குற்றத்தை மறைக்க

தொடரும் ‘துல்லிய’த் தாக்குதல்
கடந்த பத்து நாட்களில் நான்காவது முறை யாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப் பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இம்மாதம் 15ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டது.
பெட்ரோல் லிட்டருக்கு விலை ரூ.4.78உம், டீசல் லிட்டருக்கு ரூ.4.84உம் உயர்த்தப்பட்டது.
தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.46ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.2.57 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த தொடர் விலை உயர்வுகளின் காரணமாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.107.77 அளவுக்கும், டீசல் ரூ.97.55 ஆகவும் உயர்த்தி விற்பனை செய்யப்படுகிறது.
இந்த எரிபொருள் உயர்வின் காரணமாக அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயரும் ஆபத்து ஏற் பட்டுள்ளது. இது ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள கொடூரமான தாக்குத லாகும்.ஆனால் ஒன்றிய ஆட்சியாளர்கள் இன்னமும் விலை உயரக் கூடும் என்றே அபாயச் சங்கு ஊதுகின்றனர்.
போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ள தால், பழங்கள், காய்கறிகள், அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் விலையும் மேலும் ஒரு சுற்று உயரும் ஆபத்து எழுந்துள்ளது.
இந்த விலை உயர்வுக்கு போர்ச்சூழலை காரணம் காட்டி ஒன்றிய ஆட்சியாளர்கள் நியாயப்படுத்து கின்றனர். ஆனால் சட்டமன்றத் தேர்தல் காலத்தில் விலை உயர்த்தப்படவில்லை. ஜூன் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவுள்ள தால் கல்வி சார்ந்த செலவுகளை சமாளிக்க முடி யாமல் ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பங்கள் விழிபிதுங்கி நிற்கும் நிலையில் ஒன்றிய ஆட்சியாளர்கள் அடுத்தடுத்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றனர்.
சமையல் எரிவாயு உருளைகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதோடு, மாதாமாதம் விலையும் உயர்த்தப்பட்டு வருகிறது. வீட்டு உப யோகத்திற்கான சமையல் எரிவாயு விலை ரூ.954 ஆக உயர்ந்துள்ளது.
வணிகப் பயன்பாட்டுக் கான சிலிண்டர் விலை ரூ.3,237 அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் குடும்ப சமையல் செலவு அதிகரித்துள்ளதால் உணவகங்களில் உணவுப் பண்டங்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 98 டாலராக சரிந்துள் ளது.
ஆனால் சர்வதேசச் சந்தை நிலவரம் என்று கூறி தொடர்ந்து விலையை உயர்த்தி தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது ஒன்றிய அரசு.
இதன் மூலம் தன்னுடைய கார்ப்பரேட் கூட்டாளிக ளின் கஜானாவை நிரப்ப ஒன்றிய அரசு துணை போகிறது.
இந்த லட்சணத்தில் அமெரிக்கவுடன் செய்து கொள்ளப்படவுள்ள வர்த்தக ஒப்பந்தத் தின் மூலம் அந்த நாட்டிலிருந்து மேலும் எண் ணெய் இறக்குமதியை அதிகரிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
மக்கள் மீதான இந்த துல்லியத் தாக்குதல் கோடிக்கணக்கான இந்தியக் குடும்பங் களை நிலைகுலையச் செய்யும்.
குற்றத்தை மறைக்கும் ஆட்சி!
போலீஸ் ராஜ்யம் நடத்தத் தொடங்கி இருக்கிறார் முதலமைச்சர் விஜய்.
‘கடைக்குப் போகிறேன்’ என்று ( 21 ஆம் தேதி) அனுப்பி வைக்கப்பட்ட சிறுமி அவர். காணவில்லை.
அரைமணி நேரத்தில் அந்தக் குடும்பத்தினர் தேடுதலைத் தொடங்கி காவல்துறைக்குப் புகார் கொடுக்கிறார்கள்.
22 ஆம் தேதி இரவு கண்ணம்பாளையம் குளக்கரையோரம் உள்ள முட்புதரில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அருகில் இருந்த தென்னந்தோப்பில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார் சிறுமி.
இதை அறிந்து ஆத்திரம் அடைந்த உறவினர்கள் சிங்காநல்லூர் மருத்துவமனை முன்பும், காவல் நிலையம் முன்பும் முற்றுகைப் போராட்டம் நடத்தினார்கள்.
சாலை மறியல் செய்தார்கள். சிறுமியின் உடலை வாங்க மாட்டோம் என்று பெற்றோரும் உறவினர்களும் சொன்னார்கள். இப்படி பொதுவெளியில் வெளிச்சம் ஆனபிறகுதான் காவல் துறை செயல்பட்டுள்ளது.
குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்கள். இந்தக் குற்றவாளிகளும் சிறுமியைத் தேடுவது போல நாடகம் ஆடி இருக்கிறார்கள். பின்னர்தான் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
பெற்றோருக்குப் போன் செய்த காவல் துறை அதிகாரிகள், ‘சிறுமி உயிரோடுதான் இருக்கிறார்’ என்று முதலில் சொல்லி இருக்கிறார்கள். பின்னர், ‘சிறுமி இறந்து விட்டார்’ என்று சொல்லி இருக்கிறார்கள். காவல் துறையின் முதல் தவறு இது.
இதன் உண்மை நிலையை விளக்க வேண்டும் என்று பெற்றோரும் உறவினர்களும் சாலை மறியல் செய்தார்கள். சிறுமியின் உடலை வாங்க மாட்டோம் என்று சொன்னார்கள்.
அதன்பிறகும் காவல் துறை அதிகாரிகள் தந்திரமாக நடந்துள்ளார்கள்.
சிறுமியின் தந்தையை மட்டும் தனியாக அழைத்துச் சென்ற போலீசார் அவரிடம் மட்டும் பேசி இருக்கிறார்கள். “சிறுமியின் உடலை மருத்துவமனையின் பின் வாசல் வழியாக எங்களுக்குத் தெரியாமல் ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சிறுமியின் அப்பாவை தனியாக அழைத்துப் பேசி, தாய்க்குக் கூட தெரியாமல் உடலை அனுப்பி வைத்துள்ளார்கள்” என்று சிறுமியின் சித்தி பேட்டி அளித்துள்ளார்.
தடயம் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக சடலத்தை எரித்துவிட்டதாக தாயார் குடும்பத்தினர் குற்றச்சாட்டு வைக்கிறார்கள். தனக்குத் தெரியாமல் தனது குழந்தையின் உடலை எரித்துவிட்டதாக சிறுமியின் தாயார் கதறு கிறார்.
“உடற்கூறாய்வு முடிந்த பிறகு எனது மகளை என் கண்ணில் காட்டவில்லை. பின் வாசல் வழியாக ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்குக் கொண்டு சென்று விட்டனர். வாடகைக்கு கார் பிடித்து நாங்கள் மேட்டூர் சென்றோம். எனது சம்மதம் இல்லாமல் என் குழந்தையின் உடலை எரித்து விட்டார்கள்.
நான் குழந்தையின் முகத்தைக் கூட பார்க்கவில்லை. சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதால் எரித்துவிட்டார்கள். நான் கையெழுத்துப் போட மாட்டேன் என்று சொன்ன பிறகு என் கணவரிடம் கையெழுத்து வாங்கி உடலை ஒப்படைத்துவிட்டார்கள். எதற்காக போலீஸார் இப்படிச் செய்தார்கள் எனத் தெரியவில்லை.
நாங்கள் மேட்டூர் சென்றபோது என்னை அடிக்க வந்தனர். எங்களுக்கு பலர் மீதும் சந்தேகம் உள்ளது” என்று சொல்லி இருக்கிறார் சிறுமியின் தாய்.
‘’தகவல் அறிந்து நாங்கள் மேட்டூர் சென்ற போது குழந்தையின் சடலம் எரிக்கப்பட்டு இருந்தது. அனைத்துச் சடங்குகளையும் எங்களுக்குத் தெரியாமல் முடித்து விட்டார்கள்.
சிறுமி கொலை தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் இருக்கிறது. நீதிமன்றத்தை நாட இருக்கிறோம். கோர்ட் உத்தரவுப்படி உடலைத் தோண்டி எடுக்கக் கூடாது என்பதற்காக எரித்துள்ளார்கள்” என்று சிறுமியின் சித்தி பேட்டி அளித்துள்ளார்.
எதற்காக போலீஸ் இப்படி நடந்து கொள்ள வேண்டும்? பாதிக்கப்பட்டவர் பக்கம் நிற்பது தானே அரசு? இப்படிச் சொல்லி ஏமாற்றித்தானே வாக்கு களைப் பெற்றார் விஜய்?சிறுமியின் அம்மாவைப் பார்த்து, ‘இவரை மனநல மருத்துவமனையில் சேருங்கள்’ என்று ஒரு போலீஸ் அதிகாரி சொல்லி இருக்கிறார். இதுதான் பாதிக்கப்பட்டவருக்கு ஆறுதலாக இருக்கும் முறையா?
பேட்டிக்கு முன்னதாக போலீஸ் அதிகாரிகள் சிரித்துக் கொண்டிருந்த காட்சியை ஊடகங்களில் பார்த்தோம்.
சிறுமிக்கு நடந்த கொடூரம் குறித்து கேட்டபோது, தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா சிரிக்கிறார். இதுதான் விஜய் ஆட்சியின் லட்சணம்.
இது உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவூட்டுகிறது. 2020 அக்டோபர் மாதம் உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு அப்பாவிப் பெண், நான்கு பேரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார்.
இறந்த அந்த பெண்ணின் உடலை அவர்களது குடும்பத்துக்குக் கூட காட்டாமல், தராமல் போலீஸே எரித்துவிட்டார்கள். அந்தப்
பெண்ணின் தந்தையை கடத்தி வைத்துவிட்டு இதனை செய்திருக்கிறார்கள்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தை யாரும் பார்க்க அனுமதிக்கவில்லை. அந்தப் பெண்ணின் குடும்பத்தை வீட்டுச் சிறையில் வைத்தார்கள். ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை குறித்து செய்தி
சேகரிக்கச் சென்ற கேரள பத்திரிக்கையாளர் சித்திக் காப்பான் கைது செய்யப்பட்டார். இப்படி ஒரு காட்சியைத் தான் தமிழ்நாட்டிலுமஅரங்கேற்றி வருகிறார் விஜய்!







