அதிர்ச்சி டெண்டர் !
இந்த விசாரணை நிறைவடையும் வரை மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் அந்த மனு கோருகிறது. சென்னையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்;
இதில் இந்திய ஒன்றியம், சிபிஐ மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியவற்றை அவர் எதிர் மனுதாரர்களாகச் சேர்த்துள்ளார்.
அரசு அமைப்பது குறித்த குற்றச்சாட்டுகள்
அந்த மனுவில் “ தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது; இருப்பினும், தொடக்கத்தில் அரசு அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை பலம் அஅக்கட்சியிடம்இருக்கவில்லை.
தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் மற்றும் ஐயுஎம்எல் (IUML) ஆகிய கட்சிகள், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெகவுக்கு தங்கள் ஆதரவை அறிவித்தன.
மே 10-ஆம் தேதி விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றார்; பின்னர், சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் அவர் தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
பெரும்பான்மை வாக்கெடுப்பு குறித்த சர்ச்சை
அரசு அமைக்கப்பட்ட பிறகு நடத்தப்பட்ட பெரும்பான்மை நிரூபிக்கும் வாக்கெடுப்பைச் சுற்றியே இந்தச் சர்ச்சை எழுந்துள்ளது.
தேர்தலுக்குப் பிந்தைய காலகட்டத்தில், ‘குதிரை பேரம் மூலம் இந்த சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு பெறப்பட்டதாக மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்; இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்..” என்றும் மனுதாரர் கோரியுள்ளார்.
உலகத்திலேயே முதல் முறையாக த.வெ.க. ஆட்சியில் காலையில் டெண்டர் விடப்பட்டு, மாலையில் பணி ஆணை வழங்கப்பட்டது. ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் புஸ்சி ஆனந்த் துறையில்தான் இந்த அதிசயம் நடந்தது.
த.வெ.க. ஆட்சிக்கு வந்தால் தூயசக்தி ஆட்சி நடைபெறும் என்றும், ஒரு துறையிலும் ஒரு பைசாகூட ஊழல் நடக்காது, எல்லா பணிகளும் மிகவும் நேர்மையாக நடக்கும் என்று அக்கட்சி யின் தலைவரும், முதல்வருமாக விஜய் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பேசி வந்தார்.
பொதுமக்களும் இனி தமிழ்நாட்டில் ஊழலே நடக்காது, எல்லாம் வெளிப்படையாக நடைபெறும் என்று நம்பி வாக்களித்தனர். இந்த நிலையில்தான் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி துறையில் ஒரு உலக அதிசயம் நடந்துள்ளது.அதாவது காலையில் டெண்டர் வழங்கப்பட்டு, அன்று மாலையே டெண்டர் ஓப்பன் செய்யப்பட்டு, அடுத்த ஒரு மணி நேரத்தில் பணி ஆர்டர் வழங்கப்பட்ட சம்பவம்தான் இன்று தமிழகம் முழுவதும் சமூகவலை தளத்தில் பேசும் பொருளாக உருவாகியுள்ளது.
அதாவது காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் பஞ்சாயத்து யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் ஒரு
இ-–டெண்டர் வெளியிட்டுள்ளார். அதில், காஞ்சிபுரம் மாவட்டம் கோனேரிகுப்பம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட காரப்பேட்டை கிராமத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட உயர்நிலை நீர்தேக்கம் தொட்டி கட்டுமானப் பணிக்காக ரூ.16 லட்சத்து, 83 ஆயிரத்து 194 மதிப் பில் ஒப்பந்தம் கோரப்பட்டு இருந்தது.
பத்திரிகையில் விளம்பரம் இல்லை!
இதில் அடுத்து நடந்ததுதான் சுவாரஸ்யம். அதாவது, 19ம் தேதி காலை 9 மணிக்கு டெண்டர் கோரும் அறிவிப்பு வெளியானது. மாலை 3 மணிக்குள் டெண்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும். மாலை 4 மணிக்கு டெண்டர் ஓப்பன் செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதாவது, டெண்டர் பணிகள் அனைத்தும் 6 மணி நேரத்துக்குள் முடிவடையும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இந்த டெண்டர் தொடர்பான தகவல்கள் எதுவும் பத்திரிகை களில் விளம்பரப்படுத்தப்படவில்லை என்பது கூடுதல் தகவல் ஆகும்.
இதுபோன்ற டெண்டர் தமிழக அரசால் கோரப்படுவது உலகத்திலேயே இதுதான் முதல் முறை என்று ஊரக உள்ளாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சராக இருப்பவர் புஸ்சி ஆனந்த். அவரது துறை மூலமே இந்த டெண்டர் கோரப்பட்டு இருந்தது.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், புஸ்சி ஆனந்த் அமைச்சராக அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்று 2 நாள் தான் ஆகிறது. அதற்குள் இப்படி ஒரு அதிசய டெண்டர் வழங்கி, தமிழக மக்களை ஆச்சரியப்படுத்தி யுள்ளார்.
ஆனால், இந்த டெண்டர் விவகாரம் பற்றி சமூகவலைதளத்தில் தகவல் வெளியாகி வைரலானது.
