சென்றார்!வந்தார்!
🔹 ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் படத்திற்கு மீண்டும் காவிச்சாயம் பூசப்பட்டதற்கு வலுக்கும் எதிர்ப்பு.. இந்த விவகாரத்திலும் விஜய் பயந்து நடுங்கக் கூடாது என உதயநிதி ஸ்டாலின் கண்டனம்.
🔹 சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்கள், 3 மாநகராட்சி ஆணையர்கள் மாற்றம். ஆளுநரின் முதன்மைச் செயலாளராக இருந்த கிர்லோஸ்குமாரும் இடமாற்றம்.
🔹 திமுகவின் எதிர்காலம் நம்பிக்கை அளிப்பதாக மு.க.ஸ்டாலின் உறுதி. GenZ தலைமுறையினர் சந்திப்பு கூட்டத்தை பதிவிட்டு நெகிழ்ச்சி.
🔹 அபிஷேக் பானர்ஜி மீது பாஜக திட்டமிட்டு தாக்குதல் நடத்தியிருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு. சிகிச்சை அளிக்கக் கூடாது என மருத்துவமனைகளுக்கும் அழுத்தம் கொடுத்ததாக மம்தா பரபரப்பு புகார்.
🔹 திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி மீது பாஜக ஆதரவாளர்கள் தாக்குதல். கற்கள், முட்டைகளை வீசி கடுமையாக தாக்கியதால் பலத்த காயம்.
🔹 அடுத்த 4 நாட்களுக்குள் தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணிப்பு.
🔹 சென்னையில் டெலிவரி ஊழியரை கடுமையாக தாக்கிய ஓட்டல் மேலாளர். போலீசார் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு
🔹 பொன்னேரி அருகே சுடுகாட்டுக்கு உடலை கொண்டு செல்ல எதிர்ப்பு. சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.
🔹 உதகை அருகே மாயார் சாலையில் இரண்டு குட்டிகளுடன் சாலையை கடந்த தாய் புலி. குட்டிப்புலிகளை ஆர்வத்துடன் பார்த்து ரசித்த வாகன ஓட்டிகள்.
🔹 கியூட் தேர்வு குளறுபடிக்கு வருத்தம் தெரிவித்தது தேசிய தேர்வு முகமை. தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்ட 3,765 பேருக்கு மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு.
🔹 டெல்லியில், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி 9 பேர் கைது. டெல்லி, மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாக போலீசார் தகவல்.
சென்றார்!வந்தார்!!நடிகர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டது முதல், ‘விஜய் நாளை டெல்லி பயணம்’ என்ற செய்தியை தினந்தோறும் தமிழ்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டு வந்தன. அவருக்காக டெல்லி காத்திருப்பதைப் போன்ற பிம்பத்தை உருவாக்க இவர்கள் திட்டமிட்டார்கள்.
விஜய்யைவிட அதிகமவே இவர்கள்(ஊடகபிழைப்புவாதிகள்) கூவினார்கள்.
இருபது நாட்கள் கழித்துத்தான் அவருக்கு டெல்லியில் இருந்து அழைப்பு வந்தது.
பிரதமரைச் சந்திக்கிறார், உள்துறை அமைச்சரைச் சந்திக்கிறார். நிதி அமைச்சரைச் சந்திக்கிறார், சோனியாவைச் சந்திக்கிறார், ராகுலைச் சந்திக்கிறார் என்று இரண்டு நாட்களுக்காக பயணத்திட்டத்தை ஊடகங்கள் வெளியிட்டன.
‘இது மரியாதை நிமித்தமான பயணம் மட்டுமல்ல; மரியாதையை உயர்த்தப் போகும் பயணம்’ என்றெல்லாம் ஊடகங்கள் அதிகமாக அலப்பறைகள் செய்தன. இவை எதுவும் நடக்கவில்லை.
பிரதமர் மோடியைச் சந்தித்துள்ளார் முதலமைச்சர் விஜய்.
அதுவும் பத்து நிமிடத்துக்குள் இந்தச் சந்திப்பு அமைந்துள்ளது. இருதரப்புக்குமான நலம் விசாரிப்புடன் இந்தச் சந்திப்பு முடிந்து விட்டது. இது முதல் தோல்வி.
உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில்தான் இருந்தார். விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்கி இருந்தார். ஆனால் அது ரத்து செய்யப்பட்டது.
ஆனால் அன்றைய தினம் கேரள முதலமைச்சரை அமித்ஷா சந்தித்துள்ளார்.
கோவா முதலமைச்சரை அமித்ஷா சந்தித்துள்ளார்.
நாகலாந்து ஆளுநரை அமித்ஷா சந்தித்துள்ளார்.
தமிழ்நாட்டு முதலமைச்சரை சந்திக்க மறுத்துள்ளார். அமித்ஷா – விஜய் சந்திப்பு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
‘வேறு அலுவல்களில் உள்துறை அமைச்சர் இருக்கிறார்’ என்றும், ‘குஜராத் செல்கிறார்’ என்றும் சொல்லப்பட்டது.
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்துள்ளார். இது இரண்டாவது தோல்வி ஆகும்.
செய்தியாளர்கள் சந்திப்பைத் திட்டமிட்டுப் புறக்கணித்திருக்கிறார் விஜய். அவர் டெல்லி தமிழ்நாடு இல்லத்துக்கு வரும் போதும், பிரதமரைச் சந்திக்கச் செல்லும் போதும், பிரதமரைச் சந்தித்துவிட்டு வரும்போதும், டெல்லியில் இருந்து தமிழ்நாட்டுக்குத் திரும்பும்போதும் ஊடகவியலாளர்கள் விஜய்யைப் பார்த்து குரல் எழுப்புகிறார்கள். ‘பிரஸ் மீட் பண்ணுங்க சார்’, ‘எல்லா முதலமைச்சர்களும் பிரஸ் மீட் பண்ணுவாங்க சார்’ என்று குரல் எழுப்புகிறார்கள். அதைக் காதில் வாங்காமல் அலட்சியப்படுத்தி இருக்கிறார் முதலமைச்சர் விஜய்.
விஜய் பதில் அளிக்காததால் டெல்லி செய்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். டெல்லியில் பிரதமரைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்திக்காத முதலமைச்சராக விஜய் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
டெல்லிப் பயணத்தின்போது செய்தியாளர்களை முதலமைச்சர் சந்திப்பது மரபு. அந்த மரபை அவர் மீறி இருக்கிறார். அலட்சியப்படுத்தி இருக்கிறார். டெல்லி ஊடகங்களை அவமானப்படுத்தி இருக்கிறார்.
இருபது நாட்களில் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கைப் பற்றியும், தான் ஆட்சி அமைக்க நடத்திய இழிவான குதிரை பேரங்கள் குறித்தும் ஊடகங்களுக்குப் பதில் சொல்ல தன்னால் முடியாது என்பதால் ஊடகங்களை விஜய் சந்திக்கவில்லை.
கரூர் சம்பவத்தின்போது பத்திரிகையாளர்களைச் சந்திக்காமல் தவிர்த்த விஜய் இன்று முதல்வராக இருக்கும் நிலையிலும் பத்திரிகையாளர்களைக் கண்டு அஞ்சுவது ஏன்?
கட்சி மேடைகளில் மட்டும் வீர வசனம் பேசும் விஜய் பிரதமர் சந்தித்தது குறித்து கருத்து சொல்லத் தயங்குவது ஏன்?
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனைப் பார்த்து மனு கொடுத்துள்ளார் விஜய். நிர்மலா சீதாராமனைச் சந்தித்த முதலமைச்சர் விஜய், இல்லாத திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி ஒன்றிய அரசு நிராகரித்து விட்டது. ஒன்றிய அரசு நிராகரித்துள்ள மதுரை, கோவை மெட்ரோ திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யுமாறு ஒன்றிய நிதியமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார் விஜய்.
மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களைச் செயல்படுத்தித் தாருங்கள் என்றுதான் அவர் கோரிக்கை வைத்திருக்க வேண்டும்.
கூட்டணிக் கட்சித் தலைவர்களான சோனியாவையும் ராகுலையும் விஜய் சந்திப்பார் என்பது மிகப்பெரிய செய்தியாகப் பேசப்பட்டது.
ஆனால் அவர் அவர்கள் இருவரையும் சந்திக்கவில்லை. ‘சென்னைக்கு அவசரமாகத் திரும்ப வேண்டி இருந்ததால் இந்தச் சந்திப்பு நடக்கவில்லை’ என்று அரசு வட்டாரங்கள் சொன்னது. ‘சோனியாவும், ராகுலும்
வேறு பணிகளில் இருக்கிறார்கள்’ என்று காங்கிரஸ் தரப்பு சொல்கிறது. திட்டமிட்ட பயணத்தை நடத்த முடியாத அளவுக்கு இவை முக்கியமான காரணங்கள் அல்ல.
கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் விழாவுக்கும் வருவதாகச் சொல்லிவிட்டு ராகுலுக்கு அல்வா கொடுத்தார் விஜய். இப்போது சோனியா வீட்டுக்கு வருவதாகச் சொல்லி விட்டு, வராமல் திரும்பி இருக்கிறார் விஜய். இதன்பிறகுமா காங்கிரஸுக்கு உள் விவகாரங்கள் புரியவில்லை?
‘காங்கிரஸின் 5 உறுப்பினர் ஆதரவைப் பெற்றாச்சு, அதுக்கு ரெண்டு மந்திரி தந்தாச்சு’ என்பதோடு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறார் விஜய். ‘நம்பிக்கைத் துரோக’ காங்கிரஸுக்கு அதற்குப் புரியும் வகையில் பதில் சொல்லி விட்டார் விஜய் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.
விஜய்க்காகக் காத்திருந்து ராகுல் ஏமாந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விஜய் திட்டமிட்டே காங்கிரஸ் தலைவர்களுடனான சந்திப்பைத் தவிர்த்துள்ளார். இதன்மூலம் அவர் நம்பிக்கைக்கு உரியவர் அல்ல என்பதும் தெரிய வந்துள்ளது.
மக்கள் செல்வாக்கை முழுமையாகப் பெற்ற முதலமைச்சர் அல்ல; குதிரை பேரத்தின் மூலமாகத்தான் முதலமைச்சர் ஆனவர் என்பது பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் தெரியும்.
அதனால்தான் விஜய்யை அவர்கள் மதிக்கவில்லை. இப்படி அவரது முதல் டெல்லி பயணமே தோல்வியாகவும் அவருக்கு மிகப்பெரிய சறுக்கலாகவும் அமைந்துள்ளது.
கருப்பு நீதிமன்ற விவாதம்?
கருப்பு திரைப்படத்தை தமிழ்வேந்தன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது.
கருப்பு திரைப்படத்தின்
கதைக்களம்!
அந்த உத்தரவில் நீதிபதிகள், கருப்பு திரைப்
படத்தின் கதைக் களம் என்பது ஏழு கிணறு என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு நீதிமன்றம். அதில் இருக்கும் தலைமை நீதிபதி ஊழல்வாதியாகவும், தொழில் நெறிமுறையற்ற வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தின் செயல்பாடுகள் மீது அளவற்ற அதிகாரத்தைச் செலுத்துவதாக அமைக்கப்பட்டுள்ளது. நீதித்துறையில் ஊழல் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஊழல் நீதிபதிகள் இருந்தார்கள், இருக்கவும் செய்கிறார்கள். நீதிபதிகளை புனிதமானவர்களாக கருத வேண்டிய அவசியம் இல்லை.
நீதித்துறையில் ஊழல் என்ற கூற்றுகளை நாங்கள் முழுமையாக ஆதரிக்கவில்லை. நீதித்துறை ஊழல் நிகழ்வுகளை அறிவோம், எதிர்கொண்டும் இருக்கிறோம்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் முழு அமர்வும் இதுபோன்ற கருப்பு ஆடுகளை தவறாமல் வெளியேற்றிக்கொண்டுதான் இருக்கிறது. வழக்கறிஞர்கள் சங்கத்தின் சில உறுப்பினர்களுக்கு ஊழல்வாதிகளுடன் தொடர்பு இல்லாமல், நீதித் துறையில் ஊழல் நிகழ முடியாது.
ஒரு கலைஞனுக்கான
சுதந்திரம் வேண்டும்!
ஊழல்வாதிகளைப் பிடிப்பதற்கும், நிலைமையை உரிய முறையில் கையாளுவதற்கும் உயர் நீதிமன்றத்தின் விழிப்
புணர்வு கண்காணிப்பே ஆதாரமாக விளங்குகிறது. எந்தவொரு சிறப்புத் திரையிடலையும் ஏற்பாடு செய்யுமாறு தயாரிப்பாளரிடம் கேட்காமல், கருப்பு படத்தை எங்களில் ஒருவரான நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பார்த்துள்ளார். ஒரு நெறிமுறையற்ற வழக்கறிஞருக்கும், ஊழல் நீதிபதிக்கும் இடையிலான தீய கூட்டணியை கொண்ட கருப்பு திரைப்படத்தில், நீதித் துறை அமைப்பு மிகைப்படுத்தி சித்தரிக்கப் பட்டுள்ளது என்பது உண்மைதான்.
ஆனால், தமிழில் திரைப்படங்கள் அப்படித்தான் பார்க்கப்படுகின்றன. தன்னைச் சூழ்ந்திருக்கும் டஜன் கணக்கான வில்லன்களை கதாநாயகன் தனி ஒருவனாக வீழ்த்துவான். தமிழ் சினிமாவில் எல்லாமே மிகை உணர்ச்சி கொண்டது. எனவே, ‘கருப்பு’ படத்தையும் ஒரு தனித்துவமான படைப்பாகவே பார்க்க வேண்டும். எப்படியிருந்தாலும், ஒரு கலைஞன் தனது சொந்த வழியில் தன் படைப்பை வழங்குவதற்கு தரப்பட்ட உரிமையே கலைச் சுதந்திரம் என்று அழைக்கப்படுகிறது.
ஒரு கலைப் படைப்பு முற்றிலும் வேறுபட்ட தராசில் எடைபோடப்படும். ஒரு கலைஞனுக்கு அதிக செல்வாக்கும் சுதந்திரமும் உண்டு. ஒரு கார்ட்டூனிஸ்டுக்கு எது பொருந்துமோ அது ஒரு திரைப்படத் தயாரிப்பாளருக்கும் பொருந்தும். அவர் வழங்கும் கதையில் மிகைப்படுத்தல் இருக்கும். தவறுகள் இருக்கும். அது முற்றிலும் புனைகதையாகவும் இருக்கலாம் அல்லது ஒரு செய்தியைக் கொண்டிருக்கலாம் அல்லது பொழுதுபோக்குடன் மட்டும் நின்றுவிடலாம். ஒரு கதையை வழங்கும் விதமும், வழங்கும் உள்ளடக்கமும் படைப்பாளியிடமே விடப்பட வேண்டும்.
படைப்பாற்றல்
மதிக்கப்பட வேண்டும்!
படைப்பாளி தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்குள் நுழையாத வரை படைப்பாற்றல் மதிக்கப்பட வேண்டும். கருத்து சுதந்திரம் என்பது ஒருவரின் கருத்தை வாய்மொழி, எழுத்து, அச்சு, படம் அல்லது வேறு எந்த வகையிலும் வெளிப்படுத்தும் உரிமை ஆகும். இது தகவல் தொடர்பு சுதந்திரம் மற்றும் கருத்தைப் பரப்புவதற்கான அல்லது வெளியிடுவதற்கான உரிமையையும் உள்ளடக்கும்.
கருப்பு திரைப்படம் நீதிமன்ற அவமதிப்பை உள்ளடக்கியது இல்லை என்ற கருத்தின் அடிப்படையில், தணிக்கைச் சான்றிதழ் வழங்கியிருக்கும்போது நீதிப்பேராணை நீதி
மன்றம் அதன் கருத்தை மாற்றியமைக்காது. நாம் இப்போது சமூக ஊடகங்களின் காலத்தில் இருக்கிறோம். ஒரு கொடூரமான கூற்று கூறப்பட்டாலும், அதைப் புறக்கணிப்பதே நல்லது. நீதித்துறைப் பயணம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். ராமாயணத்தில் ராமனின் அம்பில் சிக்கிய தவளையை போல, நீதிமன்றமே விழிப்புடன் இருக்கும் காவலனாக நிற்கிறது.
நீதிமன்ற அவமதிப்பாக
கருத வேண்டியதில்லை!
அது குடிமக்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது. கருப்பு படத்தின் இயக்குனர் ஆர்.ஜெ.பாலாஜி, கதாநாயகன் சூர்யா, நடிகை திரிஷா ஆகியோர் நீதித்துறை அமைப்பை அவமதித்துள்ளதால், அதை குற்றவியல் நீதிமன்ற அவமதிப் பாகக் கருதி தகுந்த வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்று மனுதாரர் தமிழ்வேந்தன் தரப்பில் வாதிடப்பட்டாலும் இதை நீதிமன்றம் ஏற்கவில்லை.
ஆர்.கே.நாராயணனின் படைப்புகளில் மால்குடி என்பது ஒரு கற்பனைக் கிராமமாக இருப்பது போலவே, கருப்பு படத்தின் ஏழு கிணறு நீதி மன்றமும் ஒரு கற்பனையானதாகும். ஒரு கற்பனையான நீதிமன்றத்திற்குத் தலைமை தாங்கும் நபர் ஊழல்வாதியாகச் சித்தரிக்கப்படும்போது, அது 1971ம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தில் உள்ள தண்டனை விதிகளின் கீழ் வராது.
அவ்வாறு கற்பனையாக சித்தரிக்கப்பட்ட நீதிமன்றத்தில் ஊழல் என இயக்குநர் கூறியுள்ளாரே தவிர, ஒட்டுமொத்த நீதித்துறை அமைப்பையே ஊழல் நிறைந்ததாகச் சித்தரிக்க வில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். எனவே, கருப்பு படத்தை தடை செய்யக் கோரிய வழக்கில் முகாந்திரம் எதுவும் இல்லை என்பதால் மனு தள்ளுபடி செய்யப்
படுகிறது என்று உத்தர
விட்டனர்.
