்றொருவரை தேடும் பணி தீவிரம்.
கேரளாவில் சாலையில் சென்றுக்கொண்டிரு தனியார் பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து விபத்து. பேருந்தின் டயர் சாலையில் கழன்று ஓடியதால் பரபரப்பு.
இந்தியாவின் முதல் புல்லட் ரயிலின் மாதிரி வடிவம் வெளியீடு. மணிக்கு 280 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும் என தகவல்.
இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை வாங்குவதற்கான அனுமதியை மேலும் ஒரு மாதம் நீட்டித்த இந்திய ஆட்சி செய்யும் அமெரிக்கா. மிகவும் பாதிக்கப்படும் நாடுகள் கச்சா எண்ணெய் பெறலாம் என அறிவிப்பு.
10 லட்சம் கோடி கடன் இருப்பதுஉங்களுக்கு இப்ப தான்தெரியுதா? முதல்வர் விஜய்யை விளாசிய சீமான்.
2025 ஆம் ஆண்டு அறிக்கையை தற்போது பரப்பும் தவெகவினர்,தவெக ஆட்சிக்கு வந்தவுடன், “சார் பதிவாளர் அலுவலகங்களில் மக்களை அமரவைத்து தான் பேச வேண்டும்” என உத்தரவிடப்பட்டுள்ளதாகப் பரவும் செய்தி முற்றிலும் தவறானது. 
பொதுமக்கள் அமர்வதற்கு போதுமான நாற்காலிகளை உறுதி செய்ய வேண்டும். எனவே அலுவலகங்களில் பதிவாளர்களுக்கு எதிரில் குறைந்தது இரண்டு நாற்காலிகளாவது இருக்க வேண்டும். சார் பதிவாளர் அலுவலகத்தில் மக்களை அமரவைத்து தான் பேச வேண்டும்“ என்று குறிப்பிட்டு கடந்த 2025 ஆம் ஆண்டு மே 15 அன்றே அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் “2025 மே 15” என்று தேதி குறிப்பிடப்பட்டுள்ள அறிக்கையை, தேதி கூட பார்க்காமல் தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பு போன்று சிலர் சமூக ஊடகங்களில் திட்டமிட்டு தவறாகப் பரப்பி வருகின்றனர். 
பெட்ரோல், டீசல்  விலை மீண்டும் உயர்வு.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.86 பைசாவும், டீசல் விலை 0.83 பைசாவும் உயர்ந்துள்ளது.
இந்தியாவில் ஊடகச் சுதந்திரம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மத சிறுபான்மையினர் நலன் கேள்விக்குள்ளாகி இருப்பதாகவும், நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டன் கூறியுள்ளார்.
முதல்வர் விஜய்யின் கான்வாய் செல்லும் போது, போக்குவரத்து நெரிசலால், சாலையில் பொதுமக்கள் அவதிப்படாமல் சுதந்திரமாக செல்கின்றன. இவ்வாறு நடைபெறுவது இதுவே முதன்முறை” என்று சமூக ஊடகங்களில் பரவி வரும் த.வெ.க. பரப்பும பொய்ச்செய்திகள செய்திகள் தவறானவை. 
முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது கான்வாய் சாலையில் செல்லும்போது போக்குவரத்தை நிறுத்த வேண்டாம் என்று காவல்துறைக்கு அப்போதே அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைப்பதற்காக, தனது வாகன அணிவகுப்பில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கையையும் அவர் அப்போதே குறைத்துள்ளார். இது குறித்த செய்திகள் கடந்த 2021 ஆண்டே ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.  
மேலும் விஜய், நீலாங்கரையில் இருக்கும் தனது வீட்டிலிருந்து 17 கி.மீ. தூரம் பயணித்து தான் தலைமை செயலகம் வரவேண்டும். இதனால், சாலைகளில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு பொது மக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் கடந்த காலங்களில் மெரினா காமராஜர் சாலையில் மட்டுமே இருந்த டியூன் லைன் முறை, தற்போது நீலாங்கரை வரை கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும், முதல்வர் வரும் போது சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் தற்போது ஈடுபடுத்தப் படுகின்றனர் என்பதையும் செய்திகளின் மூலம் அறிய முடிகிறது. 
குறிப்பு: டியூன் லைன் முறை என்பது சாலையின் ஒரு பகுதியில் மட்டும் 'கூம்புகள்’ வைக்கப்பட்டு, முதல்வரின் கான்வாய்க்காகத் தனி வழி ஒதுக்கப்படும் நடைமுறை ஆகும். 
மக்களின் முதுகெலும்பை உடைக்கும்  அரசு

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்க ளைச் சாக்காக வைத்து, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி விலையை ஒன்றிய மோடி அரசு அதிரடியாக உயர்த்தி யிருப்பது உழைக்கும் மக்கள் மீது தொடுக்கப் பட்ட நேரடிப் பொருளாதாரத் தாக்குதலாகும்.

 சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ந்தபோது அந்த லாபத்தைத் தங்க ளுக்குள் சுருட்டிக்கொண்ட அரசு, இப்போது விலை உயர்ந்ததும் அதன் முழுச் சுமையையும் பொதுமக்கள் மீது சுமத்துவது கொடூரம்.

இதனால் பாதிக்கப்படப் போவது தினசரி உழைப்பை மட்டுமே நம்பியிருக்கும் ஆட்டோ, கால்டாக்சி மற்றும் டெலிவரி ஊழியர்கள் தான். ஏற்கெனவே ஆன்லைன் நிறுவனங்களின் சுரண்டலாலும், குறைந்து வரும் வருமா னத்தாலும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இவர்களுக்கு, இந்த எரிபொருள் உயர்வு மரண அடியாக மாறியுள்ளது. ஒருபுறம் சமை யல் எரிவாயு பற்றாக்குறையால் உணவுப் பொ ருட்களின் விலை விண்ணைத் தொட்டு நிற்கிறது. மறுபுறம், போக்குவரத்துச் செலவு அதிகரிப்ப தால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு தங்களின் அன்றாட பட்ஜெட்டைப் பாதிக்கும் என்று பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். அதைச் சமாளிக்க, தங்க ளின் பயணங்கள் மற்றும் பொழுதுபோக்குச் செலவுகளைக் குறைக்கத் திட்டமிட்டு வருவதா கப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எரி பொருள் விலை உயர்வு என்பது போக்குவரத்து, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் என அனைத்தின் மீதும் சங்கிலித் தொடர் போலப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர்கள் கவலைப்படுகிறார்கள்.

பிரதமரின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் பிரச்சாரங்களுக்கு மட்டும் ஆடம்பரமான பெரிய பாதுகாப்புப் படைத்தொகுப்புகள் பயன் படுத்தப்படும் நிலையில், சாதாரண மக்களிடம் மட்டும் ‘தியாகம்’ செய்யக் கோருவது எந்த விதத்தில் நியாயம்?

 கொரோனா பேரிடர் காலத்தைப் போலவே, தற்போதைய எரிசக்தி நெருக்கடியிலும் தொலைநோக்குப் பார்வையின்றிச் செயல்பட்டுவிட்டு, இப்போது நிலைமை கையை மீறியதும் பழி முழுவதையும் சர்வதேசச் சந்தையின் மீது போடுவது ஒரு பொறுப்பான அரசுக்கு அழகல்ல.

கார்ப்பரேட் நிறுவனங்களின் பெரும் முதலீடுகள் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுக்காமலும், கருப்புப் பண விவகாரங்களில் மெத்தனம் காட்டியும் வரும் மோடி அரசு, தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்க எளிய மக்களைப் பலியாக்குகிறது.

 சிறுதொழில் களை முடக்கி, உழைப்பவர்களின் வயிற்றில் அடிக்கும் இந்த மக்கள் விரோத விலை உயர்வை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை