பேரத்தில் வேகம் .செயலில்
🗞️ எடப்பாடி பழனிசாமியுடன் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திடீர் சமரசம். ஒருங்கிணைந்த அதிமுகவாக செயல்படுவோம் என வேலுமணி அறிவிப்பு.
🗞️ சி.வி.சண்முகத்துடன் அதிமுகவினர் நடத்திய சமாதான பேச்சுவார்த்தை தோல்வி. செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காமல் ஆவேசத்துடன் புறப்பட்ட சி.வி.சண்முகம்.
🗞️ அதிமுகவில் பிளவு இல்லை, கருத்து வேறுபாடு மட்டுமே நிலவியதாக எஸ்.பி.வேலுமணி விளக்கம். சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து ஒற்றுமையாக இருந்து ஆராய உள்ளதாகவும் பேட்டி.
🗞️ நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம். பொது இடங்களில் மாடுகளை வெட்ட சென்னை உயர்நீதிமன்றம் தடை.
ஒன்பது முக்கியத்துவர்கள்!
முதலமைச்சரின் டெல்லி பயணம்: தனி விமானத்தில் பயணித்த 9 முக்கியப் பிரமுகர்களின் முழு விபரங்கள் என்னென்ன என்பது தொடர்பாக இங்கு காணலாம்.
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய், மத்திய அரசுடனான அலுவல் சார்ந்த பேச்சுவார்த்தைகளுக்காகவும், பல்வேறு மாநில வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கவும் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாகத் தேசியத் தலைநகர் டெல்லிக்குச் சென்றுள்ளார்.
முதலமைச்சரின் இந்த முதல் டெல்லி பயணம் மிக முக்கியமானதாகக் கருதப்படும் வேளையில், அவருடன் சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் (Private Jet) மூலமாக டெல்லிக்குச் சென்றுள்ள 9 பேர் அடங்கிய முக்கியப் பிரமுகர்கள் மற்றும் ஸ்ரீ அதிகாரப்பூர்வப் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.
தனி விமானத்தில் பயணித்தவர்களின் அதிகாரப்பூர்வப் பட்டியல்
முதலமைச்சரின் டெல்லி பயணக் குழுவில் இடம்பெற்றுள்ள ஒன்பது நபர்களின் விபரங்கள் பின்வருமாறு:
சி. ஜோசப் விஜய் (C. Joseph Vijay)
பி. ஜெகதீஷ் (P. Jagadish)
விஷ்ணு ரெட்டி எர்ராதொட்டி (Vishnu Reddy Yerradoddi)
ராம்குமார் பி. (Ramkumar B)
ஜெகதீஷ் அவஸ்தி (Jagadish Awasthi)
திராஜேந்திரன் சி. (Rajendran C)
நயீம் ஆயிட்டாண்டி கூவகண்டி (Nayeem Ayittandy Koovakandy)
ஜி. செந்தில்குமார் (G. Senthil Kumar)
நரிசெட்டி மரியா ஜோசப் அனில் (Narisetty Mariya Joseph Anil)
பிரதமருடனான சந்திப்பின் போது சமர்ப்பிக்கப்பட வேண்டிய கோரிக்கை மனுக்கள் மற்றும் தரவுகளைத் தயார் செய்தல். ஊடக மேலாண்மை: டெல்லியில் நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் தேசிய ஊடகங்களுக்கான தகவல்களை ஒருங்கிணைத்தல்.
தனி விமானம் மூலம் டெல்லி சாணக்யாபுரியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்திற்கு வந்து சேர்ந்துள்ள இக்குழுவினர், முதலமைச்சரின் 2 நாள் பயணத் திட்டங்களை முழுமையாகக் கண்காணித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியுடனான 30 நிமிட சந்திப்பு, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருடனான சந்திப்புகளின் போது, இந்த 9 பேர் அடங்கிய குழுவில் உள்ள முக்கியச் செயலாளர்கள் உடனிருப்பார்கள் எனத் தெரிகிறது.
மேலும், வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ், இடதுசாரி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனான சந்திப்புகளையும் இக்குழுவினரே முன்னின்று ஒருங்கிணைக்கின்றனர்.
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்த பிறகு டெல்லிக்கு மேற்கொள்ளப்படும் இந்த முதல் தனி விமானப் பயணம், அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது.
முதலமைச்சரின் நம்பிக்கைக்குரிய செயலாளர்களும், திறமையான பாதுகாப்பு அதிகாரிகளும் அடங்கிய இந்த ஒன்பது பேர் கொண்ட குழு, டெல்லி பயணத்தை முழுமையான வெற்றிப் பயணமாக மாற்றுவதற்குக் களத்தில் இறங்கிச் செயலாற்றி வருகிறது.
இவர்களின் டெல்லி நகர்வுகள் அனைத்தும் தற்போது அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன.
பெயர்கள் அனைத்துமே வித்தியாசமாக மாற்றுமொழியாக உள்ளது. அனைவரும் விஜய் விளம்பரப் படுத்தும் ரூட்ஸ்,வாய்ஸ் ஆப் காமன் ஆட்களாக உள்ளார்கள்.
1150கோடி கோகைன் அதானி துறைமுகத்தில் கடத்தல்!
குஜராத் மாநிலத்தின் முந்த்ரா துறைமுகத்திலிருந்து சுமார் ஐந்து கடல் மைல் தொலைவில் எம்வி யூரோப் என்ற கொள்கலன் கப்பல் கடலின் நடுவே இரவு நேரத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது.
அப்போது கப்பலில் இருந்து சில சந்தேகத்திற்குரிய பொருட்கள் கடலில் வீசப்படுவதை குஜராத் பயங்கரவாத எதிர்ப்பு படையினர் பார்த்துள்ளனர்.
இதையடுத்து இந்திய கடலோர காவல்படைக்கு அளிக்கப்பட்ட தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் பயங்கரவாத எதிர்ப்பு படையினருடன் இணைந்து கடலில் வீசப்பட்ட பைகளை மீட்டனர்.
இந்த பரிசோதனையில் பைகளில் இருந்த 115 கிலோ கோகைன் போதைப்பொரு
ளை போலீசார் கைப்பற்றினர். இதன் மதிப்பு சுமார் ரூ.1150 கோடி வரை இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய கடலோரக் காவல்படை மற்றும் குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் இணைந்து நடத்திய 15வது வெற்றிகரமான போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை இது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
குதிரை வேக குதிரை பேர
ஆட்சி இது’ என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல்லி இருப்பதுதான் நூற்றுக்கு நூறு உண்மை ஆகும்.
தனது நாற்காலியைத் தக்க வைப்பதற்காக அனைத்து கேவலமான
முறைகளையும் பயன்படுத்தி வருகிறார் முதலமைச்சர் விஜய்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையை தமிழ்நாட்டு மக்கள் வழங்கவில்லை. தி.மு.க. எதிர்க்கட்சியாகச் செயல்படும் என்றும் ஆட்சி அமைக்கும்
த.வெ.க.வுக்கு இடையூறாக இருக்காது என்றும் தொடக்கத்திலேயே
தி.மு.க. தலைவர் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.
தி.மு.க. கூட்டணியில் வென்ற காங்கிரஸ் கட்சி, உடனடியாக த.வெ.க. ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து விலகியது. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய
கட்சிகள், ‘இன்னொரு தேர்தல் வரக்கூடாது’ என்பதால் ஆட்சியை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்தன. ஆனாலும், ‘கொள்கை அளவில் தி.மு.க. கூட்டணியில் தொடர்வதாகவும்’ அறிவித்தன. பின்னர் விடுதலைச்
சிறுத்தைகள் கட்சியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளன. இதன் மூலமாக பெரும்பான்மையை நிரூபிக்கும் வலிமையை விஜய் பெற்றார். அத்தோடு அமைதியாக அவர் இருந்திருக்க வேண்டும்.
இவை போதாது என்று அ.தி.மு.க.வை உடைக்கும் செயலை விஜய் செய்தார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் 25 பேரை தனியாக ஆக்கி அவர்களை தங்களது ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வாக்களிக்க வைத்தார். ‘அமைச்சர் பதவி தருகிறோம், வாரியத் தலைவர் பதவி தருகிறோம் என்று ஆசை வார்த்தை காட்டப்படுவதாக’ சட்டமன்றத்திலேயே எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி இருக்கிறார். இது அவைக் குறிப்பில் பதிவாகி இருக்கிறது. எந்தக் கீழ்த்தரத்துக்கும் விஜய் கட்சி இறங்கும் என்பதை
எடப்பாடி பழனிசாமி போட்டு உடைத்தார்.
அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற அம்மா மக்கள் முன்னேற்றக்
கழகத்தின் ஒரு உறுப்பினரையும் தங்களுக்கு ஆதரவானவராக மாற்றினார்கள். அதில்தான் எத்தனை நாடகங்கள் நடந்தன?
டி.டி.வி. தினகரன் தனது கட்சியின் ஒரு எம்.எல்.ஏ.வைக் காணோம் என்றும், எனது கையெழுத்தை அவர் போட்டுள்ளார் என்றும் ஆளுநரிடம் மனு தருகிறார். கிண்டி காவல் நிலையத்திலும் புகார் தருகிறார். ‘நான் போகவில்லை’ என்று அந்த எம்.எல்.ஏ.வே பேட்டி தருகிறார். பின்னர் அவரே விஜய் ஆதரவாளராக மாறுகிறார். அந்த எம்.எல்.ஏ.வை கட்சியை விட்டு நீக்கிவிட்டார் டி.டி.வி. தினகரன். அப்படியானால் தினகரன் கட்சி எம்.எல்.ஏ.வுக்கு தரப்பட்ட வாக்குறுதி என்ன?
‘முதலமைச்சரைச் சந்திக்க முகத்தை மூடிக் கொண்டு சென்றது யார்?’ என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்க்கு நேராகக் கேள்வி கேட்டார் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். சபையில்
உட்கார்ந்து இருந்த முதலமைச்சர் விஜயால் பதில் சொல்ல முடியவில்லை.
இப்படி ஒட்டுப்போட்ட கந்தல் துணியைப் போல ஒரு ஆட்சியை அமைத்துவிட்டு, ஆட்சியை ஒழுங்காக நடத்தாமல் - சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்க விட்டு, மிகமிக ஏமாற்றத்தை வாக்களித்த மக்களுக்கு கொடுத்து வருகிறார் விஜய்.
தினந்தோறும் கொலைகள், பாலியல் வன்முறைகள், நிர்வாகச் சீர்கேடுகள், மின்வெட்டுகள், அதிகார துஷ்பிரயோகங்கள். இவை தான் நாம் பார்க்கும் காட்சிகள் ஆகும். சமூக வலைதளங்களைத் திறந்தாலே இந்த ஆட்சி மீதான ஆக்ரோஷமான எதிர்ப்புக் குரல்கள்தான் அதிகம் ஒலிக்கிறது. இவை எதுவும் விஜய் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை.
நிர்வாகத்தை ஒழுங்குபடுத்த முனையவில்லை. மாறாக ஆடிக் கொண்டிருக்கும் தனது நாற்காலியைச் சரி செய்வதிலேயே அவர்களது எல்லாக் கவனமும் இருக்கிறது. அ.தி.மு.க. சார்பில் வென்று, அ.தி.மு.க.வின் நிலைப்பாட்டுக்கு மாறாக த.வெ.க. ஆட்சியை ஆதரித்து வாக்களித்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வைக்கப்பட்டுள்ளார்கள். பதவி விலகலைக் கொடுத்த சில நிமிடங்களில் அவர்கள் த.வெ.க.வில் இணைந்துள்ளார்கள். எதற்காக அவர்கள் பதவி விலக வைக்கப்பட்டுள்ளார்கள்? குதிரை பேரத்தால் உருவான ஆட்சி என்று அனைத்து அரசியல் கட்சிகளும் சொன்னார்கள். அது சரி தான் என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பதவி, வாரியத் தலைவர் பதவி என்று ஆசை வார்த்தை கூறி அழைத்து வரப்பட்டு, ஆட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க வைக்கப்பட்டவர்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைகிறார்கள். இன்னொரு தரப்பு தனது பதவியை விட்டு விலகி த.வெ.க.வில் இணைகிறது. இவர்கள் அனைவரும் சேர்ந்து ஆதரித்த ஆட்சி செல்லத்தக்க ஆட்சியா? நம்பிக்கைக்குரிய ஆட்சியா? ரகசிய பேரங்களால் உருவாக்கப்பட்ட ஆட்சி இது. இந்த ஆட்சி மக்களைப் பற்றி கவலைப்படாது. தன்னைக் காப்பாற்றிக் கொள்வதிலேயே காலத்தைப் போக்கிக் கொள்ளும். இது மக்களுக்கான ஆட்சி அல்ல. அவர்களைக் காப்பாற்றிக் கொள்ளும் ஆட்சியே ஆகும்.
த.வெ.க. ஆட்சி அமைக்க ஆதரித்து வாக்களித்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த 5 உறுப்பினர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுக் கொண்டு போய்விட்டார்கள். த.வெ.க.வை ஆட்சி அமைக்க ஆதரித்து வாக்களித்த 3 உறுப்பினர்கள் தங்களது பதவியை விட்டு விலகி இருக்கிறார்கள். இதன் மூலமாக ஆட்சிக்காக ஆதரவளித்த 8 வாக்குகள் குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் குறையவே செய்யும்.
சபாநாயகரின் அறைக்கு போய் பதவி விலகுகிறார்கள். அமைச்சர் அறைக்குச் சென்று கட்சியில் சேர்கிறார்கள். இதைவிடக் கேவலம் இருக்க முடியுமா?
விஜய் கூறிய தூய அரசியல் மடிந்து விட்டது. தொடக்கத்திலேயே முடிந்துவிட்டது. குதிரை பேரங்கள் மூலமாக ஆட்சியைத் தக்க வை🐢🐢க்க நினைக்கும் விஜய்யை மக்களே விரட்டுவார்க















